பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..
ஆதவாவின் பின்னூட்டம் ஒரு கோணமென்றால், தாமரை அண்ணாவின் பின்னூட்டம் மறு கோணம்..
இரண்டும் இரு முனை இரண்டையும் மறுத்துவிட முடியாது..
--------------
உலக கவிதைகளின் கோட்பாடு என்பது மாறி கொண்டே வந்திருக்கிறது, ஒவ்வொரு கோட்பாடும் ஒரு கால அளவையில் முடிவுற்றிருக்கிறது.. அத்தனை கோட்பாடுகளையும் ஒரு பொதுச் சொல்லில் இசம் என்றும் நாம் அடைத்துவிடுகிறோம்..
செவ்விலக்கியவிசம் என்னும் classicism முதன் முதலில் தோன்றிய இசமாகும். இந்த இசமென்னும் கோட்பாடு கிரேக்க இலக்கியங்களில் இருந்தே பிறந்தது.. (இசங்கள் குறித்து தெளிவாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்)
இவ்வழி வந்தவைத்தான் நவீனம், பின்னவீனம் எல்லாம்..
1999-ஆம் ஆண்டில் பின்னவீனம் இறந்துவிட்டதாக அறிவித்து, ஸ்டக்கிஸ்டுகளால் வகுக்கப்பட்ட கோட்பாடுத்தான் மீள்நவீனத்துவம், கடவுளை புதுக்கோணத்தில் மக்களிடம் சேர்த்தல் என்பதே இதன் முதன்மையாக கொள்கை..
தமிழில் மீள்நவீனத்துவம்/மறுநவீனத்துவம் எனும் வார்த்தை/கோட்பாடு இன்னும் உட்சரிக்கப்படாமலே இருக்கிறது, மீள்நவீனத்துவம் குறித்த விவாதங்களும் பெரும்பாலும் துவங்கப்படவே இல்லை. மீள்நவீனம் குறித்த பேச்சுக்கள்/அதை அறிந்து கொள்ளும் முயற்சிக்கள் கூட இன்னும் துவங்கப்படவில்லை.
அப்படிப்பட்ட இந்த சூழலில், மீள்நவீனத்துவ கோட்பாட்டின் அடைப்படையில் இந்த படைப்பை உருவாக்க முயத்சித்தேன்..
மீள்நவீனத்துவன் புரியாவிட்டாலும், கவிதை புரிய வேண்டும் என்பதால் தான் கவிதையை எளிமைக்காக முயற்சித்தேன்..
//கவிதை ஓ.கே. ஆனால் பாம்புக்கும் அம்முக்குவுக்குமிடையே உள்ள ஒற்றுமை விளங்கவில்லை. மற்ற அனைத்தும் தூக்கல்.
//
ஆதவா சொன்னது போல் "என்னை" என்பதே நானல்ல(ஒரு மனிதனே அல்ல)..
அதுப்பொல் கவிதையின் கரு// அடுத்த படிநிலைக்கு செல்லுதல்//
அம்மு மனுஷியல்ல..
பாம்புக்கும் அம்முவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆதவாவின் பின்னூட்டத்தில் உங்க கேள்விக்கு பதில் இருக்கு ஜூனத்
---------------------------------------------------
அப்புறம், கவிதையின் இன்னொரு முனையை பார்த்ததன் மூலம்..
போஸ்ட்ரீமாடனிஸ(பின்-மீள்நவீனத்துவ)த்தையும் நாம உருவாக்கிட்டோம்..
சரிதானே தாமரையண்ணா
Bookmarks