கனவுகளில் வரும்
இராஜகுமாரனுக்கு
முடிகள் நரைத்து விட்டன.
அவன் குதிரைக்குக் கூட
வயதாகி விட்டது..
அவனுக்கான
என்காதல் மட்டும்
இன்னும் இளமையாக..
கனவுகளில் வரும்
இராஜகுமாரனுக்கு
முடிகள் நரைத்து விட்டன.
அவன் குதிரைக்குக் கூட
வயதாகி விட்டது..
அவனுக்கான
என்காதல் மட்டும்
இன்னும் இளமையாக..
ஓவரா கனவுகண்டா இப்படித்தாங்க.... பாட்டி.....
ஓட்டுப் பொறுக்கிகளின் வாக்கு வயசாயிட்டு உதிர்ந்து போனாலும் கொடுக்கப் போற நம்ம மனசு மட்டும் இளமையா கொடு கொடுன்னு சொல்லுதே...... அந்தமாதிரி,
ஒரே ஆள லவ்விட்டு இருந்தா, முதுமை மாத்திரமல்ல...... பல பிரச்சனைகளும் வரும்...
வாழ்த்துக்களுங்கோ!!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
1. ஒரு முதிர்கன்னியின் கனவு என்று நேரடியாக பொருள் கொள்ளலாம்..
2. இராஜகுமாரனை கிடைக்க வேண்டிய பொருளாகவும், குதிரையை வரவேண்டிய அலையதர் "channel" ஆகவும் எடுத்துக் கொண்டால், எதிர்ப்பார்ப்புகள் பற்றிய
கவிதையாய் பொருள் கொள்ள இயலும்... எதிர்ப்பார்ப்புகள் என்று பொருள் கொள்ளும் போது அதில் ஒரு சங்கடம் இருக்கு, கிடைக்காதவரை பழைய பொருள் கூட புதிதாகத்தான் தோன்றும், ஆனால் இங்கே இராஜகுமாரனுக்கும், குதிரைக்கும் வயதாகிவிட்டிருக்கிறது...
3. கனவுகளில் வரும் இராஜகுமாரனுக்கு எனும் போது இந்த கனவு ஒரு முறை கண்ட கனவல்ல, ஒருவேளை இந்த கனவு ஏக்க கனவாக இல்லாமலும் இருக்கலாம், ஏக்க கனவாக இல்லாததால் கனவு ஏன் வருகிறது என்று தெரியாத ஒரு ஸ்தம்பிப்பு நிலையாகவும் இருக்கலாம், கேட்க கேட்க பிடித்துப் போகிற பாடல் மாதிரி காண காண கனவு பிடித்துப் போக அதன் மீதொரு ஈர்ப்புண்டாகி அதை எண்ணி மனம் ஏங்க ஆரம்பித்தும் இருக்கலாம்...
4. காதல் இளமையாக இருக்கிறது என்பதை காதலின் ஆழம் உணர்த்த பயன்படுத்தப்ப்பட்டதாய் கொண்டால் அவன் முடி நரைத்து, வயதாகி போனாலும் அவன் மீதான அன்பிலும்/உறவிலும் எந்த சலிப்பும்/விரிசலும் ஏற்படாமல் மலர்ந்த கொடிப் போல அப்படியே இருக்கிறதாய் கொள்ள முடியும்..
5. இன்னும் வேறு கோணத்தை பற்றி சென்றாலும் இராஜகுமாரனின் கதையும், அவன் வரும் குதிரையும் பழமையான ஒன்று, ஆனால் அவன் குறித்த பேசுக்குகளும், கவிதைகளும், சிந்தனைகளும், கதையும் இன்னும் இளமையாகவே இருக்கிறது மாறாமல்..
6. இந்த வாழ்க்கையும், அதன் வழிகளும் இராஜகுமாரன் & அவன் குதிரை மாதிரி பழையவை, நாம் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புதுமையானது, இளமையானது...
7. காதல் இளமையாக இருக்கிறது என்பதை மனதாகவும் பார்க்கலாம்..
---------------------
சிக்மண்ட் பிராய்ட் கனவு பற்றிய தன் புத்தகத்தில் கனவுகள் குறியீடுகளால் ஆனது னு சொல்றார்..
அதவானது ஆடையை பற்றி கனவு கண்டால் அது நிர்வாணத்தை பற்றி பேசுகிறது என்று பொருள் கொள்ள வேண்டுமாம்..
சமீபத்தில் என் நண்பன் ஒருவனின் கனவுக்கு பதில் கண்டு பிடித்த போது இதை நான் உணர்ந்து கொண்டேன்.. ஆனால் அதற்குள் கண்ட கனவுகளில் வந்த விஷயங்கள் நிறைவேறிவிட்டிருந்ததன.. :(
கவிதையை நான் சரியா புரிஞ்சுக்கிட்டனா னு தெரியல, ஆனால் எனக்கு தோன்றியதை எல்லாம் எழுதிருக்கேன், வாழ்த்துக்கள் அக்கா...
Last edited by ஆதி; 17-09-2010 at 11:59 AM.
அன்புடன் ஆதி
ஆதன்.... நீங்கள் சொன்னது கவிதையின் நேரடி பொருள்....
மறைபொருள் நிச்சயம் இருக்கிறது!! அது என்னவென்று தான் தெரிந்து கொள்ள வேண்டும்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அதன்.. ஓவரா.. கனவு காண கூடாது..
இந்த பொண்ணுங்களே இப்டித்தான் எசமான்..
8. வீண்பகட்டு, ஜம்பன் என்று எல்லா பொய் முகமூடிகளோடும் அணிந்து அணிந்து உண்மை முகத்தை தொலைத்தது மட்டுமல்லாமல் அந்த பொய் முகங்களையே மெய்யென எண்ணவும் ஆரமித்ததோடு, அந்த பொய் முகத்தின் மீதான வசீகரத்தையும் இன்னும் ஈரமாய் வைத்திருக்கிறோம்..
9. நாகரீகம் என்னும் பெயரால் போலித்தனங்களோடு பழகிவிட்டோம், அவை நம் உண்மை பண்பாடாய் பழமை அடைந்துவிட்டது, என்றாலும் அந்த போலித்தனத்தை உணராமல் இன்னும் அதை நேசித்தவாறே இருக்கிறோம்..
அன்புடன் ஆதி
எல்லோரும் கலர்கலரா கனவு காணும்போது.. கண்மணி ஏந்தான் கறுப்பு வெள்ளையில கனவு காணுதோ..?! ஒருவேளை ப்ளாஸ்’பேக்கா’ இருக்குமோ..?
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
பிறப்பின் இலக்கு இறப்பு.
கனவு இறந்து எதுவும் பிறக்காமல் பயனில்லை.
கனவில் வரும் பாத்திரங்கள் பழசு தட்டினாலும் பண்டம் மட்டும் அப்படியே இளமை குன்றாமல்.. குறைந்த பட்சம் முதுமை கூட அடையாமல். வேஸ்டு வேல்டு.
Last edited by அமரன்; 17-09-2010 at 11:23 PM.
காத்திருக்கிறேன்.....!
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks