தாமரை அண்ணாவோடு அளவலாவிய நாளிலிருந்து இந்த கதைக்கருக்கான வேட்கை அவரில் இருப்பது நான் அறிந்ததே.. அத்தனை அழகான சமுதாயத்தை உருவாக்க தனிமனிதர் இவருள் தான் எத்தனை ஆர்வம்..!!
அமர் அண்ணா போல் எனக்கும் இக்கதை ஆரம்பித்தவுடனேயே "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற வாசகத்துக்கான துணுக்கு நினைவுறுத்தியது இவரின் சிந்தையை. எத்தகைய ஓர் உலகம் இவர் கனவில் கண்டு கொண்டிருக்கிறார் என்பதை இக்கதையில் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டுவார் என்று நம்புகிறேன்.
கதை, கதையோட்டம், நீலவேணியின் எழில், சிந்தனையாளர்களின் சாதூர்ய தங்கச் செதுக்கலான கேள்வித் தூவல்கள் என என்னை சிந்திக்க வைத்த இடங்கள் அதிகம்.. ஆதவா குறிப்பிட்ட இடங்கள் வெகு ரசனைக்குறியவை..
தொடர்ந்து நீலவேணியின் கரையில் அமர்ந்து நடப்பவற்றை வேடிக்கைப் பார்க்கும் மன்ற கூட்டத்தோடு நானும் காத்திருக்கிறேன்.
Bookmarks