ஒரு புதிய சமுதாயத்திற்கான அடிக்கல் சிந்தனாவாதிகளால் முன்மொழியப்பட்டுள்ளது.
அவை விடிவிற்கு வழிவகுக்குமா... புதிய அனுபவங்கள் சமூகசெயற்பாடுகள் எண்ணங்கள் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இந்த கதைக்கு பின்னூட்டமிட என்னிடம் வார்த்தைகள் இல்லை... தொடருங்கள், தொடர்கிறேன்...
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மறுநாள் விடிந்தது. இரவு முழுக்க முயற்சி செய்ததில் எதோ ஒரு கப்பல் ஆபத்துதவி அழைப்பிற்கு பதில் கொடுத்தது. எப்படியும் இன்று மாலைக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கை வியாபாரிகளுக்கு இருந்தது.
உழைப்பாளிகள் அன்றிரவு உறங்கவே இல்லை. அவர்கள் இரவு முழுதும் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். சிலர் இங்கே இருந்து விடலாம் என்றார்கள். சிலர் வேண்டியதில்லை என்றார்கள். நாளை என்பது எவ்வளவு தூரம் என்பதே தெரியவில்லை. இரவு நீண்டிருந்தது.
கிழக்கு சிவந்தபோது அனைவரின் கண்களும் அதே போல்தான் இருந்தன. இன்று எடுக்கப் போகும் ஒரு முடிவு அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது. தவறாகப் போனால் பின்னால் வருந்திப் பிரயோசனம் இருக்காது.
மறுநாள் காலையில் எல்லோரும் கடமைகளை முடித்து விட்டு கடற்கரையில் சிந்தனாவாதிகளின் வருகைக்குக் காத்திருந்தனர். சிந்தனாவாதிகளும் கடற்கரைக்கு வந்தனர்.
ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உழைப்பாளிகள் சுற்றி உட்கார மத்தியில் சிந்தனாவாதிகள் நின்று கொண்டிருந்தார்.
என்ன யோசித்து வைத்திருக்கிறீர்கள்.. மூன்றாம் சிந்தனாவாதிதான் ஆரம்பித்தார்,
முடிவெடுக்க முடியாமல் குழம்பியிருக்கிறோம். தெளிவாகப் பேசினார் ஒரு முதிய உழைப்பாளி..
எப்படித்தான் இங்கே வாழ்வது? இங்கு ஒன்றுமே இல்லை. கருவிகள் எந்திரங்கள் ஒன்றும் இல்லை. பள்ளிகள், சாலைகள் ஒன்றுமில்லை. மின்சாரமில்லை. ஒரு மழைக்குத் தாங்கக் கூடிய கட்டிடங்கள் இல்லை. வெளி உலகின் தொடர்பும் இல்லை.
என்ன இல்லை என்பதை எந்த இடத்தில் இருந்து யோசித்தாலும் முடிவடையாத பட்டியல்தான் கையில் இருக்கும். அதே போல் என்ன இருக்கிறது என்று யோசித்தாலும் முடிவடையாத பட்டியல்தான் கையில் இருக்கும்.
மனிதர்கள் வாழும் உலகத்தில் எங்களுக்கு எதாவது வேலை கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் உணவும், உடையும், வசதிகளும் கிடைக்கும். எங்களால் இயலாவிட்டாலும் எங்கள் அடுத்த தலைமுறையை உயர்த்த வசதிகள் கிடைக்கும்..
எத்தனை தலைமுறைகளாக உங்கள் மக்கள் இப்படி அலைகிறார்கள்.
இரண்டு தலைமுறைகள் இருக்கும்.
விரல்விட்டு எண்ணிச் சொல்லுங்கள்.. உங்களைப் போல் சென்றவர்கள் யாராவது வலிமை பெற்று உயர்வு பெற்று பெருமை பெற்றிருக்கிறீர்களா?
மிகச் சிலர் இருக்கலாம்.
உறுதி இல்லை.. சரிதானே..
ஆமாம்..
இங்கிருந்து எதோ ஒரு நாட்டிற்குச் செல்லப் போகிறீர்கள்.
ஆமாம்
அங்கு ஒரு இடத்தில் உங்களுக்கு இருப்பிடம் ஒதுக்கப்படும்
ஆமாம்
உங்களுக்கு எதோ சில சின்ன வேலைகளும் மானியங்களும் கிடைக்கும்.
ஆமாம்
உணவு, உடை, உறையுள் பிரச்சனை தீரும்
ஆமாம்..
அதன் பிறகு..
அதன்பிறகு எதையாவது செய்யவேண்டும்.. எங்கள் மண்ணிற்குத் திரும்ப வேண்டும்..
அதாவது தெளிவாய் ஒன்றும் இல்லை.
..............
இங்கு இருபத்தைந்து வருடங்களில் நீங்கள் நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கையை வாழ வழி உண்டு..
இது நடக்கிற காரியமில்லை.. எப்படி முடியும்?
நாம் உலகிற்குத் தேவையான எதையாவது உற்பத்தி செய்து உலகிற்குக் கொடுப்போம். நமக்குத் தேவையானதை உலகத்திலிருந்து பெற்றுக் கொள்வோம்.
மின்சாரம் கிடைக்குமா? உறுதியான கட்டிடங்கள் கிடைக்குமா? போக்குவரத்து வசதி கிடைக்குமா? பள்ளிகள் மருத்துவமனைகள் கிடைக்குமா?
எல்லாம் கிடைக்கும்.
100 பேர் பத்துவருடத்தில் இதை உண்டாக்க முடியவே முடியாது..
சில அடிப்படைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்..
ம்ம் சொல்லுங்கள்.
கடப்பாரை வேண்டுமானால் கடப்பாரை வாங்குவான் தனிமனிதன்
ஆமாம்.
ஆனால் சமூகம் என்ன செய்ய வேண்டும்?
கடப்பாரை தான் வாங்க வேண்டும்.
அதுதான் தவறு.. பழைய இரும்புச் சாமான் வாங்கி உருக்கி அச்சில் வார்த்து கடப்பாரை செய்யவேண்டும். நான்கு பேர்கள் பழைய இரும்புச் சாமான்களில் இருந்து நமக்குக் கருவிகள் செய்து தர முடியும்.
அது சரி.. ஆனால் பழைய சாமான்களுக்கு எங்கே போவது?
படகுகள் மூலம் நம் பணப்பயிர்களை அண்டை நாட்டில் விற்று, தேவையானவற்றை பெற்று வரவேண்டும்.
100 பேருக்கு வீடுகளும் அப்படித்தானா?
அப்படி இல்லை.
ஒரே பெரிய வீடு கட்டுவோம். பிறகு இரண்டாக்குவோம்.. நாலாக்குவோம்.. 10 வருடங்களில் தேவையான அளவு பொருளைச் சேர்த்தால் ஒரு பெரிய வீட்டில் 100 பகுதிகளைக் கட்டி ஒரே வீட்டில் 100 குடும்பங்கள் வாழலாம்.
பேசுவது எளிது.. ஆனால் இது நடக்கக் கூடியது அல்ல,,
வாழ்க்கையே ஊகங்கள், நம்பிக்கைகள் இவற்றின் அடிப்படையில் அமைந்ததுதானே... நாளை இன்னது செய்வோம் என ஊகிக்கிறோம். அது இப்படி முடியும் என நம்புகிறோம். முயற்சி செய்கிறோம். ஆனால் நாளை என்பது இருக்குமா நமக்குத் தெரியாது.. நாளை இருந்தாலும் அது நமக்கு இருக்குமா தெரியாது. நாளை நாம் இருந்தாலும் நினைத்தது நடக்குமா தெரியாது.. ஆனாலும் ஒவ்வொரு நாளும் நாம் நம் கால்களை முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.
வாழ்க்கை இங்கே எப்படி இருக்கும் என்பதே புரிபடவில்லை..
ஒரு நாள்.. ஒரு வாரம்.. ஒரு மாதம்.. ஒரு வருடம்.. இப்படி பார்க்கலாமா? இங்கே வாழ்க்கையை?
விடியற்காலை விழிப்போம். வேம்பு விளாறில் ஒரு குச்சியால் நம் பற்களைத் துலக்கிக் கொள்வோம். காலைக் கடன்கள்.. நீலவேணியில் உடல் நனைத்து உடலைச் சுத்தம் செய்வோம். சுட்ட கிழங்குகள் நமது காலை உணவு.
தீ உண்டாக்க தீப்பெட்டி?
படித்த இயற்பியல் மறந்திருக்கலாம். சிக்கிகுக்கிக் கற்களால் பொறியுண்டாக்கி அதில் பஞ்சில் தீயுண்டாக்கி அந்த தீயில் சுள்ளியைப் பற்றவைத்து நாங்கள் உண்டாக்கிய தீ ஒரு மலைக்குகையில் அணையாமல் இருந்து கொண்டே இருக்கிறது.. அதில் இருந்து தீ எடுத்துக் கொள்ளலாம். தீப்பெட்டி நமக்குத் தொடர்ச்சியாய் கிடைக்கும்வரை...
பிறகு..
பிறகு தீவினுள் செல்வோம்.. விவசாயம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களைச் சீர்படுத்துவோம். குறுகிய காலப் உணவுப் பயிர்கள், நீண்ட கால உணவுப் பயிர்கள், பணப்பயிர்கள் எனப் பல வகைப் பயிர்களை
கருவிகள் வேண்டுமே..
சில மாதங்களுக்குக் குச்சிகளும் கட்டைகளும் கற்களுமே கருவிகள்.. பணப்பயிர்களை விற்று கருவிகளை வாங்கிக் கொள்வோம்.
யாருக்கு விற்பது?
அதற்குத் தான் வியாபாரிகளிடம் பேச வேண்டும்.
மதியம் வரை விவசாயம். மதியத்திற்கு மேல் தீவு மேம்பாட்டுக்கான வேலைகள்..
அப்படி என்ன வேலைகள்
எவ்வள்வோ இருக்கிறது.. இந்தத் தீவை அங்குலம் விடாமல் அறிந்து கொள்ள வேண்டும். புதிய இடங்களை பயன்படுத்த ஏதுவாக திட்டங்கள் போட வேண்டும். வீடுகள் உண்டாக்க வேண்டும். வடிகால் வசதிகள்.. கல்வி பயிற்றுவித்தல்.. இரும்பை உருக்கி கருவிகள் உண்டாக்கும் தொழில் அறிந்து நம் கருவிகளைத் தயாரித்துக் கொள்ளுதல் இப்படி பலப் பல..
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்று நாம் ஒரு இன்றைய சாதாரண மனித வாழ்க்கைக்கு வருவது?
25 ஆண்டுகள் ஆகலாம்.
அதெப்படி முடியும்.. மின்சாரம் வேண்டும்.. வாகனங்கள் வேண்டும், வெளி உலக மனிதர்கள் வந்து போகவேண்டும். நாமும் உலகம் சுற்ற வேண்டும்,
ஒன்றுமே இல்லாத இந்த இடம் போலவே 400 வருடங்களுக்கு முன் ஒரு இடம் இருந்தது. அது இன்று உலகில் மிகப் பெரிய வல்லரசாகி இருக்கிறது.
அமெரிக்காவைச் சொல்கிறீர்களா?
ஆமாம். அமெரிக்கா இப்படித்தான் இருந்தது. கப்பல் கப்பலாக அகதிகள்தான் சென்றார்கள். இடங்களை வளைத்துப் போட்டு விவசாயம் செய்தார்கள்.. வளர்ந்தார்கள். மெல்ல மெல்ல சுயசார்பை வளர்த்துக் கொண்டார்கள்..
ஆனால் அவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து எல்லாம் கிடைத்தது... அவர்களை அடிமைப் படுத்தி இருந்தது இங்கிலாந்து. போராடி விடுதலை பெற்றார்கள்.
நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். வியாபாரிகள் தேவை. வெளி உலகிற்கும் நமக்கும் இடையிலான தொடர்பு ஊடகம் அவர்கள்தான். ஆனால் அவர்களை நம் மேல் ஆதிக்கம் செய்யவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதாவது
அதாவது பணப்பயிர்களை ஏற்றுமதி செய்து நமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ள வியாபாரிகளின் உதவி தேவை..
ஆனால் இன்னும் எங்களுக்குப் புரியவில்லை. ஒரு கால் நூற்றாண்டில் இந்தத் தீவை மனிதர்கள் வசிக்க உதவும் ஒரு நல்ல பகுதியாக மாற்றுவதாகச் சொன்னீர்கள். ஆனால் தொழில்நுட்பத்தில் பின் தங்கி இருக்கும் வரை நாம் பின் தங்கியவர்கள்தானே..
நாம் உலகை ஆள நினைக்கவில்லை, உலகில் வாழ நினைக்கிறோம் அல்லவா?
ஆமாம்.
அப்படியானால் ஏன் உயர் தொழில் நுட்பம் உயர் தொழில் நுட்பம் என அழுகிறீர்கள்?
அப்பொழுதுதானே நாம் உயர்ந்து வாழ முடியும்?
மற்றவன் முதுகில் ஏறி வாழமுடியும் என்று சொல்லுங்கள்..
உயர்தொழில் நுட்பம் தேவையில்லையா?
தேவைதான்.. ஆனால் எந்த அளவிற்கு? நாம் உபயோகிக்கும் அளவிற்கு. அதைச் சந்தைப் படுத்தும் அளவிற்கு உயர்வது குறுகிய கால நோக்கம் அல்ல, அதற்கு இந்தத் தீவு போதாது.. நம் எண்ணிக்கையும் போதாது..
இந்த நீண்டவழியை விட்டால் இல்லையா?
ஒரு குறுக்கு வழி உண்டு.. அதன் படி செய்தால் ஐந்து வருடங்களில் இங்கு ஒரு ஹைடெக் நகரம் இருக்கும்.
என்ன அது..? ஆவலுடன் கேட்டார்கள் உழைப்பாளிகள்
நீங்கள் யாரும் இங்கு தங்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும்...
ஒரே ஒரு பொய்யா?
ஆமாம்.. நீங்கள் இங்கு நான்கு சித்தர்களை தரிசித்ததாக... கடகடவெனச் சிரித்தார்.. நான்காம் சிந்தனாவாதி!!!
தொடரும்
Last edited by தாமரை; 29-08-2010 at 05:54 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இது நல்லா இருக்கே! இரவோடு இரவாக ஒரு கல்லுக்கு மஞ்சள் பூசிக் குங்குமம் வைத்தாலே அடுத்தநாள் அங்கொரு கோவில் உருவாகி பக்தர் கூட்டம் அலைமோதும். மக்களின் மூட நம்பிக்கையை சுருக்கமாய்ச் சொல்லி சுருக்கென்றொரு குத்தல், வெகு அசத்தல். சிந்தனாவாதிகள் நன்றாகவே சிந்திக்கிறார்கள். உழைப்பாளிகளிடம் எடுபடுமா இந்த மூளைச்சலவை? அறியக் காத்திருக்கிறேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உங்களுடைய எழுத்தாற்றல் கதையின் பின்னணி இவை என்னை பெரிதும் கவர்ந்திருக்கின்றன. ஆனால் கதையின் கரு இலங்கை தமிழர் அகதிகளாக படகுகளில் ஆஸ்திரேலியா கானடா நாடுகளில் தஞ்சம் புகுவதைப் பற்றியது என நினைக்கிறேன்.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
இருவருக்கும் உண்டான பேச்சுக்கள் அபாரம். அது மூளைச்சலவைதான். வெண்மை தரும் சோப்பு போட்டு சலவை!!
எனக்கு பிடித்ததே, அந்த உயர்தொழில் நுட்பத்தைப் பற்றி பேசும் இடம்தான். அது எவ்வளவு உண்மையான வார்த்தை!!!
செல்போன் வைத்திருக்கும் எல்லாரும் (வியாபாரிகள், தொழிலதிபர்கள்) சொல்வது என்ன, “இந்த சனியனை கட்டிட்டு அழுகிறேன்” என்பதுதான்.. ஆனால் யாராவது முன்வந்து டைவர்ஸ் செய்கிறார்களா?? இல்லையே............. தொழில்நுட்பத்தினால் கருவிகள் பெருகுகின்றன. வாழ்க்கைத் தரம் இயந்தரத்தனமாகிறது. மனிதன் இயந்திரத்தின் கட்டுக்குள் வருகிறான் (இப்படித்தான் ஒரு கவிதை எழுதிட்டு ஒம்போது நாளா அதையே பார்த்துட்டே இருக்கேன்)
கூட்டுக்குடும்ப வாழ்க்கையே எல்லாவற்றுக்கும் சிறந்தது!! அதுவும் நூறு குடும்பம்!!!
சித்தர்’ஆவது பித்தர் ஆவது...... ஏதாவது ஒரு ‘ஆனந்தாவைச் சொன்னால் மக்கள் கூட்டம் கூட்டமாக .... விழுவார்கள்!!
ஒரு ரிக்வஸ்டு!!!
இன்னமும் ஒரு பொண்ணை கூட கண்ணுல காமிக்க மாட்டேங்கிறீங்க. பயிர் உற்பத்தி பத்தி பேசறீங்க. உயிர் உற்பத்தி வேணும்ல.............
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
உழைப்பாளிகளுக்கு குழப்பம் இருக்கத்தான் செய்தது. ஆதிவாசி வாழ்க்கையில் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு அவ்வளவாய் திருப்தி இல்லை. கூடிய விரைவில் உச்சத்தைத் தொடவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாய் என்றுமே இருந்து வந்திருக்கிறது, கடுமையான அதே சமயம் மிகச் சுற்றுவழியாய் இருக்கும் ஒன்றை ஏற்றுக் கொள்வது?
இதுவே மனித நடமாட்டமும் மற்ற நாடுகளுடன் இணைந்திருக்கும் ஒரு இடம் என்றால் சரி என்று எல்லோரும் ஒரே மூச்சில் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் யாருமில்லாத தகவல் தொடர்பே இல்லாத ஒரு இடம் என்பது அவர்களுக்கு மிகவும் அதிருப்தியையே தந்தது.
இங்கு நாங்கள் இருக்க வேண்டாம் என நினைக்கிறோம் நாளைய சந்ததியை இருட்டில் தள்ளிய பாவம் எங்களுக்கு வேண்டாம் என்றார்கள் உழைப்பாளிகள்.
நாம் எதையெல்லாம் முக்கியம் என்று நினைக்கிறோமோ அது சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே போகிறது. அன்று சுதந்திர வாழ்க்கை முக்கியமாகப்பட்டது. சுதந்திரம் இன்று உனது என்றானபோது உடனே இங்கு இந்த இடத்தில் நாளைய சமூகத்தின் எதிர்காலம் மட்டுமே முக்கியமாகப்படுகிறது. சொன்னார் முதலாம் சிந்தனாவாதி..
ஒரு பொருள் உழைப்பின்றி கிடைக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. அதன் குற்றம் குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன என்றார் இரண்டாம் சிந்தனாவாதி.
உழைப்பாளிகள் மௌனித்தார்கள். யதார்த்தங்களைச் சொல்லும்பொழுது பலர் இப்படி மௌனித்துப் போகிறார்கள்.
இந்தத் தீவை நீங்கள் முன்னேற்றத் துடிக்கிறீர்கள். எங்களால் ஆன சில உதவிகளைச் செய்கிறோம். ஆனால் எங்கள் குடும்பங்களை இப்படி மனித இனத்தில் இருந்து பிரித்துவிட முடியாது என்றார்கள் சில நடுத்தர வயதினர்.
நீங்கள் அப்படிச் செய்யக் கூடிய உதவிகளும் சில உண்டு என்றார் முதலாம் சிந்தனாவாதி..
என்ன அவை..?
உங்களிடம் இருக்கும் உதவாத பொருட்களை விட்டுச் செல்லுங்கள். இப்படி ஒரு தீவு இருப்பதை மீனவர்களுக்குத் தெரியும்படி செய்யுங்கள். மீன்பிடிக் கப்பல்கள் இந்தத் தீவிற்கு வந்து செல்லுமானால் வியாபாரம் ஆரம்பமாகி விடும்..
மீன்பிடிக் கப்பல்களா?
ஆமாம்.. நீலவெணிக் கழிமுகத்தில் சிறந்த மீன்கள் கிட்டும்.. அதே போல் மீனவர்கள் நெடுந்தொலைவு மீன் பிடித்த பின்னர்.. இளைப்பாறி மீண்டும் செல்ல இந்த இடம் உபயோகப்படும்..
அவர்களுக்கு உணவும் கிடைக்கும். குடிநீரும் கிடைக்கும். சில பணப்பயிர்களும் இங்கு கிடைக்கும். அவர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது கருவிகள். கடப்பாரை, மண்வெட்டி, தீப்பெட்டிகள், உடைகள், ஆணிகள், சுத்தியல்கள், இரம்பங்கள் இப்படிச் சில. மீன்பிடித் தொழிலோடு அவர்களுக்குச் சற்று அதிக வருமானமும் கிடைக்கும்.
இந்த யோசனை சிந்திக்க வைக்கிறது என்றார் ஒரு வயதானவர்.
உழைப்பால் நாம் உற்பத்தி செய்வதை மீனவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். அதற்கு பதிலாய் நவீன உலகத்துடன் பாலமாய் இருக்கட்டும்.
முதலில் நம் வாழ்வைச் ஸ்திரப் படுத்திக் கொள்ள இவையெல்லாம் உதவும். இப்பொழுதாவது சிலர் இங்கு தங்க யோசிப்பீர்களா?
வியாபார்களிடம்?
வியாபாரிகளிடம் இதைத்தான் கேட்கப் போகிறேன். இப்பகுதியில் என்ன கிடைக்கிறது என்பதையும் இத்தீவிற்கு வரவேண்டிய வழியையும் உலகிற்குச் சொல்ல.. அதேபோல் உதவாது என அவர்கள் எறியும் பொருட்களையும் எங்களுக்குக் கொடுத்துச் செல்ல.
இவ்வளவு கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டுமா? இவ்வளவு சிந்தனை உள்ள நீங்கள் ஏன் மக்கள் வாழும் உலகிற்கு வந்துவிடக் கூடாது?
மக்கள் வாழும் உலகம்... மெல்லச் சிரித்தார் மூன்றாம் சிந்தனையாளர். மனிதன் வசிக்க வேறு கிரகங்கள் தேடிக் கொண்டிருக்கும் காலத்தில் இதை நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது.
அவர்கள் அத்தனைத் தொழில்நுட்பங்களின் துணையோடுதானே செல்கிறார்கள்?
காரணம் அங்கு அவர்களால் வாழமுடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.. இங்கு நம்மால் வாழமுடியும்.
அப்படி என்னத்தான் சாதிக்க நினைக்கிறீர்கள் இந்தத் தீவில்?
இதற்கு எந்தச் சிந்தனாவாதியும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் மௌனமாய் இருந்தனர். பின்னர் நால்வரும் உறுதியான குரலில் சொன்னார்கள்
"புதியதோர் உலகம் செய்வோம்"
தொடரும்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks