Results 1 to 7 of 7

Thread: ’மனமும் பஞ்ச பூதங்களும்’

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0

    ’மனமும் பஞ்ச பூதங்களும்’

    பண்பட்ட நிலமென
    நம் மனமிருந்தால்
    அம்மண்ணுக் குள்ளே
    வீழ்கின்ற விதைகள்,
    விண்ணைத் தொடும்
    விருட்சங்களாகலாம்!

    தன்னகத்தே துளியேனும்
    ஈரமெனும் இரக்கமிருந்தால்,
    கருணை மழை பொழிந்து
    இரந்தோர் துயர் துடைத்து
    இறவாப் புகழ் எய்தலாம்!

    பொறாமை எனும் நெருப்புக்கு
    மனதில் இடங் கொடுத்தால்,
    பொன் விளையும் பூமியைக்கூட
    காட்டுத் தீயாய்ப் பொசுக்கி
    கட்டாந்தரை ஆக்கி விடும்!

    கோபம் எனும் சூறாவளிக்குள்
    நாம் அகப்பட்டுக் கொண்டால்,
    கண் மண் தெரியாமல்
    சுழன்றடிக்கும் பேய்க்காற்றில்,
    குடும்பம் எனும் ஆலமரமே
    ஆணி வேரறுபட்டுச் சாயக்கூடும்!
    திக்குத் தெரியாத காட்டில்
    திசை மாறிய பறவைகளாய்ச்
    கூடியிருந்த சுற்றமும் நட்பும்!


    காட்டாற்று வெள்ளம் போல்
    தறி கெட்டோடும் எண்ணங்களைக்
    கரையெனும் நல்லொழுக்கத்தால்
    கட்டுக்குள் கொண்டு வந்து
    அமைதியான நதியினிலே
    வாழ்க்கையெனும் ஓடத்தைச்
    செலுத்துவோமாயின்
    இனிய பூஞ்சோலையாகும்
    நம் இல்லம்!
    வாழ்வில் என்றென்றும் வீசும்
    குளிர் தென்றல்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  2. #2
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    கோபமும், பொறாமையும் நம்மை கொல்லும் ஆயதங்கள்

    அழகான கவிதை

    நன்றி கலையரசி அவர்களே
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மனதுக்குள் எழும் உணர்வுகளுக்கு பஞ்சபூதங்களையும் ஒப்பிட்டவிதம் அழகு. நல்லதொரு வாழ்வுக்கு வித்திடும் கருத்துகளைத் தாங்கி நிற்கும் கவிதைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் அக்கா.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நல் கவிதைக்கு வாழ்த்தும் பாராட்டும்.

    கவிதை அமைப்பின்படி சில இடங்களில் உவமைகள் முழுமை பெற்றால் இன்னும் சிறக்கும். எடுத்துக்காட்டாக...
    Quote Originally Posted by கலையரசி View Post
    பண்பட்ட நிலமென
    நம் மனமிருந்தால்
    அம்மண்ணுக் குள்ளே
    வீழ்கின்ற விதைகள்,
    விண்ணைத் தொடும்
    விருட்சங்களாகலாம்!
    பண்பட்ட நிலம் = நம் மனம்
    விதைகள் = ?

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இந்த கவிதை கவிதைப் போட்டியில் எழுதப்பட்டதுதானே... நன்றாக இருக்கிறது.

    என்றாலும் அறிவுரைகளை இரண்டாயிரம் வருடம் முன்பிருந்தே நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே அதனை புதுமையான முறையில் சிந்திக்க மட்டுமே வேண்டும்!! உதாரணத்திற்கு நீங்கள் பொறாமை எனும் தீயை என்று எழுதியிருக்கும் வரிகள் திருவள்ளுவர் இரண்டு வரிகளில் சொல்லிவிட்டார் இல்லையா... கவிதை தனித்தே இருக்கவேண்டும்..

    தொடர்ந்து கவிதை எழுதுங்கள்
    அன்புடன்
    ஆதவா
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஐம்பொறிக்குள் ஐம்பூதங்களை அடக்கி வாழ்க்கையின் இரகசியம் சொன்ன உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

    இப்போதெல்லாம் புத்தி சொன்னால் சலிப்பு வரும். ஆதவாவுக்கு வந்திருக்குப் பாருங்க.

    எதையும் சொல்லுவதை விடச் சேர்ந்து செய்வது நல்லது. இந்தக் கோட்பாட்டில் இந்தக் கவிதையும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பானதாகி இருக்கும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •