103 ஓலவுட்.
வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாட்டம்.
பெரெய்ரா 5 விக்கட்.
இலங்கை
இந்தியா
நியூசிலாந்து
103 ஓலவுட்.
வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாட்டம்.
பெரெய்ரா 5 விக்கட்.
103/10
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
இந்த போட்டியைப் பற்றி அலசலாமா?
வெற்றி பெற்றால் மட்டுமே மக்கள் அதனை பாராட்டுகிறார்கள். தோற்றால் அதைப் பற்றி பேசுவதேயில்லை.
பந்து ஸ்விங் ஆனாலோ அல்லது நன்றாக எழும்பினாலோ நம் மக்களுக்கு ஆடத் தெரியவில்லை என்று இன்னொரு முறை அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோரை இனிமேல் இந்தியாவில் நடக்கும் மாட்சை கணக்கில் வைத்து எடுக்கக்கூடாது என்று தெரியவருகிறது.
தைரியமாக ஐபிஎல் போட்டியில் ஆடிய சவ்ரவ் திவாரிக்கு ஏன் சான்ஸ் கொடுக்கவில்லை என்று எனக்கு விளங்கவில்லை.
அடுத்த உலகக்கோப்பைக்கு பல நாடுகள் ஆயத்தமாகிவிட்டன, நம் இந்தியா இன்னும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறது.
தோனியின் தலைக்கு ஆபத்து என்றே தெரிகிறது.
இந்தப் போட்டியையும் அலசலாமே அண்ணா, முன்பே நான் இந்த திரியில் குறிப்பிட்டது போல திவாரிக்கு வாய்ப்புக் கொடுத்திருக்க வேண்டும். ஷேவக்கை மட்டும் நம்பி எல்லா போட்டிகளிலும் விளையாட முடியாதே...
யுவராஜ் முன்னைய போட்டிகளில் எப்படி விளையாடியிருந்தாலும் நேற்று பொறுப்பாக ஆட முனைந்திருந்தார், மத்திய வரிசையில் யாராவது ஒருவர் அவருக்கு தோள் கொடுத்திருந்தாலும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.
அணி வீரர்களில் வெற்றிக்கான முனைப்புத் தெரியவில்லை, அது தெரிய ஆரம்பித்தால் வெற்றி தானே வசப்படும்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தோனியை விட்டால் யாரைத் தலைவராக நியமிப்பது...??
ஷேவக் தலைவரானால் ஷேவக் அணி, தோனி அணி என இரு அணி இருப்பது இன்னமும் வலுப்படும், அது அணி ஒற்றுமையைக் குலைக்கும்...
கம்பீர் வந்தாலும் அது ஷேவக் அணிதான்..!!
ரெய்னாவுக்கு அனுபவம் போதாது...
யுவராஜ் அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கிறார்...
அதனால் தலைவரை மாற்றிக் கொண்டிராமல், நல்ல இளம் வீரர்களை அணிக்குள் உள்வாங்கி இதே தலைமையில் அணி ஒற்றுமையைப் பலப்படுத்துவதே நல்லது.
Last edited by ஓவியன்; 23-08-2010 at 06:07 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
உலகக்கோப்பை நடக்க இருப்பது ஆசியாவில். இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் தினேஸ் கார்த்திக் போன்றவர்களையும், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் நடக்கும் போட்டிகளில் சச்சின், காம்பீர் போன்றவர்களைக் கொண்ட அணியையும் களமிறக்கி இந்தியா கோப்பையை ஜெயிக்கும் பாருங்கள்.
இந்தப் போட்டியின் இந்தியாவின் ஆட்டம் சிறப்பானதாக இல்லை என்றாலும் இலங்கையின் ஆட்டம் துடிப்பாக இருந்தது. திட்டமிடல், தீட்டல், ஒருங்கிணைதல், செயலாக்கல் என அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்கினர்.
ஸ்டம்புக்குப் பின்னால் நிற்பதும், திடீரென தூரமாக நிற்பதுமான சங்காவின் பாசைகளை பந்துவீச்சாளர் புரிந்து பந்து வீச, சுதாரிப்பதுக்குள் அனைவரும் சுருண்டு இந்தியா தோத்தது.
ஷேவாக், யுவராஜ் தவிட மற்ற எல்லாரும் அவுட்டானதைப் பார்த்து வெறுத்து விட்டேன். தோனியின் அவுட், அவருடைய பழைய அவுட்களின் அப்பட்டமான கொப்பி.
அண்மைய வெற்றி தோல்விகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் வெற்றி தோல்வி ஷேவாக்கிடம் என்று எண்ணத் தோன்றுகிறது.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தினமலரின் செய்தியைப் பாருங்கள், முக்கியமாக செய்தியின் தலையங்கம்..!!
http://sports.dinamalar.com/NewsDeta...=6873&value3=I
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
சரியாத்தானே சொல்லி இருக்காங்க ஓவியன்.
யுவராஜ்தானே நேற்று இந்திய அணி.
அவர் வெளியேற்றப்பட்டது முறையற்றது.
அப்ப, சரியாத்தான் மணம்விட்டிருக்கு தினமலர்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks