Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: அம்மா என்றொரு மனுஷி

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    அம்மா என்றொரு மனுஷி

    புதிய திரைப்படத்தின்
    திருட்டுப் பதிப்பினைப் பார்வையிட
    கூடத்தில் அனைவரும் கூடியிருக்கும் வேளையிலும்
    உணவு தயாரிக்கும் உரிமை மட்டும்
    எக்காரணம் கொண்டும்
    எவராலும் பறிக்கப்படாமல்
    அவளிடமே அதீதமாய் விட்டுவைக்கப்படுகிறது.

    முன்தினம்முதலாய் குளிர்சுரம் கண்டு
    கம்பளிக்குள் முடங்கி
    பினாத்திக்கொண்டிருந்தவள்,
    மாத்திரை முழுங்கிய மறுகணமே
    பரவாயில்லை இப்போதென்று சொல்லி
    பட்டென எழுந்துகொள்வாளென்று
    எல்லோராலும் அனுமானிக்கப்படுகிறது.

    குற்றாலத்துக்கு குடும்பத்துடன்போக
    மகிழுந்து பேசி மற்றவரெல்லாம் ஏறியபின்
    அவளொருத்திக்கு மட்டும் இடமில்லையென்பது
    இறுதிகணத்தில் தெரியவர....
    'நானிருக்கேனே வீட்டில்!'
    வழக்கம்போலவே அந்த வாசகம்
    அவள் வாயிலிருந்தே வரவேண்டுமென்று
    உளமாற வேண்டப்படுகிறது.

    அவளது ஒப்புதலின்றி எதுவும் செய்வதில்லையென்ற
    அப்பாவின் பிரதாபப் பேச்சுக்குமுன்
    ஊமையாகிப் போகின்றன,
    பலவந்தமாய்ப் புறக்கணிக்கப்பட்ட
    அவளது எதிர்ப்புகளும், மறுப்புகளும்.

    இத்தனைக்குப் பின்னும்
    இயந்திரமனுஷியாய் இல்லாமல்
    புன்னகையுடனும் புத்துணர்வுடனும்
    வலம்வரவேண்டுமென்று அனைவராலும்
    அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படுகிறது.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    கீதம் அதுதான் அம்மா
    யதார்த்தமான கரு வாழ்த்துக்கள் கீதம்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    எதார்த்தத்தில் ’விட்டுக்கொடுத்தல்’ என்ற உயர்ந்த பண்பு அம்மாக்களுக்கு மட்டுமே விட்டுக் கொடுக்கபட்டிருக்கிறது..!! அவளுக்குள்ளும் ஒரு மனுசி உண்டெண்பதை உணர்த்தி, அம்மாவுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அமைந்த கவிதை... வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    அருமையான கவிதை... பாராட்டுக்கள் கீதம்... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் ..

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    அம்மாவின் இந்த விட்டுக்கொடுத்தலும் குடும்பத்துக்காகச் செய்யும் தியாகமும் தான் எல்லாக் காலத்திலும் போற்றப்படுகின்ற விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் அவளும் ஒரு மனுஷி; அவளுக்கும் அபிலாஷைகள் இருக்கும் என்ற உண்மையைக் கருவாகக் கொண்ட இக்கவிதை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்து கீதம்!
    Last edited by கலையரசி; 10-08-2010 at 02:23 PM.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Smile

    போற இடத்தில எப்படி இருக்கப் போறாளோ , பரவாயில்லை தூங்கட்டும் , பரவாயில்லை, டிவி பார்க்கட்டும் , பரவாயில்லை என்ஜாய் பண்ணட்டும் ... இப்படி சொல்லி அப்பாவிடம் இருந்து பெண்களை காப்பாற்றிய நிறைய தாயுள்ளங்களை பார்த்து இருக்கிறேன் . நல்ல கவிதை கீதம் வாழ்த்துக்கள்.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அம்மாதான் குடும்பத்தின் ஆதாரம் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. குடும்ப சந்தோசத்தையே அவள் விரும்புகிறாள். அதுக்காக தன்னைத் தேய்க்கவும் அவள் துணிகிறாள். அவளளவுக்கு இல்லாவிடினும் அவளது சேலை நூலளவுக்கு என்றாலும் மற்றவர்கள் அவள்மேல் அக்கறை காட்டவேண்டும்.

    கவிதையின் ஓட்டத்தில் அம்மாவைப் புறக்கணிப்போர் அனைவரும் குழந்தைகளாகத் தெரிகிறார்கள்.

    அம்மா ஆரம்பத்தில் விட்டுக்குடுக்கப்போய் அதையே பழக்கமாக்கிவிட்டார்கள். கால ஓட்டத்தில் அம்மாவுக்கும் அவை பழக்கமாகிவிட்டிருக்கும். அவள் இயந்திரமாகிவிட மற்றவர்கள் இயக்குபவர்கள் ஆகிவிகின்றனர். அப்போ சக்தி எங்கிருந்து கிடைக்கிறது..

    ஆங்காங்கே மறைந்திருக்கும் இல்லத்தரசியின் இயலாமையை கடைசிக்கு முதல் பத்தி வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் பல இல்லத்து அரசிகள் இருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.

    இயல்பான கவிதைக்குப் பாராட்டுகள் கீதம்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    அம்மாவின் மனமறிந்து
    அவர்களை மகிழ்வாக வைக்க வேண்டுமென
    எண்ணத் தூண்டும் கவி வரிகள்.

    பாராட்டுக்கள்.

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by வியாசன் View Post
    கீதம் அதுதான் அம்மா
    யதார்த்தமான கரு வாழ்த்துக்கள் கீதம்
    பல வீடுகளில் நிகழும் யதார்த்த நிலைதான் என்றாலும் மனம் பாதிக்கும் நிகழ்வு அல்லவா? முதற்பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி, வியாசன் அவர்களே.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தவாசன் View Post
    எதார்த்தத்தில் ’விட்டுக்கொடுத்தல்’ என்ற உயர்ந்த பண்பு அம்மாக்களுக்கு மட்டுமே விட்டுக் கொடுக்கபட்டிருக்கிறது..!! அவளுக்குள்ளும் ஒரு மனுசி உண்டெண்பதை உணர்த்தி, அம்மாவுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அமைந்த கவிதை... வாழ்த்துக்கள் கீதம் அவர்களே..!!
    சில அம்மாக்களின் தியாகங்கள் இறுதிவரையிலும் புரிந்துகொள்ளப்படாமலேயே இருக்கின்றன. வாழ்த்துக்கு நன்றி, சுகந்தவாசன்.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பா.ராஜேஷ் View Post
    அருமையான கவிதை... பாராட்டுக்கள் கீதம்... மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் ..
    மிகவும் நன்றி, ராஜேஷ். அம்மா கவிதைகள் இன்னும் வரும்.

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கலையரசி View Post
    அம்மாவின் இந்த விட்டுக்கொடுத்தலும் குடும்பத்துக்காகச் செய்யும் தியாகமும் தான் எல்லாக் காலத்திலும் போற்றப்படுகின்ற விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் அவளும் ஒரு மனுஷி; அவளுக்கும் அபிலாஷைகள் இருக்கும் என்ற உண்மையைக் கருவாகக் கொண்ட இக்கவிதை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்து கீதம்!
    மிகவும் நன்றி, அக்கா. அம்மா என்னும் மனுஷிக்கு என்னால் இயன்ற கவியாரம் சூட்டினேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •