புத்தகங்கள் சுமக்கும் குழந்தைகள்
பார்த்திருக்கிறேன்
ஆனால் இங்கு
ஆக்ஸிஜன் சிலின்டர்கள் சுமக்கிறதே!
ஒரு கடையில்...
"மன்னிக்க வேண்டும்
மறந்து வந்துவிட்டென்
அம்பது ரூபாய்க்கு
ஆக்ஸிஜன் கிடைக்குமா?"
அங்கென்ன மக்கள் கூட்டம்
ஏதேனும் திருவிழாவா?
இல்லை இல்லை
சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு
ஒரு விதை
தளிர் விட்டிருப்பதை
தரிசிக்கத்தான் இந்தக் கூட்டம்
மாலைமுரசில் அதிசயமாய்
ஒரு செய்தி.....
'பரவலாய் மழை பெய்யவாய்ப்பு!
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு
நிகழும் அதிசயம்!'
அந்த வேலைவய்ப்பு அலுவலகத்தில்
இளைஞர்கள் கூட்டம் ஏன்?
அரசாங்கமே எடுத்துநடத்தும் விபச்சாரவிடுதிக்கு
ஆட்கள் தேவையாம்
அந்த மளிகைக் கடையில் தொங்குவது
மதுபான பாட்டில்கள்தானே?
ஓ..அந்த மங்கையின் ஜரிகைமட்டும்
ஆடை அணிந்திருப்பதாய்
அடையாளம் காட்டுகிறது!
இறைவா
இதென்ன கொடுமை?
இனி நமக்குத் தேவை மீண்டும்
இன்னொரு அமீபா,பரமோசியம்....
'மதம்,பிடிக்காத யானைகள்
மற்றும் மனிதர்கள்
குடியரசு தலைவரானாலும்
குடிசையில் வாழும் மனிதர்
மாசற்ற மனிதர்கள்
காசற்ற வாழ்க்கை
போலி இல்லாத அரசாங்கம்
வேலி இலாதக் காதல்
மரம் வெட்டியவனுக்கு
மரணதண்டனை
புதிதாய் ஒரு சட்டம்-கவிஞர்.மு.ஷேக்
Bookmarks