"மேலோட்டை உதிர்த்தபின்னும் மரத்தோடு ஒட்டிக்கொண்டும், காற்றடிக்கும்போதெல்லாம் ஊஞ்சலாடிக்கொண்டும், வாசத்தை எங்கும் தவழவிட்டுக்கொண்டுமிருந்த புளியம்பழங்களைப் போலவே கருப்பையாவும் கல்யாணியின் மனதுக்குள் இன்னமும் விடாப்பிடியாய் ஒட்டிக்கொண்டு அவள் சுவாசத்தோடு கலந்து நினைவுகளால் இனித்துக்கொண்டிருந்தான்."
இந்த இடத்தில் இடறியது.. முன்கதையும் சரி.. இந்த இடமும் சரி.. இறந்த காலத்தைக் குறிப்பதால் கவனத்தில் இருந்து தவறிற்று. இனித்துக்கொண்டிருக்கிறான் என்றிருந்தால் சரியாயிருக்குமோ? ஏனெனில் வரிகளில் இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் வேறுபடுத்திக்காட்ட இன்னமும் மட்டுமே இருக்கிறது..
நான் சொல்ல வந்தது புரியும் என நம்புகிறேன்.!
சரியான பாயிண்டைப் பிடித்துவிட்டீர்கள்.
கதையின் முடிவில் (நோட்டுப்புத்தகத்தில்) இனித்துக்கொண்டிருக்கிறான் என்றுதான் எழுதியிருந்தேன். தட்டச்சு செய்யும்போது இனித்துக்கொண்டிருந்தான் என்று எழுதினால் இன்னும் சரியாய் இருக்கும் என்று நினைத்து மாற்றினேன். இபோது நீங்கள் சுட்டிக்காட்டியபிறகு எனக்கும் புரிகிறது. மிகவும் நன்றி, மதி. மாற்றிவிடுகிறேன்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
மிகவும் நன்றி, நிவாஸ்.
ஒரே வீட்டில் சிறுவயது முதல் தினமும் பார்த்துக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் ஒன்றாக வளர்பவர்களுக்குள் காதல் வசனங்கள் தேவைப்படாது என்று நினைத்தேன். அவர்களுக்குள் இருந்த காதலை வெளிப்படுத்தவே சினிமா பார்க்கச் செல்லும் சம்பவம் இணைத்திருந்தேன்.
உங்கள் மேலான பாராட்டுக்கு மீண்டும் நன்றி.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks