Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 54

Thread: காதல்னா சும்மாவா? - காலம் 2 - பாகம் 2

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    காதல்னா சும்மாவா? - காலம் 2 - பாகம் 2

    வணக்கம்..

    இது போன வருடம் எழுதிய காதல்னா சும்மாவா? கதையின் காலம் இரண்டு (அதாங்க சீசன் 2). காதலில் சிக்கிய அருண் என்ன ஆனான்? ஸ்ரேயாவின் மனதை ஜெயித்தானா? அவன் காதல் ஜெயித்ததா? இந்த கேள்விகளுக்கு விடை இதோ அடுத்த பாகத்தில்...






    தற்போது எழுதிவரும் "உலகத்தில் எத்தனையோ பேர் இருக்க நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??" கதை முடிந்தவுடன் இது ஆரம்பமாகும்.

    அதுவரை காலம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்கவும்..

    இனி கொஞ்ச நாளைக்கு மன்றத்தை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது.....
    Last edited by மதி; 27-07-2010 at 10:26 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஆஹா... அடுத்த அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிச்சாச்சா...


    அட்டைப்படம் ரொம்ப நல்லாருக்கு...

    காத்து உங்கப்பக்கம் அடிக்குது தூத்திக்கோங்க...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    யப்பா.. மதி..

    எப்படிப்பா இந்தப் படவேலை எல்லாம் செய்யுறீங்க. கொஞ்சம் சொல்லிக் குடுக்கிறது.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    முதல் காலக் கதையை அதுக்குள்ள எல்லாரும் ஒரு முறை மீள் பார்வை செஞ்சுட்டு வாங்க..

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19474



    அப்பதான் முதல் பெஞ்சு காலியாகும்.. நாம டபக்குன்னு உக்காந்துக்கலாம்..


    அப்பவே சொன்னமில்ல...

    "இதுல பார்ட் டூ எழுதறத்துக்கு சூப்பர் ஸ்கோப் இருக்கு...

    பரவாயில்ல பரவாயில்லை..

    அடுத்த கதை சீக்கிரமா எழுதுங்க."


    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19474
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    அடுத்த கதையா? நான் சொன்ன யோசனை என்னாச்சு? சிட்டுக்குருவி கதை இல்லையா?

    முகப்புப் படம் சூப்பர் மதி.... இனி ஓவியண்ணா இனி, இதழ் தொகுப்புக்கு அட்டைப் படத்துக்கு ஆள் பஞ்சமில்லை....
    மதின்னா சும்மாவா?

    அடுத்த காதலுக்கு வாழ்த்துகள்.... சீ கதைக்கு வாழ்த்துகள்....
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by செல்வா View Post
    ஆஹா... அடுத்த அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிச்சாச்சா...


    அட்டைப்படம் ரொம்ப நல்லாருக்கு...

    காத்து உங்கப்பக்கம் அடிக்குது தூத்திக்கோங்க...
    வேறென்ன வேலை
    Quote Originally Posted by அமரன் View Post
    யப்பா.. மதி..

    எப்படிப்பா இந்தப் படவேலை எல்லாம் செய்யுறீங்க. கொஞ்சம் சொல்லிக் குடுக்கிறது.
    நான் ஒரு கத்துக்குட்டி. ஜாம்பவான்கள்ல்லாம் நிறைய பேர் மன்றத்துலேயே இருக்காங்களே...
    Quote Originally Posted by தாமரை View Post
    முதல் காலக் கதையை அதுக்குள்ள எல்லாரும் ஒரு முறை மீள் பார்வை செஞ்சுட்டு வாங்க..

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19474



    அப்பதான் முதல் பெஞ்சு காலியாகும்.. நாம டபக்குன்னு உக்காந்துக்கலாம்..


    அப்பவே சொன்னமில்ல...

    "இதுல பார்ட் டூ எழுதறத்துக்கு சூப்பர் ஸ்கோப் இருக்கு...

    பரவாயில்ல பரவாயில்லை..

    அடுத்த கதை சீக்கிரமா எழுதுங்க."


    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19474
    நீங்க ஒரு தீர்க்கதரிசி..
    Quote Originally Posted by samuthraselvam View Post
    அடுத்த கதையா? நான் சொன்ன யோசனை என்னாச்சு? சிட்டுக்குருவி கதை இல்லையா?

    முகப்புப் படம் சூப்பர் மதி.... இனி ஓவியண்ணா இனி, இதழ் தொகுப்புக்கு அட்டைப் படத்துக்கு ஆள் பஞ்சமில்லை....
    மதின்னா சும்மாவா?

    அடுத்த காதலுக்கு வாழ்த்துகள்.... சீ கதைக்கு வாழ்த்துகள்....
    சிட்டுக்குருவி கதையெல்லாம் இல்லே.. இப்போதைக்கு டாக் கதை மட்டும் தான். அதைப் பத்தி படிக்கவே நேரம் சரியா இருக்கு..

    முகப்புப்படம்... எல்லாம் சுட்டுப் போட்டது தான்..!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    மதி எப்டீங்க உங்களால மட்டும் முடியுது?

    நீங்க ஒரு கதை களஞ்சியம் போங்க
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    மதி எப்டீங்க உங்களால மட்டும் முடியுது?
    மதியாலத்தான்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by செல்வா View Post
    மதியாலத்தான்.
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    காதல்னா சும்மாவா? - காலம் 2 - பாகம் 1

    (குறிப்பு: இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. இந்தக் கதை புரிய முதல் பாகத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..)

    காதல்னா சும்மாவா?! நடந்து ஒரு வருஷமிருக்கும்.

    ஒரு வெள்ளிக்கிழமை சாயங்கால வேளை.

    பெங்களூர் மாநகரின் புகழ்பெற்ற பப்.

    மங்கலான ஒளி அங்கங்கே வீச பாதி வெளிச்சமும் பாதி இருட்டாயிருந்த அந்த பெரிய ஹாலே பிதுங்கி வழிந்தது. டீசர்ட் ஜீன்ஸ் போட்ட இளைஞர்களும் ஸ்லீவ்லெஸ் மற்றும் இன்னபிற லெஸ்களுடன் வெள்ளைத் தோல் யுவதிகளும் பாரபட்சமில்லாமல் வயசு வித்தியாசமில்லாமல் சுதி ஏற்றிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம். வாலிபத்தைக் கடந்த பிஸினஸ்மேன்கள் பெருந்தொப்பைகளோடு வியாபாரம் பேச சுற்றி உட்கார்ந்து வம்பளத்துக் கொண்டிருந்தனர். சுவரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரில் மேற்கத்திய இசை வழிந்து கொண்டிருந்தது. பேஸ்கிடாரில் எவனோ பாடிக் கொண்டிருந்தான். மாட்டியிருந்த பெரிய சைஸ் டிவியில் மௌனமாய் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். சற்றுத் தள்ளி உள்ளே போனால் இன்னும் கொஞ்சம் இருட்டாயிருந்தது. வருபவர்களின் வசதிக்கேற்ப தடுப்புச் சுவர்கள் வேற. தெரிந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தில் நாளைய பாரதத் தூண்கள் ஜோடி ஜோடியாய் உட்கார்ந்திருந்தனர். மேஜையில் இருக்கும் பீர் பிண்ட்கள் முக்கால் வாசிக்கும் மேல் காலியாகி அவர்களின் தள்ளாட்டத்தை பறைசாற்றியது. வாய் திறந்தால் அமெரிக்கன் ஆங்கிலம் தான். ஏதோ வழி தடுமாறி வேற நாட்டுக்குள் வந்துவிட்டோமோ என்று சந்தேகம் வரும். அங்கே ஓரமாய் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்த அந்த ஆபத்தான பெண் (அழகுனாலே ஆபத்து தானே) தன் காதலன் (நண்பன்) மேல் தொங்கிக் கொண்டு ஸ்டைலாய் சிகரெட்டை வாயில் வைத்து வளையம் வளையமாய் புகை விட்டாள். சுட்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவில் விரல்களின் நுனியில் வலிக்காமல் அவள் சிகரெட்டை பிடித்திருந்த விதம் அழகு. அதிலும் அதன் முனையை சாயம் பூசிய தன் உதட்டோரமாய் வைத்து இழுத்தும் இழுக்காமலும் ஒத்தடம் கொடுத்தது அதை விட அழகு. யாரேனும் ரசிகன் இருந்தால் மிச்சமிருந்த சாயம் பட்ட அந்த சிகரெட்டை லட்சக் கணக்கில் ஏலத்திற்கு எடுத்திருப்பான். அவள் அணிந்திருந்த மேலாடையோ அவளை விட அபாயகரமாய் தொங்கியது. எதைப்பற்றியும் கவலைப்பட மக்கள் பூமியில் இருந்தால் தானே? வானத்தில் எங்கோ தூரமாய்… அளந்து பார்க்க பயணப்பட்டிருந்தனர்.

    கதைக்கு வருவோம். ஓரமாய் ஒரு மூலையில் யாரும் தொந்தரவு செய்யாத வண்ணம் உட்கார்ந்திருக்கிறார்கள் அந்த மூவர். உங்களுக்கு முன்பே அறிமுகமானவர்கள் தான். அருண், கணேஷ் மற்றும் ஹரீஷ். அப்போது தான் வந்திருந்ததால் தெளிவாகவே இருந்தனர். ஆர்டர் எடுக்க பேரர் வந்ததும்…

    அருண், “ஒரு பிண்ட் பியர். பீநட் மசாலா. ஃபிஷ் பிங்கர் ஒரு ப்ளேட். ஃப்ரைட் கேஷ்யூநட்ஸ்.”

    திரும்பி,

    “வேற என்னப்பா சொல்லட்டும்?”

    ஹரீஷ் ஆர்வமாய்,

    “இங்க கார்லிக் சிக்கன் சூப்பரா இருக்கும். ஒரு ப்ளேட் சொல்லிடுங்க.”

    அவனை முறைத்தபடி பேரரிடம் அருண்,

    “ஒன் ப்ளேட் கார்லிக் சிக்கன்”

    பேரர் போனதும் ஹரீஷிடம் திரும்பி,

    “இங்க எப்போடா வந்தே..? நீ இத ஆரம்பிச்சதே எனக்குத் தெரியாதே?”

    “பேச்சுலர்ஸ் பார்ட்டி இங்க தான் கொடுத்தேன். நீங்க இரண்டு பேரும் தான் இல்லே.”

    ஆம். இந்த ஒரு வருடத்தில் நிறைய மாற்றங்கள். ஹரீஷுக்கு கல்யாணமாகி விட்டிருந்தது. அதன் காரணமாக வயிற்றில் சின்னதாய் தொப்பை. ஸ்ரேயாவின் பின்னால் போன அருண் அதன்பின் ஒரு மாதத்திலேயே ப்ராஜக்ட் விஷயமாக அமெரிக்காவிற்கு ஆன்ஸைட்டுக்கு போய்விட்டான். அப்படியே வேற ப்ராஜக்ட் மாறிவிட்டான். கணேஷும் டீம் மாறி இந்தப்பக்கம் ப்ரான்ஸ் பக்கம் போய்விட்டான். ஹரீஷ் மட்டும் பெங்களூரில். ஹரீஷின் கல்யாணத்திற்கு இருவரும் வரவில்லை. வாழ்த்துகளை அனுப்பியதோடு சரி. அப்பப்போ கம்பனி மெசஞ்சரில் பேசிக்கொள்வர். ஆனாலும் வேலை பெண்டை நிமிர்த்தியதால் பழைய மொக்கைத் தனங்களை மறந்திருந்தனர். அருண் ஷ்ரேயாவுடன் சுத்திக்கிட்டு இருந்தது தெரிந்தாலும் அமெரிக்கா போனதும் என்னவாயிற்று என்பதை கேட்கவில்லை. அவரவர் வாழ்க்கைப்பயணத்தில் மூழ்கி இருந்த நிலையில் திரும்பவும் பெங்களூர் வந்தனர். ஒரு வருடத்திற்கு பின் ஒரு வார இடைவெளியில் இருவரும் வர பழைய ஜமாவை கூட்டியிருந்தனர். சின்னதாய் ஒரு பார்ட்டி.

    “ம்ம்.. நடத்து நடத்து. உன் பொண்டாட்டிக்குத் தெரியுமா?”

    “அன்னிக்கு ஒரு தடவ தான். போனதும் போன் பண்ணி சொன்னேன். கன்னாபின்னான்னு திட்டினா. இப்பல்லாம் நல்லா சமாளிக்க கத்துக்கிட்டேன்”

    “ம்ம்.. அவனவன் கல்யாணம்னாலே கஷ்டம்னு புலம்பிக்கிட்டு இருக்கான்.”

    “ஆமாமா.. அந்த கஷ்டத்த ஏன் கேக்கறீங்க..?”

    “நாங்க கேக்கல.. கொஞ்சம் உள்ள போனதும் நீயா சொல்லுவ..”

    அதுவரை அமைதியாக இருந்த கணேஷ் முதன் முறையாக சிரித்தான். அதுவரையில் பலத்த சிந்தனையிலிருந்தான்.

    ஹரீஷ் அவனிடம் திரும்பி,

    “என்ன பாஸ்.. ரொம்பவே அமைதியா இருக்கீங்க? என்னாச்சி?”

    “இல்ல… வீட்ல கல்யாண பேச்சு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதான் என்ன பண்ணலாம்னு செம யோசனை”

    “கவலைய விடுங்க. இதுக்கே கவலைப்பட்டா.. இன்னும் என்னன்னவோ இருக்கே..”

    “சொல்லுவடா சொல்லுவ. நீ பரவாயில்ல.. ஆள் கொஞ்சம் பார்க்க நல்லாருக்க. உன் பொண்டாட்டிக்கும் உன்னை புடிச்சுப் போச்சு. என்னைப் பாரு.. புடிச்சு வச்ச புள்ளையாராட்டம். இப்போவே பாட்டி கன்னாபின்னானு திட்டறாங்க.. உடம்ப குறை உடம்ப குறைன்னு. நான் என்ன வேணாம்னா சொல்றேன்.”

    அதற்குள் பேரர் ஐட்டங்களை கொண்டு வர ஆளுக்கு ஒரு க்ளாஸில் பீரை ஊற்றிக் கொண்டு சீயர்ஸ் சொல்லி குடிக்க ஆரம்பித்தனர்..

    ஹரீஷ் தான்..

    “ஸ்ஸ்… ரொம்ப நாளாச்சுங்க. நல்ல வேளை என் பொண்டாட்டி ஊருல இல்லே.. இல்லேன்னா பிச்சுருப்பா”

    “ம்ம்.. இருடி.. எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி உன் பொண்டாட்டிக்கிட்ட காட்டறேன்.”

    “ஐயோ.. தெய்வமே.. தயது செஞ்சு அந்த ஒரு வேலைய மட்டும் பண்ணிடாதீங்க. ஏற்கனவே கன்னாபின்னானு அடி விழுது”

    சோகமாய் கணேஷ்

    “அடியெல்லாம் வேற விழுமாடா? என் அப்பா அம்மா கூட அடிச்சதில்ல. ஆனா கல்யாணம் பண்ணின ஒவ்வொருத்தன் கதைய கேட்க ரொம்பவே பயமாருக்கு. இப்படித் தான் ஒவ்வொருத்தனும் பயமுறுத்தறாங்க..”

    “அதெல்லாம் கவலைப்படாதீங்க பாஸ். எல்லாம் அப்படி தான். ஒரு நாள் அணைச்சுக்கிட்டீங்கன்னா.. ஒரு நாள் அடிச்சிப்பீங்க. எல்லாம் சகஜம்ங்க. கல்யாணம் மட்டும் பண்ணிப்பாருங்க. எதை வேணா சாதிக்கலாம்னு தெம்பு வரும். இதையே தாங்கறோம். இனிமே எல்லாத்தையும் தாங்கலாம்னு”

    ஹரீஷ் கணேஷை தேற்றினான். மௌனமாய் கார்லிக் சிக்கனை நோண்டிக்கொண்டிருந்த அருண்

    “டேய் என்னடா சிக்கன்ல கார்லிக்கே காணல. இத தான் நல்லா இருக்கும்னு சொன்னியாக்கும்”

    “அன்னிக்கு சூப்பரா இருந்துது பாஸ்.. ஆமா. எப்போ கேட்டாலும் உங்க கதைய சொல்றேன் சொல்றேன்னு சொல்றீங்களே தவிர சொல்ல மாட்டேங்கறீங்க. எங்ககிட்ட பெரிசா டயலாக்கெல்லாம் பேசிட்டு திடீர்னு காணாம போய்ட்டீங்க. அப்பறம் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டோம். ஆன்ஸைட்டுக்கும் ஓடிப்போயிட்டீங்க. ஷ்ரேயாவையும் இங்க காணல. போன்லேயும் அந்த பேச்ச மட்டும் எடுக்கல. என்னாச்சு உங்க காதல். நீங்க எழுதின கதை வேற சூப்பரா இருந்துச்சு. என்னாச்சு பாஸ்?”

    சலிப்புடன் அருண்,

    “அது ஒன்னு தான் கொறச்சல். எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. அவ கூப்பிட்டான்னு நானும் ஓடினேன். நல்லா பேசினா. அவ ப்ராஜக்டே நான் தான் பண்ணி கொடுத்தேன்.”

    “அதான் தெரியுமே.. உங்க வேலைய கூட நீங்க பார்க்காததால அப்ரைஸல் ஆப்பரைஸல் ஆச்சாம்ல”

    “ம்ம். அதே தான். நான் ஆன்சைட்டுக்குக் கிளம்ப அவ எல்லாம் முடிச்சுட்டு சென்னைக்கு போனா. அமெரிக்காலேர்ந்து போன் பண்ணுவேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேசறத கொறச்சா.. நான் ப்ரப்போஸ் பண்ணலாம்னு இருந்த நேரத்துல திடீர்னு ஒருத்தன் பேர சொல்லி அவன காதலிக்கறதாவும் எப்படி ப்ரப்போஸ் பண்றதுன்னு தெரியலேன்னும் நான் தான் ஹெல்ப் பண்ணனும்னும் சொன்னா..”

    “என்ன பாஸ். இப்படி சொல்றீங்க. நீங்க என்ன பண்ணுனீங்க?”

    “என்ன பண்ண.. வழக்கம் போல குட் டிஸிஷன்னு சொல்லி என்னால முடிஞ்சத சொன்னேன். சக்ஸஸ் ஆயிடுச்சாம். அப்புறமா பேசறத கொறச்சுட்டா. அப்பப்போ மெயில் அனுப்புவா. அதில அவன பத்தி அதிகமா பேசுவா. வாழ்த்துகள்னு சொல்லி பதில் அனுப்புவேன். நான் ஐடியா சொல்ற காதல்லாம் சக்ஸஸ் ஆகுது. ஆனா எனக்கு மட்டும் ஏன்?”

    அருண் சோக வயலின் வாசிக்க ஹரீஷ் சுவாரஸ்யமாக

    “அடடா. இவ்ளோ நடந்துருக்கா.. அந்த கதைய படிச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. இங்க வந்ததும் அனௌன்ஸ் பண்ணுவீங்கன்னு நெனச்சேன். ப்ச். இத எதிர்பாக்கல.”

    “அதனால தான் நான் போன்ல கூட உங்ககிட்ட சொல்லல. ஆனா ஒன்னு கதை மட்டும் நல்லா இருந்துச்சுனு மெயில் அனுப்புனா. அவளுக்கு ரொம்ப தான் குசும்பு..”

    “அட விடுங்க பாஸ்.. உங்க கதைய வச்சு தான் என் பொண்டாட்டிய இன்ப்ரஸ் பண்ணினேன். எப்படி இருந்த நான் உன்ன பாத்து எப்படி மாறிட்டேன்னு”

    “நம்பிட்டாளா?”

    “அவ புத்திசாலி. எனக்கு அவள விட்டா ஆள் கிடைக்காதுனு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கா…”

    “ம்ம்.. பொழச்சுக்குவ..”

    ரொம்ப நேரமாய் ஒரு க்ளாஸ் பீரை கஷ்டப்பட்டு முழுங்கிகிட்டு இருந்த கணேஷ் பக்கம் திரும்பினர்.

    “ஏன் டா என்ன ஆச்சு? ரொம்ப கஷ்டப்படற போலிருக்கு? ப்ரான்ஸ் போய் மொடாக்குடியன் ஆனேன்னு கேள்விப்பட்டேன்”

    “ஹஹா.. எவனோ போட்டு குடுத்திருக்காங்க. கொஞ்சமா தான் குடிப்பேன். அதிகம்ல்லாம் இல்லே. நான் அதிகமா சாப்பிட்டது ப்ரஞ்ச் ப்ரைஸ் தான். பாத்தாலே தெரியுதுல்ல.”

    “அது சரி… ஆமா ப்ரான்ஸ்ல ப்ரஞ்ச் ப்ரைஸ எப்படி சொல்லுவாங்க..”

    “ம்ம்.. ப்ரீட்ஸுன்னு..”

    “சரி..சரி.. உன் கதைய சொல்லு.. ப்ரான்ஸ்ல என்னல்லாம் பண்ண..?”

    “அடப்போங்கடா.. போனேன்னு தான் பேரு. பாரீஸ கூட முழுசா சுத்திப்பாக்கல”

    “நீ ஒரு வெட்டிடா. எப்போ பாத்தாலும் எதையாவது சாக்குபோக்கு சொல்லிக்கிட்டு”

    நேரம் ஆக ஆக அவர்களின் பேச்சு குழற ஆரம்பித்தது. ஒருத்தரை ஒருத்தர் திட்டிக் கொள்வதிலும் ஓட்டுவதிலும் மிகுந்த அக்கறையோடு இருந்தனர். ஒருவருஷத்துக்கு அப்புறம் நடக்கற சந்திப்பு ஆச்சே. டான்ஸ் ப்ளோர் ஆரம்பித்ததும் தள்ளாட்டத்துடன் எழுந்து அருண் ஆட போய்விட்டான்.

    வியர்க்க விறுவிறுக்க அரைமணிநேரம் ஆடிவிட்டு தள்ளாடிக்கிட்டே அவன் இடத்திற்கு வருவதற்கும் அவனது செல்போன் மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Akila.R.D's Avatar
    Join Date
    20 Jan 2010
    Location
    Bangalore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    16,226
    Downloads
    67
    Uploads
    1
    அடடா பரவாயில்லயே மதி...
    இந்தக் கதையிலயும் அரட்டை இரண்டு பக்கத்துக்கு போயிடும் பார்த்தேன்...

    சீக்கிரம் கதையை ஆரம்பிச்சுட்டீங்க...

    இதே வேகத்துல கொண்டு போங்க...

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    குடிகாரப் பசங்க... அப்புறம்......
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •