Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 49 to 60 of 65

Thread: அசைப்போம் இசைப்போம்.

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஐகாரக் குறுக்கம்

    ஐகாரக் குறுக்கம் ஒன்றரை மாத்திரை பெறும் என உறுப்பியலில் கூறப்பட்டது.ஆயினும் அலகிடும்போது ஐகாரக்
    குறுக்கம் குற்றெழுத்தைப் போலக் கொள்ளப்பட்டு அதன்பின்
    வரும் குறில் அல்லது நெடிலுடன் சேர்த்து நிரையசையாக
    அலகிடப் பெறும்.

    எடுத்துக்காட்டு :
    அன்னையையான் நோவ தவமால் அணியிழாய்
    புன்னையையான் நோவன் புலந்து
    - (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
    (அவம் = வீண் ; நோவன் = வருந்துவேன் ; புலந்து
    = சினந்து)

    மேற்காட்டிய வெண்பாவில் ஐகாரத்தை
    நெடில்போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
    கொண்டு அன்னையையான், புன்னையையான் எனும் சீர்களை
    அன்-னை-யை-யான் எனவும் புன்-னை-யை-யான் என்று
    பிரித்தால் அவை நாலசைச் சீர்கள் ஆகும். வெண்பாவில்
    நாலசைச் சீர்களுக்கு இடமில்லை. ஆகவே ஐகாரக்
    குறுக்கத்தை ஒரு மாத்திரை பெறும் குறில் போலக் கொண்டு
    அன்-னயை-யான், புன்-னயை-யான் என அலகிட வேண்டும்.
    அச்சீர்கள் கூவிளங்காய்ச் சீர்கள் ஆகி, வெண்பா ஓசை
    காக்கப் பெறும்.
    (ஐகாரக் குறுக்கம் தொடர்பாகக் காரிகையில்
    சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள
    வேண்டும். சொல்லின் முதல், இடை, கடை என
    மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம்.
    அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை
    அயர், ஐயிரு என்பதை அயிரு என்பனபோல அலகிட
    வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள்
    மொழி முதலில், அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை
    நெடில் போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
    கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும்
    என இலக்கணம் வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு >
    ஐ-யிரு என அலகிட வேண்டும்.

    எடுத்துக்காட்டு :
    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும். - (திருக்குறள் - 774)
    (பறியா = பறித்து ; நகும் = சிரிப்பான்)

    மேற்காட்டிய வெண்பாவில் கைவேல் என்பதில் சீரின்
    முதலில் உள்ளது ஐகாரக்குறுக்கமே யாயினும் கை-வேல் எனத்
    தனி நேரசையாக அலகிட்டால்தான் வெண்பா இலக்கணம்
    அமையும். (குறில்போலக் கொண்டு நிரையசையாக அலகிட்டால்
    இலக்கணம் சிதையும்.)

    நன்றி : tamilvu.org

    இது இணையத்தில் கண்டெடுத்தது. மொழியின் நுட்பமான அலகுகளில் ஒன்றாகத் தெரிகிறது. உச்சரிக்கும் காலத்தின் அளவைக் கொண்டு அளக்க வேண்டியிருக்கிறது.

    தெரிந்தவர்கள் இன்னும் பல எடுத்துக் காட்டுகள் கொடுத்தால் எளிதாக விளங்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

    ஐ - வரக்கூடிய வார்த்தைகள் தொகுத்து அவற்றை அசை பிரித்தால் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்

    அம்மையப்பன்
    ஆணை
    யானை
    பாளை
    பானை
    சேனை
    மனைமாட்சி
    ஐந்து
    வளையாதது
    சிலையானது
    மழலை

    இவற்றை கொஞ்சம் அசைபிரித்துக் கொடுங்களேன்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #50
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அம்/மையப்/பன்
    ஆ/ணை
    யா/னை
    பா/ளை
    பா/னை
    சே/னை
    மனை/மாட்/சி
    ஐந்/து
    வளை/யா/தது
    சிலை/யா/னது
    மழ/லை
    அன்புடன் ஆதி



  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஐராவதம் = ஐரா-வதம்

    சரியா? உச்சரித்துப் பார்க்கும் போது ஐ குறுகியிருப்பதாகத் தோன்றுகிறது.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பின்னுறாங்கப்பா எல்லாரும்.

    கடைசீல அழகான சட்டைகள் நிறையக் கிடைக்கும்.

  5. #53
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    ஐராவதம் = ஐரா-வதம்

    சரியா? உச்சரித்துப் பார்க்கும் போது ஐ குறுகியிருப்பதாகத் தோன்றுகிறது.
    இல்ல டா..

    ஐ/ரா/வதம் என்றே பிரிக்க வேண்டும்..
    அன்புடன் ஆதி



  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஐகாரக் குறுக்கம் சம்மந்தமானவற்றைப் படிக்கும் பொது தோன்றியது..

    அழுத்தாமக அய் என உச்சரிக்கப்படுபவை நெடிலாகவும்
    அ என உச்சரிக்கப்படும் ஐ குறுக்கமாகவும் அமைகிறதோ.

  7. #55
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ஐகாரக் குறுக்கம் சம்மந்தமானவற்றைப் படிக்கும் பொது தோன்றியது..

    அழுத்தாமக அய் என உச்சரிக்கப்படுபவை நெடிலாகவும்
    அ என உச்சரிக்கப்படும் ஐ குறுக்கமாகவும் அமைகிறதோ.
    இதை கவனிங்க அமர்

    (ஐகாரக் குறுக்கம் தொடர்பாகக் காரிகையில்
    சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள
    வேண்டும். சொல்லின் முதல், இடை, கடை என
    மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம்.
    அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை
    அயர், ஐயிரு என்பதை அயிரு என்பனபோல அலகிட
    வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள்
    மொழி முதலில், அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை
    நெடில் போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
    கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும்
    என இலக்கணம் வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு >
    ஐ-யிரு என அலகிட வேண்டும்.
    அன்புடன் ஆதி



  8. #56
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இப்ப மட்டும் என் வாத்தியார் கையில கிடைச்சார். செத்தார்.

  9. #57
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    வாரே வா.... இதைப் புரிஞ்சுக்காம இந்தத் தலைப்பை விட்டு விலகுறதா இல்லை.

    ஐகார குறுக்கம். அதாவது ஐ’காரம் மாத்திரை அளவு குறுகி வருவது.

    எதற்காக என்றால் அசையொலி அவ்விடத்தில் குறைந்து இருக்கும். உதாரணத்திற்கு

    ”அன்னையினால்” என்ற வார்த்தையை “அன்னயினால்” என்பது போலத்தான் நாம் உச்சரிப்போம்.
    ஐ-ஐகாரக் குறுக்கம் தொடர்பாகக் காரிகையில்
    சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள
    வேண்டும். சொல்லின் முதல், இடை, கடை என
    மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம்.
    அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை
    அயர், ஐயிரு என்பதை அயிரு என்பனபோல அலகிட
    வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள்
    மொழி முதலில், அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை
    நெடில் போலவோ, 1 1/2 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ
    கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும்
    என இலக்கணம் வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு >
    ஐ-யிரு என அலகிட வேண்டும்யிரு என அலகிட வேண்டும்
    ஆதவாவின் மற்றும் ஆதனின் விளக்கங்களிலிருந்து
    மரபுக் கவிதைக்கும் இசைக்கும் நெருங்கியத் தொடர்புண்டு என்பது எனது எண்ணம். நமது யாப்பிலக்கணம் முழுக்க தமிழிசைக் குறிப்புகள் என்றே நான் நம்புகிறேன். அதனால் தான் ஒலிநீளமடிப்படையில் கட்டப்பட்டுள்ளது யாப்பு.

    குறுக்கமும் அளபடையும் உச்சரிக்கும் காலத்தை வைத்து மட்டுமே கணிக்கப் படுகிறது. அதன்படி பார்த்தால் ஐயர் - ஐயிரு இரண்டும் உச்சரிக்கும் போது ஐயில் ஒரு அழுத்தம் தெரிகிறது. அதற்கு நாம் கொடுக்கும் காலம் ஒரு மாத்திரைக்கும் அதிகமாக இருப்பதே காரணமாகப் படுகிறது. எனவே ஐ இங்கே நெடிலாகக் கொள்ள வேண்டும்.

    இதுவே ஐராவதம் - எனும் போது ஐ ஒரு மாத்திரை அளவே உச்சரிக்கப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. எனவே இதைக் குறிலாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

    ஐயா என்பதை எப்படி உச்சரிப்போம்? ஐ- க்கு அழுத்தம் கூடுகிறது எனவே ஐயானது ஒரு மாத்திரை அளவிற்கும் அதிகமாக ஒலிக்கிறது எனவே நெடில் இங்கே.

    சரியானு சொல்லுங்கப்பா...

    பங்காளி இந்த வார்த்தைகளை உச்சரித்துப் பார்த்து இசையினடிப்படையில் கால அளவு என்ன தோன்றுகிறது. என்பதைச் சொல்லேன்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  10. #58
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //இதுவே ஐராவதம் - எனும் போது ஐ ஒரு மாத்திரை அளவே உச்சரிக்கப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. எனவே இதைக் குறிலாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.//

    'ஐ' என்னும் எழுத்தை குறிக்கும் போது தவரி மற்ற இடங்களில் குறுகும்..

    ஐராவதமும், ஐயா,ஐயர் எல்லா இடத்திலும் குறுகியே ஒலிக்கும்,

    அய்ராவதம்,அய்யா,அய்யர் இப்படி பார்த்தால் யாவிற்கும் ஒன்றரை மாத்திரைதான்..
    அன்புடன் ஆதி



  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    ஐகாரம் குறித்த பல செய்திகள் கூறப்பட்டன.

    புதிதாக வெண்பா எழுதும் ஆவலோடு இருப்பவர்கள் குழப்பமடையாமல் எளிதாகப் பின்பற்ற ஐகாரம் குறித்த செய்தி :

    சொல்லின் - சீரின் - முதலில் வரும் ஐகாரம் நெடிலாகக் கொள்ளப்படும்.

    இடையிலும் இறுதியிலும்(கடையிலும்) வரும் ஐகாரம் குறிலாகக் கொள்ளப்படும்.

    இதை நினைவில் இருத்தினால் போதும்.

    எடுத்துக்காட்டு:

    யன் - இதில் ஐகாரம் நெடில்

    புதையல் - இதில் ஐகாரம் குறில்

    உன்னை - இதில் ஐகாரம் குறில்.

    அவ்வளவே.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  12. #60
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அதே.. அதே.. குணமதி!

Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •