அக்கா,
நேர் அசை விதிகள் - தனிக் குறில், தனி நெடில், தனிக் குறில்/நெடிலோடு ஒற்று..
என்/னோ/டு =நேர்/ நேர்/நேர்
என் *- தனிக்குறிலோடு ஒற்று
னோ - தனி நெடில்
டு - தனிக்குறில்
நேர் எனும் சொல்லை பிரித்தாலும் நேர் அசையே கிடைக்கும்..
நிரை அசை விதிகள் :-
1) குறிலொடு குறில்
2) குறிலொடு நெடில்
அலை/களே = நிரை/நிரை
அலை - குறிலொடு குறில்
களே - குறிலொடு நெடில்
நிரை எனும் சொல்லைப் பிரித்தாலும் நிரையசையே கிடைக்கும்
சேராதவை :-
1) நெடிலோடு முன்வர குறில் அதனுடன் சேராது
2) ஒற்று முன்வர பின்வரும் நெடிலோ, குறிலோ அதனுடன் சேராது.
இப்போ கொண்-டுவ-ரலாம் ஐ பார்ப்போம்..
கொண்-டுவ-ரலாம் = நேர்-நிரை-நிரை
கொண் - தனிக்குறிலொடு ஒற்று
டுவ - குறிலொடு குறில்
ரலாம் - குறிலொடு நெடில்
நேர்-நிரை-நிரை = கூ-விளங்-கனி
அன்புடன் ஆதி
கொண்டுவரலாம் என்பதை கொண்டு வரலாம் என்று பிரித்து எழுதியிருந்தால் கொண்/டு/ வர/லாம் என்று பிரிப்பதுதானே சரி. அதைத்தான் கலையரசி அக்கா கேட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
அசை வாய்ப்பாடுகள் :
நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நேர்நிரை - கூவிளம்
நிரைநிரை - கருவிளம்
நேர்நேர்நேர் - தேமாங்காய்
நிரைநேர்நேர் - புளிமாங்காய்
நேர்நிரைநேர் - கூவிளங்காய்
நிரைநிரைநேர் - கருவிளங்காய்
வெண்பா இயற்ற தேவையான அசை வாய்ப்பாடுகள் இவை..
அன்புடன் ஆதி
ஐகாரக் குறுக்கத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்...
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
அன்புடன் ஆதி
எனக்கும் அவ்வளவு விளக்கமாகத் தெரியாது செல்வா. ஏதோ தெரிந்ததை சொல்கிறேன். மற்றவை மற்றவர் கையில்.
ஐகார குறுக்கம். அதாவது ஐ’காரம் மாத்திரை அளவு குறுகி வருவது.
எதற்காக என்றால் அசையொலி அவ்விடத்தில் குறைந்து இருக்கும். உதாரணத்திற்கு
”அன்னையினால்” என்ற வார்த்தையை “அன்னயினால்” என்பது போலத்தான் நாம் உச்சரிப்போம்.
”னை” எனும் ஐகாரம் ஒலி அளவில் குறுகி ”ன” ஆகிவிடுகிறது. ஆதலால் இதை ஐகார குறுக்கம் என்கிறோம். சொல்லின் எல்லா இடங்களிலும் ஐகாரகுறுக்கம் வரலாம்.
அதே போல
அகந்தையை விட்டொழி (அகந்தயை)
உண்மையினால் பிழைத்தான் (உண்மயினால்)
ஆனால் எல்லா இடத்திலும் இது ஒத்து வராது. ”ஐயம் (சந்தேகம்)” இதை அய்யம் என்றுதான் நாம் சொல்லுவோம். அதனால் இதனை குறுக்க வேண்டியதில்லை. ( ஐ உம் அய் உம் ஒன்றுதான் ) ஐ யை நெடிலாக பாவித்து, ஐ+யம் என்று பிரிக்கலாம்.
ஐகாரத்திற்கு அருகில் ஒற்று வந்தாலும் அது நெடிலாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். ”ஐங்+கரன்”
எழுத்தில், குறுக்கமும் நீட்சியும் (அளபெடை) உண்டு!!
உயிரளபெடை ,
அனிச்சபூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஆ பறை
ஒற்றளபடை உண்டு!!! (பொன்ன், மண்ண்)
மேற்கூறியவற்றில் ஒன்றிரண்டு தவறுகள் இருக்கலாம். ஆகவே யாரேனும் ஆராய்ந்து அறிந்து கொள்க.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
//இடத்திலும் இது ஒத்து வராது. ”ஐயம் (சந்தேகம்)” இதை அய்யம் என்றுதான் நாம் சொல்லுவோம். அதனால் இதனை குறுக்க வேண்டியதில்லை. ( ஐ உம் அய் உம் ஒன்றுதான் ) ஐ யை நெடிலாக பாவித்து, ஐ+யம் என்று பிரிக்கலாம்.
//
ஆனாலும் நெடிலுக்குறிய இரண்டு மாத்திரை உற்றிலிக்காது 'ஐ'
'அய்' இதற்கு ஒன்றரை மாத்திரை தானே..
அசைப்பிரிக்கும் போது சொல்லின் முதலில் 'ஐ' வந்தால் அதனை நெட்டெழுத்தாகவே கருதுதல் அவசியம்..
ஐராவதம் - ஐ/ரா/வதம் என அசை பிரிக்கவேண்டும்..
அன்புடன் ஆதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks