Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 13 to 24 of 65

Thread: அசைப்போம் இசைப்போம்.

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பொதுவாக நாம் பேசுவதே இப்படி அசை பிரித்துத்தான் பேசுவோம். ஒரு எழுத்துக்கும் இன்னொரு எழுத்துக்கும் உள்ள சன்ன இடைவெளிதான் அசையாகப் பிரிகிறது.
    நாம் பேசும் வார்த்தைகளை நன்கு கவனித்தாலே தன்னாலே அசை புரிந்துவிடும்.

    நீங்கள் அசை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் எழுத்துக்களின் மாத்திரை அளவு தெரிந்து கொள்வது அவசியம். மாத்திரை என்பது எழுத்து வாசிக்கப்படும் நேரம்.

    குறில் எழுத்துக்களை நாம் சட்டென வாசித்துவிடலாம். ஆக அது ஒரு மாத்திரை
    நெடில் எழுத்துக்களை நாம் குறிலைக் காட்டிலும் சில மில்லி நொடிகள் அதிகமாகவே வாசிப்போம். ஆக அது இரண்டு மாத்திரைகள்
    இது போக மற்றவை அரை மாத்திரை குறிப்பாக குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) ஆய்த எழுத்து ஆகியவை.

    தமிழில் ஒலி குறைந்த அதாவது ஆங்கிலத்தில் சைலண்ட் எழுத்து எனச் சொல்லப்படும் “ம்” மிக குறைந்த மாத்திரை அளவே.... (மகர குறுக்கத்தின் போது,)

    இப்படி மாத்திரை மருந்து என்று ஞாபகம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் சொற்களை நாம் கவனித்து பேசி வந்தாலே எல்லா விஷயமும் புரிந்துவிடும்.

    என்னைக் கேட்டால், நேரடியாக அசைக்கு வருவதைக் காட்டிலும் எழுத்துக்களை நன்கு புரிந்து கொண்டு வருவதே பாவகை கற்க சிறந்த வழி
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சிறப்பான விளக்கங்கள். ஜெய்சந்தோஷ் தொடங்கி, அமரன் ஆய்ந்து, ஆதவாவின் மேல் விளக்கங்களுடன் அழகாய் கற்பிக்கிறது இந்தத் திரி. தொடருங்கள் நண்பர்களே...

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    அசையுங்கோ இசையுங்கோ....
    இரசிக்கிறேன் .... !

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஆதவா View Post
    உலகு - இதை நிரைபு என்பார்கள். வெண்பாவின் இறுதியடியின் இறுதிச் சொல் அதாவது சீர்,

    நேர் (கல்)
    நிரை (உள)
    நேர்பு (நட்பு)
    நிரைபு (உலகு)

    போன்ற உறுப்புகள் கொண்டு முடியும்.
    ஓ.. அப்படி ஒன்று இருக்கா என்ன?

    அதைச் சிம்பொலிக்காச் சொல்லத்தான் உல(நிரை)பு என்றவாறு அடைப்புக் குறியுடன் இணைந்து பு வந்ததோ.

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இப்ப ஒரு ஞாபகத்தில் வைச்சிருக்கக் கூடிய சுருக்கத்துக்கு வந்திட என்னால் முடியுது.

    அதாவது,

    மூன்று குறில் இணைந்து வந்தால் 2-1 என்று அசை பிரிக்க வேண்டும்.
    மூன்று குறிலும் ஒரு மெய்யும் இணைந்து வந்தால் 2-2 என்று அசை பிரிக்க வேண்டும்.

    சரிதானோ?

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.


    இந்தக் குறளில் ஓரிடத்தில் இரு மெய்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்நிலையில் எப்படி அசை பிரிப்பது?

    சொல் அசைபிரிக்க இலகுவக இருந்தது. வார்த்தை கடினமானதாக உள்ளதே.

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.


    இந்தக் குறளில் ஓரிடத்தில் இரு மெய்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்நிலையில் எப்படி அசை பிரிப்பது?

    சொல் அசைபிரிக்க இலகுவக இருந்தது. வார்த்தை கடினமானதாக உள்ளதே.
    அன்/பிலார் (கூவிளம்)
    எல்/லாம்/ (தேமா)
    தமக்/குரி/யர் (கருவிளங்காய்)
    அன்/புடை/யார் (கூவிளங்காய்)
    என்/பும் (தேமா)
    உரி/யர் (புளிமா)
    பிறர்க்/கு (நிரைபு)


    பிறர்க்கு

    ஒற்று மிக குறைந்த மாத்திரை அளவை கொண்டது. இரண்டு ஒற்றுகள் வரும்பொழுது அது முன்னெழுத்தின் அசையோடே சேரும்.

    பிறர்க்கு என்ற வார்த்தையை மெல்ல சொல்லிக் கொண்டேயிருங்கள், அசை பிரிவது உங்களுக்கே தெரியும்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி ஆதவா..

    தேமா, விளம், கூவிளம், காய், கனி என நிறைய இருக்குப் போலப் படிக்க.

    அதை எல்லாம் ஒவ்வொன்றாகக் கற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

    இப்ப அசை பிரிப்பதில் தேர்ச்சி பெற நீங்களே குறள் வெண்பாகளைக் கொடுங்களேன்.

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நன்றி ஆதவா..

    தேமா, விளம், கூவிளம், காய், கனி என நிறைய இருக்குப் போலப் படிக்க.

    அதை எல்லாம் ஒவ்வொன்றாகக் கற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

    இப்ப அசை பிரிப்பதில் தேர்ச்சி பெற நீங்களே குறள் வெண்பாகளைக் கொடுங்களேன்.
    நானே ஒரு அரைகுறை அமரன்.. தாமரை அண்ணா மாதிரி வெண்பா நல்லா தெரிஞ்சவங்க இதை தொடர்ந்தா இன்னும் நல்லா இருக்கும்.

    வெண்பாவில் கனி வராது. (அதுவரைக்கும் தப்பிச்சோம்.) வெண்பா எழுதறது ஈஸிதான். ஏன்னா சரியான வார்த்தை கிடைக்காட்டி மாற்று வார்த்தை நிச்சயம் இருக்கும். அதான் தமிழ்.

    அசை பிரிக்க தேர்ச்சியாகவேண்டும்னா, முதலில் வார்த்தைகளை நன்கு கவனித்து உச்சரிக்க வேண்டும். குறில் நெடில் என்று மனதில் ஞாபகம் வைத்துக் கொண்டால் சரிவராது. அது பாடம் படிப்பதைப் போன்று இருக்கும்.

    ஒரு பாடலை வைத்துத்தான் அசை பிரிக்கவேண்டும் என்பதில்லை. இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த பதிவைக் கூட நீங்கள் அசை பிரிக்கலாம். புது போட்டோகிராபர் பார்க்கிறதை எல்லாம் போட்டோ பிடிக்கிறது மாதிரி நீங்க பார்க்கிற எல்லா வார்த்தைகளையும் அசை பிரிக்கலாம்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அதே.. அதே..

    வெண்பா என்றால் ஏதோ வாயுக்குள் நுழையாத சொற்களால் ஆனது என்ற மாயத்தோற்றத்தை உடைக்க வேண்டும். இயல்பாகப் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு வெண்பா வடிக்கலாம். வெண்பா வடிப்பது இலகுவானது என்று ஒவ்வொருவரையும் இழுக்க வேண்டும் அதுக்குச் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சொற்களை அசை பிரிச்சு மேயப் பழகனும்...

    குறளாக அமைந்தால் வெண்பா விளக்கம் வரும் போது எளிதில் புரிந்து விடலாம் என்றதாலேயே குறளை எடுத்தாள தீர்மானித்தேன்.

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    அதே.. அதே..

    வெண்பா என்றால் ஏதோ வாயுக்குள் நுழையாத சொற்களால் ஆனது என்ற மாயத்தோற்றத்தை உடைக்க வேண்டும். இயல்பாகப் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு வெண்பா வடிக்கலாம். வெண்பா வடிப்பது இலகுவானது என்று ஒவ்வொருவரையும் இழுக்க வேண்டும் அதுக்குச் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சொற்களை அசை பிரிச்சு மேயப் பழகனும்...

    குறளாக அமைந்தால் வெண்பா விளக்கம் வரும் போது எளிதில் புரிந்து விடலாம் என்றதாலேயே குறளை எடுத்தாள தீர்மானித்தேன்.
    நிச்சயமாக இல்லை அமரன். திருக்குறளில் கூட எளிமையான வார்த்தைகள் அதாவது புரியும் வார்த்தைகளில் குறள் இருக்கின்றன. அது அக்காலத்திற்குப் பார்க்கும்பொழுது இன்னும் எளிமையாக இருக்கலாம்.

    நீங்கள் அசை பிரிப்பது என்று தீர்மானித்துவிட்டால், குறள் என்ன, பத்தி என்ன, எல்லாவற்றையும் பிரிப்பதுதான் சிறந்தது. மேலும் வார்த்தைகள் நன்கு பழக்கப்படும்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நீங்-க சொல்-றதும் சரி-தான் ஆ-தவா

Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •