பொதுவாக நாம் பேசுவதே இப்படி அசை பிரித்துத்தான் பேசுவோம். ஒரு எழுத்துக்கும் இன்னொரு எழுத்துக்கும் உள்ள சன்ன இடைவெளிதான் அசையாகப் பிரிகிறது.
நாம் பேசும் வார்த்தைகளை நன்கு கவனித்தாலே தன்னாலே அசை புரிந்துவிடும்.
நீங்கள் அசை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் எழுத்துக்களின் மாத்திரை அளவு தெரிந்து கொள்வது அவசியம். மாத்திரை என்பது எழுத்து வாசிக்கப்படும் நேரம்.
குறில் எழுத்துக்களை நாம் சட்டென வாசித்துவிடலாம். ஆக அது ஒரு மாத்திரை
நெடில் எழுத்துக்களை நாம் குறிலைக் காட்டிலும் சில மில்லி நொடிகள் அதிகமாகவே வாசிப்போம். ஆக அது இரண்டு மாத்திரைகள்
இது போக மற்றவை அரை மாத்திரை குறிப்பாக குற்றியலுகரம் (கு,சு,டு,து,பு,று) ஆய்த எழுத்து ஆகியவை.
தமிழில் ஒலி குறைந்த அதாவது ஆங்கிலத்தில் சைலண்ட் எழுத்து எனச் சொல்லப்படும் “ம்” மிக குறைந்த மாத்திரை அளவே.... (மகர குறுக்கத்தின் போது,)
இப்படி மாத்திரை மருந்து என்று ஞாபகம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் சொற்களை நாம் கவனித்து பேசி வந்தாலே எல்லா விஷயமும் புரிந்துவிடும்.
என்னைக் கேட்டால், நேரடியாக அசைக்கு வருவதைக் காட்டிலும் எழுத்துக்களை நன்கு புரிந்து கொண்டு வருவதே பாவகை கற்க சிறந்த வழி
Bookmarks