Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 49 to 60 of 84

Thread: இரும்புக்கோட்டை மர்ம யோகி -நகைச்சுவை தொடர்கதை -நிறைவு பெற்றது

                  
   
   
  1. #49
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    எங்கே சிநேக ராணி... ஆட்டம் தொடங்கட்டும்..
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  2. #50
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by த.ஜார்ஜ் View Post
    எங்கே சிநேக ராணி... ஆட்டம் தொடங்கட்டும்..
    அதே..
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #51
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    மிகவும் சுவாரசியமாக செல்கிறது... சினேக ராணியின் ஆட்டம் காண காத்திருக்கிறோம்

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  4. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    இரும்புக்கோட்டை மர்ம யோகி



    பாகம் 8

    மர்ம யோகி தனது சீடர்களிடம்: சிலர் என்னை ஒரு மந்திரவாதி என்றும் வேறு சிலர் நான் சித்து வேலைகளில் கை வந்தவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. நான் இமய மலையில் தவமிருந்து மூலிகைகளின் அரிய குணங்களை அறிந்தேன். மூலிககளைக் கொண்டுதான் நான் சக்தி தருவினி போன்ற ஒள்ஷதங்களை உருவாக்குகிறேன். நான் அறிந்த மூலிககைகளைப் பற்றி சொல்லப்போகிறேன்.


    தூதுவளை- இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு.

    "தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய

    வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே"
    என்று பாடலாம்.

    வில்வம்= இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு.

    ஓரிதழ் தாமரை, கற்பூரவள்ளி இவை உடம்பிற்கு அழகை தருகின்றன.

    "கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
    நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே"
    என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கீழாநெல்லி - கீழ்காய் நெல்லி சிறுநீரகத்தைக் காக்கும்.

    சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை, நெருஞ்சில், அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும், நித்திய கல்யாணியும், இதயத்திற்கு செம்பருத்தி, மூளைக்கு வல்லாரை என இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர் .இதில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லிதான் காக்கும் நண்பன்

    வல்லாரை- "வல்லார உண்டோரிடம் மல்லாடாதே' இரும்புக்கோட்டை வீரர்கள் வல்லாரையை உண்டவர்கள்.

    குப்பை மேனி= வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும்இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .

    கரிசலாங்கண்ணி

    "தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும்
    தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும்
    தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை
    தின்ற கரிசாலை சிதையாது இவ் வாக்கையே"
    என்று நான் பாடுவேன்.

    ஆவாரை - ஆவரசு- ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ !

    நாயுருவி- சதை, நரம்புகளைச் சுருங்கவும் செய்யும் மருத்துவக் குணம் உண்டு.

    இததகைய மூலிககளைக் கொண்டு தான் நான் ஒளஷதங்களை தயரிக்கிறேன். இரும்புக்கோட்டையில் எனது ஆசிரமத்தின் சாளரத்துக்கு வெளியே உள்ள காட்டில் இந்த மூலிககள் இயற்கையாக வளர்ந்திருக்கின்றன. அறியாதார் கண்களுக்கு இவை காட்டு செடிகளாக தெரியும்.

    ஓலைச் சுவடிகளில் குறிப்பெடுத்து அவற்றை தனது இடுப்பில் சொருகிக்கொண்டிருந்த மருதுவை இரண்டு இரும்புக்கோட்டை வீரர்கள் தங்கள் குதிரைகளில் அணுகினர். குதிரைகளில் ஒன்று மருதுவை நக்கத் தொடங்கியது. அந்தக் குதிரை வீரன் மற்றவனைப் பார்த்து அர்த்த புஷ்டியுடன் சிரித்தான். " நான் சொல்லலை, இந்த குதிரை இவனோடதுதான், இன்னும் கொஞ்ச நேரத்தில இவன் குட்டு வெளிப்பட்டு விடும்" என்று சொல்லாமல் சொன்னது அந்த சிரிப்பு.

    மருது: இந்த குதிரை என்னிடம் அன்பாக ஏன் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். தலைவர் என்னை பாண்டிய நாட்டு வீர்ரகளின் முகாமுக்கு வேவு பார்க்க அனுப்பிய போது அங்கிருந்த இந்த குதிரைக்கு நான் கொஞ்சம் புல்லை சாப்பிட கொடுத்தேன். அன்றிலிருந்து இந்த குதிரை என்னிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.

    மருதுவின் குதிரையில் அம்ர்ந்திருந்த வீரனுக்கு தான் சந்தேகப்பட்டது தவறோ என்று தோன்றியது. இருந்தாலும் அவன் மருதுவிடம் " தலைவர் உன்னைப் பாராட்ட வேண்டி ஒரு நடன் விருந்துக்கு உன்னை அழைத்து வரச் சொன்னார்" என்றான்.

    மருது: ஓ, அப்படியா, நல்லது. நான் மர்ம யோகியைப் பார்த்து சொல்லி விட்டு வருகிறேன். பின் நாம் செல்லலாம்.

    மருது மர்ம யோகியை ஆசிரமத்துக்குள் சென்று சந்தித்து பேசிவிட்டு அவர்களுடன் சிம்புத்தேவர் மாளிகைக்கு சென்றான்.

    சிம்புத்தேவர் அவனை வர வேற்று தன் பக்கத்தில் ஒரு இருக்கையில் அமரச் செய்தார். பின் கையைத்தட்டி " நாட்டியம் ஆரம்பமாகட்டும்" என்றார்.

    " மச்சக்காரன் மச்சக்காரன் எவனோ
    எனது இச்சைக்காரன் இச்சைக்கரன் அவனே"

    என்று பாடிக்கொண்டு அழகாக நடன்மாடினாள் சினேக ராணி. சிம்புத்தேவர், அமைச்சர் மற்றும் வீரர்கள் மருதுவுடன் அதைக் கண்டு களித்தனர்.

    திட்டமிட்டபடி, ஆடிக்கொண்டே மருதுவை சினேகமாக அணுகிய சினேக ராணி அவன் தோளில் கையைப் போட்டு கழுத்தை தடவினாள்.

    "மச்சக்காரன் மச்சக்காரன்
    இவன் ஒரு மச்சக்காரனே"
    என்று அவள் பாடியதும் சிம்புத்தேவரும் அமைச்சரும் இவன் சப்பாணி தான் என்று நிம்மதி அடைந்தார்கள்.

    ஆனால், சினேக ராணி மருதுவின் கழுத்தை தடவிக் கொண்டே தொடர்ந்து

    " மச்சக்காரன் மச்சக்காரன்
    இவன் இரு மச்சக்காரனே
    மச்சக்காரன் மச்சக்காரன்
    இவன் மூணு மச்சக்காரனே
    மச்சக்காரன் மச்சக்காரன்
    இவன் நாலு மச்சக்காரனே"


    என்று பாடவும் சிம்புத்தேவரும் அமைச்சரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

    தொடரும்..
    Last edited by மதுரை மைந்தன்; 24-07-2010 at 03:30 AM.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  5. #53
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஹாஹா... எத்தனை எத்தனை மச்சம்.. இன்னும் இருக்குதா மிச்சம்..? அசாத்திய நடை... பல்வேறு மூலிகைகளைப் பற்றிய குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தது...

    அடுத்து என்ன நடந்தது என்பது அறிய ஆவல்.. தொடருங்கள் மைந்தரே..!

  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    கதை சூப்பராப் போகுது மதுரை மைந்தன் அவர்களே.. வீட்டில எல்லாம் அடுத்து என்ன அடுத்து என்னன்னு கேட்கிறாங்க...

    ஆவாரம்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் தங்க பஸ்பம் உண்ணும் பலன் கிடைக்குமாம்... நீங்க சொல்லியிருக்கிற கதை கற்பனைன்னாலும் இப்படி பல உண்மைகளையும் சேர்த்துக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு கீரை உண்ணும் ஆர்வத்தை உண்டாக்கவும் முடியுது...

    ரொம்ப நன்றி!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #55
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இவர் படுபயங்கர மச்சக்காரன் போல..

    உங்களால் இந்த மூலிகைகளின் நற்குணங்கள் அறிந்தேன். நன்றி. தொடருங்கள்.

    குப்பை மேனி குறிஞ்சா செடி போன்றவற்றை சொதியில் போட்டு சாப்பிட்டிருக்கிறொம். தேங்காய் துருவலுடன் வறுத்தும் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருக்கும்.

    புளியம் மர குருத்து இலை , கீழ் நெல்லியை பச்சையாகவே விளையாட்டாக இலையுடன் சாப்பிட்டிருக்கிறேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #56
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    குப்பை மேனி குறிஞ்சா செடி போன்றவற்றை சொதியில் போட்டு சாப்பிட்டிருக்கிறொம். தேங்காய் துருவலுடன் வறுத்தும் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருக்கும்..
    உமது வசீகரத்திற்கு காரணம் புரிகிறது.. அவுஸில் ஒரே மகளிர் தொல்லை போல..

  9. #57
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    ஏதேது. டி.ஆர் போல பாடலும் தங்கள் கைவண்ணமா.. பலே..பலே..
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  10. #58
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அட்டகாசமாகப் போகுது கதை.

    இப்படியான கதைகளை எழுத அசாத்தியத் திறமை வேணும்.

    உங்களிடம் அது நிரம்பவே உள்ளது.

    தொடருங்கள்.

  11. #59
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    விடுபட்ட அனைத்து அத்தியாயங்களையும் வாசித்தேன். அருமையாய் இருக்கிறது. பறக்கும் மருது, மச்சம் தேடும் சினேகராணி....மூலிகைகளின் பயன் என அட்டகாசமாய் கொண்டுபோகிறீர்கள்.

    தொடருங்கள் மதுரையாரே....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #60
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    மூலிகைகளின் பயன்களை அருமையாக தொகுத்துள்ளீர்கள்... மருதுவிற்கு இத்துனை மச்சம் வர காரணம் என்ன!!?? தொடருங்கள்...

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •