Results 1 to 11 of 11

Thread: மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0

    மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

    மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து


    என்னிடம் கூறப்பட்டதைப்போலவே - அதிகாலையில்
    மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
    நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை
    மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்

    நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
    உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
    நின்றேனிங்கு முன்பொரு இரவில் - அதிசயம்தான்
    மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

    உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
    இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
    போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
    உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக

    கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட
    உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
    பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
    பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே

    மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல
    தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
    இலங்கை

    நன்றி
    # சொல்வனம் இதழ் - 27
    # உயிர்மை
    # நவீன விருட்சம்
    # கூடு

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    கைவிடப் பட்ட போதும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று தவிக்கிறது தாயின் உள்ளம். உலகில் தலையாயதாய் தாய்மை போற்றப்படுவதற்கு இது தான் காரணம்.

  3. #3
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    பெத்த மனம் பித்து பிள்ளை மனம்...... என்ற மாதிரியான உணர்வுகளை ஊட்டுகின்ற வரிகள்...பகிர்வுக்கு நன்றி!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    இப்படியும் மகன்கள் இருப்பார்களா? கவிதை நன்று

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கவிதையின் முடிவு பல உண்மைகளைச் சொல்லிநின்றாலும் ஆரம்பம் ஏதோ விளங்காத பானியில் சொல்லப்பட்டிருக்கிறது.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சோகத்துக்கெனவே புணையப்பட்டக் கவிதை. எதார்த்தம் குறைவு.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் கலையரசி,

    //கைவிடப் பட்ட போதும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று தவிக்கிறது தாயின் உள்ளம். உலகில் தலையாயதாய் தாய்மை போற்றப்படுவதற்கு இது தான் காரணம்//

    நிச்சயமாக சகோதரி.
    கருத்துக்கு நன்றி !

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் மகாபிரபு,

    //இப்படியும் மகன்கள் இருப்பார்களா? கவிதை நன்று//

    எல்லாத் தரப்பிலும் இருக்கிறார்கள். :-(
    கருத்துக்கு நன்றி நண்பரே.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் விராடன்,

    //கவிதையின் முடிவு பல உண்மைகளைச் சொல்லிநின்றாலும் ஆரம்பம் ஏதோ விளங்காத பானியில் சொல்லப்பட்டிருக்கிறது.//

    அதிகாலையில் வெளியே கூட்டிப் போகிறேன் என அம்மாவிடம் கூறி, அதன்படியே கூட்டிப் போய் ஒரு மரத்தடியில் கையில் ஆயிரம் ரூபாவைக் கொடுத்து விட்டுவருகிறான் மகன்.

    அந்த மரத்தின் நிழல், ஒரு பஸ் தரிப்பிடமாகவும் இருக்கலாம். ஆனால் முதியவள் தனித்துப் போகிறாள். அந்த நிலையிலும் மகனுக்காகப் பிரார்த்திக்கிறாள்.

    கருத்துக்கு நன்றி நண்பரே.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் நம்பி,

    //பெத்த மனம் பித்து பிள்ளை மனம்...... என்ற மாதிரியான உணர்வுகளை ஊட்டுகின்ற வரிகள்...பகிர்வுக்கு நன்றி!//

    ஆமாம் நண்பரே.
    கருத்துக்கு நன்றி.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Mar 2008
    Location
    Srilanka
    Posts
    407
    Post Thanks / Like
    iCash Credits
    12,176
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் சிவா.ஜி,

    //சோகத்துக்கெனவே புணையப்பட்டக் கவிதை. எதார்த்தம் குறைவு.//

    இல்லை நண்பரே. நிதர்சன வாழ்க்கையில் தினமும் இது போல நடந்துகொண்டேயிருக்கிறது. கருத்துக்கு நன்றி நண்பரே.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •