உன் நினைவுச் சுமைகளின்
அண்மை தரும் அணைப்பை
தள்ள முடியாது தவிக்கிறேன்...
பூட்டி வைக்கும் உன் நினைவுகளை
தனிமையில் மட்டும் மெல்ல
திறந்து ரசிக்கிறேன்....
உன்னுள் சுழன்ற அதே
சலன உணர்வுகள் தான் எனக்கும்....
பெயர் சூட்டத் தெரிந்தும்
இயலாமல் துடிக்கிறேன்.....
குழப்பமும் தயக்கமும் சூழ
மெளனம் அணிகிறேன்.....
மெளனமே காதலாய் !!!
Bookmarks