போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
பாகம் 5
" மைதிலி நீ எப்படி.......? அம்மாவுக்கு என்ன ஆச்சு?" என்று கேள்விகளை அடுக்கினேன். " உள்ளே வாங்க அண்ணா, ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து. நீங்க கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விரிவா சொல்றேன். முதல்ல நீங்க இந்த சேர்ல உக்காருங்க. நான் போய் காபி போட்டு கொண்டாறேன்" என்றாள் அவள். " காபியெல்லாம் வேண்டாம். முதல்ல நீ சொல்ல வந்ததை சொல்லு" என்றேன்.
" எனக்கும் சந்துருவுக்கும் நடந்த கல்யாணம் கட்டாய கல்யாணம். எங்க அப்பா நடத்தி வந்த ஓட்டல் நஷ்டத்தில போக ஆரம்பிச்சது. அதை சரிக்கட்ட அப்பா சந்துருவோட அப்பா கிட்ட கடன் வாங்க ஆரம்பிச்சார். கடன் மலை மாறி ஏறிடுச்சு. இந்த நேரத்தில சந்திருவோட அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் இறந்ததற்கப்புரம் சந்துரு எங்க அப்பாகிட்ட கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு பண்ணினார். சந்துருவுக்கு என் மேல ஒரு கண் இருப்தது. அதனால ஒரு நாள் அப்பாகிட்ட உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா கடனை அடைக்க வேண்டாம் என்றார். எனக்கு அதைக் கேட்டு அதிர்ச்சி ஆயிடுச்சு. ஆனா அப்பாவொட நிலமை ரொம்ப மோசமா போயி தற்கொலை முயற்சிக்கு போயிட்டார். நான் அவரைத் தடுத்து கல்யாணத்துக்கு சம்மதித்தேன். ஓட்டலை வித்து அந்த பணத்தில கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அப்பாவும் அம்மாவும் கிராமதுக்கு போய் அங்கே இருக்கிற எங்க பழைய வீட்டில் வாழ்ந்துகிட்டுருக்காங்க. ஓட்டல் வித்த பணத்தில கல்யாண செலவு போக மீத தொகையை பாங்கில போட்டு அதில் வரும் வட்டில காலம் தள்ளிக்கிட்டுருக்காங்க.
கல்யாணம் ஆன புதிசில சந்துரு என்கிட்ட அன்பாகத்தான் இருந்தார். அவரோட அப்பாவின் கடையை பார்த்துகிட்டு அதில் வரும் வருமானத்தில நாங்க சந்தோஷமா இருந்தோம். அடுத்தடுத்து மூணு பசங்க பிறந்தாங்க. கடல்சி பையன் பிறந்த சமயம் தான் சந்துருவுக்கு ஆளும் கட்சில செல்வாக்குள்ள ஒரு தாதாவோட சகவாசம் ஆர்ம்பமாச்சு. அதற்கப்புறம் தினசரி குடிச்சிட்டு வந்து என்னையும் அம்மாவையும் அடிக்க ஆரம்பிச்சுட்டார். ஒரு நாள் ஏதோ தகராறு முற்றிப் போய் தாதாவோட ஆட்கள் அரிவாளை எடுத்து இவரை வெட்ட வந்துட்டாங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிக்க வீட்டுக்குள் ஓடி வந்து அம்மாவுக்கு பின்னால ஒளிஞ்சுக்கிடார். நான் பதறிப் போய் செய்வதறியாமல் நின்றேன். குழந்தைகள் அழ ஆரம்புச்சுட்டாங்க. அம்மா கல்லாய் சமைந்துட்டாங்க. அம்மவுக்கு பின்னால் இருந்த அவரை இழுத்து வெட்ட அரிவாளை ஓங்கிய போது அம்மாவுக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ, பக்கத்தில் இருந்த அம்மன் குத்து விளக்கினால் ஒருவன் வயிற்றில் குத்திவிட்டு மற்றவர்களை நோக்கி முன்னேறினார். அவர்கள் காயம் பட்டவனை இழுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் அம்மாவுக்கு புத்தி பேதலித்து விட்டது. ஆனா அந்த தாதாவோட ஆட்கள் கடையை உடைத்து சாமான்களுக்கு தீ வச்சிட்டாங்க. அதனால கடையை மூடிட்டு வீட்டில வெருமுனே உக்காந்திருந்தாரு. வெளியே போகவும் பயம். அப்பத்தான் சந்துருவை ஆளும் கட்சித் தலைவர் அழைச்சு புத்திமதி சொல்லி அவருக்கும் அந்த தாதாவுக்கும் சமாதானம் செஞ்சு வைத்தார். அதோட அவருக்கு தெரிஞ்ச கம்பெனியில் வேலையும் வாங்கி தரேன்னு சொன்னார்." என்று சொல்லி நிறுத்தினாள் மைதிலி.
" ஏன் அம்மாவை சங்கிலியால் கட்டி போட்டிருக்கு?" என்று கேட்டேன் நான். " ஒரு நாள் சந்துரு சாப்பாடு சரியில்லை என்று சாப்பாட்டுத் தட்டை என் மேல் எறிந்தார். நான் தற்செயலாக குனிய அது என்னோட பையன் தலையைத் தாக்கி ரத்தம் கொட்டியது. அதைக் கண்ட அம்மா குத்து விளக்கினால் சந்துருவைத் தாக்க வந்தார். சந்துரு அவரை மடக்கி ஒரு துண்டால் அவர் கைகளைக் கட்டி போட்டார். அதற்கப்புரம் ஒரு சங்கிலியால் அவரை கட்டி போட்டு விட்டார். நான் அம்மாவை தினம் துண்டால் துடைத்து விடுவேன். அவருடைய இயற்கை உபாதைகளையும் நான் சுத்தம் செய்வேன். சாப்பாட்டை ஊட்டி விடுவேன். அவருக்கு எந்தவித உணர்ச்சியும் கிடையாது. சில சமயங்களில் அவர் கண்க்ளிலிருந்து கண்ணீர் வரும்." என்றாள் மைதிலி.
சுருண்டு படுத்திருந்த அம்மாவைப் பார்த்து நான் ரத்தக் கண்ணீர் விட்டேன். " நீ எதற்கும் கவலைப் படாதே மைதிலி. உனக்கு ஆதரவாக நான் என்றும் இருப்பேன். அம்மாவை மருத்துவ மனையில் சேர்த்து குணப்படுத்த என்னாலான எல்லா முயற்சிகளையும் செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு பர்சிலிருந்து கைவசம் இருந்த பணத்தை கொடுத்து " மஞ்சள் குங்குமத்துக்கு வச்சிக்கோ" என்றேன். அவள் அதை வாங்க மறுத்தாள். " மைதிலி நீ எனக்கு பல தடைவகள் உதவியிருக்கே. முக்கியமா சந்துரு என் உணவை சாக்கடையில் எறிஞ்சப்போ நீ தந்த உணவு உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது போல இருந்தது. ஆகவே கட்டாயம் வாங்கிக் கொள்" என்று கூறி ஒரு தீர்மானத்துடன் அங்கிருந்து கிளம்பினேன்.
அடுதத பாகத்தில் நிறைவு பெறும்
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
நல்லா போய்கிட்டு இருக்கு... இவ்வளவு கொடியவனா சந்துரு...??? அடுத்து என்ன ஆகப்போகுதோ...?!
தொடருங்கள் சார்..
என்ன மனுஷன் இவன் என வெறுப்பு வருகிறது. பாவம் மைதிலி. தனக்காக அருவாள் எடுத்த அம்மாவையே சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறானே....பாவி.
அருமையாய் போகிறது. வாழ்த்துக்கள் நண்பரே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கதையோட்டம்....அருமை...
தொடருங்கள் நண்பரே...
அதுக்குள்ளே சந்துரு திருந்த போறனா என்ன!? அடுத்த பாகத்திற்காக காத்திருக்க வேண்டியதுதான்.. சீக்கிரம் தொடருங்கள் ..
அன்புடன்,
ராஜேஷ்
எல்லாம் நன்மைக்கே !
பல பெற்றோர் செய்யும் தவறை சந்துருவின் பெற்றோரும் செய்ய வந்த வினை இன்று மைதிலி வரை பாதிக்கப்பட்டிருக்கிறது. அழகாக கதையை நகர்த்துகிறீர்கள். யாதார்தமான கரு.
தொடருங்கள். முடிவுக்காக நண்பர்களுடன் நானும்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks