அய்யா, பண்பட்டவர் அனுமதி உள்ளவர்கள் கூட இ-புத்தகம் தற்போது பதிவேற்றம் செய்ய இயலவில்லை, இக்குறை சரி செய்ய பட வேண்டும்.
அய்யா, பண்பட்டவர் அனுமதி உள்ளவர்கள் கூட இ-புத்தகம் தற்போது பதிவேற்றம் செய்ய இயலவில்லை, இக்குறை சரி செய்ய பட வேண்டும்.
முயற்சி உடையார் இகழ்சி அடையார்...
பதிவை தட்டச்சிட்டு விட்டு இரு வரியையோ முழு பதிவையுமோ வண்ணமிட்டு, போல்ட் செய்து, என முயலும் போது முன்னர் ஒரு முறை மார்க் செய்து விட்டு ஒரே தடவையில் போல்ட் செய்வதோ வண்ணமிடுவதோ,எழுத்தை பெரிதாக்குவதோ செய்திட இயலும்.
இப்போது ஒவ்வொரு முறையும் க்ளிக் செய்து மார்க் செய்ய வேண்டி இருக்கிறது. எனக்கு மட்டும்தானா இப்படியாகிறது என அறிந்திட ஆவல்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மன்றமேம்படுத்தல் என்னும் வகையில் எனது சிறிய எண்ணமொன்றை வைத்திட நினைக்கிறேன். இது எனது கருத்துதான். எவருக்கும் ஏற்பில்லை என்னும் போது விட்டுவிடலாம்.
என்ன என்றால் முன்பெல்லாம் இல்லாத வகையில் தற்சமயம் ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்து என எண்ணிக்கை வரிசையில் சொற்கள் விளையாட்டு கூடுதலாகி வருகின்றன.
இதனால் ஏதேனும் பயனுண்டு என எண்ணுகிறீர்களா..?
ஒரு காலத்தில் சிந்திக்க கருத்துமாற்றம் பரிமாற்றங்கள் என ஆழ்ந்த சிந்தனை உடைய மன்றமாயிருந்தது. நான் வியந்திருக்கிறேன். தற்சமயம் அது பொழுது போக்கு கேளிக்கை கூடம் போல ஆகி விட்டதோ எனத் தோன்றுகிறது.
இவ்வெண்ணம் எனக்கு மட்டும் தானெனில் விட்டுவிடுங்கள். பெரும்பாலோர் கருத்தெனில் சிந்தியுங்கள்.
விளையாட்டுகளுக்கு எதிரி இல்லை நான். அதில் கொஞ்சம் சிந்திக்க வகையிருப்பின் நல்லது தானே..?
பள்ளிக்குழந்தைகள் இம்போசிஷன் எழுதுவது போல இது என்ன விளையாட்டு என்பது புரியவில்லை.
ஏனையோரும் இது குறித்து கருத்தினை வழங்குங்கள். நல்லதெனில் தொடரட்டும். அல்லதெனில் தவிர்க்கலாம்.
நன்றி.
கலைவேந்தரே..
உங்கள் எண்ணம் எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஆயினும் விளையாட்டையும் மீறி வேறு சில காரணங்கள் இருக்கலாமில்லையா..? உதாரணத்திற்கு எல்லோருக்கும் தமிழில் தட்டச்ச வராது. எண்ணங்கள் நிறைய இருக்கும் ஆயினும் தயக்கங்கள் தடுக்கும். தமிழில் தட்டச்சிப்பழகவும் சபை கூச்சத்தைப்போக்கவும் இம்மாதிரியான திரிகள் பயன்படுமல்லவா. இத்திரிகள் கட்டாயம் வேண்டுமென்று சொல்லவில்லை. விருப்பமிருக்கும் சிலர் மட்டுமே அத்திரிகள் பக்கம் செல்கின்றனர். ஏனையோர் எதைத் தேடி வந்தனரோ அந்த திரிகள் பக்கம் செல்கின்றனர். என் தனிப்பட்ட கருத்திது
முற்றாகத் தவிர்க்க இயலாது கலை.. முன்பு இருந்தது போல முதற்பக்கத்தில் தோன்றாமல் செய்யலாம்..
கலைவேந்தன் கருத்தில் எனக்கும் மாறுபாடு உண்டு..
எல்லாவித சுவைகளையும் உறுப்பினர்களுக்கு தருவதே ஒரு சிறந்த தளத்தின் இலக்கணம்.. ஏனெனில் பல்வேறு விருப்பத்தெரிவுகள் கொண்டோர் வருகைதரும் இடம் இது..
மிகப் பேராளரான மதுரையண்ணாகூட தன்னை இளக்கம் செய்துகொள்ள விளையாட்டுத்திரிக்கு வந்துசெல்வதை மன்றம் அறியும்..
”பள்ளிக்குழந்தைகள் இம்போசிஷன் எழுதுவது போல இது என்ன விளையாட்டு என்பது புரியவில்லை” என்பதெல்லாம் சரியல்ல..
இதை குறித்து எழுதிட வேண்டுமென சில வாரங்கள் முன்னால் நினைத்திருந்தேன். ஏனோ தயக்கம் விட்டு விட்டேன்.
விளையாட்டு திரிகள் மன்ற முகப்பில் தெரிய ஆரம்பித்த பின் ஏனைய திரிகள் முகப்பிலிருந்து சீக்க்கிரமாய் மறைய ஆரம்பிக்கிறது. எந்த பதிவையும் நான் பெரும்பாலும் பதிவிடுவது இரவில் தானெனினும் காலை மன்றம் வந்து பார்த்தால் அந்த திரி யாரோ ஒருவரின் பார்வைக்காவது முன்னர் பட்டு இருக்கும். மன்ற முகப்பில் கடந்த 24 மணி நேரப்பதிவில் சிலமணி நேரங்களாவது நிலைத்தே பின்செல்லும்.
இபோதெல்லாம் அப்படி இல்லை. விளையாட்டு திரிகள் மேலே எழும்புவதால் பல பதிவுகள் சில நிமிடங்களில் பின் செல்ல பல நல்ல பதிவுகளை தேடிசென்றுதான் படிக்க வேண்டி இருக்கிறது. நேரம் கொடுக்கும் இம்சையை எல்லோரும் அறிவர்தானே.. பல பதிவுகள் பின்னூட்டம் இன்றியோ பார்வையில் படாமலோ போகாதிருக்க விளையாட்டு திரிகள் முன்னை போல் முகப்பில் வராது போனால் நல்லதே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
ம்ம்ம் முயன்று பார்க்கிறேன்.
இப்படித்தான் ஆகிறது. ஒரு முறை மார்க் செய்த பின் என்னால் தடித்த எழுத்துக்கு மட்டுமே மாற்ற முடிந்தது. மீண்டும் எழுத்தை பெரிதாக்கிவ்ட மீண்டும் மார்க் செய்து விட்டே அழுத்த வேண்டும். அல்லாது போனால் இப்படிதான் ஆகிறது அன்பு ரசிகன் சார்.
முயன்று பார்க்கிறேன் என நான் போல்ட் செய்திருப்பதைமேற்கோளிட்டு பாருங்கள். ஒரே நேரத்தில் கிளிக் செய்தாலும் ] [/SIZE] சேராம்ல் முன்னால் தனித்தே இருக்கிறது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks