Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: இயால்மாரின் இதயம்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    இயால்மாரின் இதயம்

    ஸ்வீடன் நாட்டுத் தொன்மக் கதையில் ஒரு கட்டம்:

    இல்மேர் என்னும் மன்னனின் மகளும் இயால்மார் என்பவனுங் காதலர்கள். அரசனின் எதிர்ப்பு இருவரையும் இணைய விடவில்லை. வீரத்தால் காதலியை அடைந்துவிடலாம் என்ற முடிவுடன் சிறுபடை திரட்டிச் சென்றான் காதலன். முழுத் தோல்விதான் போர்க்களத்தில் கிட்டியது. அதன் பின்?

    19 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சுக் கவிஞர் லெக்கோன்த் தலில் (Leconte de Lisle ) அந்தக் கட்டத்தை இயல்மாரின் இதயம் என்ற தலைப்பில் கவிதையாய்த் தீட்டியுள்ளார்.

    பிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் தருகிறேன். படித்துப் பாருங்கள்.

    தெளிந்த இரவு, நடுக்குங் காற்று,
    சிவந்த பனித்தரை,
    ஆயிரம் மறவரங்கே ஆழ்துயில் கொள்ளுகின்றார்
    கல்லறை இல்லாமலே.
    வாளுண்டு கையிலே, ஒளியில்லை கண்ணிலே,
    அசைவில்லை மெய்யிலே.
    தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை.

    இயல்மார் சற்றே நிமிர்கிறான் ரத்தம்
    உறைந்த உடல்களின்
    இடையே வாள்மீது இருகையும் ஊன்றி.
    "அடர்ந்த தோப்பிலே பறவைகள் போலவே
    விடியலில் வையகம் அதிரவே பாடிச்
    சிரித்துக் களித்த அத்தனைத் திண்டோள்
    இளைஞரின் நடுவே
    ஏன்'பா மூச்சுண்டா யாருக் கேனும்?"

    இல்லை விடை. "என் தொப்பி உடைந்து நொறுங்கிற்று.
    கவசமோ துளைபட்டு அதிலிருந்த ஆணிகளைச்
    சுக்குநூ றாக்கிற்றுக் கோடரி. என்கண்கள்
    சிந்துவது நீரா? செங்குருதி யன்றோ?
    வா இங்கே, காக்கையே, மனிதர் தின்னி!
    திறவுன்றன் இரும்பலகால் என்னெஞ் சத்தை.
    எடுத்துச்செல் இதயத்தை இல்மேரின் புதல்வியிடம்,
    சூட்டோடு சூடாக!

    உப்சாலா வூரிலே உயர்தர மதுபருகிப்
    பொற்கிண்ணம் உராய்ந்து பாடுகின்ற கும்பலில்
    தேடென்றன் காதலியை.
    புறாக்கூட்டம் உறைகின்ற கோபுரத்தின் உச்சியிலே
    பால்வெண் உடலும் நீள்கருங் குழலுமாய்க்
    காண்பாய் அவள் நிற்க.
    வெள்ளி வளையங்கள் ஊசலிடுங் காதுகளில்.
    அந்தி வெள்ளிக் கோளினும் அவள்விழிகள் மிகச்சுடரும்.

    ஏகுவாய்! கருந்தூதா! யானந்தக் காரிகையைக்
    காதலிக் கின்றேன் கழறுவாய் கன்னியிடம்.
    இதோபார் இதயம் என்றே கொடுத்திடு.
    அடையாளங் காண்பாள்; அதுசெக்கச் செவேலென்று
    திண்ணியதாய்த் திகழ்கிறது, நடுங்கவில்லை,
    வெண்ணிறமாய் மாறவில்லை என்பதனை நோக்கிப்
    புன்னகைப்பாள் இல்மேரின் பொன்மகள் பறவையே!

  2. #2
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    பிரெஞ்சு மூலத்திலருந்து அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by nambi View Post
    பிரெஞ்சு மூலத்திலருந்து அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி!
    பாராட்டுக்கு மிக்க நன்றி.

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    தமிழாக்கம் நன்றாக இருக்கின்றது. தொடருங்கள் உங்கள் மொழிபெயர்ப்புகளை..!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    மிக உணர்ச்சி மயமான கவிதை...

    நல்ல மொழிபெயர்ப்பு...
    தொடருங்கள் உங்கள் சீரிய பணியை ஐயா
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அழகான தமிழில் பிரெஞ்சுக்கவிதையை வாசிக்கவைத்ததற்கு மிக்க நன்றி சொ.ஞா அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    தமிழாக்கம் நன்றாக இருக்கின்றது. தொடருங்கள் உங்கள் மொழிபெயர்ப்புகளை..!
    பாராட்டுக்கும் ஊக்கியதற்கும் மிக்க நன்றி.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அழகான தமிழில் பிரெஞ்சுக்கவிதையை வாசிக்கவைத்ததற்கு மிக்க நன்றி சொ.ஞா அவர்களே.
    நன்றிக்கு மனமார்ந்த நன்றி.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    மிக உணர்ச்சி மயமான கவிதை...

    நல்ல மொழிபெயர்ப்பு...
    தொடருங்கள் உங்கள் சீரிய பணியை ஐயா
    பாராட்டுக்கும் ஊக்கியதற்கும் அகமார்ந்த நன்றி.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அற்புதமான மொழியாக்கம்! கவிதை கூறும் நிகழ்வை நினைத்துப் பார்த்தாலே நடுங்கவைக்கும் வார்த்தைப் பிரயோகங்கள்!

    பகிர்வுக்கு நன்றி, தொடரட்டும் உங்கள் நற்பணி.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    அற்புதமான மொழியாக்கம்! கவிதை கூறும் நிகழ்வை நினைத்துப் பார்த்தாலே நடுங்கவைக்கும் வார்த்தைப் பிரயோகங்கள்!

    பகிர்வுக்கு நன்றி, தொடரட்டும் உங்கள் நற்பணி.
    பாராட்டுக்கும் ஊக்கியதற்கும் மிக்க நன்றி.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அற்புதம்...

    பிரெஞ்சுக்காரர்கள் தம்மொழியிற் படித்திருந்தாற்கூட,
    நாமடைந்த உணர்வைப் பெற்றிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

    மூலமே தமிழ்மொழிதான் எனத்தக்கதான சொற்கட்டுக்களோடு,
    கவிதை கட்டிப்போட்டுவிட்டது...

    பாராட்டும் நன்றியும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •