போர்க்கள காட்சியும், இயால்மரின் மனவோட்டத்தையும் விளக்கும் வரிகளைப் படித்தவுடன் மனம் கனத்துவிட்டது. அருமையான கவிதை, நல்ல மொழிபெயர்ப்பு.
போர்க்கள காட்சியும், இயால்மரின் மனவோட்டத்தையும் விளக்கும் வரிகளைப் படித்தவுடன் மனம் கனத்துவிட்டது. அருமையான கவிதை, நல்ல மொழிபெயர்ப்பு.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
காக்கை விடு தூது!
காதலைப்பகிரத்தான் மனிதர்களுக்கு எத்தனை எத்தனை வழிகள்..!
அருந்தமிழ்சொற்களால் அமையப்பெற்ற கவிதை அழகு.
மூலத்தைப் படித்த உணர்வினைத் தந்தது. மிக்க நன்றி ஐயா.
”தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை” - இவ்வரி மட்டும் சற்று பொருந்தாததாக தோன்றுகிறதே ஐயா - எனது ஐயம் சரியா?
“தண்மதி பொழிகின்றது மங்கிய ஒளியினை”
என்றோ,
“தண்ணொளி பொழிகின்றது மங்கிய நிலவது”
என்றோ
வந்திருக்குமானால் பொருத்தமாயிருக்குமோ...
பாரதி அண்ணாவின் பார்வைக்கூர்மை வியக்க வைக்கின்றது...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
சகோதர மொழி இலக்கியங்களை தீந்தமிழ்ச் சொல்லில் எடுத்துப் பருகத் தரும் உங்களுக்கு முதலில் என் வாழ்த்தும் பாராட்டும் நன்றியும்..
நம் தமிழ் இலக்கியங்களில் களத்துக் கேற்ப எல்லாம் இருக்கும். அதே சிறப்பை இந்தக் கவிதையிலும் காண்கிறேன். காக்கை அதிலொன்று..
ஒரு பக்கத்தின் அழிவு மறு பக்கத்தில் மகிழ்வாய் எதிரொலிக்கும் போது ஏற்படும் உயிர் உலுக்கும் வேதனையை அண்மைக் காலங்களில் அனுபவிக்கும் பலரில் நானும் ஒருவன்.
அதையும் தாங்கியபடி..
காதல்..
தனக்காக உயிர்நீத்தவர்கள்..
அவர்கள் தியாகம் பயனற்றுப் போனமை..
சுடலைத் தனிமை..
இப்படி ஏராளமான உணர்வுகளின் தாக்குதலையும் சமாளித்து, தோல்வி மாலை சூடிய நொடியை, அப்பொழுது எழுந்த விரக்தியை அச்சுப் பிசகாமல் கவிதையாக மொழி பெயர்த்திருக்கி்றீர்கள் மூலக்கவியும் நீங்களும்.
தெளிவுற விளக்கம் சொல்லியமைக்கு மிக்க நன்றி சொ.ஞா. அவர்களே...
அமரா, உன் பின்னூட்டம் சமகாலத் தமிழ் மனங்களின் பிரதிபலிப்பு...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
பாராட்டுக்கும் விரிவான விமர்சனத்துக்கும் நன்றி. உங்கள் சொந்த அனுபவம் என்னில் துயரம் விளைத்தது.
சொ.ஞானசம்பந்தன்
நன்றி ஐயா!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks