Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: கோயமுத்தூர் ஐக்யூ டெக் கணிப்பொறி டீலருடன் ஒரு பிரச்சினை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0

    கோயமுத்தூர் ஐக்யூ டெக் கணிப்பொறி டீலருடன் ஒரு பிரச்சினை

    கிட்டத்தட்ட 35000 ரூபாய்க்கு புதிய கணிப்பொறி ஒன்றினை ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கினேன். இன்வாய்ஸ் எல்லாம் கொடுத்தார்கள். எனது நண்பர் மூலம் வாங்கினேன். அவசியம் கணிணிப் பாகங்களின் பாக்ஸ்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அதன் படியே செய்தேன்.

    சரியாக ஒரு வருடம் முடிந்து, நான் வாங்கிய வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் வேலை செய்யவில்லை. டீலரைத் தொடர்பு கொண்டேன். அதற்கு என்ன சொன்னார் தெரியுமா? ஒரு வருடம் தான் வாரண்டி தர முடியும். ஆகையால் நீங்கள் புதிது வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். மவுஸ் கீபோர்டுக்கு மூன்று வருடம் வாரண்டி இருப்பதாக படித்த நினைவு. உடனே பெட்டியைத் தேடி எடுத்தால் படித்துப் பார்த்தால், மூன்று வருடம் என்று போட்டிருந்தது. மீண்டும் டீலரை அழைத்தேன். சார் மூன்று வருடம் வாரண்டி இருக்கிறதே என்று கேட்டேன். அதன்பிறகு கொண்டு வாருங்கள் என்று சொன்னார்.

    2010, மார்ச் மாதம் 31ம் தேதி ஐக்யூ சிஸ்டம் என்ற கோவையிலிருக்கும் கணிணி விற்பனையாளரிடம் கொண்டு போய் கொடுத்த போது ஒரிஜினல் இன்வாய்ஸ் இருந்தால் தான் சர்வீசுக்கு எடுத்துக் கொள்வோம் என்ற அழிச்சாட்டியத்தை ஆரம்பித்தனர்.இமெயிலில் ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். ஒரிஜினலை நேரில் கொண்டு வந்து காட்ட வேண்டுமென்று சொன்னார் டீலர். (என்ன ஒரு அயோக்கியத்தனம் பாருங்கள்)

    கொடுத்து விட்டு வந்து பத்து நாட்களாகி விட்டது. மீண்டும் தொடர்பு கொண்டேன். டிரை செய்து கொண்டிருக்கிறோம் என்று ஆரம்பித்தார். உடனே லாஜிடெக் வெப் தளத்திற்கு சென்று லாஜிடெக் ஆதரசைடு சர்வீஸ் சென்டர் நம்பர் கொடுத்து இவ்விடத்திற்கு அனுப்பி சர்வீஸ் செய்து அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன். சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.

    அடுத்த பதினைந்து நாட்கள் கழித்து போன் செய்தேன். நான் கொடுத்த கீபோர்டு மவுஸ் வருவதில்லை என்பதால் புது செட் தருகிறோம் என்று சொன்னார்கள். ஸ்டாக் இல்லை என்பதால் இன்னும் வரவில்லை என்றும் சொன்னார்கள். ஸ்டாக் வந்தவுடன் உடனே தருகிறோம் என்று சொன்னார்கள்.

    இதோ இன்றைக்கு காலையில் போன் செய்தேன். நான் புதிய பையன். இன்றைக்குத்தான் வேலையில் சேர்ந்தேன் என்று கதை விட்டார் ஒருவர். இன்னும் அரை மணி நேரத்தில் கீபோர்டும் மவுசும் வரவில்லை என்றால் நாளைக் காலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் அனுப்புவேன் என்று சொல்லி விட்டு எனது வக்கீல் நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். கவலைப்படாதீர்கள் தங்கம் உங்களுக்கு நிச்சயம் 10,000 ரூபாய் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி, டீடெயில்ஸை வாங்கிச் சென்றார்.

    சரியாக ஒரு மணி நேரம் கழித்து சார், ஸ்டாக் வந்து விட்டது. வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று சொன்னார் டீலர்.

    இதன் பிறகு நடந்த ஒரு கேனத்தனமான செயலால் தான் இந்தப் பதிவு எழுதவே தோன்றியது.

    கீபோர்டு மவுஸை இணைத்தால் வேலை செய்யவில்லை. என்னவென்று பார்த்தால் அந்த லாஜிடெக் கீபோர்டு மவுசுடன் வந்த பேக்கில் இருந்த மூன்று பாட்டரிகளை காணவில்லை. உடனே போன் செய்து விபரம் கேட்டால் லாஜிடெக் சர்வீஸ் செண்டர் கொடுக்கும் போதே பேட்டரி இல்லாமல்தான் கொடுத்தார்கள் என்றார் டீலர் சவுந்தர் ராஜன்.

    என்ன ஒரு சிறு பிள்ளைத்தனமான கேவலமான செயல் என்று பாருங்கள். மூன்று பாட்டரிகளும் சேர்த்து 60 ரூபாய் வரும். இது தான் ஒரு டீலரும், லாஜிடெக் நிறுவனமும் கன்ஸ்யூமருக்கு கொடுக்கும் மரியாதை.

    வாங்கிய பணத்திற்கு சரியான பொருளைக் கொடுக்க வேண்டியது அக்கம்பெனியின் பொறுப்பு. விற்பனையாளருக்கு கஸ்டமருக்கு சேவை செய்ய வேண்டியது கடமை. ஆனால் மேற்படி இருவரும் எப்படியாவது தட்டிக் கழித்து விடவே முயற்சித்தனர். மீண்டும் 1600 ரூபாய் செலவு வைக்க வேண்டுமென்ற ஆவல் போலும். சின்னஞ் சிறிய பேட்டர் மாற்றியதற்கு கூட பணம் வாங்கிக் கொண்டு கஸ்டமருக்கு சேவை செய்கிறார்கள் ஐக்யூ டெக்கில்.

    நமது உரிமையை அடைய எப்படி எல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதைப் பாருங்கள். இழப்பும், வேதனையும், செலவும் தான் நமக்கு மிச்சம்.

    இந்திய அரசு கன்ஸ்யூமர் ரைட்ஸுக்காக கடுமையான சட்ட விதிகளை உருவாக்குதல் வேண்டும். காலத்தின் அவசியம் கூட.
    Last edited by தங்கவேல்; 31-05-2010 at 10:59 AM.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நுகர்வோர் பாதுகாப்பைப் பற்றி மக்களிடம் இருக்கும் அறியாமையை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் இதை அணுகுவதில்லை என்ற தைரியம் மிக அதிகமாக இருக்கு இவர்களிடம்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இது இன்று நேற்றல்ல, தொன்றுதொட்டு நடந்துவரும் திருட்டு. இது இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுவதும் இருக்கிறது. மக்களுக்கு இதைப் பற்றி அதிகம் தெரியாததே காரணம். அதை விற்பனையாளர்கள் நன்றாகவே உபயோகித்துக்கொள்கிறார்கள்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    வாரன்ட்டி கேரன்ட்டி என இரு பிரிவுகள் இதில் உள்ளது நண்பரே!

    வாரன்ட்டி என்றால் வாங்கிய பொருள் பழுதடைந்தால் அதை சரிசெய்து தரும்வரை தான் அதன் உத்திரவாதம்... ஒருவேளை அது வேலை செய்யவில்லை என்று உறுதியான பட்சத்தில் தான் வேறு புதிய பொருள் வழங்கப்படும் என்று நான் அறிந்தது.

    நான் ஒருமுறை துபாயில் இருந்தபோது இப்படிதான்... வாரன்ட்டி கார்டுடன் ஒரு வாட்சை வாங்கினேன்... அதை விற்ற கடைகாரர் என்னிடம் அந்த கம்பெனியின் அங்கரிக்கப்பட்ட சர்வீஸ் டீலரை அனுகுமாறு ஆலோசனை கூறினார். நான் வாரன்ட்டியை காட்டி கேட்டேன், உடனே வாட்சை பெற்றுகொன்டு ஒரு ரசீது தந்தார் ஒருமாதம் ஆகும் என்றார்... பிறகு இன்னும் வரவில்லை என்றார்..

    இப்படியே இழுத்தடித்து பிறகு வேறு ஒரு வாட்சை தந்தார்.. இது எல்லா நாடுகளிலும் நிகழும் கதை தான்.

    பகிர்வுக்கு நன்றி



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மகாபிரபு சொல்ற மாதிரி...இந்த வாரண்டி என்றாலே தொல்லைதான். நிறைய அலையவிட்டு...வெறுத்துப்போய் விட்டுவிட வைப்பார்கள்.

    கியாரன்டியும்...ஒரு வருடம் கொடுப்பார்கள்...ஆனால் சொல்லி வைத்ததைப்போல...ஒரு வருடம் முடிந்தபிறகுதான் அது மண்டையைப் போடும்...

    மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததை...இவர்கள் சரியாகப் பயண்படுத்திக்கொள்கிறார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by மகாபிரபு View Post
    வாரன்ட்டி கேரன்ட்டி என இரு பிரிவுகள் இதில் உள்ளது நண்பரே!
    இதைக்கொஞ்சம் விரிவாகச் சொல்லமுடியுமா மகாபிரபு...

    *****
    அந்நியன் பார்ட் 2 வுக்குத் தங்கவேல்கிட்ட நிறைய அனுபவம் இருக்கும் போலிருக்கே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    “விடா முயற்சிக்கு ஒரு தங்கவேல்” என்று கூறலாம் போலிருக்கிறதே! மக்களில் பெரும்பாலோனோர் உங்களைப் போல முயற்சியைக் கைக்கொண்டால் விற்பனையாளர்களின் மனோபாவம் மாற வாய்ப்பிருக்கிறது.

    எனக்கும் இது போன்று ஓரிரு நிகழ்வுகள் நடந்தன. நம்முடைய பொறுமையின் எல்லையை சோதிக்கும் விதமாகவே அவை அமைந்திருந்தன. எப்போதாவது மன்றத்தில் நானும் அதை பகிர்ந்து கொள்வேன் என நினைக்கிறேன்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    உண்மைதாங்க... எல்லா நாட்டிலும் இப்படித்தான் இருக்குறாங்க. இங்க கூட எனது நண்பர் ஒருவர் டிவிடி கொடுத்து அதை சரி செய்து கொடுக்க முடியாமல் அவருக்கு வேறொரு டிவிடி கொடுத்துள்ளனர்..

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  9. #9
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    மிகவும் தேவையான பகிர்வு. அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!



    வாரன்ட்டி கேரன்ட்டி என இரு பிரிவுகள் இதில் உள்ளது நண்பரே!
    Quote Originally Posted by அக்னி View Post
    இதைக்கொஞ்சம் விரிவாகச் சொல்லமுடியுமா மகாபிரபு...

    *****
    அந்நியன் பார்ட் 2 வுக்குத் தங்கவேல்கிட்ட நிறைய அனுபவம் இருக்கும் போலிருக்கே...
    1. வாரன்ட்டி.....பொருள் செயல்பாடு குறித்து வணிகர் தரும் உறுதிமொழி.....கூடுதலாக வரும் உத்தரவாதம் அதாவது கியாரண்டியோடு வருவது. இதனால் பொருள் பழுதடைந்தால் அதை சீர் செய்வதற்கு காசு வாங்குவதில்லை ஆனால் பழுதடைந்த உதிரி பாகங்களை மாற்றும் பொழுது அந்த உதிரி பாகங்களுக்குரிய விலை வசூலிக்கப்படும். (உடைந்து விட்டால் புதியது தான் வாங்க வேண்டும்.)

    2. கியாரண்டி......நிச்சயிக்கப்பட்ட உத்தரவாதம்...இது தான் முக்கியம் பொருள் குறிப்பிட்ட காலம்வரை அதன் செயல்பாட்டு குறை அல்லது பழுதடைந்தால் முற்றிலும் மாற்றி புதிய ஒன்றைக்கொடுக்க வேண்டும். அல்லது முழுவதும் இலவசமாக சீர் செய்து தரவேண்டும். ஆனால் பொருள் உடைந்திருக்ககூடாது. (no physical damage). (சில பேர் முந்திக்கொண்டு அதை சீர் செய்கிறேன் என்ற பெயரில் நோண்டி உடைத்து விடுவார்கள். அப்பொழுது மாற்றமுடியாது. (அதற்காக வழக்கு தொடுத்தாலும் முழுப்பலன் கிடைக்காது) இப்படி அந்த குறிப்பிட்ட காலவரைக்குள் மாற்றிப் பெறுவதற்காக எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது.

    சில பொருள்களுக்கு வராண்டி மட்டும் கொடுக்கப்படும். சிலபொருட்களுக்கு கியாரண்டியோடு வாரண்டியும் கொடுக்கப்படும்.

    சில பொருள்களுக்கு வெறும் கியாரண்டி மட்டும் கொடுக்கப்படும். அந்த காலவரைக்கப்புறம் பொருளை அந்த தொழில் நுடபம் தெரிந்தவரிடம் கொடுத்து நாம் தான் பழுது பார்த்துக் கொள்ளவேண்டும்.

    கியாரண்டியோடு....நீட்டிக்கப்பட்ட ஒன்றாக கொடுக்கப்படுவது வாரண்டி. ஒரளவுக்கு புரிகிறதா?

    இன்னும் கூடுதலாக கியாரண்டி என்றால் நிச்சயம்....வாரண்டி அந்தளவுக்கு நிச்சயமல்ல....

    (உதாரணத்திற்கு.......ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இது மாதிரி உண்டு கியாரண்டிட் போனஸ் என்று உண்டு. அது நிச்சயமாக இதே போனஸ் தான் கடைசியிலும், முதிர்விலும் கொடுக்கப்படும். இதற்கு பெயர் கியாரண்டி.........(வாரண்டி இங்கு வராது....இதில் சேவை மட்டுமே வருகிறது. பொருள் வரவில்லை.) காப்பீட்டு நிறுவனங்கள் நடத்தும் அனைவராலும் கியாரண்டிட் போனஸ் மாதிரி நிச்சயமாக பெரும்பாலோரால் தர முடியாது. ஆகையால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்)

    இதையெல்லாம் பார்த்து தான் நூகர்வோர் மன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். கூடியமட்டிலும் தொலைபேசி உரையாடலை தவிர்ப்பது நலம். அதை ஆதாரமாக எடுத்துச் செல்ல முடியாது. மின்னஞ்சலின் மூலமே பதில் பெருங்கள் அது தான் ஆதாரம். ஆனால் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்கு வணிகர் அல்லது அதைச் சார்ந்த தயாரிப்பு நிறுவனமோ அவ்வளவு சீக்கிரத்தில் பதில் தராது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். எல்லோருமே தப்பிக்கத்தான் பார்ப்பார்கள் என்று. அவர் பதில் தராவிட்டாலும் நாம் அனுப்பிய மின்னஞ்சலை ஆதாரமாக காட்டலாம்.


    நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளையும் (அவர்களுக்கு தரும் முன்தகவலாக) முழுவதும் வெளியிடாதீர்கள். (தெரிவிக்கமல் இருப்பது நலம்). சமயத்தில் இது மிரட்டலாக கூட அந்த நிறுவனங்களால் முன் வைக்கப்படும். ஏனென்றால் நீங்கள் அந்த நிறுவனத்தோடு தொலைபேசியில் உரையாடுகையில் அது பதிவு செய்யப்படுகிறது என்ற அறிவிப்புத் தகவலோடு பதிவு செய்யப்படும். இது நமக்குத்தரும் முன்னெச்சரிக்கையும் கூட நாம் பாதிக்கப்பட்டதினால் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை வெளிப்படுத்தி விடாமல் இருக்க நம்மை கட்டுப்படுத்த தரும் வாய்ப்பு என்றும் எடுத்து கொள்ளலாம்.

    கியாரண்டி, வாரண்டி விதிகள் நுகர்வோருக்காக தயாரிப்பு நிறுவனங்களால் போடப்படும் ஒப்பந்தங்களாக கருதவேண்டும். இந்த ஒப்பந்தங்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் அந்த பொருளை வாங்க வேண்டியதில்லை. இதை காட்டித்தான் நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடுக்கமுடியும். (பொருள்களின் தன்மைக்கேற்ப மாறுபடும்)

    மேற்கூறியவைகளை அனுபவத்தில் கூறியவைகளாக எடுத்துக்கொள்ளலாம்.

    நன்றி!

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    நம்பிக்கு பாராட்டுகள். ரெம்ப தெளிவா சொல்லிட்டீங்க



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  11. #11
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    பாராட்டுக்கு நன்றி தோழரே!

    இது பொதுவாக......

    கியாரண்டி வாரண்டிகளில் கொடுக்கப்பட்ட வாசகங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.

    ஒரு பொருள் என்றால் அதனுடன் இருக்கும் பல பாகங்களுக்கும் கியாரண்டி கொடுக்க மாட்டார்கள். அதில் உள்ள ஒரு சில பாகங்களுக்கு மட்டுமே கியாரண்டி மற்றும் வாரண்டி கொடுப்பார்கள். ஆனால் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வாய்ப்பு அளிக்காத நிலைகளில் விற்பனை பிரதிநிதிகளால் பொருள்களை நுகர்வோர் தலையில் கட்டி விடும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டு விடுவோம். ஆனால் உண்மையில் அந்த ஒப்பந்தத்தில் (கியாரண்டி கார்டு) அதில் எல்லாம் தெளிவாக பதியப்பட்டிருக்கும். இதெதற்கு.... மட்டும் தான் கியாரண்டி இதெதற்கு... கிடையாது. பொருள்களை வாங்கும் அவசரத்தில் இதை நாமும் கவனிப்பது கிடையாது.

    பொருள்களின் விலை, அது பயன்படும் தன்மைகளை கவனத்தில் கொண்டு இதையெல்லாம் ஆரம்பத்திலேயே ஆராய வேண்டிய கட்டாயமும் உள்ளது.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    கியாரண்டி வாரண்டி, அதிலும் மெனுஃபெக்சரர் வாரண்டி (உற்பத்தியாளர் உத்ரவாதமும்), சொப் கியாரண்டி (விற்பனையாரளர் உத்ரவாதமும்) என இரண்டு வகையும் உண்டு, அடுத்து மெனுஃபெக்சரர் டிஃபெக்ட் என்றும் என்ட்யூசர் மிஸ் ஹெண்டலிங் என்றும் வகைபிரிக்க பட்ட பழுதுகளும் உள்ளது. இதை எல்லாம் கடந்து சண்டை போட்டு, நாம் போட்ட பணத்துக்கு வாங்கிய பொருள் சரியில்லை என்றால், அதற்காக செலவழிக்கும் நேரம், தொலைபேசி அழைப்புக்களினால் ஏற்படும் செலவு, போக்குவரத்து அசௌகரியம் இதை எல்லாம் எண்ணி பார்த்து போனா போவுது புதுசா வாங்கிடுவோம். இதானே நடக்குது. மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •