:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே
http://thangavelmanickadevar.blogspot.com/
சவுதியில் நிலை வேறு.
'வாரன்டி' காலத்திற்குள் பழுது நேர்ந்து, அதைச் சரிசெய்து தராவிட்டால் அங்குக் கடை நடத்தவே முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்ததைச் சொல்கிறேன்.
என் நண்பர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார். வாங்கிய சில நாட்களில், பயன்படுத்திவிட்டு நிறுத்தும் (சுவிட்ச் ஆப்) போது நடுவில் வெள்ளை ஒளி நிலையாக நிற்கும்.
இதைக் குறித்துக் கடைக்காரரிடம் கேட்டபோது சரியான பொறுப்பான விடை கிடைக்கவில்லை.
நண்பர், அவர் அலுவலகத்தில் இருந்த சவுதிக்காரரான அன்பர் ஒருவரின் உதவியோடு அரபியிலும் ஆங்கிலத்திலும் மடல் எழுதி உரிய அதிகாரியிடம் சேர்ப்பித்தார்.
இரண்டாம் நாளே அந்தக் கடைக்காரர் நண்பரைத் தொலைபேசியில் அழைத்து உடனே வந்து புதிய தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிச் செல்ல வற்புறுத்தலாக அழைத்தது நன்றாக நினைவில் இருக்கிறது.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
வாரண்டி மற்றும் கியாரண்டியைப் பற்றி விளக்கமாய் சொன்னதற்கு மிக்க நன்றி நம்பி.
இதில் சில பொருட்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்லலாம். பழுது பெரிதாய் இருந்தால்...அதைவிடக் குறைந்த தொகையாக அந்த நீட்டிப்புக்குக் கொடுக்கவேண்டியிருந்தால்...அதனை வாங்குவதே நல்லது.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வியாபாரம் என்றால், ஏமாளிகளிடமிருந்து பணத்தைப் பிடுங்குவது என்றொரு கருத்தும் வைத்துப் பார்க்கலாம் போலிருக்கிறது. நமக்கும் விடயம் தெரியும் என்று காட்டினால்த்தான் பலர் தப்புத்தண்டா செய்ய முனைவதை யோசிக்கின்றனர்.
உங்களைப்போல் ஓர் சிலர் இருப்பதால்த்தான் இந்தளவிலாவது நடக்கிறது. இல்லாது போனால் இன்னும் எவ்வளவு கீழ்த்தரமான சேவையை வழங்குவார்களோ?
நான் பொதுவாகவே வாரண்டி & கேரண்ட்டி என்றால் காத தூரம் ஓடுவேன்,,
அவ்வகை சடங்கு, சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை.. ( விற்பனர்கள் 1 வருடம் கேரண்டி என கொட்டை எழுத்தில் போட்டால் நிச்சயம் 400 வது நாளில் பொருள் டமார் தான் )
மலிவான பொருள் தான் என் சாய்ஸ் . இதைச்சொல்ல நான் கூச்சப்படுவதில்லை.. எனெனில் வெட்டி பந்தாவை விட என் காசு எனக்கு பெருசு...
அசெம்பிள் கம்யூட்டர் . இந்திய/சைனா மெபைல்கள், ஏன் வீட்டுக்கான யூபிஎஸ் ஆக இருந்தால் கூட இன்வேட்டர் செகண்ட், மலிவான பேட்டரி என தான் போடுவேன்..
கூட்டிக்கழித்து பார்த்தால் எனக்கு மன நிம்மதி மிச்சம்... நான் சொன்னது தப்பா ??
ஜெயிப்பது நிஜம்
மொக்கச்சாமி நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியானது தான்.
ஆமாம்...வணிகக்குறியுள்ள (பிராண்டட்) பொருள்கள் அனைத்துமே ஒரே நிறுவனத்தில் தயரிக்கப்படுபவைகள் அல்ல....எல்லா பொருட்களுக்கும் அப்படித்தான்...அதன் உதிரிபாகங்கள் பல துணை, சிறு நிறுவனங்கள் தயாரிப்பவைகள் தான்....அவைகள் எல்லா வாங்கப்பட்டு வணிகக்குறியுள்ள நிறுவனம் ஒன்றிணைத்து தருகிறது...பிசிபி போர்டே பல நிறுவனங்கள் தயரித்த ஐசி, ரெசிஸ்ட்டர் என....பல துணைநிறுவனங்கள் தயாரித்தவைகள் தான்...இது அனைத்துமே வணிகக்குறியுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவைகள் அல்ல... வணிக முத்திரைக்காக (பிராண்டட் அயிட்டம்) மட்டுமே அந்தளவுக்கு பணம் வாங்குகின்றன...வணிகக்குறியுள்ள நிறுவனத்திற்கு இருமடங்கு லாபம்...இவற்றை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது பொருளின் அசல் விலை மற்றும் அடக்க விலை எங்கேயோ இருக்கும்...
தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் (சிறிதளவு தெரிந்தாலும் போதும்) பெரும்பாலும் இம்மாதிரி வணிகக்குறியுள்ள பொருள்களை அதிகளவு செலவு செய்து வாங்குவதில்லை.....
இது எல்லா பொருட்களுக்கும் பொருந்தும்....இருசக்கர வாகனம்...என்று எல்லாமே துணை நிறுவனங்கள் தயாரிக்கும் உதிரி பாகங்களை கொண்டுதான் முழுப்பொருளாக உருவாக்கித்தருகின்றன. அந்த முழுப்பொருள் உற்பத்தியில் வணிகக்குறி நிறுவனத்தின் பங்கு வெகு குறைவு தான். தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் (பொறியாளர்கள்) அவர்களுக்காக சொந்தமாக கணிணி உருவாக்கும் பொழுது மிகக்குறைவான செலவில் தங்களுக்குத் தேவையான வசதிகளுடன் கணிணிகளை உருவாக்கி கொள்வார்கள். அப்படி உருவாக்கப்பட்டவைகள் பெரும்பாலும் எந்த பிரச்சினையும் உண்டாக்குவதில்லை. தொழில்நுட்பம் பற்றி (மெக்கானிக்) அவ்வளவாகத் தெரியாதவர்கள் இந்த வாரண்டிகளை நம்பித்தான் வாங்கவேண்டியதாயிருக்கிறது.
Last edited by nambi; 03-07-2010 at 07:49 AM.
நம்பிக்கும், தங்கவேலுக்கும், ராம்குமாருக்கும் (மாலை வணக்கம் போடாட்டி இந்தப்பதிவு மேலெழுந்திருக்காதே... ) நன்றி...
மலிவு விலையான பொருட்கள் என்று வருகையில், அதனைக் கணக்கிற்கொள்வதில்லை.
பற்றுச்சீட்டைப் பத்திரமாக வைத்திருக்கும் பழக்கம் என்னிடமிருந்தும்கூட, அதனைப் பயன்படுத்தி உரிமையைப் பெற்றுக்கொள்வதில்லை. அதாவது விலை குறைவான பொருட்களுக்கு... இந்தக்க்காசுக்காக போய் நிற்கவேண்டுமா என்ற அலட்சியம்தான்...
அண்மையில் 10யூரோ பெறுமதியான ஒரு பொருள் பழுதுபட்டுவிட, எறிந்துவிடப்போன நான், பின்னர் மனதை மாற்றிப் பற்றுச்சீட்டோடும் பழுதடைந்த பொருளோடும், குறித்த விற்பனை நிலையத்துக்குச் செல்ல, திருத்த முடியாத நிலையிலிருந்ததால் உடனடியாகவே அதனை மாற்றித் தந்தார்கள். ஏறத்தாழ ஒரு வருடம் பாவித்திருந்தேன். அடுத்த வருடம் அடுத்ததும் பழுதடைந்தால் நன்றாயிருக்குமே என்ற எண்ணத்துடன் திரும்பி வந்திருந்தேன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அடியேனின் மனையாள் இது போன்ற பில்களுக்கு என்று தனியான ஃபைல் ஒன்றும், சின்னச் சின்ன பில்களுக்கு தனியான பாக்ஸ் ஒன்றினையும் வைத்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஃப்ரிட்ஜின் பில்லைக்கூட வைத்திருக்கிறார். மிகச் சமீபத்தில் புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது கிட்டத்தட்ட 6000 ரூபாய் கம்மியாய் (பிரபல கடைகளில் விலைகள்) முன்பு வாங்கிய கடையிலே வாங்கினோம். அவர்களின் பழைய கஸ்டமர் என்பதற்காக 500 ரூபாய் ஸ்பெஷல் தள்ளுபடி வேறு கொடுத்தார்கள்.
:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே
http://thangavelmanickadevar.blogspot.com/
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks