நன்கு ரசித்து படித்தேன்..
அழகான துனுக்குகள்...
நன்றி கலையரசி அவர்களே...
"யாகாவாராயினும் நாகாக்க"
"செய்நன்றி மறவாதே"
துணுக்கு - 1
அழகான இளம்பெண் ஒருத்திக்குத் தினந்தினம் போன் செய்து கொண்டிருந்த வாலிபன் ஒருவன் ஒரு நாள் அவளிடம்,
"அன்பே!, உனக்காக எதை வேண்டுமானாலும், நான் விடத் தயாராயிருக்கிறேன்" என்றான்.
"அப்படியா? உன் நம்பிக்கையை விட்டு விடு" என்றாள் அவள்.
துணுக்கு - 2
எழுபது வயது கோடீசுவரர், இருபது வயது அழகிய இளம்பெண்ணை மணந்தார்.
"எப்படி இவ்வளவு அழகான இளம் மனைவி உனக்குக் கிடைத்தாள்?" என்று வியந்தார் அவரது நண்பர்.
"அது ரொம்பச் சுலபம். எனக்கு 95 வயதாகிறது என்று அவளிடம் சொன்னேன்" என்றார் கோடீசுவரர்.
துணுக்கு-3
ஜிம்மியும் ஜானியும் சொர்க்க வாசல் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள்.
ஜிம்மி:- "நீ எப்படி இங்கு வந்தாய்?"
ஜானி:- "அளவுக்கதிகமான குளிர் தாக்கி இறந்து விட்டேன். நீ?"
ஜிம்மி:- "என் மனைவி எனக்குத் துரோகம் செய்தாள் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அவளின் கள்ளக்காதலனைப் பிடிக்க நான் ஒரு நாள் வழக்கத்துக்கு முன்னதாய் வீட்டுக்கு வந்தேன். என் மனைவியைக் கண்டபடி திட்டிவிட்டு அவனை வீடு முழுக்கத் தேடினேன். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால், ஏற்பட்ட ஆத்திரத்தில் எனக்கு மாரடைப்பு வந்துவிட்டது".
ஜானி:- "அடடா! நீ அந்தப் பெரிய பிரீஸருக்குள் தேடியிருந்தால், நாமிருவருமே இன்று உயிரோடு இருந்திருப்போம்".
துணுக்கு - 4
கணவனும் மனைவியும் பல் டாக்டரிடம் சென்றார்கள்.
"டாக்டர், அவசரமாக நான் போக வேண்டியிருப்பதால் மயக்க மருந்தெல்லாம் கொடுத்துப் பல்லைப் பிடுங்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு சீக்கிரம் பிடுங்குகிறீர்களோ, அவ்வளவுக்கு எனக்கு நல்லது,"
என்றாள் அந்தப் பெண்.
அவள் சொன்னதைக் கேட்டு மிகவும் வியந்த டாக்டர்,
"நீங்க உண்மையிலேயே மிகவும் தைரியசாலி தான். எந்தப் பல்?" என்றார்.
"அன்பே, உங்கப் பல்லைக் காட்டுங்க," என்றாள் அவள், தன் கணவர் பக்கம் திரும்பி.
துணுக்கு - 5
தன் கணவனின் குடிப்பழக்கத்தால் வெறுப்புற்றிருந்த பெண்ணொருத்தி, அவனுக்கு ஒரு பாடம் புகட்ட முடிவு செய்தாள். பேய் பிசாசு போல வேடம் பூண்டு, அவன் வீட்டுக்கு வந்த சமயம் சோபாவின்
பின்புறமிருந்து எதிர்பாராவண்ணம் திடீரென்று வந்து குதித்துப் பயமுறுத்தினாள்.
"நீ என்னைப் பயமுறுத்த முடியாது. நான் உன் அக்காவைத் திருமணம் செய்துள்ளேன்," என்றான் அவன் மிகவும் அமைதியாக. .
(அனைத்துமே ரீடர்ஸ் டைஜஸ்ட்டிலிருந்து)
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
நகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி!
அருமையான நகைச்சுவைகள். அந்த பல் பிடுங்கும் மனைவி.....பாவம் அவள் கணவன்.....
ரசித்துச் சிரிக்க வைத்தத் துணுக்குகள்.
பகிர்வுக்கு நன்றிங்க கலையரசி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்லா இருக்குங்க. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
5 நகைச்சுவைகளும் மிகவும் ரசிக்கும் படியாய் இருந்தது கலையரசி அவர்களே...
மிக்க நன்றி..
"யாகாவாராயினும் நாகாக்க"
"செய்நன்றி மறவாதே"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks