Results 1 to 5 of 5

Thread: நிஜமில்லா கனவுகள்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2008
    Location
    tamilnadu
    Age
    41
    Posts
    98
    Post Thanks / Like
    iCash Credits
    28,721
    Downloads
    9
    Uploads
    0

    நிஜமில்லா கனவுகள்

    என்
    தூரகனவுகளை
    துரத்திவருகிறாள்
    தொலைந்துபோனவள்....

    என்
    முதுகுப்புற நிழலை
    திரும்பிப்பார்பதில்லை...
    நெருடலோ,
    வருடலோ,
    ஏதோ பதிந்தாலும்.....

    நிச்சயம்
    அங்கொன்றும்
    நினைவுகளில்லை...
    நிசப்த நிதர்சனமும்
    அங்கில்லை...
    அது
    அமானுஷ்ய ஆவியுமில்லை...

    அவள்
    என்னை நினைப்பதுமில்லை....

    -குளிர்தழல்.
    "உன்னை விட திறமைசாலி யாரும் இல்லை"எனும்போது உன்னை விட புத்திசாலிகள் நிச்சயம் உண்டு.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அவள் என்னை நினைப்பதில்லையென்று
    அபாண்டமாய் பழிசொல்லாதே...
    உன்னை நினையாமலா
    உன் தூரக்கனவுகளைத் துரத்திவருகிறேன்?
    தொடர்சங்கிலியென நீளும்
    அவற்றைப் பற்றியவண்ணம்
    தீராத துயரத்துடன் தேடியுன்னை
    அடைந்தேன்!
    என் சுண்டுவிரல் தீண்டும்
    சுகமுணர்ந்தாலும், திரும்பமறுத்து
    பிடிவாதம் காட்டிப்புலம்புகிறாய்
    அவளென்னை நினைப்பதில்லையென்று!

    அபாரம்! பாராட்டுகள், குளிர்தழல்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் சுடர்விழி's Avatar
    Join Date
    26 Aug 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    21,698
    Downloads
    1
    Uploads
    0
    அருமையான கவிதை குளிர்தழல்...பாராட்டுக்கள்..கீதம் அவர்களின் பின்னூட்டக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.....
    வல்லமை தாராயோ -இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே!![

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2008
    Location
    tamilnadu
    Age
    41
    Posts
    98
    Post Thanks / Like
    iCash Credits
    28,721
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    அவள் என்னை நினைப்பதில்லையென்று
    அபாண்டமாய் பழிசொல்லாதே...
    உன்னை நினையாமலா
    உன் தூரக்கனவுகளைத் துரத்திவருகிறேன்?
    தொடர்சங்கிலியென நீளும்
    அவற்றைப் பற்றியவண்ணம்
    தீராத துயரத்துடன் தேடியுன்னை
    அடைந்தேன்!
    என் சுண்டுவிரல் தீண்டும்
    சுகமுணர்ந்தாலும், திரும்பமறுத்து
    பிடிவாதம் காட்டிப்புலம்புகிறாய்
    அவளென்னை நினைப்பதில்லையென்று!

    அபாரம்! பாராட்டுகள், குளிர்தழல்.
    ஒத்த சிந்தனையோடு எழுதிய வரிகள் வேறு தளத்திலிருந்து வந்ததால் ரசிக்கிறேன்... அது பெண்பால் தளம்... நல்ல தளத்தில் ஒட்டி வந்த வரிகளை சிறப்பானவை....

    அவன் திரும்பாமல் இருப்பது பயத்தினால்... அவள் நினைப்பதில்லை என்பது சுய சமாதானம்... காதல் என்றும் மறந்துபோகாது... பயமும் சுய சமாதானமும் பிரிவை வலிமையாக்கி தூர கனவுகளுக்கு கூட்டி செல்கிறது.... இலட்சியங்கள் பிரிவினிற்கு தண்ணீர் ஊற்றும்போது தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் பொய்கள் மருந்துகள்... அது ரசிக்கும்படி இருப்பதில்லை... கவிதை ரசிக்கும்படி இருந்ததாக நம்புகிறேன்..... நன்றி கீதம் அவர்களே......
    "உன்னை விட திறமைசாலி யாரும் இல்லை"எனும்போது உன்னை விட புத்திசாலிகள் நிச்சயம் உண்டு.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கனவுகள் என்றாலே உண்மையில்லையே..?
    தூரக்கனவுகளை துரத்துபவரிடம் ஒப்படையுங்கள்.
    வரிகளில் வலி வழிகிறது.
    எழுதுங்கள் நண்பரே.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •