என்
தூரகனவுகளை
துரத்திவருகிறாள்
தொலைந்துபோனவள்....
என்
முதுகுப்புற நிழலை
திரும்பிப்பார்பதில்லை...
நெருடலோ,
வருடலோ,
ஏதோ பதிந்தாலும்.....
நிச்சயம்
அங்கொன்றும்
நினைவுகளில்லை...
நிசப்த நிதர்சனமும்
அங்கில்லை...
அது
அமானுஷ்ய ஆவியுமில்லை...
அவள்
என்னை நினைப்பதுமில்லை....
-குளிர்தழல்.
Bookmarks