நானோர் அநாதை
பெற்றோர் இறந்து பல்லாண் டாயின.
பொற்றொடி பிரிந்து பெற்றாள் விலக்கும்.
திருமணம் புரிந்துந் தனிமர மானேன்.
அண்ணனை அண்டினேன் அடித்துத் துரத்தினான்.
தம்பியை நாடினேன் துரத்தி யடித்தான்.
தோழனை நம்பினேன் துண்டித்தான் தொடர்பை.
தெரிந்தவர் சிலரைத் தேடிச் சென்று
கூனிக் குறுகிக் குரலைத் தாழ்த்தி
உதவி கோரினேன் உதடு பிதுக்கினர்.
ஆயிர மாயிரம் மக்களி னிடையே
ஆதர வின்றி அல்லல் உழந்தேன்.
பட்ட காலிலே படுமென் பதுபோல்
அடிவயிற் றில்வலி அதிகமா யிற்று.
மருத்துவர் கதியென மனையை அணுகினேன்.
பரிசோ தித்தார் பரிதாப முற்றார்.
பரிவுடன் பார்த்துப் பகர்ந்தார்: "பாவம்,
வாழ்வை யிழந்தாய் வரம்பிலாக் குடியால்!"
Bookmarks