Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: நானோர் அநாதை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    நானோர் அநாதை

    நானோர் அநாதை

    பெற்றோர் இறந்து பல்லாண் டாயின.
    பொற்றொடி பிரிந்து பெற்றாள் விலக்கும்.
    திருமணம் புரிந்துந் தனிமர மானேன்.
    அண்ணனை அண்டினேன் அடித்துத் துரத்தினான்.
    தம்பியை நாடினேன் துரத்தி யடித்தான்.
    தோழனை நம்பினேன் துண்டித்தான் தொடர்பை.
    தெரிந்தவர் சிலரைத் தேடிச் சென்று
    கூனிக் குறுகிக் குரலைத் தாழ்த்தி
    உதவி கோரினேன் உதடு பிதுக்கினர்.
    ஆயிர மாயிரம் மக்களி னிடையே
    ஆதர வின்றி அல்லல் உழந்தேன்.
    பட்ட காலிலே படுமென் பதுபோல்
    அடிவயிற் றில்வலி அதிகமா யிற்று.
    மருத்துவர் கதியென மனையை அணுகினேன்.
    பரிசோ தித்தார் பரிதாப முற்றார்.
    பரிவுடன் பார்த்துப் பகர்ந்தார்: "பாவம்,
    வாழ்வை யிழந்தாய் வரம்பிலாக் குடியால்!"

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    குடிப் பழக்கத்தால்....
    குடித்தனம் இழந்தான்...

    நல்ல ஒரு சூடு...!
    வார்த்தைகளால்...
    குடிக்கு.. சவுக்கடி..!

  3. #3
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    குடி குடியைக்கெடுக்கும்....என்பதை உணர்த்தும் கவிதை பகிர்வுக்கு நன்றி!

    குடி பார்ட்டிக்கு கலந்துகொள்ளாவிட்டால் அபராதம் 1000 ரூபாய் விதிக்கும் நிறுவனங்களை என்ன செய்வது?

    தொழிலாளர் கேட்பது 500 ரூபாய் ஊதிய உயர்வு?

    அதை கொடுக்க மனமில்லாமல் லட்சலட்சமாய் கடற்கரை ரிசார்ட்டில் போதை பார்ட்டி வைத்து, போட்டி வைத்து, பெண்களுடன் டிஸ்கோ வைத்து, ஊதியக்கோரிக்கையை மறக்க வைக்கலாம் என்ற கனவு காணும் பன்னாட்டு நிறுவனங்களை என்ன சொல்ல...?

    இது தான்.......வளர்ச்சி? குடி வளர்ச்சி?

    உரிமைகளை கோரமுடியாத இவர்கள் கூட அநாதைகள் தான்!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் சுடர்விழி's Avatar
    Join Date
    26 Aug 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    21,698
    Downloads
    1
    Uploads
    0
    குடியால் என்னென்ன இழந்தான்னு அருமையா சொல்லி இருக்கீங்க...பாராட்டுக்கள்...
    வல்லமை தாராயோ -இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே!![

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by govindh View Post
    குடிப் பழக்கத்தால்....
    குடித்தனம் இழந்தான்...

    நல்ல ஒரு சூடு...!
    வார்த்தைகளால்...
    குடிக்கு.. சவுக்கடி..!
    பாராட்டுக்கு மிக்க நன்றி.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சுடர்விழி View Post
    குடியால் என்னென்ன இழந்தான்னு அருமையா சொல்லி இருக்கீங்க...பாராட்டுக்கள்...
    பாராட்டுக்கு மிக்க நன்றி.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by nambi View Post
    குடி குடியைக்கெடுக்கும்....என்பதை உணர்த்தும் கவிதை பகிர்வுக்கு நன்றி!

    குடி பார்ட்டிக்கு கலந்துகொள்ளாவிட்டால் அபராதம் 1000 ரூபாய் விதிக்கும் நிறுவனங்களை என்ன செய்வது?

    தொழிலாளர் கேட்பது 500 ரூபாய் ஊதிய உயர்வு?

    அதை கொடுக்க மனமில்லாமல் லட்சலட்சமாய் கடற்கரை ரிசார்ட்டில் போதை பார்ட்டி வைத்து, போட்டி வைத்து, பெண்களுடன் டிஸ்கோ வைத்து, ஊதியக்கோரிக்கையை மறக்க வைக்கலாம் என்ற கனவு காணும் பன்னாட்டு நிறுவனங்களை என்ன சொல்ல...?

    இது தான்.......வளர்ச்சி? குடி வளர்ச்சி?

    உரிமைகளை கோரமுடியாத இவர்கள் கூட அநாதைகள் தான்!
    விரிவான விமர்சனத்துக்கு மிக்க நன்றி.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    குடி அவனை முழுவதுமாய்க் குடித்தது. எல்லாமிருந்தும் ஏதுமில்லாத அனாதையாய்....குடிகூடக் கைகழுவிவிட்ட..வெறுங்கூடாய் போகிறான்.

    குடியின் கொடுமையுணர்த்தும் கவிதை. நல்லக் கருத்து.

    வாழ்த்துக்கள் சொ.ஞா
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    முதலில் படிக்கும் போது அவன் மேல் அனுதாபம் பிறக்கிறது. ஆனால் முடிவைப் படிக்கும் போது அவன் மேல் கோபம் வருகிறது. குடியினால் அவன் மட்டுமின்றி அவனது குடும்பமும் அல்லவா மொத்தமாகப் பாதிக்கப்படுகிறது?
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    குடி அவனை முழுவதுமாய்க் குடித்தது. எல்லாமிருந்தும் ஏதுமில்லாத அனாதையாய்....குடிகூடக் கைகழுவிவிட்ட..வெறுங்கூடாய் போகிறான்.

    குடியின் கொடுமையுணர்த்தும் கவிதை. நல்லக் கருத்து.

    வாழ்த்துக்கள் சொ.ஞா
    வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கலையரசி View Post
    முதலில் படிக்கும் போது அவன் மேல் அனுதாபம் பிறக்கிறது. ஆனால் முடிவைப் படிக்கும் போது அவன் மேல் கோபம் வருகிறது. குடியினால் அவன் மட்டுமின்றி அவனது குடும்பமும் அல்லவா மொத்தமாகப் பாதிக்கப்படுகிறது?
    குடி குடிதனைக் கெடுக்கும்தானே? பின்னூட்டத்திற்கு நன்றி.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    குடியிடம் புகுந்தோர் குடியிடம் இருந்து அநாதையாவர்.
    அழகான சொல்லாடலில் ஒரு பாடம்.
    நன்றி ஐயா.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •