Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 18 of 18

Thread: கரைந்த அன்பு…!

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    அன்பு என்பது வாழ்கையின் ஆதாரம்.
    ஆசையாகி கரைந்த அன்பு அருகாமை இருந்து அகண்டு போகையில்.
    மறந்து வாழ்க்கையோடு கலந்து விடமுடிவதில்லை...

    அன்பின் பிரிவு வலியை சொன்ன ஒரு மேன்மை கவிதை

    நன்றி பூமகள்..!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  2. #14
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    ////இப்போதெல்லாம்
    நான் ஊருக்குப்
    பயணிப்பதே இல்லை..
    என் செல்லப் பாட்டியே…!!
    //////

    எனக்கும் இப்படி ஒரு நிலைதான்... அவர் மறைந்த பிறகு என் பாட்டியின் ஊருக்கு செல்வதே இல்லை ....


    வெற்றிலையின் ஈரமுத்தம் இன்னும் நினைவலைகளில்... கரையாத அந்த அன்பினை நினைவுபடுத்தியமைக்கு நன்றி...நல்லதொரு படைப்புக்கு பாராட்டுக்க*ள்..

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    இங்கு பின்னூட்டமிட்ட முத்துவேல், கோவிந்த், கீதம், சுடர்விழி, கலையரசி, செல்வா அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

    @அமரன் அண்ணா,

    எல்லாம் நலமே... உங்களது கடமையும் நிலைமையும் உங்கள் மேல் கோபம் கொள்ள வைப்பதில்லை எப்போதும்..

    கணு பற்றி சொல்லி 'வின்' பண்ணி விட்டீர்கள் எல்லார் மனதையும்.

    @ வசீகரன்,

    நலமா?? நன்றிகள் வசீ..

    @கா.ரமேஷ்,

    எத்தனை வரவேற்புகளும் உபசரிப்பும் இருந்தாலும் அவரின் வரவேற்பும் அன்பு முத்தமும் என்றும் ஈடுகட்ட இயலாதது..

    நன்றிகள் ரமேஷ்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    முதலில் உங்கள் தலைப்பே தவறு... அன்பு கரைவதில்லை. பகிரப்படுகிறது. அது இங்கே கரைந்துவிடாமல் யாவரின் மனதிலும் அழியா பதிவு பெறுகிறது.

    இக்கவிதைக்கு விமர்சனம் தேவையில்லை. விமர்சித்து கவிதையின் அழகை கெடுக்க விரும்பவில்லை.!!

    @ அக்னி @

    எனது அஞ்சலி....

  5. #17
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    //நீயின்றி போன
    வீடும் தாழ்வாரமும்
    வெறுமையைக் குலைத்து
    எனைப் பார்த்த கணத்தில்
    என்னுள் அப்பி அழுகிறது..//

    நல்ல வரிகள் பூமகள்.... இழப்பின் வலி கவிதஎங்கும் பரவியுள்ளது...

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    மூன்று வருடங்களுக்கு முன்பு நான் சவூதியில் இருக்கையில் என் பாட்டி இறந்து விட்டார். அவர் முகத்தை இறுதியாய் காணக்கிடைக்காமல் போனதை இப்பொழுதும் எண்ணினாலும் கண்கள் குளம் கட்டிக்கொள்ளும். எனக்கும் கவிதைக்கும் பரிச்சயமில்லாத அந்த நேரத்தில் வரைந்த கவிதை. பழைய குறிப்பேட்டு புத்தகத்தை துலாவியெடுத்து இக்கவிதையை இங்கு இடுகிறேன்.

    எப்பொழுதாவது புத்தகமெடுக்குமென்னை
    எப்பொழுதுமெடுக்கச்சொல்லிய

    தெருப்புழுதியிலும்
    மேமாத வெயிலிலும் சதா காயுமென்னை
    எப்பொழுதாவது காயச்சொல்லிய

    மின் வெட்டிய இரவுகளில்
    கைவிசிறிக்காற்றுடன்
    கதையோடு கலந்த உறக்கமிட்ட

    எதையோ செய்து விட்டேனென்று
    நடுமண்டையில் நச்சென்று குட்டிய
    அடுத்த வீட்டு அலமேலுவிடம்
    அரைமணிநேரம் சண்டையிட்ட

    அனுஅனுவாய் அனைத்தையும்
    அழகாய் சரிபார்த்தனுப்பும்
    அன்னையின் கண்களில்
    தப்பிப்பிழைத்த
    பொத்தானில்லா சட்டை ஓட்டையில்
    ஊக்கிட்டுச் செருகிய

    மேகமோடமிட்ட வானம்
    தூறலிடத்தொடங்கும் முன்னே
    குடையேந்தி டீச்சருடன்
    சண்டையிட்டழைத்துச்சென்ற
    பாட்டியை நலம் விசாரிக்க மட்டும்
    ஏழெட்டுபேர் சேர்ந்த செய்த சூனியமாய்
    மறந்துத் தொலைக்கிறது ஒவ்வொரு முறையும்
    தொலைவில் தொலைபேசியில்
    அனைவர் நலம் விசாரிக்கையில்.

    மறந்த என் பாட்டியை மீண்டும் ஒரு முறை நினைவு கூறச் செய்த மலர்மகளின் கவிதைக்கு நன்றி. அம்மம்மாவின் இழப்பால் வாடும் அக்னிக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
    Last edited by எஸ்.எம். சுனைத் ஹஸனீ; 10-07-2010 at 05:57 AM.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •