Results 1 to 12 of 12

Thread: அழுகை பெய்கிறது

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    அழுகை பெய்கிறது

    போல் வெர்லேன் ( Paul Verlaine ) 19 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சுக் கவிஞர்களுள் ஒருவர். வாழ்க்கையில் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் அனுபவித்தவர். அவரது சோகக்கவிதையொன்றின் நேரடி மொழிபெயர்ப்பைக் கீழே படிக்கலாம்:

    அழுகை பெய்கிறது இதயத்துக்குள்
    ஊரிலே மாரி ஊற்றுவது மாதிரி.
    என்றன் இதயத்தைத் துளைக்கின்ற
    அந்த ஒடுக்காற்றல்தான் என்ன?

    தரைமீதுங் கூரை மீதும்
    மழையின் இதமான ஒலி!
    மகிழ்ச்சியிழந்த நெஞ்சுக்கு
    மழையின் தாலாட்டு!
    தன்னையே வெறுக்கும் இந்த இதயத்தில்
    பெய்கிறது அழுகை காரணம் இன்றி.

    எதுவுமே புரியவில்லை.
    இந்தத் துயருக்கு இல்லை காரணம்.
    அன்போ பகையோ இல்லாமலே
    துன்பம் எவ்வளவு மனத்துக்கு!
    இது ஏன் என்பதை அறியாததைவிடப்
    பெரிய துன்பம் வேறொன்றுமில்லை.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மகிழ்ச்சியிழந்த நெஞ்சுக்கு
    மழையின் தாலாட்டு
    ரசிக்க வைத்த வரிகள்...

    அன்போ பகையோ இல்லாமலே
    துன்பம் எவ்வளவு மனத்துக்கு!
    இது ஏன் என்பதை அறியாததைவிடப்
    பெரிய துன்பம் வேறொன்றுமில்லை.
    வலிக்க வைக்கும் வரிகள்...

    சோகம் ஊற்றெடுத்த மனதில்
    அழுகை பெய்த கவிதை,
    வலி சொல்கின்றது...

    நன்றி!

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள்.

    எனக்குச் சிறு சந்தேகம். வாழ்வில் துயரங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர், இந்தத் துயருக்கு இல்லை காரணம் என்று ஏன் கூறவேண்டும்?
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Major Depression எனும் மன அழற்சி/ தளர்ச்சியை
    இத்தனை நேர்த்தியான கவிவரிகளில் வாசித்ததில்லை இதுவரை..

    மூலவருக்குப் பாராட்டு..
    உற்சவருக்கு நன்றி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காரணமின்றி சில சமயங்களில் மனம் கனப்பதென்னவோ உண்மைதான். காரணம் இல்லாமலிருக்காது. ஆனால் நம் கருத்துக்கு உடன்படாமல் கண்ணாமூச்சி காட்டும். அவ்வரிய மனவோட்டத்தை அழகாய் எடுத்தியம்புகின்றன, கவிதை வரிகள்.

    கவிஞருக்கும், கருத்துக் குலையாமல் மொழிபெயர்த்த சொ.ஞா. அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    காரணமின்றி சில சமயங்களில் மனம் கனப்பதென்னவோ உண்மைதான். காரணம் இல்லாமலிருக்காது. ஆனால் நம் கருத்துக்கு உடன்படாமல் கண்ணாமூச்சி காட்டும். அவ்வரிய மனவோட்டத்தை அழகாய் எடுத்தியம்புகின்றன, கவிதை வரிகள்.

    கவிஞருக்கும், கருத்துக் குலையாமல் மொழிபெயர்த்த சொ.ஞா. அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும்.
    இப்போது புரிந்தது. விளக்கத்துக்கு நன்றி கீதம்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    அழுகை பெய்கிறது...
    "இது ஏன் என்பதை அறியாததைவிடப்
    பெரிய துன்பம் வேறொன்றுமில்லை. "

    வெறுமையும் பெருந்துன்பம் தான்...

    படைப்புக்கு நன்றி...
    பாராட்டுக்கள்..

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    ரசிக்க வைத்த வரிகள்...


    வலிக்க வைக்கும் வரிகள்...

    சோகம் ஊற்றெடுத்த மனதில்
    அழுகை பெய்த கவிதை,
    வலி சொல்கின்றது...

    நன்றி!
    ரசித்து அளித்த பின்னூட்டுக்கு நன்றி.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கலையரசி View Post
    நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள்.

    எனக்குச் சிறு சந்தேகம். வாழ்வில் துயரங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர், இந்தத் துயருக்கு இல்லை காரணம் என்று ஏன் கூறவேண்டும்?
    பின்னூட்டத்துக்கு நன்றி.கவிஞரது வாழ்வில் இன்ப அத்தியாயங்களும் இருந்தன.கீதம் கருத்துரைத்ததுபோல் இனம் புரியா சோகம் சில சமயம் யாரய்யும் கப்பும்..அப்படிப்பட்ட நேரத்தில் இயற்றிய கவீ இது.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    Major Depression எனும் மன அழற்சி/ தளர்ச்சியை
    இத்தனை நேர்த்தியான கவிவரிகளில் வாசித்ததில்லை இதுவரை..

    மூலவருக்குப் பாராட்டு..
    உற்சவருக்கு நன்றி!
    ஆழமான விமர்சனத்துக்கு நன்றி

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    காரணமின்றி சில சமயங்களில் மனம் கனப்பதென்னவோ உண்மைதான். காரணம் இல்லாமலிருக்காது. ஆனால் நம் கருத்துக்கு உடன்படாமல் கண்ணாமூச்சி காட்டும். அவ்வரிய மனவோட்டத்தை அழகாய் எடுத்தியம்புகின்றன, கவிதை வரிகள்.

    கவிஞருக்கும், கருத்துக் குலையாமல் மொழிபெயர்த்த சொ.ஞா. அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும்.
    விவரமான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by govindh View Post
    அழுகை பெய்கிறது...
    "இது ஏன் என்பதை அறியாததைவிடப்
    பெரிய துன்பம் வேறொன்றுமில்லை. "

    வெறுமையும் பெருந்துன்பம் தான்...

    படைப்புக்கு நன்றி...
    பாராட்டுக்கள்..
    பாராட்டுக்கு நன்றி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •