அனைத்து ( வெயிட்டான) தமிழ் மன்ற நண்பர்களுக்கும் வணக்கம்.
இதில் பங்கு பெறும் தகுதி உள்ளவர்கள் ......
1. எடை அதிகம் (அ) அளவுக்கதிகம் இருந்து... அதைக் குறைக்க வேண்டும் என்ற கனவு, உள்ளவர்கள்...
2. என்னைமாதிரி முயற்சிகள் சரியாகச் செய்யாமலேயே.. தோற்றுவிட்டோம் என்று நினைப்பவர்கள்......
3. மருத்துவ அட்டவணைப்படி இந்த வயசுக்கு இந்த எடைதான் இருக்கணும் என்று தம் சக்திக்கு மீறி ஆசைப் படாதவர்கள்...,...
4. தன் மருத்தவர் சொன்னபடி மட்டும் செய்து எடை குறைக்க விரும்புவோர்...
5. தன் மனதின் விருப்பத்திற்கேற்ப தன் சக்திக்கு உட்பட்டு செயல்பட விரும்புவோர்...
கவனிக்கவும்,.... இதில் பங்கு பெறும் தகுதி இல்லாதவர்கள் ...
1. தங்கள் அதிக எடையுடன் மிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள்...
2. மருத்தவ ஆலோசனை இன்றி செயல்பட விழைபவர்....
இங்கு நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகும் விஷயங்கள் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.
நான் சொல்லப்போகும் விஷயங்களில் ஒன்றோ, இரண்டோ ஓரிரு நபர்களை மட்டும் குறிக்கலாம்
ஆனால் 90 சதவீதம் ...நம் உலகில்.....நம் நாட்டில்........நம் ஊரில்......நம் தெருவில்........... நம் வீட்டில்......... உள்ள ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதுதான்..
அப்படி என்ன சொல்லப்போகிறேன் என்று தானே கேட்கிறீர்கள்??
சொல்கிறேன் கேளுங்கள் ...ஆனால் ஒன்று... இந்த 90% இல் நீங்களும் ஒன்றானால் உங்களுடைய தினசரி வாழ்க்கையின் நடைமுறை அசெளரியங்களையும் நீங்கள் பட்டியல் இடுவீரா மனசாட்சிப் படி?
பொய் கூறுவது சுலபம்... ஆனால் அவசியமாக உண்மையைக் கூறுவீரா?
ம்........! அப்படி நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உண்மைகளை பகிர்ந்து கொண்டால் நாம் நினைத்த நேரத்தில், நினைத்த படி எடை குறைந்து விடுவோமே...!?
நினைத்தபடி எடை குறைந்து விட்டால் !!
அய்யோ அப்புறம் என்ன?
வியாதிகள் பயந்து ஓடும்....
நம் வீட்டு பீரோவில் தூக்கிப் போட மனதில்லாமல் 10 வருடங்களாக தூங்கும்.. ‘சரி உடம்பு இளச்சப்பறம் இந்த டிரஸ்ஸைப் போட்டுக்கலாம்’ என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 10 பழைய ஆடைகளை நாம் உடுத்திக் கொள்ளலாமே! அதை விட சுகம் வேறு இருக்கா?
இருக்கே?
நமக்கு கல்யாண வயதில் மகன் அல்லது மகள் இருந்தாலும் , நம்மைப் பார்க்கும் ஒவ்வொருத்தரிடமிருந்தும் வித விதமாய் கேள்விகள் பறக்கும்..
“குழந்தைகள் உண்டா?” ( ஏன்னா பாத்தா தெரியல அவங்களுக்கு....அதான்) அல்லது
“அய்யோ உங்களுக்கு இத்தனை பெரிய பையன் இருக்கானா?”
யோக ஜாதகம் உள்ள இன்னும் சிலரைப் பார்த்து
“என்னங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
“காலேஜ் படிக்கிறீங்களா...” அப்படி வருங்க கேள்வி....
நாம் விண் வெளியில் மிதப்போமுங்க...!!!
நமக்கு வேறென்ன வெணும் சொல்லுங்க?
இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் நம் வாழ்க்கையில் ?
யார் வர்றீங்க இந்த (சீரியஸ்) விளையாட்டுக்கு?
இது நாம் சேர்ந்து எடுக்கும் முயற்சிங்க....
நான் கீழே புதிய திரியில் ஆரம்பிக்கறேங்க.........
காமாக்ஷி
11-4-2010
Bookmarks