Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 104

Thread: எடை குறைக்க வாரீகளா?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0

    எடை குறைக்க வாரீகளா?

    அனைத்து ( வெயிட்டான) தமிழ் மன்ற நண்பர்களுக்கும் வணக்கம்.

    இதில் பங்கு பெறும் தகுதி உள்ளவர்கள் ......

    1. எடை அதிகம் (அ) அளவுக்கதிகம் இருந்து... அதைக் குறைக்க வேண்டும் என்ற கனவு, உள்ளவர்கள்...

    2. என்னைமாதிரி முயற்சிகள் சரியாகச் செய்யாமலேயே.. தோற்றுவிட்டோம் என்று நினைப்பவர்கள்......

    3. மருத்துவ அட்டவணைப்படி இந்த வயசுக்கு இந்த எடைதான் இருக்கணும் என்று தம் சக்திக்கு மீறி ஆசைப் படாதவர்கள்...,...

    4. தன் மருத்தவர் சொன்னபடி மட்டும் செய்து எடை குறைக்க விரும்புவோர்...

    5. தன் மனதின் விருப்பத்திற்கேற்ப தன் சக்திக்கு உட்பட்டு செயல்பட விரும்புவோர்...

    கவனிக்கவும்,.... இதில் பங்கு பெறும் தகுதி இல்லாதவர்கள் ...

    1. தங்கள் அதிக எடையுடன் மிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள்...

    2. மருத்தவ ஆலோசனை இன்றி செயல்பட விழைபவர்....

    இங்கு நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகும் விஷயங்கள் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.

    நான் சொல்லப்போகும் விஷயங்களில் ஒன்றோ, இரண்டோ ஓரிரு நபர்களை மட்டும் குறிக்கலாம்

    ஆனால் 90 சதவீதம் ...நம் உலகில்.....நம் நாட்டில்........நம் ஊரில்......நம் தெருவில்........... நம் வீட்டில்......... உள்ள ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதுதான்..

    அப்படி என்ன சொல்லப்போகிறேன் என்று தானே கேட்கிறீர்கள்??

    சொல்கிறேன் கேளுங்கள் ...ஆனால் ஒன்று... இந்த 90% இல் நீங்களும் ஒன்றானால் உங்களுடைய தினசரி வாழ்க்கையின் நடைமுறை அசெளரியங்களையும் நீங்கள் பட்டியல் இடுவீரா மனசாட்சிப் படி?

    பொய் கூறுவது சுலபம்... ஆனால் அவசியமாக உண்மையைக் கூறுவீரா?

    ம்........! அப்படி நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உண்மைகளை பகிர்ந்து கொண்டால் நாம் நினைத்த நேரத்தில், நினைத்த படி எடை குறைந்து விடுவோமே...!?

    நினைத்தபடி எடை குறைந்து விட்டால் !!
    அய்யோ அப்புறம் என்ன?
    வியாதிகள் பயந்து ஓடும்....
    நம் வீட்டு பீரோவில் தூக்கிப் போட மனதில்லாமல் 10 வருடங்களாக தூங்கும்.. ‘சரி உடம்பு இளச்சப்பறம் இந்த டிரஸ்ஸைப் போட்டுக்கலாம்’ என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 10 பழைய ஆடைகளை நாம் உடுத்திக் கொள்ளலாமே! அதை விட சுகம் வேறு இருக்கா?
    இருக்கே?
    நமக்கு கல்யாண வயதில் மகன் அல்லது மகள் இருந்தாலும் , நம்மைப் பார்க்கும் ஒவ்வொருத்தரிடமிருந்தும் வித விதமாய் கேள்விகள் பறக்கும்..

    “குழந்தைகள் உண்டா?” ( ஏன்னா பாத்தா தெரியல அவங்களுக்கு....அதான்) அல்லது
    “அய்யோ உங்களுக்கு இத்தனை பெரிய பையன் இருக்கானா?”
    யோக ஜாதகம் உள்ள இன்னும் சிலரைப் பார்த்து
    “என்னங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
    “காலேஜ் படிக்கிறீங்களா...” அப்படி வருங்க கேள்வி....

    நாம் விண் வெளியில் மிதப்போமுங்க...!!!

    நமக்கு வேறென்ன வெணும் சொல்லுங்க?

    இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் நம் வாழ்க்கையில் ?

    யார் வர்றீங்க இந்த (சீரியஸ்) விளையாட்டுக்கு?

    இது நாம் சேர்ந்து எடுக்கும் முயற்சிங்க....

    நான் கீழே புதிய திரியில் ஆரம்பிக்கறேங்க.........

    காமாக்ஷி
    11-4-2010
    Last edited by KAMAKSHE; 11-04-2010 at 02:03 PM.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    முதலில் என் பாராட்டுகளைப் பிடியுங்கள், காமாக்ஷி. எடை குறைப்பு என்பது இன்னமும் பலருக்கு எழுத்தளவிலேயே இருக்கும் நிலையில் உங்கள் ஆரோக்கியப் பயணத்துக்கான முதல் அடியை எடுத்துவைத்துள்ளமைக்கு என் பாராட்டுகள். தமிழ் மன்றத்தில் இதைப் பதிப்பதன் மூலம் மற்றவர்களும் அறியச் செய்து வலுக்கட்டாயத்தின் பேரிலாவது அல்லது வீம்புக்காகவாவது எடையைக் குறைத்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டீர்கள். கூடிய விரைவில் நிச்சயம் உங்கள் இலக்கை அடைந்துவிடுவீர்கள்.

    இதை நான் எப்படி சர்வ நிச்சயமாய் சொல்கிறேன் என்றால் உங்கள் விடாமுயற்சியைப் பற்றியும், கடுமையான உழைப்பைப் பற்றியும் நானறிவேன். நான் உங்களைப் பார்த்தது இல்லை. ஆனாலும் மன்றத்தில் இணைந்த புதிதில் நீங்கள் எழுதிய கதைக்கும், இப்போது எழுதும் கதைகளுக்கும் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். போட்டிகள் இருக்கலாம்; பொறாமை இருக்கக்கூடாது என்பார்கள். ஆனால் பிறரை வருத்தாத, மற்றவர் மனம் பாதிக்காத, ஒரு நல்ல இலக்குக்கான பொறாமை இருக்கலாம் என்பதை உங்கள் மூலம் அறிகிறேன்.

    குண்டாக இருப்பது சிலருக்கு உடல் வாகாகவும் இருக்கலாம். மரபணுக்களின் ஆளுமையாகவும் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, பருமனோ, ஒல்லியோ, எப்படி இருந்தாலும் சரி, நோயற்று வாழவேண்டும். அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படுவதே புத்திசாலித்தனம். உப்பைக் குறைப்பதை நாம் குழந்தைகளுக்கும் ஆரம்பத்திலிருந்தே பழக்கினால் நல்லது. வீட்டில் அனைவருக்கும் பொதுவாய்த் தயாரிக்கப்படும் உணவில் உப்பைக் குறைப்பது சாத்தியமில்லையெனில், தயிர் சாதத்திற்கு உப்புப்போடாமல் சாப்பிட்டுப் பழகினாலே போதுமானது. எங்கள் வீடுகளில் இப்படிதான் செய்கிறோம்.

    அடுத்தது, நடைப்பயிற்சி. இதை உடல் இளைக்க மட்டுமின்றி சாதாரணமாகவே எல்லோரும் பின்பற்றினால் நல்லது. எடை குறைகிறதோ, இல்லையோ, ஆனால் நடைப்பயிற்சியின் மூலம் நாம் அடையும் நன்மைகள் பல.

    உணவுக்கட்டுப்பாட்டுக்கு முக்கியம் மனக்கட்டுப்பாடு. அது இருந்தால்தான் வாயைக் கட்டி பின் வயிற்றையும் கட்டமுடியும். உங்கள் மனக்கட்டுப்பாடு நிலைத்து நிற்கவேண்டுமென்று நான் விரும்பி வாழ்த்துகிறேன். இன்னொன்று, நம் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே அதிக கொழுப்புள்ள தின்பண்டங்களையும், நொறுக்குத்தீனியையும் தவிர்ப்பது நல்லது. பிற்காலத்தில் அவர்களும் நம்மைப் போல் கூடுதல் எடை குறித்துப் புலம்புவதைத் தவிர்க்கலாம். இன்றைய குழந்தைகளுக்கு உடல் ரீதியிலான விளையாட்டுகள் மிகக்குறைவு என்பதும் ஒரு காரணம்.

    விரைவிலேயே இந்தத்திரியில் உங்கள் எடைகுறைந்த விபரம் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். மன்ற நண்பர்கள் மேலும் ஆலோசனை தந்து உதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நம் மன்றத்தில் யவனிகா அவர்கள் எழுதிய இந்தத்திரியையும் பார்வையிடுங்கள். http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12676நிறைய பயனுள்ள விஷயங்கள் சொல்லியிருக்கிறார்.

    உங்கள் வெற்றி இலக்கை விரைந்து அடைய என் வாழ்த்துகள், காமாக்ஷி.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    மிக்க நன்றி கீதம் . உடனடியாக படித்து பாராட்டியதற்க்காக.....

    இதன் முயற்சி என்னவெனில்... எடைக்குறைப்பு தேவை என நினைப்பவர்கள்

    இந்தத் திரியில்

    அவர்களின் எடைக் குறைப்பில் தென்படும் பிரச்சனைகளையும்...

    அதாவது மனக்கட்டுப்பாட்டின்மையால் ஏற்படுபவை---

    உணவு ,மற்றும் உடற்பயிற்சி செய்வதில் உள்ள சோம்பல்களை... திமிர்

    ஆகியவற்றை மனம் விட்டு மன்றத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    ஏனெனில் எடை குறைய என்ன செய்ய வேண்டும் என்ற பெரிய பட்டியலே நம் எல்லொருக்குமே தெரியும் . நாம் எல்லோருமே ஒரு புத்தகமே எழுதிவிடுவோம்..

    நான் இப்படி...இப்படித்தான் உணவுக் கட்டுப் பாட்டுடன் இருக்கிறேன் ....

    (அல்லது) உடற்பயிற்சி செய்ய வில்லை ......
    .
    இன்று 30 நிமிடம் நடக்கவில்லை ...

    இன்று 1 மணி நேரம் பார்க்கில் நடந்தேன் .. ஆகா... ரொம்ப சந்தோஷமா இருக்கு...

    இன்று கேக் 3 சாப்பிட்டு விட்டேன் ... ஆனால் தவிர்த்திருக்க முடியும்...

    உண்மைக் காரணங்களோடு சொல்ல வெண்டும்..

    (பல சமயம் பொய்யும் சொல்வார்கள் சோம்பலில் நடக்காமலிருந்தால்...)

    மன்ற நண்பர்கள் ஒருவருக்கொருவர் இப்படிச் சொல்வது இருவருக்கும் நன்மை அளிக்கும் - அவ்வளவே-

    புரிய வையுங்கள் முடிந்தால்- கீதம்

    புரிந்தவர்கள் ஆரம்பியுங்கள் .........

    ஐந்தெழுத்து... ஏழெழுத்து வார்த்தை விளையாட்டை விட அருமையாக இருக்கும்.

    ஆரம்பிக்கும் முன் மேலே நான் எழுதிய திரியை படித்து விட்டு ஆரம்பிக்கவும்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    11-4-2010

    நான் நேத்திக்கு சாயங்காலம்... ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன்.. எனக்கு 4 சீட் தள்ளி என் நாத்தனார் உட்கார்ந்திருந்தார்... என்னை விட அவர்கள் வயதில் பெரியவர்கள். நான் என் நாத்தனாரை பொறாமையோடு பார்த்தேன் ... ஏன் ? அவர்கள் என்னைப் போல் குண்டாக இல்லை. அதான்..

    முதல் வரிசை என்பதால் நான் மகிழ்ச்சியாக இருந்தாலும்.. , என் தொப்பையை உள்ளே இழுத்துக் கொண்டு உட்காருவது ரொம்ப சிரமமாக இருந்தது... நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நடுவில் மறந்து வேறு போய் விடும் சனியன்.... இந்த தொப்பையை உள்ளிழுக்கும் சமாச்சாரம்... அது மட்டும் இன்றி 10 நாள் முன்பு என் முட்டி வீங்கி வலியில் நடக்கமுடியாமல் போனது. நடந்தேன் 90 வயசு கிழவி போல. அதற்கு மருத்துவர் முதல் 3 நாள் உப்பின்றி இருக்கச் சொன்னார். பின்னர் உப்பை உணவில் குறைக்கச் சொன்னார். எடை குறைக்க எண்ணைப் பண்டங்களையும்.. இனிப்புகளையும் தவிர்க்கச் சொன்னார். வலிக்கு 3 நாளுக்கு மாத்திரைகள் தந்தார். உடற்பயிற்சி முட்டி சரியான பின்புதான் என்றார் . நான் தான் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லயே.. எனக்கென்ன கவலை...? உப்பை குறைக்க முயன்றேன். தோற்றேன். . பத்து நாளும் ஓடி விட்டது. மாத்திரை மட்டும் சாப்பிட்டேன் . வேறு ஏதும் முயன்றும் முடியவில்லை. இதோ இன்று இங்கு விழாவில் வலி மாத்திரையைப் போட்டுக் கொண்டு முட்டி வலியா? எனக்கா? எப்போ? என்பது போல் சமாளித்து நடந்து வந்தேன்....ஆனால் மனதுக்குள்ளே சங்கடங்களும், பயமும், குற்ற உணர்வும் இல்லாமலில்லை.

    என் நாத்தனார் கடந்த 7-8 வருடங்களாகவே ஒரே சீராக ( சிறிது அதிகமானாலும்) தன் எடையை பராமரித்து வருகிறார். என்ன மனோ திடம்? .. அதனால் எனக்குப் பொறாமை.
    இரண்டு வருடம் முன்னர் சக்கரை நோயின் ஆரம்பம் என்று அவர்களுக்கு மருத்தவர் சொல்லி விட்டார்.. காரணம் மன அழுத்தம், அவர்களின் எடை, மற்றும் சக்கரை நோய் தாய் வீட்டு பரம்பரை சொத்தும் கூட... அவ்வளவு தான் .. அழுதே விட்டார்.. மருத்துவர் சொன்னவை ---

    1.தினமும் 40 நிமிடங்கள் நடக்கவும்...
    2.கண்டிப்பாக இனிப்பைத் தொடக் கூடாது..
    3.அளந்துதான் உணவை உண்ண வேண்டும்...
    4.திருமண விழாக்களுக்குச் சென்றால் உண்பதைத் தவிர்க்க வேண்டும் (அ) தான் உண்ணவேண்டிய உணவை மட்டும் அளவோடு உண்ண வேண்டும்.
    5. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்..
    6. நிறைய பச்சைக் காய்கறிகள் + ( அனுமதிக்கப்பட்ட) பழங்கள் உண்ணலாம்

    ஒரு வாரம் சோர்வாக இருந்தார்.. அப்புறம் நிதானமாக 20 நிமிடம் ஒரு நாளுக்கென நடக்க ஆரம்பித்தார்... வேலைக்கார பெண்ணின் உதவியோடு வீட்டில் சமையலில் மாறுதல்களை ஏற்படுத்தினார். 2 மாதங்களில் நடப்பது 40 நிமிடமாக அதிகரித்தது. சக்கரை வியாதி என்பதால் உணவின் அளவுக் கட்டுப்பாடு அத்தியாவசியமாகையால் முன்பு சாப்பிடும் அளவை விட சாப்பாடு பாதிக்கு மேல் குறைந்தபடியால்.. 3 மாதங்களிலேயே நன்கு எடை குறைந்து தோன்றினார்.

    என் பொறாமையை என்ன சொல்ல? எனக்கு சக்கரை வியாதி இருக்குன்னு டாக்டர் சொல்லலேன்னு பொறாமையா? இல்ல சொன்னாலும் நான் என் நாத்தனாரைப் போல வைராக்கியமாக இருக்க முடியாதுன்னா?

    8 மாதங்களில் எடுத்த அவங்களோட ப்ளட் டெஸ்டில் --- சக்கரை வியாதியின் அறிகுறி கூட இல்லை...

    என் நாத்தனாரே அதை எதிர்பார்க்கவில்லை.. மகிழ்ச்சியில் முடிவெடுத்தார்.. தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைத் தொடர்வதென்று. இன்று வரை செய்கிறார்... பிடித்த உடைகளை அணிகிறார். மறைத்துக் கொண்டு உட்காரவேண்டிய கவலை இல்லை .. தொப்பையும் இல்லை .. ஆள் குண்டும் இல்லை...

    நான் பொறாமைப் படாமல் என்ன செய்ய?
    பொறாமைப் பட்டால் உன் ஆழ் மனதின் ஆசை உனக்கு சீக்கிரம் விளங்குமாம்..நீ எதைப்பார்த்து பொறாமைப் படுகிறாயோ நீ அதுவாக ஆக ஆசை தானே படுகிறாய்.. ஆகலாமே.. அவவளவு தான்.... தமிழ் மன்றத்தில் பல எழுத்தாளர்களைப் பார்த்தும் தான் பொறாமையாக இருக்கிறது... நம்மால் அது மாதிரி இன்று முடியவில்லையே என்று.. ஆனால் உன் நோக்காவது உனக்கு விளங்கி விட்டதே.. பார்த்து கற்றுக்கொள்ள முன் மாதிரியையும் நீயே தயார் செய்து விட்டாய் ... பொறாமையின் மூலம்....

    நான் விழாவின் முதல் வரிசையிலேயே என்னிடம் இருந்த ஒரு சின்ன தாளில் எழுதினேன் என் ஆதங்கத்தை...
    “நான் கூனிக் குறுகுகிறேன்... .. ஒரு சின்ன உணவுக் கட்டுப் பாட்டை என்னால் கடை பிடிக்க முடியவில்லை.. அவர்களால் முடிகிறது.. என்னால் முடியவில்லை... நான் பிறந்தது முதல் எத்தனை ஸ்வீட்ஸ் தின்றிருக்கிறேன்? எத்தனை ஹோட்டல்களில் வித வித மாய் தின்றிருக்கிறேன் ?.. எத்தனை திருமணங்களில் விருந்துகளைக் களித்திருக்கிறேன்? ... 3 நாள் உப்பில்லாமல் இருந்தால் என்ன கேடு வந்துவிடும்,,, கால் சரியாகப் போகுமே? ஏன் என்னால் முடியாது? சீச்சீ வெட்கம் பிடுங்கித் தின்கிறது.. வேதனை யாக உணர்கிறேன் .. எனக்குப் பிடித்த உடையில் நான் இன்று தலை நிமிர்ந்து மகிழ்ச்சியின் எல்லையில் உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும்...? திடீரென் ஒரு எண்ணம் மின்னல் மாதிரி... நான் ஏன் தமிழ் மன்றத்தில் இதைப் பற்றி எழுதக் கூடாது? ”

    என் மகனுக்கு பசி உயிர் போகிறது.. இடைவேளையில் சபாவின் மணக்கும் கேன்டீனுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் இவைதான்.. எண்ணை மிதக்க..... கிச்சடி...மசால் தோசை... ஆனியன் ரவா... ரவா பொங்கல்...வெண் பொங்கல்... சாம்பார் வடை.. இட்லி வகைகள்.. போண்டா.. கட்லெட் வேறு...ஊத்தப்பம்... அய்யோ பசிக்கும் குழந்தைக்கு முன்னே பசித்தது எனக்கு.... ஆர்டர் செய்தேன் ஒரு மசால் தோசைக்கு. மகனுக்கு மட்டும்தான் . நாலு பேர் இருப்பதைப் பற்றி கவலைப் படாமல் பொறுமையின்றி கோபப்பட்டான். நான் மனதுக்குள் அழுதேன் ... அத்தனை உணவு வகைகளையும் ருசி பார்க்க வேண்டும் போல் இருந்தது எனக்கு. தோசை வந்தது. மகன் சாப்பிட்டான். வீட்டில் உள்ளவர்களுக்காக பார்சல் ஆர்டர் செய்தேன். அங்கே ஒரு ஸ்வீட் கடை வேறு.. பாதாம் அல்வா,, பாம்பாய் அல்வா.. ரசகுல்லா.. லட்டு, காஜர் கத்லி.. இன்னும் என்னென்னவோ ... மிக்சர்.. காராசேவை... பக்கோடா வேறு... வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் இனிப்பு வாங்கிக் கொண்டேன்...நான் அனைத்தையும் நன்கு பார்த்துக்கொண்டேன்... வீட்டிற்கு வந்த பின்னும் .. மற்றவர் சாப்பிட்டாலும் நான் எதையும் தொடவில்லை..பழங்கள் மட்டும் எடுத்துக் கொண்டேன்.

    தமிழ் மன்றத்தில் எழுதி விடுவதென்று முடிவெடுத்ததை நிறைவேற்ற கணிணி முன் அமர்ந்தேன்.

    இதோ என் வீட்டு பசங்க இன்னிக்கு பிஸ்ஸாதான் மதிய உணவுக்கு சாப்பிடப் போறாங்க. அவங்க கிட்ட சொன்னேன் .. நீங்க மிச்சம் வைக்கறது உங்களுக்கே அப்பறம் வேணும்னு என் கிட்ட மிரட்டிச் சொல்லிட்டுப் போங்கன்னேன்...நாங்க... இப்பவே முடிச்சுடுவோம்னாங்க....5 நிமிட மன சஞ்சலத்திலிருந்து தப்பித்தேன்.

    இதுவரை அவ்வளவு தான் . இன்னும் இன்றைய பொழுது கழிய 9 மணி நேரங்கள் உள்ளது... அடுத்த பதிவில் நல்ல செய்தி கொடுக்க ஆசை தான் முயற்சிக்கிறேன்.......

    தகுதியுள்ளவர்கள் தொடருங்கள் .

    காமாக்ஷி

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    காமாட்சி அவர்களே!

    வணக்கம்.

    பல மாதங்களாக நினைத்திருந்த ஒரு விசயம்தான். ஆனால் மனம் ஒத்துழைக்க மறுத்துக் கொண்டேயிருந்தது.

    70 கிலோ என்பது என் உயரத்திற்கு அதிகம் என்றாலும், அக்டோபர் 2009 மாதத்திலிருந்து உடலில் ஒரு வித கனத்தை எப்போதும் சுமப்பது போன்ற ஒரு எண்ணம், அதை மூளையும் பறைசாற்றியது.

    சரி என்று டிசம்பர் மாதம், ஒரு நாள் மார்கெட் போய் எடை மற்றும் உடல் கழிவுகளை நீக்க தேவையான விசயத்தை வாங்கி வந்தேன். பின்பற்றினேன்.

    விடை கிடைத்தது. உடலினுள் இருந்த கழிவுகள் அப்புறப்படுத்தப் பட்டன எளிமையாக. உடல் எடை 4 1/2 கிலோ குறைந்தேன் ஒரே வாரத்தில்.

    இது நடந்தது டிசம்பரில் அப்போதிருந்து இப்போது வரை மீண்டும் ஒரு கிலோ ஏற்றம் கண்டிருக்கின்றேன். ஆனாலும், உடல் கனம் போன்ற எண்ணம் இன்னும் வரவில்லை. அடுத்த முறையும் முயற்சிப்போமா என்ற எண்ணம் வருகின்றது.

    சீக்கிரமே இந்த மாதத்திலேயே தொடங்குவேன்.

    என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள். நிச்சியம் வெற்றி உண்டு.

    வாழ்த்துக்கள்.

    வாங்க என்னுடன் அந்த 7 நாட்கள்.
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    இந்த 7 நாள் விரதத்திற்கு, பெயர் “U.S . Department of agriculture and their Food & Drug Administration.” இந்த தரம் பார்த்து உண்ணும் நோன்பை “Board of Directors of General Motor Corporation at a general meeting on August 15, 1995” அங்கிகரித்து பயனும் அடைந்தது.

    நீங்களும் முயற்சிக்கலாம் தப்பேயில்லை.

    விதிமுறைகள்:

    - இந்த நோன்பை 40 + இருப்பவர் பயன்படுத்தலாம்.

    - உடல் எடை அதிகமாக இருப்பவர் பயன்படுத்தலாம்

    - அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுபவர்கள் பயன்படுத்தலாம்.

    - குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது. எடை மிக அதிகமாக உள்ள குழந்தைகள் மருத்துவரின் அறிவுரையுடன் பயன்படுத்தலாம் ( இருப்பினும், குழந்தைகளுக்கு இயற்கையாகவே உடல் சுத்திகரிப்பு நடக்கும். ஏனெனில், வயதில் சிறியவர்களில்லையா.)

    - எத்தனை முறை வேண்டுமானாலும் இதனை பின்பற்றலாம். ஆனால், 3 நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை இடைவெளியுடன் செய்தல் வேண்டும். அதுதான் முக்கியம்.

    அப்புறம் நண்பர்களே எனக்குத் தெரிந்த வகையில் மொழிபெயர்ப்பும், அதனுடன் என் அனுபவத்தையும் உங்களுக்கு கொடுக்கப் போகின்றேன் தமிழில்.

    பயனடைந்தவன் என்ற முறையில், இதனை உங்களுக்குத் சொல்வதில் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கிட்னியில் கல் வந்ததால், கடுமையான மருந்து வகைகளை உண்டதால் எடை கூடிவிட்டது.

    மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மறுபடியும் அதே தொந்தரவு. இந்த மருத்துவ வழியை பின்பற்றுவதற்கு முன்பு ஒரு கல் மீதமிருந்தது. அதிக மருந்து உண்டதால் எடை மற்றும் உடலும் சிறிது துவண்டது 40 வயதை கடந்ததால். உடற்பயிற்சி செய்து எடையை கட்டுக்குள் வைத்தாலும், எடை குறைப்பு என்பதும் உடல் ஒத்துழைப்பு என்பதும் கடினமாக இருந்தது.

    எனவே, இந்த வழியை பின்பற்றினால் உடலில் உள்ள கழிவுகள் நீங்க அதிக வாய்ப்பிருப்பதால் சரி தொடங்குவோம் என்று முடிவு செய்தேன்.

    என் உடலை சுத்தப்படுத்துதல் முக்கிய காரணம். அப்படியே இந்த விசயத்தை பின்பற்றினால் நிச்சயம் உடலின் எடை குறையும் என்பதாலும் சரி என்று எண்ணினேன்.

    இனி இந்த முறையில் என்ன செய்வது என்று பார்ப்போம்.

    இது 7 நாட்கள் ( ஒரு வாரம் ) விரதம் என்பது போல் பின்பற்றப் படவேண்டும்.
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    முதல் நாள்:

    வெறும் பழங்கள். மற்றும் 10 கிளாஸ் தண்ணீர். பழங்களில் வாழைப்பழம் மட்டும் விதிவிலக்கு. 10 கிளாஸ் தண்ணீர் மிக முக்கியம்.

    தர்பூசணிப்பழத்தை அதிகம் உண்ணலாம். ஏனெனில் இதில் தண்ணீர் சத்து அதிகம் நார் சத்தும் அதிகம். அப்புறமென்ன அளவெல்லாம் கிடையாது. இஷ்டம் போல் உண்ணுங்கள். பசித்திருக்க கூடாது என்பது விதி. எனவே, பல வகைப் பழங்களை உண்ணுங்கள்.

    ஒரு சூப் ரெசிப்பியை கொடுக்கின்றேன். இதை நீங்கள் 7 நாட்களும் எடுத்துக் கொள்ளலாம். அளவெல்லாம் இதற்கும் இல்லை. ஆனால் என் பரிந்துரை முதல் நாள் வேண்டாமே ஃப்ளீஸ். என் அனுபவம்.

    என்ன செய்கின்றது இந்த பழங்கள்..

    இது நம் உடலை தயார் செய்கின்றது. சர்க்கரை சத்தை உடலுக்கு அளிக்கின்றது. இருந்தாலும், கார்போ ஹைட்ரேட்டும், கொழுப்பு சத்தும் இன்று அரவே கிடையாது நம் உடலுக்கு. அதனால்தான் வாழைப்பழத்திற்கு தடை. சரிங்களா.

    இந்த மாற்றங்களால், நமது உடலில் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட விசயங்கள் கழுவப்படுகின்றன.

    சூப் ரெஸிபி:

    தண்ணீர், பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, முட்டைகோஸ், காரட் இவற்றுடன் மிளகு காரத்திற்கு, சிறிதே சிறிது உப்பு. உப்பில்லாவிட்டால் இன்னும் நல்லது. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப்பை எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம். தப்பில்லை.

    என் நிலை:

    முதல் நாள் நான் என்ன செய்தேன் என்று கேட்கின்றீர்களா. வெறும் தர்பூசணி பழம், பப்பாளிப் பழம், ஆப்பிள். இவைதான் கிடைத்தது. அதையே உண்டேன். 11 கிளாஸ் தண்ணீர் குடித்தேன்.

    சிறிதும் உற்சாகத்திற்கு குறைவில்லாமல் இந்த நாள் கழிந்தது வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி. இதனாலேயே அடுத்த 6 நாட்களை சமாளித்து விடலாம் என்ற ஒரு உறுதி வந்துவிட்டதும் உண்மை.

    இன்னும் 6 நாள் போகணுமில்ல. அப்ப அடுத்த நாளப் பத்தி பார்ப்போமா.
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    இரண்டாம் நாள் :

    இன்று வெறும் காய்கறிகள். நீங்கள் விரும்பும் காய்கறிகள் உண்ணலாம். கிழங்கு வகைகளை சாப்பிடக்கூடாது.

    இருந்தாலும், அதிகாலை உணவில் ஒரு முழு பெரிய உருளைக்கிழங்கை சாப்பிட வேண்டும் வேகவைத்து. பிறகு இந்த கிழங்குகளுக்கு தடை இன்று. வெறும் காய்கறிகள்தான். எந்த விதத்தில் என்பது உங்கள் விருப்பம். எண்ணெய், தேங்காய் போன்றவை 7 நாட்களுக்கும் தடை ஞாபகமிருக்கட்டும்.

    என்ன செய்கின்றது இந்த காய்கறிகள் :

    நமக்கு நார்சத்தை வழங்குகின்றது. உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டை வழங்குகின்றது. எனவே வயிற்றிற்கு வேலை அதிகம். ஆனால், கொழுப்பு சத்து கார்போஹைட்ரேட் சத்து என்பது மிகவும் குறைவு. எனவே, இன்றும் நமது உடலில் இரத்தில் இருக்கும் கெட்ட விசயங்கள் அதிக வேகமாக கழுவப் படுகின்றன. நார் சத்துக்களின் வேலையே அதுதானே.

    இதுமட்டுமின்றி, வேலை செய்யத் தேவையான சக்தியை நம் உடலில் உள்ள அதிகமாக இருக்கும் கொழுப்பிலிருந்து எடுக்க தொடங்குகின்றது நம் உடல். இதுதான் இந்த 7 நாட்களின் மர்மம்.

    வயிறும் காயக்கூடாது, அதிக கொழுப்புகள் கரையணும். அப்புறம் நம் உடலும் சுத்தப்படுத்தப்படணும். சரிங்களா.

    காய்கறி, அப்புறம் நம்ம சூப் இப்படி மாற்றி மாற்றி உண்ண வேண்டியதுதான்.

    10 கிளாஸ் குடிநீர் இவைகளுடன் குடிப்பதற்கு மறக்க வேண்டாம் நண்பர்களே. இந்த குடிநீர்தான் அடிப்படை விசயம்.

    என் நிலை என்ன என்று பார்ப்போமா:

    காலை உணவில் பெரிய உருளைக்கிழங்கு கிடைக்கவில்லை எனவே, இரண்டு சிறிய உருளைக்கிழங்கும், காய்கறி சாலட் வேறென்ன.

    முளைவிட்ட பயிறு கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். இரண்டாம் நாள் இதை சாப்பிடக் கூடாது என்றார்கள். இருந்தாலும் சிறிதளவே எடுத்துக் கொண்டதால் எனக்கு பிரச்சினையில்லை.

    இருப்பினும் மதிய உணவின் போது, போதும் என்று நினைத்து எடுத்துச் சென்ற காய்கறிகள் மற்றும் சூப் போதாமல் மீண்டும் வீட்டிலிருந்து மறுபடியும் வரவழைத்து சாப்பிட்டேன். எனவே, வேலைக்குப் போகின்றவர்கள் கவனம்.இரண்டாம் நாள் சிறிது என்னை தாளம் போட வைத்த நாளாகும்.

    இருப்பினும், சாலட், சூப் இருந்தால் சமாளித்து விடலாம் என்றுதான் தோன்றுகின்றது.

    இந்த இரண்டு நாட்களும் உடல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டும், அதிக கொழுப்பிலிருந்து தனக்குத் தேவையான சக்தியை எடுக்கத் தொடங்குகின்றது.
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    அடடே, விடிந்துவிட்டது நண்பர்களே. இன்று மூன்றாம் நாள்

    அனைவருக்கும் அன்பு வணக்கம்.

    நாள் 3:

    இன்றைக்கு கடந்த இரண்டு நாட்களாக பாடுபட்டமைக்கு விஷப்பரிட்சை நாள்.

    ஆம் இன்று பழம் மற்றும் காய்கறிகள் மட்டுமே. மாவு சத்துக்கு இன்று கட்டாய விடுமுறை. எனவே, உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தேங்காய், எண்ணெய் போன்றவற்றின் வாசமும் நம்மீது படக்கூடாது.

    ஆனா, எவ்வளவு பழம் வேண்டுமோ, எவ்வளவு காய்கறி வேண்டுமோ தயங்காமல் பல விதங்களில் உண்ணுங்கள். இந்த சர்க்கரை கூடாது சரியா. ( 7 நாட்களுக்கும் சர்க்கரை கூடவே கூடாது ). பச்சைக் காய்கறிகளை வெட்டி உண்ணும் போது சாதாரண உப்புக்குப் பதில் செந்நிற உப்பு ( ஹிந்தியில் காலா நமக் என்றும், rock salt என்று ஆங்கிலத்திலும் கூறுவார்கள்) நல்லது. உப்பின் சுவை இருந்தாலும், பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிடும்போது இவை சுவை கூட்டத்தான் செய்கின்றது.

    வேறென்ன சொல்லப் போகின்றேன் அந்த 10 கிளாஸ் குடிநீர் மறக்கலையே. யாருப்பா இவ்வளவு குடிநீர் குடிப்பார்கள் என்பவர்களே.. நீங்கள் குடிநீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிக்கலாம் தப்பேயில்லை. எலுமிச்சையும் ஒரு வகையில் நல்லதுதான். உங்களுக்கு சக்தியை கொடுக்கும் அறுமருந்து. 7 நாட்களும் இப்படி குடிநீருடன் எலுமிச்சை சேர்க்கலாம் தப்பில்லை.

    இன்று மாவுச் சத்து இல்லை. அதே சமயம், நார்சத்தும், புரதச்சத்து அதிகமாக உடலுக்குள் செலுத்தப் படுகின்றன. இன்றைய தினத்தில் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளுக்கு திண்டாட்டம்தான். எனவே, அதிக பழம் காய்கறிகள் நல்லது. பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இன்றைய தினத்தில் என் நிலை:

    இன்று பழமும், காய்கறிகளும் சூப்பும் என் வயிற்றை நிரப்பியதால், இன்று பிரச்சினையில்லை. அதேசமயம் எடை மேடை நான் 1 ½ கிலோ குறைந்ததை காட்டியது. ம்கவும் மகிழ்ச்சி. அந்த அய்ர்ச்சி என்ற விசயமும் சிறிது கட்டுப்பட்டது. எனவே, இந்த மந்திரம் வேலை செய்கின்றது என்பதை கண்கூடாக கண்டேன்.

    இனிமேல்தான், அடுத்த கட்ட சுத்திகரிப்பு வேலையை உடலுக்குத் தர வேண்டும். அது என்னவென்று நான்காவது தினத்தை எட்டிப் பார்த்தால் தெரிந்துவிடும் தானே. போலாங்களா.
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    நாள் 4:

    இன்று நம் உடலில் குறைந்த கால்சியம் மற்றும் பொட்டாசிய சத்தை சமனப்படுத்தும் நாள்.

    எனவே இன்றைய நம் பட்டியலில் ஒரு ராஜா ஒரு ராணி தேவையென்றால் ஒரு மந்திரி.பாதுகாப்பு இல்லையென்னும் பட்சத்தில் மட்டும் படைவீரர்கள்.

    என்ன புரியவில்லையா. இன்றையா ராஜா 8 வாழைப்பழம், ராணி 3 கிளாஸ் பால், மந்திரி தேவையென்றால் காய்கறி சூப் ஒரு கிளாஸ். இதுவும் பத்தாது நான் சாப்பாட்டுராமன் என்றால் இருக்கவே இருக்கின்றார் நமது வீராதி வீரர் சூப்.

    இன்று 8 வாழைப்பழமும் 3 கிளாஸ் பாலும் குடிக்கவேண்டும் மூன்று வேளைகளில் அவ்வளவுதான். ரொம்ப கஞ்சப்பிரபுவாயிருக்குறீங்களே என்றால் ஒரு கிளாஸ் காய்கறி சூப் குடிக்கலாம். அப்புறம் 10 கிளாஸ் குடிநீர்.

    கடந்த மூன்று நாட்களாக நாம் இழந்த கால்சியம் பொட்டாசியம் ஈடுகட்டப்படுகின்றது. வேறென்ன ஜாலியா 10 கிளாஸ் தண்ணி ( சுத்தமான குடிநீர் ) அடிச்சி கொண்டாடுங்க.

    என் நிலை:

    இன்றும் ஒரு பிரச்சினையுமில்லை. சாப்ப்டுவதற்கு 6 வாழைப்பழங்கள்தான் கிடைத்தது. நேரெமின்மையால் கடைக்குப் போய் வாங்க முடியவில்லை. இருப்பினும் நம் சூப் கை கொடுத்ததால் பிரச்சினையில்லை.

    இன்று இன்னும் லேசா லேசா….

    அடுத்த நாளைக்கு போலாமா
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    நாள் 5:

    இன்று நம்து உணவு ஒரு கப் சாதம். அப்புறம் 6 முழு தக்காளிகள் பச்சையாக.. மற்றபடி வயிற்றை நிரப்ப சூப் அவர்களின் உதவியை நாட வேண்டியதுதான்.

    இன்றும் உடலில் நாம் உற்பத்தி செய்த யூரிக் அமிலத்தை துரத்துவதற்காகத் தான் இந்த தக்காளி. அப்புறம் சாதம் நமக்கு சிறிது சக்தியை அதிகப்படுத்த. யூரிக் அமிலத்தோடு போரிடப் போகின்றோம் அல்லவா.
    :
    என் நிலை:

    என்னடா இது தக்காளியை அதுவும் பச்சையாக ஆறு தக்காளிகள். ஒரு கடுப்பாக யோசிக்க வைத்த நாளிது.

    ஆனா நம்மகிட்ட இது எல்லாம் வேகாதில்ல. வெறும் சாதத்திற்கு பதில் பைத்தியம் பருப்பு மிகவும் குறைவாக போட்ட பொங்கலும், தக்காளியை மிக்சியில் போடு ஒரு சிறு பச்சைமிளகாய் சிறிதளவு உப்பு போட்டு அரைத்து பொங்கலுடன் சாப்பிட்டுவிட்டேன். தக்காளி, ஒரு கப் சாதம் முடிந்தது. மதியம் சூப், இரவும் சூப்.

    அப்புறம் இன்னிக்கு யூரிக் அமிலத்தை வெளியேற்றும் நாள் அல்லவா 13 கிளாஸ் குடிநீரைக் குடிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது என்பதை மறக்காதீங்க தோழர்களே.


    இனி வருவது ஒன்னுமில்லீங்க, சுத்திகரிப்பு மட்டுமே மீண்டும்.
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •