Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: தமிழே வாழி!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    தமிழே வாழி!

    தமிழே வாழி!


    அன்னை மொழியே! அறமுணர்த்தும்

    ..........அறிவே, உணர்வே அரும்பண்பே!

    முன்னைப் பழமைப் பெருமையுறை

    ..........முதல்தாய் மொழியே, செந்தமிழே!

    பின்னைத் தமிழர் பேதைமையால்

    ..........பெருமை குலைந்த பேரழகே!

    உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்

    ..........உரைத்தார் நீசெம் மொழியென்றே!



    ஒப்பில் கழக இலக்கியமும்

    ..........உலகிற் சிறந்த முப்பாலும்

    துப்பில் திகட்டா பாவியங்கள்

    ..........சுவையாய் ஐந்தும் சுமந்தவளே!

    தப்புத் திருத்தித் தருங்கம்பன்

    ..........தகைசால் பாவும் பெருங்கதையும்

    செப்பஞ் சிறக்கத் தேர்ந்தணியும்

    ..........திருவாந் தமிழே வாழியவே!
    Last edited by குணமதி; 08-04-2010 at 04:51 PM.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    உலகில் இரண்டு விடயங்களைப் பற்றி எத்தனை முறை பாடினாலும்
    சலிக்காது...

    ஒன்று காதல் இன்னொன்று தாய்...

    தாய் மொழியைப் பற்றிப் பாடும் போது மட்டும் சலித்திடுமா என்ன?

    நல்ல கவிதை குணமதி...

    வார்த்தைகள் உங்களுக்கு மிகவும் வசப்படுகின்றன.

    வெறும் வாழ்த்தோடு நின்று விடாமல் இன்னும் நாம் செய்யவேண்டிய செயல்களையும் நினைவு படுத்தினால் கவிதை இன்னும் செழிக்குமே...

    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உண்மைதான் செல்வா

    தமிழை எத்தனை முறை வாழ்த்திப்பாடினாலும், படித்தாலும் திகட்டுவதில்லை..


    குணமதி அவர்களுக்குப் பாராட்டுகள்.

    செம்மொழி மாநாட்டுக் குழுவினர்க்கு அனுப்பத்தக்க அருமையான படைப்பு.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    ஆக்கமான கருத்துரைத்தீர்கள்.

    நன்றி செல்வா.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி இளசு.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அழகுத்தமிழில் அன்னைத்தமிழுக்கு ஒரு வாழ்த்துப்பா. மிக நன்று. பாராட்டுகள் குணமதி அவர்களே.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    விருத்தத்தில் அறுசீர் கொண்டு
    ...விண்தொட்ட தமிழன் னைக்கு
    நறும்மொட்டு வார்த்தை தூவி
    ...நயமான வாழ்த்து பாடி
    கருத்ததனில் ஏற்றி வைத்த
    ...கவிகுணம திக்கு வாழ்த்து
    விருத்தத்தின் தளைகெ டுக்க
    ...விளைந்திருக்கு ஓர்சீர் மட்டும்..

    //உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்

    ..........உரைத்தார் செம்மொழி நீயென்றே!//

    மா இலக்கணம் தானே வரும், விள இலக்கணம் வந்திருக்கு கவனிக்கவும்..

    பாராட்டுக்கள் குணமதி..
    அன்புடன் ஆதி



  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    "பின்னைத் தமிழர் பேதைமையால்

    .........."

    தமிழரின் பேதைமை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும் இந்நாளில் தேவையான ஒரு வாழ்த்துப்பா. பாராட்டுக்கள் குணமதி அவர்களே!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதன் View Post
    விருத்தத்தில் அறுசீர் கொண்டு
    ...விண்தொட்ட தமிழன் னைக்கு
    நறும்மொட்டு வார்த்தை தூவி
    ...நயமான வாழ்த்து பாடி
    கருத்ததனில் ஏற்றி வைத்த
    ...கவிகுணம திக்கு வாழ்த்து
    விருத்தத்தின் தளைகெ டுக்க
    ...விளைந்திருக்கு ஓர்சீர் மட்டும்..

    //உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்

    ..........உரைத்தார் செம்மொழி நீயென்றே!//

    மா இலக்கணம் தானே வரும், விள இலக்கணம் வந்திருக்கு கவனிக்கவும்..

    பாராட்டுக்கள் குணமதி..
    பாட்டால் பாராட்டியதற்கு முதலில் நன்றி.

    நீங்கள் சொன்னது சரியே!

    உரைத்தார் நீசெம் மொழியென்றே! என்றே எழுதினேன்.
    படி எடுக்கையில் தவறினேன்.
    திருத்திவிடுகிறேன்.
    மிக்க நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கலையரசி View Post
    "பின்னைத் தமிழர் பேதைமையால்

    .........."

    தமிழரின் பேதைமை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும் இந்நாளில் தேவையான ஒரு வாழ்த்துப்பா. பாராட்டுக்கள் குணமதி அவர்களே!
    மிக்க நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    அழகுத்தமிழில் அன்னைத்தமிழுக்கு ஒரு வாழ்த்துப்பா. மிக நன்று. பாராட்டுகள் குணமதி அவர்களே.
    மனமார்ந்த நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    தமிழே வாழி.....
    கவி படைத்த குணமதி அவர்களுக்குப் பாராட்டுக்கள்...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •