Page 3 of 12 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 138

Thread: பொறி....!!!...நிறைவடைந்தது....!!!

                  
   
   
  1. #25
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சம்பவம் கதையாகலாம். இங்கும் ஆகின்றது. ஓகே...
    ஆனால், இந்தக் கதையை முடிச்சதும் இதைத் தொடர் சம்பவங்களாக்கிடுவமா பாஸ் சிவா.ஜி...
    ஐடியாவெல்லாம் பக்காவா வருதே...

    *****
    இந்தப் பாகமும் நன்றாகவே வந்திருக்குதுங்கோ...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #26
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமா ஆரென். முன்னாடி எழுதுனதைக் கனெக்ட் பண்றதுக்கும், அதில் விட்டுப்போன்வைகளை சேர்க்கிறதுக்கும் இந்த சேர்ப்புகள் தேவையாயிருக்கு. என்னெல்லாம் சாத்தியம் என்று யோசித்து எழுதவேண்டியிருக்கிறது.

    நன்றி ஆரென்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #27
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அப்படி சம்பவமாக்கினா....நம்மளை சரித்திரமாக்கிடுவாங்க.....அதுவும்....குற்ற சரித்திரத்தின் பக்கங்களில்.....!!

    கற்பனை மட்டுமே போதும் பாஸ்....!!

    கூட வர்றதுக்கு ரொம்ப நன்றி....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    கதையில் சுவாரசியம் கூடிக்கொண்டே செல்கிறது. தொடருங்கள். கூடவே வருகிறோம்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  5. #29
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அடடே.. கதை அப்படியே விரிகிறது... சம்பவக்கோர்வைகளாய்.. கலக்குங்கண்ணா..!

  6. #30
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நன்றிங்க கலையரசி அவர்களே....நீங்க முதல்முறை கேட்ட பின்னூட்டக் கேள்விகளுக்கும் சேர்த்து இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறேன்...கதையோடு சேர்ந்து....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #31
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி மதி....உங்ககிட்ட ரொம்ப பயம்....நீங்க நல்லாருக்குன்னு சொல்லனுன்னா எப்படி இருக்கனும்ன்னு தெரிஞ்சே...முதல்தடவை தப்புப் பண்ணிட்டேன்....திருத்திக்க முயற்சிக்கிறேன்...!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #32
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நன்றி மதி....உங்ககிட்ட ரொம்ப பயம்....நீங்க நல்லாருக்குன்னு சொல்லனுன்னா எப்படி இருக்கனும்ன்னு தெரிஞ்சே...முதல்தடவை தப்புப் பண்ணிட்டேன்....திருத்திக்க முயற்சிக்கிறேன்...!!!
    இது நல்லாருக்கே... சும்மாவா... டெரர்ல.. ஹாஹா

  9. #33
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமா.....ஆமா....டெர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.....!!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #34
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ன்ஸ்பெக்டர் மலைச்சாமி, ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அவரது மேசைக்கு முன்னால் இரண்டுபேர் அமர்ந்திருந்ததைப் பார்த்தார். கான்ஸ்டபிள்களின் சல்யூட்டை வாங்கிக்கொண்டே, லேசான யோசனையுடன் தன் இருக்கைக்கு அருகில் போனார். அவரைப் பார்த்ததும் அனிச்சையாய் அந்த இருவரும் எழுந்தார்கள். அதில் சஃபாரி அணிந்தவர் கையை முன்னால் நீட்டிக்கொண்டே,

    “ஐயேம் பாண்டுரங்கன், ஏ.சி.டி.சி பேங்கோட பிராஞ்ச் மேனேஜர். இவர் எங்க கஸ்டமர் தில்லையரசன்.”

    இருவரிடமும் கைகுலுக்கல் முடிந்ததும் மூன்றுபேரும் அமர்ந்தனர்.

    “சொல்லுங்க....என்ன விஷயமா என்னைப் பாக்க வந்தீங்க”

    “சார், இவரோட அக்கவுண்ட்லருந்து இந்த மூணுநாள்ல ஒன்ற லட்சரூபாவை யாரோ இவருக்குத் தெரியாம எடுத்திருக்காங்க..”

    ‘எப்படி சார்...இவருக்குத் தெரியாமன்னா....”

    “இவரோட ஏ.டி.எம். கார்டை யூஸ் பண்ணி எடுத்திருக்காங்க.”

    “உங்க கார்டை தொலைச்சிட்டீங்களா ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் குடுத்துட்டு போங்க”

    இந்தமாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம்....சஃபாரி சூட் போட்டுக்கிட்டு வந்துட்டாங்க...என்று நினைத்துக்கொண்டே, அவர்களைப் பார்த்தார்.

    ‘சார் என்னோட கார்ட் தொலையவேயில்ல....”

    “என்ன சார் சொல்றீங்க....அப்ப எப்படி கார்ட் யூஸ் பண்ணி வேற யாரோ பணம் எடுத்திருக்க முடியும்....என்ன சார் கொழப்புறீங்களே... ஆறுமுகம் டீ சொல்லுய்யா. காலையிலருந்து பச்சத்தண்ணி குடிக்கல...சொல்லுங்க*”

    “சார் இவர்கிட்ட இருக்குற கார்டை எங்க பேங்குல ப்ளாக் பண்ணியிருக்காங்க..ஒரு வாரத்துக்கு முன்னாலேயே”

    “வெயிட்... வெயிட்....இவர் கார்ட் இவர்கிட்ட இருக்கு...அதையும் ப்ளாக் பண்ணியிருக்காங்க...அப்புறம் எப்படி சார்”

    “அதான் சார் புரியல.....இந்த மூணுநாள்ல ஒன்ற லட்ச ரூபா எடுத்திருக்கான். இதுகூட இவருக்குத் தெரியல. இன்னைக்குத்தான் தன்னோட பாஸ்புக்கை அப்டேட் பண்ணும்போது பணம் எடுத்திருக்கிறது தெரிஞ்சி என்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணாரு.”

    “டீ எடுத்துக்கங்க சார்....சரி இது உங்க பேங்க்ல நடந்த மிஸ்டேக்காகூட இருக்கலாமில்லையா..”

    டீயை உறிஞ்சிக்கொண்டிருந்த பாண்டுரங்கன்,வாயிலிருந்ததை அவசரமாய் விழுங்கிவிட்டு,

    “இது முதல் கேஸ் இல்ல. இதுக்கு முன்னாடியே நாலு கேஸ் இந்த மாதிரி ஆகியிருக்கு. ஆனா அதெல்லாம் பேங்க் என்கொயரியில இருக்கு. அதெல்லாம் முடிய ரொம்ப நாள் ஆகும். இந்தக் கேஸ்ல வெரிஃபை பண்ணிப் பார்த்தோம் சார். எங்க சைட்ல எந்த மிஸ்டேக்கும் இல்லை. இதுக்கு மேலயும் வெயிட் பண்ணக்கூடாதுங்கறதால* நானே பர்ஸனலா இந்தக் கேஸை உங்கக்கிட்டக் கொண்டு வந்திருக்கேன். நீங்கதான் சார் உதவி செய்யனும்”

    “சார் நான் ஒரு ஃபாக்டரி ஓனர். இது ஒரு தொழில்நகரம்ங்கறதால, என்னைப்போல நிறைய பேர் இங்க இருக்காங்க. எங்களை மாதிரி இருக்கிறவங்க பல்க் அமௌன்டா ட்ரேன்சேக்ஷன் நடத்துறதால அதிகமா ஏ.டி.எம் கார்டை யூஸ் பண்றதில்லை. அதைத் தெரிஞ்சிக்கிட்டு...எங்களைப்போல இருக்கறவங்கக்கிட்ட யாரோ இந்த வேலையைக் காட்டறாங்க*”

    மலைச்சாமி சற்று யோசித்துவிட்டு,

    “ஆக்சுவலா...இது எங்க கேஸா...இல்ல சைபர் க்ரைம் டிபார்ட்மென்ட்டுதான்னு தெரியல. எதுக்கும் கம்ப்ளெயின்ட் குடுத்துட்டு போங்க...பாக்கறேன். ”

    எழுத்துமூலமாய் புகாரை வாங்கியதும், இருவரும் எழுந்து நின்று கிளம்பத்தயாராகிக்கொண்டே,

    ‘சார் அப்ப நாங்க போய்ட்டு வரோம். ப்ளீஸ் ட்ரை ட்டூ ஃபைண்ட் இட் ஃபாஸ்ட், இது எங்க பேங்கோட ரெப்யூடேஷன் சம்பந்தப்பட்டது”

    “கண்டிப்பா சார், நீங்க போய்ட்டு வாங்க."

    "தேங்யூ சார். அப்ப நாங்க* கிளம்பறோம். வாங்க* மிஸ்டர் தில்லை.”

    அவர்கள் கிளம்பிப்போனதும், பச்சையப்பனைப் பார்த்து,

    "பச்சையப்பன்...சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ்தானே..."

    "ஆமாங்க சார்"

    மேசையிலிருந்த தொலைபேசியை அருகில் இழுத்து எண்களை ஒத்தினார். ரிசீவரைக் காதுக்குக் கொண்டுபோய், தொடர்பு கிடைத்ததும், பேசி முடித்துவிட்டு,

    "அப்ப இந்தக் கேஸ நாமதான் எடுத்துக்கனும். பாஸ்வேர்ட் ஹாக்கிங், இல்ல இன்டர்நெட் பேஸ்டு கிரைம்ன்னாதான் அவங்க எடுத்துக்குவாங்களாம். சரி பார்ப்போம்"

    அப்போதைக்கு அந்தக் கேஸை தூர வைத்துவிட்டு தன் அடுத்த வேலையைப் பார்க்கத்தொடங்கினார்.



    ரண்டுநாள் கழித்து, பாண்டுரங்கனிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்த இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,

    "ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர் ஸ்பீக்கிங்..."

    என்றதும்,

    "குட்மார்னிங் சார். நான் ஏ.சி.டி.சி. பேங்க் மேனேஜர் பாண்டுரங்கன் பேசறேன்.."

    சற்றுத் தயங்கிவிட்டு, நினைவு வந்தவராக...

    "ஓ...மிஸ்டர் பாண்டுரங்கன்....சொல்லுங்க சார்...."

    "சார், ஏதாவது டெவலெப்மென்ட் இருக்குங்களா?"

    தான் இதுவரை அந்தக் கேஸையே தொடவில்லை என்பது நினைவுக்கு வந்தாலும், புகார் கொடுத்த இரண்டு நாட்களுக்குள்லேயே...ஏதாவது தெரிந்ததா...என்றக் கேள்விக்கு சற்றே எரிச்சல் வந்தது. இருந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல்,

    "சார், இன்ஃபேக்ட்....நாங்க இன்னும் இன்வெஸ்டிகேஷனே தொடங்கல....சீக்கிரம் ஆரம்பிச்சுடறோம். டோன்ட் வொர்ரி சார்....கண்டிப்பா ரொம்ப சீக்கிரம் பிடிச்சுடலாம்"

    "சாரி ஃபார் த டிஸ்டர்பென்ஸ் சார்.....ஹெச்.பி.ஹெச்.டி பேங்குலயும் இதே மாதிரி நடந்திருக்கு சார். அந்த பிராஞ்ச் மேனேஜர் என்னோட நண்பர். அவர் சொல்லித்தான் தெரியும். இது இப்படியே கன்டினியூ ஆகாம...அந்தக் கல்பிரிட்டை சீக்கிரமா பிடிக்கனும் சார்.....ப்ளீஸ்..."

    "ஓ மை காட்...ஓக்கே சார். யூ டோன்ட் வொர்ரி. நான் இன்னைக்கே விசாரனையை ஆரம்பிச்சுடறேன்."

    சொல்லிவிட்டு, நாற்காலியில் பின்புறமாக நன்றாக சாய்ந்துகொண்டு, கால்களை நீட்டி, கண்களை மூடி அமர்ந்துகொண்டார். எங்கிருந்து தொடங்குவது.....முதலில் அந்த வங்கியின் நடைமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள* வேண்டும், ஒரு கார்டு இருக்கும்போதே இன்னொரு கார்ட் வாங்க முடியுமா, அதை யார் வேண்டுமானாலும் வாங்கலாமா.... இதையெல்லாம் தெரிந்துகொள்ள* வேண்டும். அவரிடமிருந்தே தொடங்கலாம். சுறு சுறுப்பாய் எழுந்தார். தொப்பியை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.


    .சி.டி.சி. வங்கியின் அந்தக் கிளை பரபரப்பான தெருவில் புதியக் கட்டித்தில் இருந்தது.உள்ளே நுழையும்போதே அதன் பணக்காரத்தன்மை ஜில்லென்று முகத்திலறைந்தது.கிரனைட் கற்களின் வழுவழுப்பில் இருந்த தரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நாற்காலிகள், கண்ணாடித் தடுப்பில் சின்னச் சின்ன அறைகள் என வளப்பம் நிறைந்திருந்தது.இவர்களை தன் அறையிலிருந்தேப் பார்த்த பாண்டுரங்கன், அவசரமாய் எழுந்து கிட்டத்தட்ட ஓடி வந்தார்.

    "வாங்க சார். இப்பதான்...."

    "ஆமா, உங்கக்கிட்ட பேசின உடனே நான் இந்தக் கேஸ்ல இறங்கிட்டேன். எனக்குக் கொஞ்சம் விவரங்கள் தேவைப்படுது. உங்க ரூமுக்குப் போயிடலாமா.."

    "வித் ப்ளஷர்....வாங்க சார்..."

    "இப்ப....ஒருத்தரோட ஏ.டி.எம் கார்ட் தொலைஞ்சா உங்ககிட்டதான் வந்தாகனுமா...இல்ல கஸ்டமரே நேரடியா கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் பண்ணிக் கம்ப்ளெயிண்ட் கொடுக்க முடியுமா?”

    ‘கஸ்டமரே நேரடியா அவங்களைக் கூப்பிட்டு சொல்லமுடியும் சார். இன்ஃபேக்ட்..அங்க சொல்லியே ப்ளாக்கும் பண்ண முடியும், புதுக் கார்ட்டுக்கும் ரெக்வெஸ்ட் பண்ண முடியும்”

    “அப்ப வெரிஃபிகேஷனுக்கு என்னெல்லாம் கேப்பாங்க...”

    “கஸ்டமரோட அக்கவுண்ட் நம்பர், எந்தப் பேர்ல அக்கவுண்ட் இருக்கு, அட்ரஸ்...அப்புறம் டேட் ஆஃப் பர்த்”

    "ஓக்கே, உங்க கஸ்டமரோட இந்த டீடெய்லையெல்லாம், உங்க பேங்குல வேலை செய்யுற யாரோ ஒருத்தர்கூட, வெளியாளுக்குக் கொடுக்க முடியுமில்லையா?"

    "முடியும் சார்...ஆனா...அப்படி யாரும் இங்க இல்லை சார். எல்லாமே டீஸன்டானவங்க..."

    "உங்களைப் பொருத்தவரைக்கும் உங்க ஸ்டாஃப் எல்லாரும் நல்லவங்கதான் சார். ஆனா போலீஸ் எல்லாரையும் சந்தேகத்தோடத்தான் பாக்க வேண்டியிருக்கு. நான் உங்க ஸ்டாஃப் எல்லாரையும் விசாரிக்கனும். ஆனா, அவங்களை அதிகமா சங்கட*ப்படுத்தாம, ஈவினிங் கஸ்டமர்ங்க இல்லாத டயத்துல வரேன். அதுக்கு முன்னாடி அவங்கக்கிட்ட சொல்லிடுங்க. ஆனா கேஸோட டீடெய்ல் எதுவும் சொல்லாதீங்க. போலீஸ் என்கொயரி இருக்குன்னு மட்டும் சொல்லுங்க. அப்ப நான் ஈவினிங் வரேன்"

    "ஓக்கே சார்."

    வெளியே வந்தவர், தன் சட்டைப் பையிலிருந்த தில்லையரசனின் விசிட்டிங் கார்டை எடுத்து, அவரது அலைபேசி எண்ணுக்கு அழைத்தார்.

    "சார், நான் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி. உங்கள உடனே பாக்க முடியுமா?....ஓக்கே நானே அங்க வரேன்"



    ங்கே என்பது அந்தத் தொழிற்பேட்டையில், சின்னச் சின்னதாய் இருந்த பல சிறு தொழிற்கூடங்களில் ஒன்று. தன் மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு நிமிர்ந்தவரின் பார்வையில், வாசலிலேயேக் காத்துக்கொண்டிருந்த தில்லையரசன் தெரிந்தார். லேசாகச் சிரித்துக்கொண்டே அவரை நோக்கி நடந்தார்.

    அங்கு நடந்த விசாரணையின் முக்கியச் சுருக்கம்.....



    “ஓக்கே சார்...கடந்த பத்துநாள்ல...நீங்க உங்க பேங்க் சீக்ரெட் டேட்டாவை யார்கிட்டயாவது சொன்னீங்களா?”

    “பர்ஸனலா யார்கிட்டயும் சொல்லல சார். அப்படி சொல்லவும் மாட்டேன். ஆனா ஒரு வாரத்துக்கு முன்னால இதே பேங்க்லருந்து எனக்கு கஸ்டமர் சர்வீஸ்லருந்து ஒரு போன் வந்தது. போன் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்யனுன்னு சொல்லிட்டு, என்னோட அக்கவுண்ட் நம்பரையும், என்னோட வீட்டு அட்ரஸையும் சொல்லி கரெக்ட்டான்னு கேட்டாங்க. ஆமான்னேன். அப்புறமா, உங்க டேட் ஆஃப் பர்த்தைச் சொல்லுங்கன்னு கேட்டாங்க சொன்னேன். சரின்னு சொல்லிட்டு வெச்சுட்டாங்க. இதுல வித்தியாசமா எதுவும் எனக்குத் தெரியல. அதான் பேசாம இருந்துட்டேன்.”

    “ஐ ஸீ....அந்த நம்பர் இப்ப உங்க போன்ல இருக்குமில்ல...பாத்தா தெரியுமா?”

    சங்கடமாக நெளிந்துகொண்டே....

    “சார் நான் பிஸினெஸ்ல இருக்கறதுனால...ஒரு நாளைக்கு நிறைய போன் வரும். அதனால மெமரிக் கெப்பாஸிட்டியைவிட ஜாஸ்தியாயிடும். ஸோ...இப்ப அந்த நம்பர் இருக்குமான்னு தெரியல...இருந்தாலும் கரெக்ட்டா அதான்னு சொல்ல முடியுமான்னு தெரியல சார்.”

    “டோண்ட் வொர்ரி சார். என்னைக்கு அந்த போன் வந்ததுன்னு சொல்ல முடியுமா...”

    “அது தெரியும் சார். போன சாட்டர்டே...காலையில் ஆஃபீஸுக்குக் கிளம்பிகிட்டு இருந்தப்ப வந்தது.”

    “வெரிகுட்,நார்மலா எத்தனை மணிக்கு நீங்க ஆஃபீஸுக்கு கிளம்புவீங்க”

    “ஒம்பதரை மணியிலருந்து பத்துக்குள்ள*”

    “உங்க போனைக் கொஞ்சம் குடுங்க”

    போன் கைக்கு வந்ததும், log ஆப்ஷனுக்குப் போய் அனைத்து அழைப்புகள், குறுஞ்செய்திகளின் தேதி, நேரம்வாரியாகப் பதிவாகியிருந்தவைகளில் தேடி சனிக்கிழமை ஒன்பதரையிலிருந்து, பத்து மணிக்குள் வந்த அழைப்புகளின் எண்களைக் கண்டு பிடித்தார். அனைத்தையும் ஒரு பேப்பரில் எழுதினார். மொத்தம் நான்கு எண்கள்தான் இருந்தன. அதில் இரண்டு பெயர்களுடனும், இரண்டு எண்களாகவும் இருந்தது. அதைக் காட்டியவுடன், தில்லையரசன் சரியான எண்ணைச் சொல்லிவிட்டார். உடனே அவரைப் பார்த்து,

    “இப்பதான் மேனேஜரைப் பாத்துட்டு வரேன். உங்கபேர்ல, உங்கக் கார்டை ப்ளாக் பண்ணிட்டு, புதுக் கார்ட்க்கு ரெக்வெஸ்ட் பண்ணத் தேவையான டேட்டாவைக் கலக்ட் பண்ணத்தான் அந்தக் கிரிமினல் உங்களுக்குப் போன் பண்ணியிருக்கான். ஆனா...டேட் ஆஃப் பர்த்தைத் தவிர மீதி எல்லா டீடெய்லும் அவன்கிட்ட இருந்திருக்கு...அது எப்படி அவன்கிட்ட கிடைச்சுதுன்னு கண்டுபிடிக்கனும். ஓக்கே மிஸ்டர் தில்லையரசன். தேங்க்யூ ஃபார் தி கோ ஆப்பரேஷன். மறுபடியும் பார்க்கலாம்”


    கிடைத்த போன் நம்பருடன் வீட்டுக்கு வந்தார்.



    தொடரும்.....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #35
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    ஹும் முதல் இரண்டு அத்தியாயங்கள் உங்கள் கதையில் இல்லவேயில்லை.

    மூன்றாவது அத்தியாயத்தில்தான் உங்களுடைய கதையை தொட்டிருக்கின்றீர்கள்.

    விசாரணை இன்னும் இரண்டு மூன்று அத்தியாயங்களை கடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மனதில் ஏற்படுகின்றது.

    தொடருங்க.....
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  12. #36
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமா ஜெய். உண்மையிலேயே நான் முதல் முறை எழுதும்போது, இதையெல்லாம் விளக்கமாய் சொல்லத்தான் நினைத்தேன். சிறுகதையாக்கும் எண்ணத்தில் அரைகுறையாகிவிட்டது.

    இந்தமுறை கொஞ்சம் விளக்கமாய்க் கொடுக்க எண்ணியிருக்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 3 of 12 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •