ஆண்டவன் பேரால்...!


கட்டத் துணியின்றிப் பல்லாயிரவர்

கந்தல் உடையோடு!

உண்ண உணவின்றி உலகில் உழல்வோர்

உள்ளனர் பல இலக்கம்!

வேள்வி நெருப்பில் -

பட்டுப் புடைவையும்

பல்வேறு உணவுப் பொருள்களும்

போட்டுப் பொசுக்கம்!

ஆண்டவன் பேரால்...

அறமிலாச் செயல்!