அல்லாவின் நாமத்தை
நின்பேரில் ஒளித்திருந்து
என்புதோல் போர்த்திய
அன்பின் திருஉருவாய்
மண்ணில் ஒளிர்ந்த
அன்னை லலிதாவே!
என்னை ஈன்றெடுத்த
நின்னை நினைந்து
நெஞ்சம் நெகிழ
என்னைத் திறக்கின்றேன்!
அன்பைப் பொழிவாயே!
(என் அன்னையின் பெயர் LALITHAA = ALLAAH IT = "இது அல்லா" என்பதன் ANAGRAM, அநாகரம்; லலிதா = ல்+அ+ல்+இ+த்+ஆ = இ+த்+அ+ல்+ல்+ஆ = இதல்லா, அதாவது "இது அல்லா")
அன்பைப் பொழி வாயே இருதயம்!
மெய்வாய் அதனை யாம் மறந்ததேனோ?
பொய்வாய்க் கன்மனப் பேய்வாய் உழல்வதேனோ?
"இது அல்லா" என்றே நின் திரு நாமஞ் சொல்லும்
உபதேசம் புரிந்தே
ஒவ்வொன்றும் அல்லாவின் திரு உருவாய்
எப்போதுங் கண்டே
எல்லாமும் அன்பு செயும்
மன இதம் எமக்குத் தருவாயே!
மன இதம் எமக்குத் தரு வாயே இருதயம்!
மெய்வாய் அதனை மறந்த யாமோ மனிதம்?
(வாய் = வழி)
மன இதம் மறந்தோம்
மத இனம் எனப் பிளந்தோம்!
கூறுகளாய்ச் சிதைந்து கிடக்கும் எம்மைக்
கூட்ட வல்லது
தாயாம் நின் அன்பே!
தாயே! தயை புரிவாயே!
சேயாம் எம் மேல் அன்பைப் பெய்வாயே!
(தொடரும்)
Bookmarks