Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: அன்னையை நினைந்து!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    அன்னையை நினைந்து!

    அல்லாவின் நாமத்தை
    நின்பேரில் ஒளித்திருந்து
    என்புதோல் போர்த்திய
    அன்பின் திருஉருவாய்
    மண்ணில் ஒளிர்ந்த
    அன்னை லலிதாவே!
    என்னை ஈன்றெடுத்த
    நின்னை நினைந்து
    நெஞ்சம் நெகிழ
    என்னைத் திறக்கின்றேன்!
    அன்பைப் பொழிவாயே!
    (என் அன்னையின் பெயர் LALITHAA = ALLAAH IT = "இது அல்லா" என்பதன் ANAGRAM, அநாகரம்; லலிதா = ல்+அ+ல்+இ+த்+ஆ = இ+த்+அ+ல்+ல்+ஆ = இதல்லா, அதாவது "இது அல்லா")

    அன்பைப் பொழி வாயே இருதயம்!
    மெய்வாய் அதனை யாம் மறந்ததேனோ?
    பொய்வாய்க் கன்மனப் பேய்வாய் உழல்வதேனோ?
    "இது அல்லா" என்றே நின் திரு நாமஞ் சொல்லும்
    உபதேசம் புரிந்தே
    ஒவ்வொன்றும் அல்லாவின் திரு உருவாய்
    எப்போதுங் கண்டே
    எல்லாமும் அன்பு செயும்
    மன இதம் எமக்குத் தருவாயே!

    மன இதம் எமக்குத் தரு வாயே இருதயம்!
    மெய்வாய் அதனை மறந்த யாமோ மனிதம்?
    (வாய் = வழி)
    மன இதம் மறந்தோம்
    மத இனம் எனப் பிளந்தோம்!
    கூறுகளாய்ச் சிதைந்து கிடக்கும் எம்மைக்
    கூட்ட வல்லது
    தாயாம் நின் அன்பே!
    தாயே! தயை புரிவாயே!
    சேயாம் எம் மேல் அன்பைப் பெய்வாயே!
    (தொடரும்)
    Last edited by நாகரா; 13-03-2010 at 09:54 AM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    தயை புரி வாயே இருதயம்!
    அன்பைப் பெய் வாயே இருதயம்!
    அல்லாவின் அருளாய்
    அம்மை நீ வழிவாய்!
    செம்மை யாம் பெற எம்
    நெஞ்சை நீ உழுவாய்!
    எந்தையின் அருவம்
    பிள்ளையெம் உருவுள்
    நன்றே பதிந்திட
    எம் மெய் உயிர்த்தெழ
    மெய் வழி தருவாய்!
    மெய் வழி மறைக்கப்
    பொய்க் குருக் கூட்டம்
    பின்னும் மாய்கையை
    வெட்டும் ஞான வாளை
    எமக்குத் தருவாய்!
    குரு நபி அருவம்
    குர் ஆன் ஓதும்
    குகையாம் இருதயம்
    புகவே மன இதம்
    எமக்கே அருள்வாய்!
    அகமது நினதாய்
    முகமது நபியாய்
    சகமதில் அல்லா
    அருளரசியற்ற
    வழி வகை செய்யும்
    அன்பே சிவமாம்
    அன்னை லலிதா
    நின் திருவடி சரணம்!
    (தொடரும்)
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    பிறந்திறந்துழலும் கருமச் சுழலை
    முறிக்கும் அன்பின் தரும நெறியை
    இருதயந் திறந்தே நீ காட்டுவாய்!
    பெருவாழ்வுப் பெருவரம் யாவரும்
    பெறவே அன்பின் சிகிச்சையை
    கரதலந் திறந்தே நீ செய்வாய்!
    நின் திரு மகன் வள்ளலின்
    குரு மொழி விளங்கவே
    சிரதலந் திறந்தெம்முள் உய்வாய்!
    வெண்ணீறாய் நெற்றியில் ஒளிர்வாய்!
    உண்ணீரமுதாய்க் கண்டத்தே விழுவாய்!
    உண்ணாமுலையை மெய்யுண்ணப் பொழிவாய்!
    நெஞ்சத் திரு நிலமாய் எம்முள்ளே விரிவாய்!
    நெஞ்சடி இருள் வாய் ஒளிரவே விடிவாய்!
    உந்தியில் சத்திய தரிசனந் தருவாய்!
    உந்திக்கீழ் இரசவாத அதிசயம் புரிவாய்!
    முதுகடி பொருந்தும் ஜோதியாய் எழுவாய்!
    முழந்தாள் இறங்கி அருளாட்சி செய்வாய்!
    திருவடி பதியும் பூரணம் ஆவாய்!
    பரமபிதா சமேத பரிசுத்த ஆவியாம்
    குமரன் கிறிஸ்துவின் புனித அன்னையாம்
    மரியாள் ஸ்ரீ மகா லலிதா பரமேஸ்வரி
    நின் திருவடிகள் சரணம்!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பாரதியின் கவிதைகளுக்குப் பிறகு உங்கள் கவிதைகளில் சொல்வளம் மிகக் கண்டேன் நாகா.

    அம்மா..
    நினைவே சங்கீதம்..
    இனிமைக்குச் சொல்லவும் வேண்டுமா.

    தொடருங்க.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    அம்மா...தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை...
    கவிப் பணி தொடருங்கள்..ஐயா

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் sofi's Avatar
    Join Date
    25 Jun 2009
    Location
    உங்கள் உள்ளத்தில்..!!
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவிதை ..இல்லை அன்னையின் உருவில் கவிமாலை ..வாழ்த்துக்கள்
    «♥ ☼√♪ எதிர் பார்ப்புகள் எட்டிப் பார்க்கும் போது ஏமாற்றங்கள் இரட்டிப்பாகின்றன ..!!☼√♪ «♥
    பிரியமுடன்
    சோபி



  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    ஊக்குவிக்கும் உம் பின்னூட்டங்களுக்கு நன்றி அமரன், கோவிந்த் மற்றும் சோஃபி
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    முதுகடியில் பயமெனும் முடிச்சினை அவிழ்க்க
    "யாமிருக்க பயமேன்!" எனும்
    அபய மந்திரந் தருவாய்!
    உந்திக்கீழ் அவ காம முடிச்சினை அவிழ்க்க
    அம்மையப்பனாய் அங்கமர்ந்தே கருணை அருள்வாய்!
    உந்தியில் ஆணவ முடிச்சினை அவிழ்க்க
    சச்சிதானந்த சத்தி சித்தி பூரண
    அருட்பேராற்றலாய் அங்கே அமர்வாய்!
    உந்தி மேல் மருண்மயக்க முடிச்சினை அவிழ்க்கப்
    பூரண ஞானமாய் அங்கே நிறைவாய்!
    நெஞ்சை மூடும் வஞ்ச முடிச்சினை அவிழ்க்கத்
    தாழுடை அன்பாய் அங்கே பாய்வாய்!
    நெஞ்சமேல் பேத பாவ முடிச்சினை அவிழ்க்க
    ஆன்ம நேய அமிழ்தமாய் அங்கே பெருகுவாய்!
    கண்டத்தே கரும விதி முடிச்சினை அவிழ்க்க
    அறவாழித் தரும நெறியாய் அங்கே சுழல்வாய்!
    நெற்றியை மூடிய மாயை இருள் முடிச்சை அவிழ்க்க
    சுயம்பிரகாசச் சுடர் விழியாய் அங்கே மலர்வாய்!
    உச்சியை மூடிய அஞ்ஞான முடிச்சை அவிழ்க்க
    மெய்வழி திறக்கும் பூரணமாய் அங்கே உய்வாய்!
    அவதார மகிமை முழந்தாள் இறங்க அருளரசியற்றுவாய்!
    பூரண மெய்ஞ்ஞானம் பூமியில் விளங்கத் தாய் நீ பாதம் பதிவாய்!
    "மெய் வழி ஜீவன் நானே" என்றே சேயெம் மெய் வழி தாய் நீ புகுவாய்!
    முடிச்சுகள் யாவும் அவிழ்த்தே
    முதல் நடு முடிவாய்
    சேயெம் தேக மெய்யுயிர்த்த தாயே லலிதா நின் திருவடி சரணம்!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    பள்ளி வாசல் சென்றதில்லை!
    நல்லார் அல்லாவில் ஒளிந்த
    நல்லாவி லலிதா அன்னையே!
    நின் செந்திலக நெற்றி
    சொல்லும் அமுதக் "குர் ஆன்"
    எப்போதும் என் நெஞ்சில் அதிரும்!

    தேவாலயஞ் சென்றதில்லை!
    பரமபிதா சமேத
    பரிசுத்த ஆவி லலிதா அன்னையே!
    ஒளிரும் நின் திருமுகம்
    ஒலிக்கும் வேதாகமம்
    இருதய வாய்க்குள் இனிக்கும்!

    கோயிலுக்குச் சென்றதில்லை!
    பரப்பிரம்ம சமேத
    பராசத்தி லலிதா அன்னையே!
    நின் மோனப் புன்னகை
    என் நெஞ்சுள் அவிழ்க்கும்
    நல் வேத இரகசியம்!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தாயிற்குள்ளான என்
    மெய் வளர்ச்சியே
    மெய்யான வளர்ச்சி...
    விஞ்சும் வளர்ச்சி
    எவ்வுலகிலும் இல்லை...

    நான் தந்த வேதனை தாங்கி,
    என் முதற்பசி தீர்த்தவள் தாய்...

    நான் பேச ‘அம்மா’ என
    முதல் வார்த்தை தந்தவள் தாய்...

    எனக்கான பெரும் முதல் அம்மா...
    ஆதலால்,
    அனைத்திலும் முதலானவள் அம்மா...

    அந்த வார்த்தையைச் சொல்லும்போதே, நெஞ்சம் நிறைந்து பூரிக்கின்றது.

    நாகரா அவர்களின் அன்னையை நினைந்த பாக்கள், நெஞ்சை வருடுகின்றன...

    வாழ்த்தி வணங்குகின்றேன் அன்னையை நினைந்து...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    உம் அழகியக் கவி மயப் பின்னூட்டத்துக்கு நன்றி அக்னி.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அன்னை பற்றி அருமையாய் கவி படைக்கும் அன்பராம் நாகராவுக்கு என் பாராட்டுக்கள்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •