Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: ஒரு நிமிடக்கதை..."முதலாளி"

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஒரு நிமிடக்கதை..."முதலாளி"

    பாஸ்கரன் வருடத்துக்கொருமுறை விடுமுறையில் வீட்டுக்கு வரும் துபாய்க்காரர். அந்த முறை வீட்டின் சில மின் வேலைகளுக்காக சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். அதில் இளங்கோ என்ற பையனின் சுறுசுறுப்பையும், வேலையின் தரத்தையும் பார்த்து மிக மகிழ்ந்த பாஸ்கரன் அவனுக்குக் கூடுதலாக, தன்னுடைய பரிசாகப் பணம் தந்தார்.

    ஏற்றுக்கொள்ளத் தயங்கியவன்,

    "சம்பளத்துக்கு மேல வாங்கறது தப்பு சார். வேண்டாம் சார்"

    என்றவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

    "பரவாயில்லைப்பா...வெச்சுக்கோ...நான் சந்தோஷமா தர்றதுதானே...உன்னோட வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வாங்கிக்க.."

    "இல்ல வேண்டாம் சார். ஆனா எனக்கு ஒரு உதவி செய்வீங்களா..."

    தயங்கிக்கொண்டே கேட்டவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தார்.

    "சார் எங்க முதலாளி நல்லவர்தான். ஆனா சம்பளம் 1500 ரூபாதான் கிடைக்குது. அப்பாக்கு முடியாம இருக்குற இந்த நிலைமையில..இந்தப் பணம் பத்த மாட்டேங்குது. உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாவது துபாய்க் கம்பெனியில எனக்கு ஒரு விசா வாங்கிக் கொடுக்க முடியுமா சார். எங்களுக்கு அரை ஏக்கர் நிலம் இருக்கு, அதை அடமானம் வெச்சு, ஒரு லட்சரூபா குடுக்குறேன்"

    என்ன சொல்லப் போகிறாரென்று ஆவலோடு அவர் முகத்தைப் பார்த்தவனை நோக்கி,

    "இளங்கோ....உனக்கு விசா வாங்கித் தர்றதைப் பத்தி பிரச்சனை இல்லப்பா. எனக்குப் பணம் கூட வேண்டாம். வெறும் டிக்கெட் காசு மட்டும் செலவு பண்ணா போதும். ஆனா....ஏன் இருக்கிற நிலத்தை அடமானம் வெச்சு, இவ்ளோ பணத்தைக் கட்டி வெளிநாடு போகனுன்னு நினைக்கிற? அங்க நீ எதிர்பாக்குற மாதிரி நிறைய சம்பளம் கிடைக்காது. அதுமட்டுமில்ல...ஏன் எப்பவும் தொழிலாளியாவே இருக்க நினைக்கிறே? நீயும் முதலாளி ஆகலாமே"

    "என்ன சார் சொல்றீங்க நான் எப்படி.......?"

    "இப்ப உனக்கு முதலாளியா இருக்கிறவர், ஆரம்பத்துல என்னவா இருந்தார்?"

    "அவரும் என்னை மாதிரியே இன்னொருத்தர் கிட்ட வேலைதான் செஞ்சிக்கிட்டிருந்தார் சார்."

    "அவர் இப்ப முதலாளி ஆகலையா? அதே மாதிரி உன்னாலயும் முடியும். நீ விசாவுக்குத் தர்றதா சொன்ன பணத்தை வெச்சு இதே வேலையை நீ சொந்தமா எடுத்து செய். உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே, உன்னோட கடின உழைப்பும், வேலையில நீ காட்டுற அக்கறையும், வேலையோட தரமும்தான். அதுதான் உன்கிட்ட இருக்கிற பெரிய மூலதனம், இதை முதலாப் போட்டு தைரியமா தனியாத் தொழில் தொடங்கு....அப்புறம் நீயும் ஒரு முதலாளிதான்."

    யோசனையோடு பாஸ்கரனைப் பார்த்த இளங்கோ....உள்ளுக்குள் ஒரு உந்துசக்தி கிடைத்ததைப் போல உற்சாகமாய்...

    "ரொம்ப நன்றி சார். நான் முயற்சி பண்றேன்"

    சொல்லிவிட்டுப் போய்விட்டான். பாஸ்கரனும்...சில நாட்களில் கிளம்பிவிட்டார். அடுத்த முறை ஊருக்கு வந்தவர், போர்வெல்லின் மோட்டார் இயங்கவில்லை என்று மீண்டும் இளங்கோவை அவனுடைய அலைபேசியில் அழைத்தார்.

    சற்று நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஒரு பையனுடன் வந்தான். தோரணையே மாறி இருந்தது. வந்தவன் நேராக வந்து பாஸ்கரனின் கால்களில் விழுந்தான்.

    "அடடா...எந்திரிப்பா. நல்லா இரு...என்னது இது"

    "சார் நீங்க சொன்ன மாதிரியே அந்த நிலத்தை வெச்சு தனியா தொழில் தொடங்கினேன். இந்த ஒரு வருஷத்துல மோட்டார் ரீவைன்டிங் கடை ஒண்ணும், எலக்ட்ரிகல் சாமான் விக்குற கடை ஒண்ணும் இப்ப எனக்குச் சொந்தமா இருக்கு. ஏழெட்டுப் பேர் என் கிட்ட வேலை செய்யறாங்க. சம்பளம் வாங்கிக் கிட்டிருந்தவனை...சம்பளம் கொடுக்கிறவனா மாத்தினது நீங்கதான் சார். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.."

    என மீண்டும் காலில் விழுந்தவனைத் தூக்கி நிறுத்தி, பெருமை பொங்க அவனைப் பார்த்துக்கொண்டே..

    "நான் வெறும் திரியைத் தூண்டுற வேலையை மட்டும்தான் செஞ்சேன். ஆனா பிரகாசமா எரியக் காரணம் உன்னோட திறமையும், கடின உழைப்பும்தான். நான் என்னதான் லட்ச லட்சமா சம்பாதிச்சாலும்....இன்னும் ஒரு தொழிலாளிதான். ஆனா நீ இப்ப ஒரு முதலாளி. எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு"

    எனச் சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்து சந்தோஷமாய் சல்யூட் அடித்தார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    " பாஸ்கரன் வருடத்துக்கொருமுறை விடுமுறையில் வீட்டுக்கு வரும் துபாய்க்காரர்"
    நல்ல கதை.. ஆனால் பாஸ்கரன் துபாயில் என்ன பண்றார்னும் சொல்லியிருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்.. ஏன்னா கதையோட சாராம்சமே அதில் மட்டும் தான் அடங்கியிருக்கு.. ஊருக்கு உபதேசமாய் இருந்திட கூடாதில்ல..

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அதத்தானே மதி,
    ‘நீ இப்போ முதலாளி, நான் இன்னும் தொழிலாளி’
    அப்படீன்னு, பாஸ்கரன் கதையின் இறுதியில சொல்லுறாரு...

    வெளிநாட்டு மோகம், எத்தனை உழைப்பாளர்களை மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றது
    என்பதற்கு இந்தக் கதையும் ஓர் உதாரணம்.

    பாஸ்கரனைத் தூண்ட ஒரு பாஸ்கரன் இல்லாமற் போனதால்,
    பாஸ்கரன் இன்னமும் தொழிலாளியாகவே...

    ஆனால்,
    பணமல்லவா முதலாளி தொழிலாளியின் அந்தஸ்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது...

    வெளிநாட்டு மோகத்தை உடைக்கும் அதேவேளை,
    அந்த அந்தஸ்தின்(?) போலித்தனத்தையும் கோடி காட்டுகின்றது, கதை...

    பாராட்டு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    வாய்ப்புக்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய் வார்த்தையை செயலில் காண்பிக்க, வாய்ப்புக்கள் பிறருக்கு தர முடிந்தது . நல்ல கதை சிவா அண்ணா.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முதலாளியோ தொழிலாளியோ செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணும் உழைப்பாளிதான் மகிழ்ச்சியாக உள்ளான். காசு பணம் அவனிடம் கொட்டிக் கிடக்கோ இல்லையோ படுத்ததும் உறங்கும் வரம் அவனுக்குண்டு. இந்தக் கதைமாந்தர்களில் நான் உழைப்பாளியைக் காண்கிறேன்.

    அந்த உழைப்பாளியை இனங்கண்ட பாஸ்கரன் (நம்ம சிவாதான்), அவனுக்குத் தீனி போட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், முதலாளி மோகத்தை கூட்டாமல் இருந்திருந்தாரேயானால் கதை இன்னும் ஜொலித்திருக்கும் என்றே தோன்றுகிறது.

    இதை ஏன் சொல்றேன்னா, முதாலாளி ஆனதும் ஏழெட்டுப் பேர் என்னிடம் வேலை செய்யுறாங்க என்று சொல்றதுக்கும் ஏழேட்டுப் பேரைச் சேர்த்து வேலை செய்றேன் என்றதுக்கும் எத்தனை வேறுபாடு. அதுதானே உழைப்பாளிக்குக் கொடுக்கும் மரியாதை.

    இதை வைச்சுப் பார்க்கும் போது, தாய்மண்ணில் விதை விழட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் பாஸ்கரனினி துபாய் வேலையை நீங்கள் குறிப்பிடவில்லை எனத் தோன்றுகிறது.

    அத்தியாவசியமான கருக்கொண்ட கதை சிவா. ஆணி நுனிபோல் உங்கள் ஒவ்வொரு நிமிடக் கதையும் ஆழமாக இறங்குகிறது.


    பாராட்டுகள் சிவா!
    Last edited by அமரன்; 06-03-2010 at 06:03 PM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் இளம் சமுதாயத்துக்கு,நல்ல சிந்தனையுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய விதம் அருமை.
    ஒரு நிமிட கதை சுப்பர் தொடர்ந்து எழுதுங்கள் சிவா
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    நிமிடக் கதை..முதலாளி...
    மனதில் நிற்கும்..உந்துசக்தி கதை..
    பாராட்டுக்கள்...!

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இலைமறைகாயாக ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் தொனியில் கதை மிளிர்கிறது. திறமை மட்டுமன்றி தட்டிக்கொடுப்பும் தேவைப்படுகிறது என்று பாஸ்கரன் என்ற ஒரு ஊன்றுகோலை அழகாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா...

    Quote Originally Posted by மதி View Post
    ஆனால் பாஸ்கரன் துபாயில் என்ன பண்றார்னும் சொல்லியிருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்.. ஏன்னா கதையோட சாராம்சமே அதில் மட்டும் தான் அடங்கியிருக்கு.. ஊருக்கு உபதேசமாய் இருந்திட கூடாதில்ல..
    அப்படி சொல்லிட முடியாது. சிலவேளை அனுபவங்களும் இன்னொருவனை தட்டிக்கொடுக்க காரணமாக அமைந்துவிடும். அப்படி துபாயில் அவர் ஒரு முதலாளி என்று சொல்லியிருந்தால் கதை சினிமாத்தனமாக அமைந்திருக்கும் என்பது எனது எண்ணம்...

    நல்ல விடையங்கள் மாற்றங்கள் யாராலும் உபதேசிக்கப்படலாம். காரணம் பாஸ்கரனின் நீண்டநாள் கனவாக கூட இருக்கலாம். ஆனால் அந்த திறமையை தன்னுள் அவர் கண்டுகொள்ளவில்லை போலும்.
    Quote Originally Posted by அக்னி View Post
    பணமல்லவா முதலாளி தொழிலாளியின் அந்தஸ்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது...
    பணத்துடன் முதலாளிக்கனவுகள் பலருக்கு கனவாகவே உள்ளது. பணம் திறமை சேர்ந்த கலவை சிறந்த முதலாளிக்கு வழிவகுக்கும்...

    பார்க்கலாம். சிவா அண்ணா என்ன சொல்கிறார் என்று...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    வெளிநாட்டுக்குச் சென்றால் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்ற கனவில், இருக்கும் சொத்துக்களை விற்று வெளிநாட்டிலும் நல்ல வேலை கிடைக்காமல் நடுத்தெருவிற்கு வந்தவர்கள் உண்டு.
    உள்நாட்டிலேயே கடுமையாகவும் திறமையாகவும் உழைத்தால் விரைவில் மேன்மைக்கு வர முடியும் என்ற கருத்தைச் சொல்லும் கதை. இளைஞர்களுக்கு நல்ல படிப்பினையையும் கொடுக்கும் கதை.பாராட்டுக்கள்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    " பாஸ்கரன் வருடத்துக்கொருமுறை விடுமுறையில் வீட்டுக்கு வரும் துபாய்க்காரர்"
    நல்ல கதை.. ஆனால் பாஸ்கரன் துபாயில் என்ன பண்றார்னும் சொல்லியிருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்.. ஏன்னா கதையோட சாராம்சமே அதில் மட்டும் தான் அடங்கியிருக்கு.. ஊருக்கு உபதேசமாய் இருந்திட கூடாதில்ல..
    மதி, பாஸ்கரன் கடைசியில சொல்ற அந்த லட்ச லட்சமா சம்பாதிச்சாலும் நான் இன்னும் தொழிலாளிங்கறதுலேயே தெரியுதில்லையா, அவர் முதலாளி இல்லை....என்பது. இத்தனை வருட அனுபவத்தில் அவர் கண்டது, பெரிய தொகை கொடுத்து வளைகுடா நாடுகளுக்கு வரும் சாதாரணத் தொழிலாளிகள் பெரிதாய் ஏதும் சம்பாதிக்க முடிவதில்லை என்பதைத்தான்.

    நல்ல உழைப்பும், திறமையும் இருக்கும் இளங்கோவை, அப்படியோர் சாதாரணத் தொழிலாளியாய் இல்லாமல், அவன் விசாவுக்காக செலவு செய்ய இயன்ற அந்த பெரிய தொகையை, தன் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தினால், முதலாளியாகலாம் என்ற எண்ணத்தை அவன் மனதில் ஏற்படுத்துகிறார்.

    இதே அறிவுரையை, அவர் வளைகுடா போகும்போது அவருக்கு யாரும் அளிக்கவில்லை. அதுமட்டுமல்ல, அவருக்கும், இனி அந்த வேலையை(லட்சலட்சமாக கிடைக்கும் பெரிய வேலை) விட்டுவிட்டு, முதலாளியாகும் விருப்பமுமில்லை. பெரும்பான்மையான வளைகுடா பணியாளர்கள் இருப்பதை விட்டுவிட அப்போதைக்கு நினைப்பதில்லை. ஆனால் மனதுக்குள் அந்தத் திட்டம் எப்போதும் இருக்கும். ஊரில் வந்து செட்டில் ஆகும்போது அதை செயல்படுத்துவார்கள்(எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது)

    நீங்க சொன்ன மாதிரி கதையோட சாராம்சம் அதில் இல்லை. அதேப்போல அவர் ஊருக்கு உபதேசம் செய்யும் ஆளுமல்ல. பணமே வாங்காமல் விசா எடுத்துத் தர அவரால் முடியுமென்று சொன்னதிலிருந்தே தெரிகிறது, அவர் தட்டிக் கழிப்பதற்காக அதை சொல்லவில்லை என்பது.

    நன்றி மதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சரியாகச் சொன்னீர்கள் அக்னி. பணம் தேவைதான். ஆனால் பணத்தோடு, திறமையும், உழைப்பும் சேர்ந்தால் முதலாளியாவது மட்டுமல்ல....தொடர்ந்து அந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

    எனக்குத் தெரிந்த சில நண்பர்கள், வளைகுடா வேலையை விட்டுவிட்டு, முதலாளியாகும் எண்ணத்தில் தொழில் தொடங்கி, திறமையும், சரியான உழைப்புமில்லாமல், மீண்டும் பெட்டியைத் தூக்கியிருக்கிறார்கள். அந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம், இது போனாலும், அது இருக்கிறது எனற எண்ணம்தான்.

    அதனால்தான் ஆரம்பத்திலேயே, வளைகுடாப் பணத்தின் சுவையை இளங்கோ அறிந்துவிடாமல், அவனுடைய உழைப்பால் உயர்வதை ஊக்கப்படுத்துகிறார்.

    அவனால், ஒரு லட்சம் செலவு செய்ய முடியும் எனச் சொன்னதும் ஒரு காரணம், அவர் அந்த யோசனையை சொல்வதற்கு.

    நன்றி அக்னி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆமாம் ரவி. வாய்ப்புகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதே சமயம், வாய்க்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

    நன்றி ரவி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •