சூரியன் இயங்குது
உதயம்..அஸ்தமனம்..
காலம் மாறுது..
இரவு..பகல்..
இதயம் மாறுது..
என்..உன்..
உன்..என்..!
சூரியன் இயங்குது
உதயம்..அஸ்தமனம்..
காலம் மாறுது..
இரவு..பகல்..
இதயம் மாறுது..
என்..உன்..
உன்..என்..!
எளிய நடையில் நல்ல கவிதை வரிகள்.
எதார்த்த வார்த்தைகள் இந்த "உன் என்"
தொடர்ந்து எழுதுங்கள்,வாழ்த்துக்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
அழகா இருக்கு. சின்னதா...காதலை நல்லா சொன்னதா ஒரு கவிதை.
வாழ்த்துக்கள் கோவிந்த்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..
பின்னூட்டம் அளித்து உற்சாகமூட்டும் சிவா & ஜனகன் அவர்களுக்கு நன்றி..!
ஆகா... என்ன பொருத்தம்.. என்ன பொருத்தம்..
முன்னது இரண்டுக்கும் பூமிப்பந்தின் சுழற்சி காரணம்.
பின்னதுக்கும் சுத்தல்தானே காரணம்.
இன்னொன்று..
முன்னது இரண்டிலும் தூங்கி எழுவது நிச்சயம்.
பின்னதிலும் அப்படி இருக்கிறதாலதான் பல பிரச்சினை.
காதலில் தூங்கியவன் என்ன இழந்தான் என்று தெரியாவிட்டால் உங்க ஊரு கள்ளுக்கொட்டிலாரிடம் கேட்டுப் பாருங்க.
நிஜமாகவே நல்லா இருக்குங்க கோவிந்த்.
பாராட்டுகள்.
ஆக்கத் தூண்டி ஊக்கமளிக்கும் அமரன் அவர்களுக்கு நன்றி..!
[QUOTE=அமரன்;458790]ஆகா... என்ன பொருத்தம்.. என்ன பொருத்தம்..
முன்னது இரண்டுக்கும் பூமிப்பந்தின் சுழற்சி காரணம்.
பின்னதுக்கும் சுத்தல்தானே காரணம்.
QUOTE]
காதலி முகம் மலர
கூந்தலில் பூ சுற்றினால் போதாது
வாயாலும் கொஞ்சம் சுற்ற வேண்டும்
இந்த பூவை விட நீ அழகு என்று.
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
சுருக்கம்.
சிறப்பு.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
ஆறு வரிகளில் நச் கவிதை யாத்து விட்டீர்கள். பாராட்டுக்கள் கோவிந்த் அவர்களே!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
நயமாக...வாழ்த்து சொன்ன நற்கவிகள் அனைவருக்கும்..மனமார்ந்த...நன்றி...
இதே கருத்தை இன்னொரு கவிதையிலும் எழுதி பதித்து இருக்கீறீர்களே.. எண்ணிக்கையை விட தரம் முக்கியம்
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks