ஒரே பதில் தான் மீண்டும். உபதேசங்களை முதலில் நீங்கள் அமுல்படுத்திவிட்டு மற்றவருக்கு திணியுங்கள்.
ஏறுக்கு மாறு பேசப்படுவது யாரால்??? மாறு பேசுவது யார்??? நானா நீங்களா??? முந்தய பதிவுகளை படியுங்கள்??? குற்றம் சுமத்தியது யார்???
ஆமா.. எனக்குமட்டும் தமிழ்மன்றம் மாசாமாசம் காசு தருகிறார்கள். உங்களுக்கு பதில் போட....
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
உபதேசங்களை முதலில் நீங்கள் அமுல்படுத்திவிட்டு மற்றவருக்கு திணியுங்கள். அதைதான் நானும் சொல்லுறேன் உங்களுக்கு,
முதல்ல உங்க உண்மையான பெயரை போடுங்க அப்புறம் அறிவுரை வழங்கலாம் பிறருக்கு ,என்னால் என் பெயரை தைரியமா போட்டேன் அது முடியுமா உங்களுக்கு ,
சம்பந்தமே இல்லாம திடீருன்னு யாருக்காவது மின் அஞ்சல் அனுப்புறது , மின் அஞ்சல் அனுப்புறதுக்கு முன்ன நிங்கா யாருன்னு சொல்லணும் ,
நாங்களா ஓடிபோய்யு தெரிஞ்சுகனுமா ? மன்றத்தின் பொருபாலருனு ?
உபதேசம் வழங்கியவர் நீங்களே... நான் அல்ல... அதனை அமுல்ப்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு அல்ல...
என்ன பெயர் வைத்திருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.. அதை தட்டிக்கேட்க்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை...
ஆலோசனை தருவதாக சொல்லிவிட்டு ஏன் என்மீது சேறு வீசுகிறீர்கள்??? இங்கு பெயரிடுவது ஒரு பிரச்சனையாக யாராவது கூறினார்களா???
ஏழாயிரம் பேரை எப்படி வாக்கு செலுத்தவைப்பது என்பதற்கு மட்டும் பதில் தரவும். தகுந்த பதில் வந்தால் நானே மீதிப்பதிவுகளுக்கு மன்னிப்பு கோருவேன்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
முத்துவேல் அவர்களுக்கு...
தமிழ்மன்ற விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை சரியாக படிக்கவும்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
முத்துவேல்....என்ன பெயர் வைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம். உண்மையானப் பேரைப் போடச் சொல்லிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. உங்கள் பெயரே உண்மையானதுதானா என்பதற்கு நாங்கள் என்ன உங்கள் சான்றிதழையாக் கேட்கிறோம்?
ஆக்கப்பூர்வமான ஆலோசனை அளிக்க முடிந்தால் மிக நல்லது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு பொறுப்பாளரை இப்படி பேசுவது சரியில்லை. பதட்டப்படாமல், அமைதியாய் யோசியுங்கள். இங்கு அனைவருமே அவரவர் விருப்பத்துக்கிணங்கத்தான் இணைந்திருக்கிறோம். யாரும் யாரையும், எந்தவிதத்திலும் கட்டாயப்படுத்தமுடியாது. ஆனால் அதே சமயம், மன்ற விதிமுறைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்க நிர்வாகத்தினருக்கு அதிகாரமிருக்கிறது.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிக மிக சந்தோஷம். புரிதலுக்கு மிக்க நன்றி முத்துவேல். என்றும் மன்றத்துடன் இணைந்திருங்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உங்க புரிதலுக்கு நன்றி முத்துவேல்..
இனியாவது ஒரு பதிவை இருமுறை பதிக்காதீங்க..
இந்த திரியிலும் நீங்க அதை செய்திருக்கீங்க.. இதை சொல்ல அவர் தனிமடல் போட்டா நீ யாரு னு கேப்பிங்களா ?
நீங்க யாரு னு தெரிஞ்சுகிட்டு தான் இந்த மன்றம் உள் நுழையும் அனுமதி உங்களுக்கு தந்ததா?
சிவா அண்ணா பதில் தந்திருப்பதால் மற்ற கேள்விக்கு நான் பதில் போடாமல் போகிறேன்..
Last edited by ஆதி; 03-03-2010 at 11:51 AM.
அன்புடன் ஆதி
முத்துவேல் அவர்களே!
மன்றத்தில் எச்சரிக்கைகள் தடைகள் போன்றவற்றின் முதலாய நோக்கம் திருந்தல் என்பதே..
அதனடிப்படையில் சாது`ர்யமானா மேற்காட்டலுடன் போர்`த்திக்கொண்ட திருத்தப் பதிவு 7) நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள் என்ற விதி மீறலிருந்து உங்களைக் காப்பாற்றி விட்டது........
குணமதி அவர்களுக்கு...
உங்களை மனங்கவர் பதிவாளர் தேர்வுக்குப் பரிந்துரைத்தவன் நான் என்றவகையில்
சில விடயங்களைச் சொல்லவேண்டிய கடப்பாட்டிலிருக்கின்றேன்.
முதலில்,
உங்களைப் போட்டிக்குப் பரிந்துரைத்துவிட்டு
வாக்களிக்காததற்கு மன்னிப்பைக் கோரி நிற்கின்றேன்.
உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே நான் வாக்களிக்கவில்லை.
அது வாக்களிப்பை அவதானிக்காத எனது கவனயீனமே.
பதிப்பாளர்களில், முந்தைய மாதத்தில் பதிவுகளால் நம்மைக் கவர்ந்தவரைப் பரிந்துரைத்து,
அவருக்கு வாக்களித்து, அவரும் நாமும் சேர்ந்து மகிழ்வதே
‘மனங்கவர் பதிவாளர்’இன் நடைமுறையாகும்.
மற்றும்படி, இந்தப் போட்டியினால் யாருடைய தகுதிகளும் தீர்மானிக்கப்படுவதில்லை.
மகிழ்ந்து கொள்வது மட்டுமே இப்போட்டியின் ஒரே குறிக்கோள்.
இது தங்களுக்கு வேதனையைத் தந்தது, வேதனைக்குரியதானாலும்,
அது இந்தப் போட்டியைக் குறித்த தங்களின் தெளிவின்மையே என்பதுதான் உண்மை.
தங்களது பதிவுகளும் படைப்புக்களும் என்னைக் கவர்ந்திருந்ததால்,
நான் உங்களைப் பரிந்துரைத்திருந்தேன்.
இத்தனை பேருக்குள் ஒருவர் மனதுக்குள் படைப்புக்களாற் பதிவதென்பது இலகுவான விடயமில்லைதானே...
இப்போட்டியினால்,
தங்கள் நிலை தாழ்ந்துபோகவில்லை என்பதை எனது இந்தப் பதிவு உங்களுக்கு தெரியப்படுத்தும் என நம்புகின்றேன்.
*****
இது ஒரு மூன்றாந்தர மன்றமல்ல. வியாபார, விளம்பர நோக்கங்களைக் கொண்டதல்ல.
7000 பதிவர் இருந்தாலும்,
தினமும் மன்றம் வருபவர்கள் 75-150 இற்கு இடைப்பட்டவர்களே.
அவர்களிற் பதிவிடுபவர்கள் சராசரியாக 50 பதிவர்களே.
இதுதான் புள்ளிவிபரம்.
பின்னர் ஏன் 7000 பதிவர் பெயர்கள்... என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது.
இவர்களில், சமகாலச் சூழல் காரணமாக மன்றம் வராதோரும்,
மற்றைய பொழுதுபோக்கம்சங்கள் இல்லாததால் பதிந்து எட்டிப்பார்த்ததோடு நின்றுவிட்டவர்களும்,
விஷமத்தனங்களாற் பிரிக்கப்பட்டவர்களும்,
புரிதலின்றிப் பிரிந்தவர்களும் எனப்,
பலதரப்பட்டவரும் அடங்குவர்.
வியாபார நோக்கற்றதால்,
இவர்களை வருந்தி அழைக்க வேண்டிய அவசியம் மன்றத்திற்கில்லை.
அதேவேளை, அவர்கள் மன்றம் வர எண்ணினால், வரவிரும்பும்போது வருவதற்காகவே அவர்கள் மன்றப் பதிவேட்டிலிருந்து நீக்கப்படவில்லை.
தொழில் ரீதியாக, எவருமே மன்றத்தில் இல்லை.
தமிழ் ஒன்றே இணைத்தது. தமிழ் மட்டுமே இணைத்தது.
எம் மன உணர்வுகள்தான் இங்கே படைப்புக்களாகக் குவிந்து கிடக்கின்றன.
காலம், நம் மன்றத்தையும் கருவூலமாக்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில்,
எனக்கு இப்போதே மன்றம் மட்டும்தான் என் உணர்வுகளின் பதிவிடம். கருவூலம்.
எந்தவித இலக்குமற்றுப் பயணிக்கவில்லை மன்றம்.
‘பகிர்வோம் தெரிவோம் மகிழ்ந்து மகிழ்விப்போம்’
என்பது (என்னைப் பொறுத்தவரையில்) மன்றத் தாரகமந்திரத்தின் சாரம்...
நன்றி!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks