Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 78

Thread: நித்திரை தொலைத்த நித்யானந்தா சுவாமிகள்..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2

    நித்திரை தொலைத்த நித்யானந்தா சுவாமிகள்..!!



    போலி ஆன்மீகம் என்பது இன்றைய தினத்தில் மிகவும் இலாபகரமான, முதல் போட தேவையில்லாத தொழில். மக்களின் துன்பங்கள், பேராசை, மூடநம்பிக்கையை மையமாக வைத்து ஏமாற்று பேர்வழிகள் உலகெங்கும் கோடிகளை குவிக்கிறார்கள், ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள். சராசரி மனிதனுக்கே உரிய எல்லா வகையான பலவீனங்களை கொண்ட குள்ளநரிகள் ”சாமியார்” என்ற பெயரில் செய்யும் தில்லுமுல்லுகள் இந்தியாவில் கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் தமிழகத்தில் மாதம் ஒரு போலிச்சாமியார் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் பரமஹம்ச நித்தியானந்த சாமிகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த நித்தியானந்தா..!! இவர் ஒரு பிரபல தமிழ் நடிகையுடனான ஆபாச வீடியோவை சன் தொலைக்காட்சி வெளியிட்டு இவரின் போலி ஆன்மீக முகத்திரையை கிழித்திருக்கிறது. இது அவரை நம்பிய பல்லாயிரம் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இன்பங்களை தவிர்த்து துறவற நிலையில் இருக்க வேண்டிய ஒரு துறவி திரைப்பட நடிகையுடன் கொண்ட தொடர்பும், அது தொடர்பான வீடியோவும் ஆன்மீகத்தை கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.! இந்த குள்ளநரியின் உண்மையான பெயர் இராஜசேகரன். 32 வயதாகும் இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். சாமியார்களுக்கே உரிய சித்து வேலைகளை சிறு வயது முதலே கற்று, அதை மக்கள் முன் காட்டி தான் ஒரு சக்தி வாய்ந்த சாமியார் என்று நம்ப வைத்தார். தியான பீடம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தியானத்தில் மக்களை ஈடுபட வைத்து அவர்களின் நோய்கள், பிரச்சினைகளை தீர்க்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டார். இந்த அமைப்பு பெங்களூருவை தலைமையகமாக கொண்டு பல கிளைகளுடன் தன் வியாபாரத்தை ஜெகஜ்ஜோதியாக நடத்தி வந்தது. இதையெல்லாம் தாண்டி பெரும் நகைச்சுவையாக 2007-ம் வருடம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் (Hindu University of America) சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். Life Bliss Foundation என்ற பெயரில் 2003-ம் ஆண்டு இவர் தொடங்கி நடத்தி வந்த தியான அமைப்பு 33 நாடுகளில் 1000 மையங்களை கொண்டது என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆனால் அத்தனையும் உண்மை..!! யார் கண் பட்டதோ.. சன் டிவியின் மூலம் சாமியாரின் கெட்ட நேரம் தொடங்கி விட்டது..!!

    பசுத்தோல் போர்த்திய இந்த போலி ஆன்மீகப்புலி சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தமிழ் வார இதழான குமுதத்தில் “கதவைத்திற..காற்று வரட்டும்..!!” என்ற தலைப்பில் ஆன்மீக கட்டுரைகளை எழுதி மக்களை ஏமாற்றி வந்தது. அந்த தொடர் மூலம் தான் சாமானிய மக்களிடையே மிகவும் பிரபலமானார். இன்றைய காலகட்டத்தில் பெரும் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட எல்லா தரப்பிலும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்களை பெற்றிருக்கிறார். பதிவுலகில் பரபரப்புக்கு பெயர் போன எழுத்தாளர் சாரு நிவேதிதா இவரின் தீவிர பக்தர்..! ”இவர் தொட்டால் எல்லா நோயும் குணமாகிறது” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இனி என்ன சொல்வாரென தெரியவில்லை..!! அதென்னவோ தெரியவில்லை, இவர் தூக்கி புகழும் அத்தனை பேரும் சில நாட்களிலே தூற்றும் படியான நிலையை அடைகிறார்கள் அல்லது சாருவாலேயே தூற்றப்படுகிறார்கள்.!!!

    இவருடன் ஆபாச வீடியோவில் இருந்த அந்த பிரபல தமிழ் நடிகையின் பெயரை சன் தொலைக்காட்சி வெளியிடாமல் “ஆர்” எழுத்தில் தொடங்கும் நடிகை என சஸ்பென்ஸ் வைத்தார்கள்.. ஆர்வ மிகுந்தவர்கள் பேப்பர், பேனாவுடன் உட்கார்ந்து “ஆர்” எழுத்தில் தொடங்கும் நடிகைகள் யார் என்று பட்டியலிட தொடங்கியிருந்தார்கள். ஆனால் நக்கீரன் பத்திரிக்கை அந்த நடிகை ”நாடோடி தென்றல்” படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்த ரஞ்சிதா தான் என்று பட்டவர்த்தனமாக வெளியிட்டு, பெரும் சஸ்பென்ஸை உடைத்து அவர்களின் புண்ணியத்தை தேடிக்கொண்டு விட்டது. நடிகைகளுக்கு இது போன்ற செய்திகளில் தொடர்பு இருப்பதாக செய்து வெளிவருவது ஒன்றும் புதிதல்ல. அது மட்டுமல்லாமல் பிரேமானந்தாவில் தொடங்கி இன்றைய நித்தியானந்தா வரை பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொள்வது கூட புதிதில்லை தான். ஆனால் என்ன தான் சன் போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் உண்மையை உலகத்துக்கு கொண்டு வந்தாலும் ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாறும் ஏமாளிகள் இருக்கும் வரை நித்தியானந்தா போன்று இன்னுமொரு வித்யானந்தா போன்ற ஏமாற்று பேர்வழிகள் தோன்றிக்கொண்டு தான் இருப்பார்கள். அது ஒரு தொடர் கதை..!!

    ”கதவைத்திற... காற்று வரட்டும்..!” என்று ஊருக்கு உபதேசம் செய்து புத்தகம் எழுதிய நித்தியானந்தரிடம் ”கதவைத்திற.. காவல்துறை வரட்டும்..!” என்று தான் எனக்கு இப்போது சொல்ல தோன்றுகிறது..!!
    Last edited by இதயம்; 08-03-2010 at 04:21 PM.
    அன்புடன்,
    இதயம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    ஏமாறிகள் இருக்கும் வரை ஏமாற்றிகள் இருக்கவே இருப்பார்கள்.

    கடவுளின் பெயரால் காலா காலத்ததிற்கும் நடக்கும் இந்தக் கயமைகளை அறிந்தும், திருந்தாதவர்களை என்னன்னென்பது?
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  3. #3
    புதியவர்
    Join Date
    12 Jan 2010
    Location
    தமிழ் நாடு
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    0
    Uploads
    0
    பகவத்கீதை கொஞ்சம் , யோகா கொஞ்சம் தெரிந்து கொண்டால் நாம் கூட மேற்படியானந்தா ஆகிவிடலாம்.

    பரமஹம்சர்,விவேகானந்தர் பேரை கெடுக்கறானுக.. நாயிக. அனேகமாக அடுத்தது கல்கி சாமியார் தான்.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கடவுளை மட்டுமே நம்பினால் நல்லது. ஆசாமிகளை நம்பி, அவர்கள் காலடியில் விழும் அறிவிலிகள் இருக்கும்வரை அவர்களை சாமியும் காப்பாற்றாது.

    பங்காரு என்ற ஒரு போலிப்பெருச்சாளி பலகாலமாக கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. அதை எப்போது பிடிக்கப் போகிறார்களென்று தெரியவில்லை.

    நச்சைப் பற்றி நச்சுன்னு சொன்ன இதயத்துக்கு நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    எப்போதுமே நாம் `அன்னப் பட்சி` போல நல்ல விடயங்களைப் பற்றிக் கொண்டால் போதுமானது, அது சாமியோ, ஆசாமியோ எல்லோருக்குமே பொருந்தும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Oct 2009
    Posts
    190
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    1
    Uploads
    0
    நானும் நெனச்சேன், என்னாடா, ஆப்ட்ரால் மனுசன்.. பாவம் குமுதம்


    ( தணிக்கை செய்யப்பட்டது - இளசு)

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    மனிதர்களை மனிதர்களாக மட்டுமே நினைக்கவேண்டும், எவன் ஒருவன் மனிதனை கடவுளுக்கு இணையாக நினைக்கிறானோ அன்றே அவன் தன்னை கீழ்படுத்திக்கொள்கிறான்.

    மனிதர்கள் இவர்களை நம்புவதால்தான் இந்த மாதிரியான போலிகள் வருகிறார்கள்.

    நான் இவர்களை நம்புவதில்லை, அதனால் இந்த மாதிரியான விஷயங்களுக்கு முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைதான் ஆரென். நான் இவர்களை மனிதர்களாகவே நினைப்பதில்லை. இவர்களை மட்டுமல்ல, இவர்களை நம்பி, காலில் விழுபவர்களைக் கூட நான் மனிதர்களாக மட்டுமல்ல, விலங்குகளாகக்கூட மதிப்பதில்லை. விலங்குகள் சுயமாய் வாழ்கின்றன.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நித்யாநந்தா.. ஒரு பெரும் இழுக்கை தேடி கொண்ட இவர் உண்மையில் ஆன்மிகத்தில் அடைந்த விடயம் பல.. இவர் அறிந்ததை எல்லாருக்கும் போய் சேர்க்க வேண்டும் என்று இவர் நினைக்காமல், தன்னை எல்லாரும் ஒரு மகானாக, மீட்பராக, ரட்சகனாக பார்க்க வேண்டும் என்று இவர் நினைத்ததே, இவரின் இந்த நிலைக்கு முழுமுதல் காரணம்..

    நித்யானந்தா சாமியார் இல்லை, சாமாணியன் தான் என்று நான் எப்போதோ புரிந்து கொண்டேன்..

    1) தியான பீடம் தளத்தில், "எப்படி தியானம் செய்வது" என்னும் பயிற்சியில் கலந்து கொள்ள 5000 டாலர் கட்டணம் என்று போட்டிருந்ததை, பார்த்ததும் இவர் பணத்தாசை கொண்டுவிட்டார், இனி சாமியாராய் இவரால் வாழ் முடியாது என்பதை புரிந்து கொண்டேன்..

    2) தமிழாராகிய நீங்கள், தமிழாட்டை விட்டு பெங்களூரில் வந்து தங்கி இருப்பது ஏன் ? என்ற கேள்விக்கு..

    தமிழ் நாட்டில் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று சொன்னார்..

    அப்போது புரிந்து கொண்டேன் இவர் துறவி எனும் தகுதியை இழுந்து பல நாளாகிறது என, உண்மையான துறவி மக்களை தேடிப்போய் நன்மை செய்வான், இல்லை இவ்வுலகை விட்டு ஒதுங்கி தனிமை கொள்வான், தன் முக்திக்காக, தன்னை யாரும் புகழ வேண்டும் என்று அவன் நினைப்பது இல்லை, அவன் அதை விரும்புவதுமில்லை..

    ஒருதன் தப்பு செய்துவிட்டான் என்பதற்காக அவனை புழுதி வாரி தூற்றி, அவன் மீது உமிழ்ந்து அசிங்கப்படுத்துவதை நாம் பாரம்பரியமாக வைத்திருக்கோம்..

    கண்ணதாசன் சொல்வார்.. மலையளவு துக்கி, பின் பாதளம் அளவு வீழ்த்தி தாக்குதல் நம் குணம் என்பார்..

    இந்த திரியிலும் அதுதான் நடக்கிறது..

    எல்லா காலத்திலும் ஞானத்தை போதிக்க தீர்க்க தரிசீகள் வந்து சென்றிருக்கிறார்கள், அதில் பலரை நம் ஞான குருவாக தேர்ந்து பிறகு அவர்களை கடவுளாகவும் நாமாக்கி இருக்கிறோம்..

    நமக்கான ஞான குருவை நாம் தேர்ந்து கொள்வது என்பது நம் கையில் இருக்கிறது, குருவை சரியாக தேர்ந்து கொள்ள நமக்கு அறிவு கொடுக்கப்படிருக்கிறது, அதை நாம் சரியாக பயன் படுத்தி நம் குருவை அறிந்து கொள்ளாமல், அவர் ஏமாற்றுக்காரர் என்று அறிந்த உடன் போலிச்சாமியார் என்று தூற்றுவதில் எந்த பிரையோசனமும் இல்லை..

    அவர் இந்த் அளவுக்கு பிரபலமாக காரணம் யார், அவரா ? நாமா ?

    நாம பிரபலப்படுத்தலனா அவர் எப்படி பிரபலமாகி இருக்க போகிறார்..

    இந்த பதிவை நானிட்டிருப்பதால், என்னை நித்யாநந்தரின் சீடன் என்று பலர் எண்ண, சொல்ல கூடும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை....

    தப்பு எல்லாம் நம்ம பேர்ல, இப்ப அவரை திட்டி என்ன பிரையோசனம் என்பதே என் கருத்து..

    வெட்ட வெளிச்சம் போட்டு காட்ட நினைத்த சன் தொலைக்காட்சியின் நோக்கம் சரி, செய்த விதத்தில் இன்னும் கொஞ்சம் நாகரீகம் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து..


    நேற்று இந்த செய்தியை பார்த்துவிட்டு நண்பனிடம் சொன்னேன்..

    டேய் நித்யாநந்தாவை விடு.. அந்த நடியாரு னு தெரிஞ்சுதா என்றான்..

    இதுதான் நம் மனநிலை.. நமக்கு நித்யாநந்தா பற்றி கவலை இல்லை, நம் கவலை எல்லாம் அந்த நடிகை மீதுதான்..

    யாருனு தெரிஞ்சுக்கலனா தூக்கம் வராது இல்ல..
    Last edited by ஆதி; 03-03-2010 at 07:52 AM.
    அன்புடன் ஆதி



  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆதன்.....!!


    சொல்ல வார்த்தைகள் இல்லை,
    நான் என்ன நினைத்துக் கொண்டு இந்த திரியில் என் முதல் பதிவினை இட்டேனோ,
    அந்தக் கருத்துக்களும் உங்கள் பதிவில்.....!!

    நல்ல விடயங்களைப் பற்றிக் கொண்டு,
    தீயவற்றை விலக்க நமக்கு அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது,
    ஆனால் நாம் தான் அதனை சரி வர பயன்படுத்துவதில்லை.

    ஒருவரது அந்தரங்கத்தை தொலைக்காட்சி பகிரங்கப்படுத்துவதென்பதில் அது `டைகர் வூட்` தொடக்கம் `நித்தியானந்தா; வரை என் கருத்துக்கள் வேறானவை....

    சரி, சமியார் தப்பு செய்த பட்சத்தில் அந்த காணொளிக் காட்சியை காவல்துறையிடம் கையளிக்காது பகிரங்கப்படுத்திய சன் தொலைக்காட்சியின் நோக்கம் பட்டவர்த்தமானது.

    அடுத்து, இது போன்ற விடயங்களில் மற்றவர்களுக்குத் தெரியாமல் வீடியோ காட்சிப்படுத்தல் என்பது எந்தளவில் நாகரீகமானதென்று எனக்கு விளங்கவில்லை.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஆமா... இந்த சாமியார்கள் எத்தனை தேவாரங்கள் திருவாசகங்கள் இதுவரை இயற்றியுள்ளார்கள்???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அந்த நடிகை பாரதிராஜா அறிமுகப்படுத்தி கார்த்திக்குடன் நடித்த ரஞ்சிதா

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •