குரும்பூர் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள ஒரு குக்கிராமம். குரும்பூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் இந்த கதையை படிக்கும் வரை. கதையின் முடிவில் நீங்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் அறியப்போகிறது இந்த கிராமதைப்பற்றி.
குரும்பூரை சேர்ந்த வேலன் என்ற ஆட்டிடையன் இந்த கதையை ஆரம்பித்து வைக்கிறான். பெரியகருப்பனின் ஆட்டு மந்தையிலிருந்து ஆடுகளை மேய்வதற்கு காலையில் கூட்டி சென்று மாலையில் வீடு திரும்புவான் வேலன். அலுமினிய தூக்குச் சட்டியில் அம்மா கொடுதப்பனுப்பும் தண்ணீர் விட்ட சோற்றை பச்சை மிளகாய் வெங்காயம் இவற்றுடன் சாப்பிட்டு விடுவான். ஆடுகளை மலையடிவாரத்தில் மேய விட்டு ஒரு மேடான மரத்தடியில் அமர்ந்து பக்கத்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை நோட்டம் விடுவான். ஆடுகளை ஓட்ட அவன் கையில் ஒரு சின்ன கம்பு வைதிதிருந்தான். வேல மரத்து கிளையை ஒடித்து அதிலிருந்த இலைகளை நீக்கிவிட்டு பெரிய கருப்பன் அவனிடம் கொடுத்திருந்தான் அந்த கம்பை. தோளில் சோத்து மூட்டையும் கையில் கம்பையும் வைத்து நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரைப்போல நிற்பான். கம்பை சுழற்றிக் கொண்டிருப்பது, மணலில் கம்பின் நுனியைக் கொண்டு சித்திரங்கள் வரைவது அவனது பொழுதுபோக்கு.
மதிய நேரங்களில் அவனைப் போன்ற சில ஆட்டிடையர்கள் அங்கு வந்து அவனிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் பேச்சு முழுவதும் பக்கத்து டூரிங் டாக்கீஸில் நடக்கும் சினிமா படத்தைப் பற்றித்தான் இருக்கும். அன்று அங்கு வந்திருந்த சிறுவர்களில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த முருகன் கையில் வழக்கமான கம்பு இல்லை. அவன் கையில் இருந்த கம்பு கருப்பாக நுனியில் பூண் வைத்திருந்தது. முருகன் அவனது பாட்டனார் இறந்து விட்டதாகவும் அவர் வைத்திருந்த இந்த கம்பை அவன் எடுத்துக் கொண்டதாகவும் சொன்னான். எல்லோரும் அந்த கம்பை வாங்கி ஆவலுடன் பார்த்தார்கள்.
மாலை சாய மற்ற சிற்வர்கள் சென்றதும் தான் வேலனுக்கு பெரிய கருப்பன் ஆடுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பத்திக் கொண்டு வர வேண்டும் என்று கடுமையாக சொன்னது நினைவுக்கு வந்தது. ஆடுகளை ஒன்று திர*ட்டி எண்ணத் தொடங்கினான். எண்ணிக்கைகு தனது கை விரல்களோடு கால் விரல்களையும் சேர்த்துக் கொண்டான். திரும்ப திரும்ப எண்ணியதில் ஒரு ஆடு குறைவதைக் கண்டு பதறினான். செய்வதறியாமல் ஆடுகளை பெரிய கருப்பனின் பண்டில் சேர்த்தான். அவனது நல்ல வேளை பெரிய கருப்பன் அங்கு இல்லை. பன்டின் கதவை மூடி விட்டு ஓட்டமாக திரும்ப மலையடிவாரத்திற்கு வந்தான். அங்கிருந்த புதர்கள், பள்ளங்கள் இவற்றில் தேடினான். தேடிக்கொண்டே மலை மீது சிறிது ஏறத் தொடங்கினான். துவக்கத்தில் ஒரு குகை இருந்தது. கிராமத்தில் அந்த குகையில் கொள்ளிவாய் பிசாசு இருப்பதாகவும் பகல் நேரத்தில் கூட அங்கிருந்து நெருப்பு தெரிகிறது என்றும் பேசிக்கொண்டது வேலனின் நினைவுக்கு வந்தது. பயந்து கொண்டெ குகையை நெருங்கினான். மே என்று ஆடுகளின் குரலைக் கொடுத்துப் பார்த்தான். குகையின் உள்ளே இருட்டாக* இருந்தது. கையிலிருந்த கம்பைக் கொண்டு துழாவினான். கம்பின் நுனி குகையின் சேற்றுப்பகுதியில் சிக்கிக் கொண்டது. தன் பலம் அனைத்தையும் திரட்டி இழுத்தான். வேகமாக விடுபட்டு கம்பு வெளி வர வேலன் கீழே விழுந்தான். தன்னை சமாளித்துக் கொண்டு மெதுவாக எழுந்த கம்பின் நுனியில் ஒரு குழம்பு போல ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதை கவனித்தான். இருள் வேகமாக பரவ வீட்டை நோக்கி நடந்தான் வேலன். கொஞ்ச தூரம் நடந்த பின் தன் பின்னால் யாரோ வருவதைபோல உணர்ந்து திரும்பி பார்த்தான். அவனுக்கு ஒரே வியப்பு. அவன் கண் முன்னால் கானாமல் போன ஆடு நின்று கொண்டிருந்தது. உற்சாகமாக ஆட்டைத் தூக்கி தோளில் சாய்த்து நடந்தான்.
ஆட்டை பெரிய கருப்பனின் பண்டில் அடைத்து விட்டு வீடு திரும்பினவனுக்கு கம்பின் நினியில் ஒட்டிக் கொண்டிருந்த குழம்பு மற்ந்து விட்டது. மறு நாள் காலை ஆடுகளை மேய்க்க கிளம்பியவனுக்கு கம்பின் நுனியில் இறுகிப் போய் ஒரு பூண் மாதிரி இருந்த உலோகத்தைபார்த்து மகிழ்ச்சி பிடிபடவில்லை. ஏதோ அரசன் கையில் செங்கோலைப் பிடித்திருந்ததை மாதிரி கம்பை பிடித்துக் கொண்டு நடனமாடினான். வழககம் போல ஆடுகளை மேய விட்டு நெடுஞ்சாலையை பராக் பார்த்துக் கொண்டிருந்தவன், சாலையில் வேகமாக வந்த ஜீப் ஒன்று திடீரென்று நின்றதைப்பார்து மெல்ல அதன் அருகில் சென்றான். ஜீப்பில் அமர்ந்திருந்த இரண்டு கனவான்கள் ட்ரைவரிடம் " என்னய்யா என்னாச்சு" என்று வினவ ட்ரைவர் " எஞ்சின்ல கோளாறு சார்" என்று சொல்லிவிட்டு பானரைத் திறந்து உள்ளே நோட்டம் விடலானார்.
தன்னிடமிருந்த பூண் வைத்த கம்பை அவர்களிடம் கொடுத்து காசு வாங்கலாம் என் நினைத்து வேலன் அவர்களை நெருங்கினான். " நல்ல கம்புய்யா அருமையான பூண் வைச்சது. வாங்கிகிரீங்களா" என்று கேட்டவாறு கம்பை உயர்த்தி வேலன் காட்ட ஜீப்பில் இருந்த ஒரு கருவியிலிருந்து அபாய ஒலி கேட்க துவங்கியது.
தொடரும்...
Bookmarks