வெகு அரிதாக சில பிரஞ்சுப்படங்களைப் பார்த்திருக்கிறேன். கதை... வாசித்ததில்லை. அந்தக்குறை நண்பரின் உதவியால் நீங்கியது. ஏனோ தெரியவில்லை...இக்கதையை சில முறை படித்தும் உடனே பின்னூட்டம் இட இயலவில்லை.
அவசியமற்ற இடைச்சொருகல்கள் ஏதுமின்றி சொல்ல வந்ததை மட்டும் சொல்லும் அழகிய முறையால் கதை சிறப்பாகிறது. கதாபாத்திரங்களின்றி தனியாக கதையை நடத்திச்செல்வதும் வியப்பே. இத்தகைய சிறப்பான மொழிபெயர்ப்புகளால் உலக இலக்கியம் பாமர தமிழனுக்கும் உரிய முறையில் வந்து சேர வாய்ப்பிருக்கிறது.
நல்ல கதை தந்த மாப்பசானுக்கும், அதை அழகுத்தமிழில் தந்த ஞான சம்பந்தன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பின்னிரவில் இந்தக்கதையைப் படிக்க நேர்ந்தது. அப்பப்பா! மிகவும் பயம் அதிகமாகிவிட்டது.
மொழிபெயர்ப்பு மிகவும் அருமை. மொழி பெயர்ப்பு என்பது தெரியாமல் மிகவும் சரளமான நடையில் இருந்தது. பாராட்டு.
மொழிபெயர்ப்பு கதைகள் என்றாலே ஒதுக்கி வைத்துவிடுவேன். காரணம் சிறுவயதில் மாஸ்கோ பதிப்பு என்று சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து அவர்களின் தமிழ் புரியாமல் மொழிபெயர்ப்பு கதைகள் என்றாலே காத தூரம் தான்.
அப்படி ஒரு மனநிலையில் தான் இந்தக் கதையையும் வாசிக்க ஆரம்பித்தேன் ஆனால் சிறிது நேரத்திலேயே என்னுடைய எண்ணம் மாறிவிட்டது. தமிழிலேயே எழுதியது போன்ற சரளமான நடை (ஆரம்ப வாக்கியங்கள் சில சற்று நெருடியது என்றாலும் அவற்றை வேறு விதங்களில் சொல்ல முடியுமா? எனத் தெரியவில்லை... ) அருமையான மொழிபெயர்ப்பு ...
நல்ல கதைக்கு நன்றிகள் ஐயா...
ஒரே சில சந்தேகங்கள்.
"புரிந்து கொள்ள இயலாத ஒரு திகிலின் பயங்கர அனுபவம் பற்றி அரட்டி." இந்த வாக்கியம் முற்றுப் பெறாதது போல் தோன்றுகிறது.
"எள்ளி நகையாடு, நீ விரும்பினால்." - தமிழில் இப்படி நாம் பயன் படுத்த மாட்டோம் என்று நினைக்கிறேன். "நீ விரும்பினால் (என்னை) எள்ளி நகையாடு" என்று தான் சொல்லுவோம் இல்லையா ஐயா.
தொடர்ந்து எழுதுங்கள்....
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks