இன்றோடு ஒரு வருடம்...
எதையோத் தேடி
எங்கோ அலைய
கண்ணில் பட்டத் தளம்
கவிதைகள் மீது தீராத காதல்
கவிதை வாசிக்க வந்த வாசகி நான்...
வாசிக்க அனுமதியில்லை
பயனாளராக பதிவு செய்து
வாசிக்க தொடங்கி
மலைத்து போய்...
எனக்குள் கவி எழுத ஆசை எழ
சிறு தயக்கம்..
கவிஞர்களும் கவிதாயினிகளும்
கலக்கி கொண்டு இருக்கும்
இணணயத்தில் கத்துக்குட்டி
கவியை ஏற்பர்களோ...
எனக்கு தெரிந்த எளிய
தமிழில் கவிதை பதிந்த போது
உற்சாகம் தந்து
ஊக்கப் படுத்தின சில உறவுகள்....
கவிதை மட்டுமே பதிந்து விட்டு
பாராட்டை கூட எதிர்பார்க்காமல்
வந்து வந்து போனவள்...
பின்னோட்டம் இட பயந்தவள்..
எல்லா பிரிவுகளிலும்
தடம் பதிக்க ஆசை இருந்தபோதும் ..
ஏனோ சிறு தயக்கம் இன்றுவரை..
இங்கு வராமல் போனால்
நம்மை தேட யாரும் இல்லையென்ற
என் எண்ணத்தை கூட
பொய்யாய் மாற்றின சில உறவுகள்..
சொல்ல முடியா சந்தோசம்..
சில பின்னோடங்களால்
சோர்வடைந்து வராமல் இருந்த போது
எனக்கு தோள்கொடுத்து
வர வைத்த உள்ளங்களை
இன்றுவரை மறந்ததில்லை...
தோல்வியின் விளிம்பில்
சிறு மூலையை கையில் பற்றி
சோகத்தை மட்டுமே நெஞ்சில் சுமந்து
சுமையாய் வாழ்க்கை இருப்பினும்
என்னை கொல்லும் நேரத்தை கொல்ல
எனக்குள் மாற்றம் வேண்டி
என் எண்ணங்களை மாற்றி
சந்தோஷமாய் வலம் வரும் தளம் இது..
என் வாழ்நாள் வரை இணைந்து இருப்பேன்..
என் கண்ணீர் மட்டுமே காணிக்கை...
என் உறவுகளுக்கு இது சமர்ப்பணம்...
தமிழனாய் பிறந்தது பெருமை
தமிழில் வாழ்வது முழுமை...
நன்றிகள்....
நம்பிக்கை அளித்த உறவுகளுக்கு நன்றிகள்..
பின்னோட்டம் இட்டு என் கவிதை பாதையை
செம்மை படுத்திய உறவுகளுக்கு நன்றிகள்..
படித்து விட்டு பதில் போட விரும்பாத உள்ளங்களுக்கும்
உங்களுக்கும் பிடித்த வகையில் இனிவரும்
காலங்களில் கவிதை எழுத வேண்டும் என்ற முயற்சியை
உருவாக்கும் உங்களுக்கும் என் இனிய நன்றிகள்...
Bookmarks