Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 34

Thread: என் தமிழ்ச் சொல் எங்கே??

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0

    Question என் தமிழ்ச் சொல் எங்கே??

    காலையில் உதித்தது
    ஒரு கவிதை...
    நினைத்தவுடன் எழுதாவிடின்
    என் மறதியால்
    மரித்துப் போகும் அக்கவிதை..
    நினைத்து, மறந்து,
    மரித்த கவிதைகள்
    கணக்கில் அடங்கா..

    வேகமாய் கணினி முன்
    தட்டச்சுவை திறக்க
    காலையிலேயே
    கணினி முன்பாயென
    என் அம்மா திட்ட
    எழுதியே தீர வேண்டும் என
    தலைப்பு வைத்து கவிதையை
    தொடங்க பட்டென்று இருள்..
    என் எண்ணங்களில் அல்ல
    என் அறையில்...

    மாதம் ஒரு நாள் மின் துண்டிப்பு..
    அந் நன்னாள் இந்நாள் என
    என் அம்மா சிரிக்க
    ஐயோ என் கவிதை என
    என் மனம் கூப்பாடு போட
    நீண்ட நாட்களுக்கு பிறகு
    பேனாவை தேடியது என் கண்கள்...

    பேனாவையும் வெள்ளைத்தாளும்
    ஒருவழியாய் இருளில் தேடிப் பிடித்து
    எழுதிய முதல் வார்த்தை "நான்"..
    ஒரு நொடியில் பெரிய அதிர்ச்சி...
    என்னவாயிற்று என் தமிழுக்கு??
    என்னவாயிற்று என் கையெழுத்து??
    சிறு குழப்பம்...

    கைபேசியிலும் கணினியிலும்
    ஜாலம் செய்யும் விரல்கள்
    இன்று பேனா பிடிக்கையில்
    ஆரம்பக்கல்வி குழந்தையாய்
    கிறுக்கி கொண்டு செல்ல
    நான் எழுதிய வார்த்தை கண்டு
    குழம்பி போனது மனது...
    ஐயோ என் தமிழ் சொல் எங்கே??

    கைபேசி குறுஞ் செய்தியிலும்
    கணினியிலும் ஆங்கிலத்தில்
    தமிழை எழுதியதால் வந்த வினையோ?
    என் மனம் துடித்தது...
    "நான்" என்று ஆங்கிலத்தில்
    எழுதி இருப்பதாய் பார்த்து
    என் கண்களே நம்ப மறுத்தது...
    கை எழுத்துக்கூட காணமல்
    போயிற்று கணினியால்...
    நான் தமிழை ஆங்கிலத்தில் வளர்த்தேனோ??
    தமிழை மறந்தேனோ???
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  2. #2
    இளையவர் பண்பட்டவர் balanagesh's Avatar
    Join Date
    19 Feb 2010
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0
    மிக மிக மிக அற்புதமான கவிதை தந்ததற்கு மிக மிக மிக நன்றி இன்பக்கவி... அழகான கவிதை வரிகள்... முற்றிலும் ஆழமான உண்மை...

    கணினி பல பேர் தலை எழுத்தை மாற்றியுள்ளது இவ்வுலகம் அறியும்... ஆனால் அது பல பேர் தாய்மொழியின் கையெழுத்தையும் மாற்றியுள்ளது என்பதை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள்... என் பாராட்டுக்கள்...

    தொடர்ந்து எழுதுங்கள்... எங்களுக்காக...
    என்றும் அன்புடன்,
    பாலா.

    "எனது வீடு, எனது வாழ்க்கை என்று வாழ்வது வாழ்க்கையா?!?!"

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மையான உண்மை.....நான் என்பதையே ஆங்கிலத்தில் எழுதுமளவுக்குத்தான் போய்விட்டது நம் நிலைமை.

    சாலையில் செல்லும்போது, சாலையோரப் பள்ளியில், சப்பனனாங்கால் போட்டுக்கொண்டு, சிலேட்டில், முத்து, முத்தாய்...அ, ஆ எழுதும் அரசுப்பள்ளிக் குழந்தைகளைக் கண்டால்...ஆசையாய் இருக்கிறது...அதே சமயம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. என் தமிழ் எழுத்து எங்கே...?

    அருமையான கவிதை கிடைத்திட உதவிய ஆற்காட்டாருக்கு நன்றி.(மின்சாரத்துறை அமைச்சருங்கோ)

    வாழ்த்துகள்+பாராட்டுக்கள் இன்பக்கவி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Akila.R.D's Avatar
    Join Date
    20 Jan 2010
    Location
    Bangalore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    16,226
    Downloads
    67
    Uploads
    1
    உண்மை உண்மை உண்மை...
    இதில் உண்மையைத்தவிர வேறேதும் இல்லை...

    நாளை என் குழந்தைக்கு சொல்லித்தர எனக்கு க ங ச எழுத வருமா என்று தெரியவில்லை...

    கவிதை மிகவும் அருமை கவி...

    வாழ்த்துக்கள்...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    மிக சரியாக சொன்னீர்கள் கவிதா.
    இந்த நவீன காலத்திலே டெலிபோனிலும், இமெயிலிலும் எல்லாம் முடிந்து விடுகின்றது.நான் எனது (தாய் நாட்டுக்கு) அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதியே பலவருடமாச்சு.
    இப்போது தமிழ் எழுத்தே எழுத வரமாடேன் என அடம் பிடிக்கின்றது. என்பாடே இப்படி என்றால்
    என் பிள்ளைகளின் கெதி, எதிர்காலம்........
    இங்கு எல்லா பெற்றோர் நிலையம் இப்படித்தான்.

    என் மனதை தொட்ட கவிதை வாழ்த்துக்கள் கவிதா.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    கடிதம் எழுதுவது ஒரு கலை. இப்போது அது அநேகமாய் மறைந்தே போய்விட்டது.
    ஆங்கிலத்திலும், தமிங்கிலிஷிலும் தட்டச்சு செய்து செய்து தமிழில் காகிதத்தில் எழுதுவது பெருமளவில் குறைந்து விட்டது.
    அருமையான கவிதை. பாராட்டுகிறேன் இன்பக்கவி அவர்களே!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by balanagesh View Post
    மிக மிக மிக அற்புதமான கவிதை தந்ததற்கு மிக மிக மிக நன்றி இன்பக்கவி... அழகான கவிதை வரிகள்... முற்றிலும் ஆழமான உண்மை...

    கணினி பல பேர் தலை எழுத்தை மாற்றியுள்ளது இவ்வுலகம் அறியும்... ஆனால் அது பல பேர் தாய்மொழியின் கையெழுத்தையும் மாற்றியுள்ளது என்பதை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள்... என் பாராட்டுக்கள்...

    தொடர்ந்து எழுதுங்கள்... எங்களுக்காக...
    நன்றிகள் பாலகணேஷ்...
    இன்று எனக்கு நடந்தது சோதனை..
    நான் கணினியில் எல்லாம் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பேன்...
    அது நல்ல விஷயமாக இருந்தாலும் நம்மையும் அறியாமல் நாம் பல விஷயங்களை மறக்கிறோம்..
    பேனாவை கையில் எடுத்த பல மாதம் ஆயிற்று.
    இன்று பிடித்தது போது தான் தெரிந்தது என் நிலை...
    நன்றிகள்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உண்மையான உண்மை.....நான் என்பதையே ஆங்கிலத்தில் எழுதுமளவுக்குத்தான் போய்விட்டது நம் நிலைமை.

    சாலையில் செல்லும்போது, சாலையோரப் பள்ளியில், சப்பனனாங்கால் போட்டுக்கொண்டு, சிலேட்டில், முத்து, முத்தாய்...அ, ஆ எழுதும் அரசுப்பள்ளிக் குழந்தைகளைக் கண்டால்...ஆசையாய் இருக்கிறது...அதே சமயம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. என் தமிழ் எழுத்து எங்கே...?

    அருமையான கவிதை கிடைத்திட உதவிய ஆற்காட்டாருக்கு நன்றி.(மின்சாரத்துறை அமைச்சருங்கோ)

    வாழ்த்துகள்+பாராட்டுக்கள் இன்பக்கவி.
    நன்றிகள் சிவா...
    நிஜமாய் நான் ஒரு நிமிடம் திகைத்து போனேன்...
    நானா இப்படி எழுதினேன் என்று எனக்கே தெரியல..
    படக்கவிதைகள் எழுதுகையில் தமிழ் எழுத்துரு பயன்படுத்துகிறேன் இருப்பினும் பேனாவில் எழுதி ரொம்ப நாள் ஆயிற்று...
    இன்று எழுத நினைத்த கவிதை வேறு எழுதிய கவிதை வேறு...
    நினைத்த கவிதையை எழுத மறந்தே போனது அதிர்ச்சியில்...
    மின்சார அமைச்சரை நீங்கள் பாராட்டியதை அவர் அறிந்தால் அவருக்கு அதிர்ச்சி தான்...அவரை பாராட்டிய முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கும்
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by Akila.R.D View Post
    உண்மை உண்மை உண்மை...
    இதில் உண்மையைத்தவிர வேறேதும் இல்லை...

    நாளை என் குழந்தைக்கு சொல்லித்தர எனக்கு க ங ச எழுத வருமா என்று தெரியவில்லை...

    கவிதை மிகவும் அருமை கவி...

    வாழ்த்துக்கள்...
    நன்றி அகிலா...
    நிஜம் தான்...ஆனால் இதற்க்கு மாற்று வழி இல்லையே..
    நாம் தான் நம் மீது அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்..
    பேப்பரும் பேனாவும் தொட்டு அடிக்கடி ஏதாவது எழுதணும்..
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஜனகன் View Post
    மிக சரியாக சொன்னீர்கள் கவிதா.
    இந்த நவீன காலத்திலே டெலிபோனிலும், இமெயிலிலும் எல்லாம் முடிந்து விடுகின்றது.நான் எனது (தாய் நாட்டுக்கு) அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதியே பலவருடமாச்சு.
    இப்போது தமிழ் எழுத்தே எழுத வரமாடேன் என அடம் பிடிக்கின்றது. என்பாடே இப்படி என்றால்
    என் பிள்ளைகளின் கெதி, எதிர்காலம்........
    இங்கு எல்லா பெற்றோர் நிலையம் இப்படித்தான்.

    என் மனதை தொட்ட கவிதை வாழ்த்துக்கள் கவிதா.
    நன்றிகள் ஜனகன்,..
    முன்பு எல்லாம் எனக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது...
    இப்போது எல்லாம் அதை நான் மறந்தே விட்டேன்..
    கடிதம் எழுதி பல வருடம் ஆகிற்று கைபேசியின் வரவினால்...
    ஒண்ணுமே புரியல எனக்கு இது தான் நிஜம்...
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இன்பக்கவி's Avatar
    Join Date
    27 Feb 2009
    Posts
    1,223
    Post Thanks / Like
    iCash Credits
    15,473
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by கலையரசி View Post
    கடிதம் எழுதுவது ஒரு கலை. இப்போது அது அநேகமாய் மறைந்தே போய்விட்டது.
    ஆங்கிலத்திலும், தமிங்கிலிஷிலும் தட்டச்சு செய்து செய்து தமிழில் காகிதத்தில் எழுதுவது பெருமளவில் குறைந்து விட்டது.
    அருமையான கவிதை. பாராட்டுகிறேன் இன்பக்கவி அவர்களே!
    நன்றிகள் கலையரசி...
    ஆம் கடிதம் எழுதணும் என்ற ஏனோ பிடிப்பதில்லை...
    தொலைபேசி எண் வாங்கவாவது கடிதம் போடணும் என்றுதான் தோணும்...
    அதுக்கூட நம் நம்பரை தந்து தொடர்பு கொள்ளுங்கள் என்று இந்த அளவிலே பல கடிதங்களை எழுதி இருக்கிறேன்...
    இ மெயில் விலாசதிற்காகவும், தொலைபேசி எண்ணுக்காகவுமே கடிதம் எழுதி இருக்கிறேன்...
    இனி வரும் காலங்களில் நம் நிலை என்ன??
    கவிக்குள்
    கவி....

    http://kavikul-kavi.blogspot.com/

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    ஆமாம் என்றே ஒத்து கொள்ளக்கூடிய வரிகள்..
    இன்பக்கவி அவர்களே...
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •