உண்மை தான், தமிழில் தாளில் எழுதும் போது கூட சில சமயம் ஆங்கில எழுத்துக்கள் இடையே (பெரிய ண் எழுத காப்பிடல் எழுத்து) கூட வருகிறது.
பாராட்டுக்கள்.
உண்மை தான், தமிழில் தாளில் எழுதும் போது கூட சில சமயம் ஆங்கில எழுத்துக்கள் இடையே (பெரிய ண் எழுத காப்பிடல் எழுத்து) கூட வருகிறது.
பாராட்டுக்கள்.
இன்பக் கவி,
தமிழ் தட்டச்சின் பலன்களுக்கு இழந்து கொண்டிருக்கும் என் கையெழுத்துகளின் கதறலாகவே இக்கவிதையைக் காண்கிறேன்..
அக்னி அண்ணா சொன்னது போல், கண்ணை மூடிக் கொண்டு வேகமாகத் தட்டச்ச இயலும் என்ற இறுமாப்புகளுக்கு நடுவே இடியாக விழுகிறது இந்த இழப்பு...
கண்ணுக்குத் தெரியாமலேயே ஒரு மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது எம்மால்..
பாராட்ட வார்த்தைகள் இல்லை.. ஒட்டி சிறப்பித்த நிர்வாகக் குழுவுக்கு பாராட்டுகள்..
வாழ்த்துகள் இன்பக் கவி.. இன்னும் கவி கொடுங்க.![]()
நியாயம்தான்.. நிஜம்தான்..
பாமினி முறைத் தட்டச்சில் நான் எப்படி...
யுனிக்கோட் முறையில் நான் எப்படி..
ஒலிவழித் தட்டச்சில் நான் எப்படி..
இந்த மூன்றில் யுனிக்கோட் பலரிடம் பழகாதது.
பாமினி... யில் தட்டச்சும்போது கவியின் தமிழ் மறந்த நிலை ஏற்படவில்லை.
ஒலிவழியில் நிலை மாற்றம்..அதுக்கும் தீர்வு கண்டுள்ளார்கள். சென்ற ஆண்டு நடுப்பகுதியில் எனக்கு வந்த அழைப்பிதழ் ஒன்றின் சிறு பகுதியை இங்கே இணைக்கிறேன்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு http://pontamil.com/help.phpஇவ்வாறான இடர்களில் இருந்து தமிழினை மீட்டெகுக்கும் நோக்கில் பொன்பேனா, பொன்மொழி, பொன்விழி என மூன்று பிரதானமான மென்பொருள்களையும் பொன்மாற்றி எனும் உதவி மென்பொருள் ஒன்றினையும் ‘புலம்பெயர் தமிழர் உலகம்’ (NRT World) என்ற நிறுவனத்தினர் வெளியிடவுள்ளனர்.
இனி...
என்னிடத்தில் ஒலிவழி தமிழ் எழுத்துருக் குலைப்பு வேலையைக் காட்டவில்லை. பாமினி முறையை மட்டும் சிறிது சிதைத்துள்ளது.
நானும் இதுவரை எந்தப் படைப்பையும் தாளில் எழுதவில்லை. கணினியில் தட்டி உடனடியாகப் பதிந்து விடுவேன்.
ஏன் எனில், காகிதம் எடுத்தால் ஔவை சொன்ன எழுத்து கரைபுரளும். ஆனால் எண் தகராறு பண்ணும்..
ஒலிவழியில் எண்ணும் எழுத்தும் தண்ணீராய்ப் பாயும்.
கண உணர் நிலையை தத்ரூபமாக கவிதையாக்கி உள்ளீர்கள் இன்பக்கவி. ஆங்காங்கே தொங்கும் சில ஊளைச் சதைகளை அறுத்து விட்டால் கவிதை இன்னும் அழகாகும்.
ஆஹா என்ன அருமையான கவிதை!
உங்கள் தமிழ்பற்று தெரிகிறது இக்கவியிலே !!
பகிர்ந்தமைக்கு நன்றி
அருமையா
[QUOTE=இன்பக்கவி;456435]
இக்கவி பலருக்கும் பாடம். எழுதுவதை விட நேரடியாகவே தட்டச்சு செய்துவிடுவதில் பல சௌகரியங்கள் இருப்பதாக உணர்ந்தேன். இப்படி ஒரு சிக்கல் இருப்பதாக உணரவில்லை. பாராட்டுக்கள் நண்பரே!..!..!
உன்னையே நீயறிவாய்
ஏட்டில் இருந்து எழுத்து காகிதத்திற்கு மாறிய போது இருந்த வலிதான் இதுவும், எழுது கோலுக்கு பதில் பேனா பின்னர் ..விரல் நுனி, நாக்கு ......இனிமேல் சிந்தனை அதிர்வு கூட ..பேனாக்கள் சேகரிக்கும் பழக்கம் இப்போதும் உண்டு - எனது எழுத்து பேனாவில் இன்னமும் தொலையவில்லை. எதிர்காலத்தில் எப்படியோ ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது, இது எல்லா மொழிக்கும் பொருந்தும். ஆயினும் எமது விரல் பேனாவினை வளைத்து சித்திரமாய் எம் எழுத்தை வரையும் போது /கிறுக்கும் போது வருகின்ற வடிவம். கணனித் திரைகயில் வரும் விம்பத்திற்கு இல்லைத்தான்.
எம் மொழியை காகிதத்தில் வரைதல்( எம் கையெழுத்து, எம் எழுத்து) மெய் மொழியின் ஒரு அங்கம். எம் உணர்வோட்டத்தின் வெளிப்பாடு. கையெழுத்துக் கொண்டு ஒருவரின் குண நலன்களைச் சொல்ல முடியும்.
ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. இங்கே சொல்லப்பட்டவை நம் எழுத்தை ஆங்கில எழுத்துக்களில் தட்டப்படும்- எழுத்து 'இடம் பெயர்வின்' இடைக்கால நியாயமான தாக்கத்தின் வரிகள். தமிழை தமிழாய்த் தட்ட 'தமிழ் விசைப் பலகை' உண்டு.
ஆயினும் உடல் மொழியினை-எழுதுகோல் வரைவு இடம் பெயர்த்த தமிழ் தட்டச்சு இயந்திரம் எம்மிடையே பல ஆண்டுகளாய் பழக்கத்தில் உள்ளதே. இப்போது அதுவும் அருகிவிட்டது, காகிதப் பழக்கமும் அருகிவிட்டது.
நடைத் தடம் போல் நாம் பதித்த ஆறாம் விரல் தடம் இனி நிலைக்குமா?
சிந்திக்கவைத்த வரிகள்...பாராட்டுக்கள்.
தமிழிலில் எழுதி அதையே சேமிக்கலாமே எழுத்திலும் ஒலிவடிவத்திலும்- 'The Echo smartpen from Livescribe records everything you hear, say and write, and links your audio recordings to your notes...,' ஆங்கில இடைச் செருகலுக்கு மன்னிக்கவும், இது அந்த ஸ்மார்ட் பேனாவின் விளம்பரத்தின் நகல்- பதிவு. ஸ்மார்ட் பேனா, இதைப் பாவிப்பதால் இங்கே எங்கள் கையே வரி வடிவத்தை வரைகின்றது என்ற திருப்தி நிலைக்கும்.
அப்பட்டமான, மிகக் கசப்பான உண்மை!
பின்னூட்டமிட்டவர்களும் உண்மை என்பதை வலியுறுத்துவதைக் காண்கிறோம்.
எதிர்காலத்தில், வழக்கில் தமிழ் தன் வரிவடிவத்தை இழந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
அது, முதற் படியாக அமைந்து, படிப்படியாக மொழியே அழிந்து போகுமோ என்ற கவலை அழுத்தமாக எழுகிறது.
உண்மையை எழுத்தாக்கித் தந்ததற்குப் பாராட்டு.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
மிக மிக மிக அற்புதமான கவிதை
நன்றிகள் இன்பக்கவி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks