அவளுக்கு பார்வை இல்லாமல் இருந்தது. உடனிருந்த அவனைத்தவிர அவளுக்கு அனைவரின் மேலும் வெறுப்பாயிருந்தது.
ஒரு நாள் ”எனக்கு மட்டும் கண்ணிருந்தால் உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று அவள் அவனிடம் சொன்னாள்.
சில நாட்களுக்குப்பின் யாரோ அவளுக்கு கண்களை தானமாக வழங்கினார்கள்.
கண் தெரிய ஆரம்பித்ததும் அவள் அவனைப்பார்த்தாள். அவனுக்கு பார்வை இல்லாமல் இருந்ததைக் கண்டு வியப்படைந்தாள்.
”இப்போதுதான் உனக்கு பார்வை வந்து விட்டதே... என்னை திருமணம் செய்து கொள்கிறாயா..?” என்று கேட்டான்.
சிறிது நேரம் மெளனமாக இருந்த அவள் “ மாட்டேன்” என்றாள்.
சற்று மெல்லிய குரலில் “ சரி. என் கண்களை மட்டுமாவது கவனமாக பார்த்துக்கொள்” என்று கூறி விட்டு தட்டுத்தடுமாறி நடக்கத்தொடங்கினான்.
நன்றி: ஆங்கிலத்தில் கதை அனுப்பிய நண்பருக்கு.
மூலம்: தெரியவில்லை.
Bookmarks