Results 1 to 5 of 5

Thread: மின்னஞ்சல் கதை:11 காதலுக்கு கண்ணில்லை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    மின்னஞ்சல் கதை:11 காதலுக்கு கண்ணில்லை

    அவளுக்கு பார்வை இல்லாமல் இருந்தது. உடனிருந்த அவனைத்தவிர அவளுக்கு அனைவரின் மேலும் வெறுப்பாயிருந்தது.

    ஒரு நாள் ”எனக்கு மட்டும் கண்ணிருந்தால் உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று அவள் அவனிடம் சொன்னாள்.

    சில நாட்களுக்குப்பின் யாரோ அவளுக்கு கண்களை தானமாக வழங்கினார்கள்.

    கண் தெரிய ஆரம்பித்ததும் அவள் அவனைப்பார்த்தாள். அவனுக்கு பார்வை இல்லாமல் இருந்ததைக் கண்டு வியப்படைந்தாள்.

    ”இப்போதுதான் உனக்கு பார்வை வந்து விட்டதே... என்னை திருமணம் செய்து கொள்கிறாயா..?” என்று கேட்டான்.

    சிறிது நேரம் மெளனமாக இருந்த அவள் “ மாட்டேன்” என்றாள்.

    சற்று மெல்லிய குரலில் “ சரி. என் கண்களை மட்டுமாவது கவனமாக பார்த்துக்கொள்” என்று கூறி விட்டு தட்டுத்தடுமாறி நடக்கத்தொடங்கினான்.

    நன்றி: ஆங்கிலத்தில் கதை அனுப்பிய நண்பருக்கு.
    மூலம்: தெரியவில்லை.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நாம் செய்யும் தியாகம், சில சமயங்களில் இப்படிதான் விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறது. வெள்ளை ரோஜாவும் சிட்டுக்குருவியும் கதையை நினைவுபடுத்திய கதை. பகிர்ந்தமைக்கு நன்றி பாரதி அவர்களே.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கண்ணில்லாதபோது காதலியாய் இருந்தாள்...கண்கிடைத்ததும் சுயநலவாதியாகிவிட்டாள். அழுக்கு உலகத்தைப் பார்த்ததும் அவளது உள்ளமும் அழுக்காகிவிட்டதோ...

    பகிர்வுக்கு நன்றி பாரதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாவ் என்று சொல்லவைக்கும் கதை படிப்பினையை பொறுத்தவரை.

    ஆனால் இரண்டு கண்களையும் ஒருவருக்கே வைக்கமாட்டார்கள். அதுபோல உயிரோடு இருக்கும் ஒருவருடைய இரு கண்களையும் எடுக்க மாட்டார்கள் (ஒரு கண்ணையும் எடுக்கமாட்டார்கள்).

    கதை நன்றாக இருந்தாலும் கரு கொஞ்சம் உதைக்கிறது.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    நானும் இக்கதையை ஆங்கிலத்தில் படித்தேன். ஆரென் அவர்கள் சொல்வது போல் இரண்டு கண்களையும் உயிருடன் இருப்பவரிடம் இருந்து எடுத்து கண்ணில்லாதவருக்குப் பொருத்த மாட்டார்கள் என்றாலும், 'சூழ்நிலை மாறியதும் பழசை மறப்பவர்களே இந்த உலகில் அதிகம்,' எனும் நல்ல படிப்பினையைத் தரும் கதை.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •