அறிவு
எளிமையா யிருப்பது சிறப்பு!...
என்றாலும் அது மடமை என்கிறது அகராதி!
போர்க்குணம் பெரியது!...
என்றாலும் பொறுமை நன்று என்கிறது அறநூல்!
எங்கு...
எப்போது...
எப்படி...
தீர்மானி அறிவே!
அறிவு
எளிமையா யிருப்பது சிறப்பு!...
என்றாலும் அது மடமை என்கிறது அகராதி!
போர்க்குணம் பெரியது!...
என்றாலும் பொறுமை நன்று என்கிறது அறநூல்!
எங்கு...
எப்போது...
எப்படி...
தீர்மானி அறிவே!
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
சிந்திக்க வைக்கும் கவிதைதான்.சிந்திப்போம்..........
சிந்திப்போம்.............
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
நன்றாக இருக்கிறது
நிறைய விசயங்கள நம்மை குழப்பவதாக தான் இருக்கிறது
உண்மைதான் எங்கு, எப்போது, எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவு தரும் அறிவு இருந்தால் நலமுடன் வாழலாம்.
நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள் குணமதி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
முள் தைத்த கால் ‘விருட்’ என்று தூக்கியபோது
அடுப்புச் சூடுபட்ட கை ‘சட்’ என்று நகர்ந்தபோது
தானியங்குகின்றது அறிவு...
முள் நிறைந்த பாதையில் காலை வைக்கலாமா
பற்றியெரியும் தீச் சுவாலைக்குள் கையை விடலாமா
அறிந்துதான் இயங்கவேண்டும்...
தருணத்திற்கேற்ப இயங்கட்டும் அறிவு...
பாராட்டு...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி அக்னி.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
இடத்திற்கேற்றாற் போல் காலத்திற்கேற்றாற் போல் சிந்தித்துச் செயல்படுவதே அறிவு.
சிந்திக்க வைக்கும் கவிதை. நன்று.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks