என்ன துன்பமோ?
குழந்தை அழுகுரலாய்...
நீர்ப்பறவையின் ஒலி!
ஐயோ, ஏனோ?
என்ன துன்பமோ?
எப்படித் தீர்ப்பது?
யாரால் முடியும்?
தெரிந்தவர் இருந்தால்...
அழைத்து வந்து காட்டலாம்.
எப்படியாவது உதவ வேண்டுமே!
மனத்தை வருத்துகிறது!
அமைதியின்றி கலக்கமாக இருக்கின்றது.
என்ன செய்வது?
அப்பா சொன்னார்:
இந்தப் பறவை எப்போதும்...
அழுவது போல் தான் ஒலி எழுப்புமாம்!
இயல்பான ஒலியே அதுதானாம்!
அப்படியா...?
அப்பாடா!
Bookmarks