Results 1 to 6 of 6

Thread: உனக்கும் எனக்குமான இறுதி வார்த்தையாக இது இருக்கட்டும்.

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    41
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    10,709
    Downloads
    148
    Uploads
    1

    உனக்கும் எனக்குமான இறுதி வார்த்தையாக இது இருக்கட்டும்.

    இன்னும் எதுவும் சொல்வதற்கில்லை –
    உன் பிரியாவிடையின் ஆயத்தங்கள் தவிர,
    ஏதுமற்றுப் போன என்னுள் இன்னும் எதைத்தேடுகிறாய்?
    நீயுமில்லை எனும் போது….

    உன் பொழுதுகளில் இனி எனக்கேதும் வேலை இல்லை
    அது உனது அழைப்புடன் நின்று போனது.
    நான் மீண்டும் தனித்தே போனேன்.
    உன் நினைவுகள் ஏதுமின்றி…

    வாழ்த்துக்கள்……..
    இது –
    உனக்கும் எனக்குமான இறுதி வார்த்தையாக இது இருக்கட்டும்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    எனக்குள் பிரியாதபோதும்
    பிரியாவிடை பெற்றாய்..,
    அதுவும் அழைப்போடு...

    முரண் ஆனபோதும்
    முரண்பட மறுத்துவிட்டது
    மனது...

    மொத்தமாக
    உன்னோடு உன்னை
    அனுப்பிவைத்தபோது
    வெறுமை மட்டும் மிஞ்சியது.

    அனைத்தும் எனக்கு நீயானதால்
    அந்த வெறுமையும் நீயானாய்.
    மீண்டும் உன்னால் நிரம்பியது
    மனது...

    இந்த முரணோடு
    முரண்பட முயன்றும்
    முடியாமல்
    வெறுமையான உன்னோடு
    வெறுமையாய் நான்...

    என்னால் உனக்கு மாசுவா
    எனத் தெரியவில்லை...
    ஆனால்,
    உன்னால் நான் மகிமையாகின்றேன்...

    *****
    எங்கேயோ நுழைந்து தூண்டிவிடுகின்றது,
    உங்கள் கவிதை...
    பாராட்டுக்கள் பல அகத்தியருக்கு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    எதையுமே இறுதியென்று அறுதியிட்டு கூறமுடியாது அகத்தியரே... இன்றைய இறுதி நாளையின் தொடக்கம்..!!

    காத்திருங்கள்...காதலோடு..!!

    Quote Originally Posted by அக்னி View Post
    அனைத்தும் எனக்கு நீயானதால்
    அந்த வெறுமையும் நீயானாய்.
    மீண்டும் உன்னால் நிரம்பியது
    மனது...
    நான் மிகவும் ரசித்த வரிகள்... நன்றி அக்னியண்ணா..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2003
    Location
    Chennai
    Posts
    477
    Post Thanks / Like
    iCash Credits
    9,523
    Downloads
    133
    Uploads
    0
    அகத்தியரும், அக்னியும் மாறி மாறி கலக்குகிறார்களே. வாழ்த்துக்கள்

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஒரே காதல் பிரிவா சோகம் சொல்லிக்கிட்டே இருக்கீங்களே அகத்தியன்....கவலைப்படாதீங்க....சுபி சொன்ன மாதிரி...எதுவுமே இறுதியில்லை. கவிதை மிகவும் அருமை. வாழ்த்துகள்..(ஆனா இது இறுதி வார்த்தையில்லை)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    வாழ்த்துக்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •