இன்னும் எதுவும் சொல்வதற்கில்லை –
உன் பிரியாவிடையின் ஆயத்தங்கள் தவிர,
ஏதுமற்றுப் போன என்னுள் இன்னும் எதைத்தேடுகிறாய்?
நீயுமில்லை எனும் போது….
உன் பொழுதுகளில் இனி எனக்கேதும் வேலை இல்லை
அது உனது அழைப்புடன் நின்று போனது.
நான் மீண்டும் தனித்தே போனேன்.
உன் நினைவுகள் ஏதுமின்றி…
வாழ்த்துக்கள்……..
இது –
உனக்கும் எனக்குமான இறுதி வார்த்தையாக இது இருக்கட்டும்.
Bookmarks