தவிப்பிலே என்னை விட்டு...
பாலை அடுப்பேற்றிவிட்டு -
ஏனம் தேய்க்கப் போவாயா?
குழாயைத் திறந்துவிட்டு -
கோலமிடப் போவாயா?
கொதிஉலையை விட்டுவிட்டு -
கொத்துமல்லி கீரை வாங்குவாயா?
தவிப்பிலே என்னை விட்டுத் -
தாயிடத்தில் நெடும்பேச்சேன்?
தவிப்பிலே என்னை விட்டு...
பாலை அடுப்பேற்றிவிட்டு -
ஏனம் தேய்க்கப் போவாயா?
குழாயைத் திறந்துவிட்டு -
கோலமிடப் போவாயா?
கொதிஉலையை விட்டுவிட்டு -
கொத்துமல்லி கீரை வாங்குவாயா?
தவிப்பிலே என்னை விட்டுத் -
தாயிடத்தில் நெடும்பேச்சேன்?
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
தெரிஞ்சுக்கிட்டே தெரியாதமாதிரி கேட்குறீங்களே குணமதி..!!
தவிப்பும் தகிப்பும்... ஏக்கமும் எரிச்சலுமா வரிகளில் வந்து விழுந்திருக்கிறது..!!
வாழ்த்துக்கள் குணமதி..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
தவிக்க விடுவதில் தானே காதலியின் வெற்றி அடங்கியிருக்கிறது.
தவி...! மீண்டும் மீண்டும் தவி!!
அப்போது தான் எங்களுக்கு கிடைக்கும்
மனதை தீண்டும் கவி!
வாழ்த்துகள் உங்களுக்கு!
நன்றி உங்களை தவிக்கவிட்டவருக்கு!
Last edited by lenram80; 09-02-2010 at 02:23 PM.
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
தவிப்பிலே கவிதை........
சிந்தனையை தூண்டும் வரிகள்.
நண்பருக்கு பாராட்டு.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நட்புடன் ஜனகன்
தவிப்பிலே என்னை விட்டு என்று கூறி
எங்களை சிறு வரி தந்து தவிக்க விட்டீர்களே
இன்னும் தர கூடாதா கவிதைகள்
என்றும் அன்புடன்
&
உங்கள் ரசிகன் ......
ஜானி
‘ஏனம்’ என்றால் என்ன?
தவிக்கும் மனதின் தாயிடமா...
தவிக்க வைக்கும் மனதின் தாயிடமா...
யாரிடம் நெடும்பேச்சு...
எவராயிருந்தாலும்,
தவிக்கும் மனதில் பாசப்பொறாமை இருப்பின்
இனிக்கும் வாழ்க்கை...
இது பெண் மனதின் தவிப்பானால்,
ஆண் பரிதாபம்...
பாராட்டு...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
"ஏனம்" என்றால் பாத்திரம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks