Results 1 to 8 of 8

Thread: ஒரு நடிகையின் வேதனை

                  
   
   
  1. #1
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0

    ஒரு நடிகையின் வேதனை

    நான் மூடி மறைத்தால் முக்காடு போடுவான் ,
    முதலாளி,

    கவர்ச்சி என்ற பெயரில் காம பொருளாக காட்டும் உலகம் ,
    எங்களையும் கொஞ்சம் பாருங்கள் நாங்களும் பெண்தான்,

    பன்னீரில் குளித்து ,
    மணக்கும் பூ சூடி ,
    புத்தாடை அணிந்து ,
    தெரிந்தே விழுகின்றோம் சாக்கடையில்,

    எத்தனையோ மரம் சுற்றி ,
    கதாநாயகனை தழுவி ,
    பாட்டு பாடியாச்சு ,
    உண்மை காதல்தான் இன்னும் வரவில்லை ,
    நிழலிலும் ,நிஜத்திலும் ,

    என் இதழ்களை சுவை பார்த்து ,
    சேலையை துட்சாதனன் போல இழுத்து ,
    தாயின் தொப்புள் கொடியில் ஆம்ப்லேட் போட்டு ,
    எதார்த்தம் என்ற பெயரில் தேவைதானா ,இக்காட்சி ,
    மனம் திறக்கட்டும் உன் மனசாட்சி ,

    கையில் பணம் என்னும் விளக்கை வைத்து ,
    தெரிந்தே விழுகின்றோம் இருட்டு பாதாள குழியில் ,

    இயற்கை கொடுத்த பரிசு இளமை என்னும் அழகு ,
    அது போன பின்னே அத்தனையும் என்னை விட்டு விலகும் ,

    வயிற்றை காட்டுகிறேன் என் வயிற்றை கழுவ ,

    தும்மினாலும் ,
    பால் குடித்தாலும் ,
    பாயாசம் குடித்தாலும் ,
    படுக்கையில் படுத்தாலும் ,
    பாத் ரூமில் குளித்தாலும் ,
    என் அங்கங்களை வைத்து ,
    படம் எடுத்து வியாபாரம்தான் ,செய்கிறது இந்த உலகம் ,
    என் சோகத்தை கூட மண்ணில் முகம் புதைத்து அழுகின்றேன் ,

    இது யார் செய்த பிழை ,
    என்னை படைதவனா
    இல்லை பெற்றவனா ,
    பதில் சொல்லுமா இந்த உலகம் ?,
    ஏங்குகிறோம் உண்மையான பாசத்திற்கு எங்கும் ..

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இதுயார் செய்த பிழை. அவர்களே செய்யும் பிழை. தெரிந்தே சாக்கடையில் விழுவது பணத்தை தேடிக்கொண்டுவரத்தானே.


    பணமோடு புகழும் கிடைக்கிறது.....பிறகெதற்கு புலம்பல்?

    உடையைத்தாண்டி ஒரு உள்ளம் இருக்கிறது.....அதை உண்மையாய் யாரிடமாவது கொடுத்துவிட்டு, ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் ஒதுங்கிவிடுவது சாலச்சிறந்தது.

    சாக்கடை வாருபவன், நாற்றமடிக்கிறதே என சொல்லலாமா?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    புதியவர் g.ram's Avatar
    Join Date
    21 Nov 2009
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    26,895
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கவிதை

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உடையைத்தாண்டி ஒரு உள்ளம் இருக்கிறது.....அதை உண்மையாய் யாரிடமாவது கொடுத்துவிட்டு, ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் ஒதுங்கிவிடுவது சாலச்சிறந்தது.
    பணம் சேரும் வரை நம்மோடு பழகுபவர்களே பணம் சேர்ந்த பின் மாறுகிறார்கள்.

    உள்ளதை ஒருவரிடம் கொடுப்பதில் உள்ள சிக்கல் இது ஒன்று தான். இந்த நிலையை மாற்றுவது தான் இன்றைய சமுதாயத்தின் தேவையான தலையான பணி.
    தத்துவன் ஞானிகள் உலகை பல கோணங்களில் ஆராய்ந்து விட்டார்கள். ஆனால் செய்ய வேண்டியதோ அதை மாற்றுவது. - மார்க்ஸ்

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாங்க ராம். நல்ல சிந்தனையோட வந்திருக்கீங்க...அப்படியே உங்களைப் பற்றின ஒரு அறிமுகத்தை அளித்துவிடுங்களேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    9,024
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு சில மாதங்கள் விட்டு உள்ள வந்த உடனே படித்த கவிதை. கவிதைதான் ஆனாலும் ஏதோ ஒரு உண்மை உள்ளதுபோல் இருக்கிறது. நன்றி
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

  6. #6
    இனியவர்
    Join Date
    09 Dec 2009
    Posts
    654
    Post Thanks / Like
    iCash Credits
    13,791
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அருள் View Post
    ஒரு சில மாதங்கள் விட்டு உள்ள வந்த உடனே படித்த கவிதை. கவிதைதான் ஆனாலும் ஏதோ ஒரு உண்மை உள்ளதுபோல் இருக்கிறது. நன்றி
    அவர்களுக்கும் மனசு உண்டு என்பதை விளகிருந்தேன்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    இதுயார் செய்த பிழை. அவர்களே செய்யும் பிழை

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாங்க ராம். நல்ல சிந்தனையோட வந்திருக்கீங்க...அப்படியே உங்களைப் பற்றின ஒரு அறிமுகத்தை அளித்துவிடுங்களேன்.

    கணபதிராம் அவர்களின் அறிமுகம் ஏற்கனவே நமக்குக் கிடைத்துவிட்டதே! மறந்துவிட்டீர்களா, என்ன?
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21924

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •