வணக்கம்
எனது பெயர் சிவா. சொர்க்கத்தின் முடிவில் இருக்கிறேன் இப்பொழுது நான். ஆம், கல்லூரி படிப்பை முடிக்க போகிறேன் இந்த ஆண்டு. பகத்சிங், சேகுவாரா கொள்கைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டவன். மாற்றங்கள் மட்டுமே இந்த தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் மாறாத நம்பிக்கை உள்ளவன். கடந்த 7 வருடங்களாக தமிழ் மீது தீராத காதல். நண்பரின் பரிச்சயத்தால் இப்போது தமிழ்மன்றம்.காம்.
சொல்லிக்கொள்ளும்படி சொந்த படைப்புகள் எதுவும் இல்லை. ஆனால் நல்ல ரசிகன். விரைவில் இங்கு எனது படைப்புகளை எதிர்பார்க்கலாம்.
நன்றி
Bookmarks