Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 52

Thread: ந.ராசதுரை.....!!!

                  
   
   
  1. #25
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நீங்கள் சொன்னதைப்போல, உணர்ச்சிவசப்பட்டோ, அதீத ஆர்வத்திலோ சமுதாய பழக்கவழக்கங்களுக்கு எதிரான செயலை யாராவது செய்துவிடும்போது, அது பாராட்டப்படவேண்டியதாக இருந்தாலும், அதன் விளைவுகளுக்கு சுமுகமான தீர்வுகளை யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.

    மிக்க நன்றி கீதம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #26
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post

    ஆனால் மனைவி மீது பாசமில்லை என சொல்ல முடியாது. இனி குழந்தைகள் வேண்டாமென்று சொல்லியிருந்தால், மரகத்தின் மீது மட்டும்தான் அவருக்கு அக்கறை, அவள் மட்டும் போதும் என்று நினைத்ததைப்போல ஆகியிருக்கும்.

    தன்னுடைய இயல்பான வாழ்க்கையையும் வாழமுடியும், அதே சமயம், தன் மனைவியின் குழந்தையை தன் குழந்தையாய் வரித்துக்கொள்ள முடியும் என உறுதியாக நம்பியதால்தான் தைரியமாய் அவளைக் கல்யாணம் செய்து கொண்டார். அப்படி வாழவும் செய்தார்.
    மரகதம் மீது பாசமில்லை என்று நான் சொல்லவே இல்லை அண்ணா..

    பொதுவாக இவ்வாறான விடயத்தில் பெண்களுக்கு பெரியத் தயக்கம் இருக்கும் அண்ணா, அப்படி யோசிப்பது பாவம் என்று கூட யோசிப்பார்கள் அண்ணா..

    இன்னும் சொல்லப் போனால் பிள்ளை தன்னை வெறுத்துவிடக் கூடாது எனும் பயம் வேறு இருக்கும்..

    மரகதத்தின் மனநிலையும் அதுவே தான்..

    அவர் வேறு பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும் என்று சொன்னதில் ஒரு உட்பொருள் உண்டு, அதாவது உன் பாசம் மட்டுமல்ல என் பாசமும் நம் பிள்ளை இராசத்துறைக்கு மட்டும் தான், அதுமட்டுமின்றி, பிற்காலத்தில் இந்த இரண்டாம் மணம் விடயம் ஒரு வேளை இராசத்துறைக்கு தெரிய வந்தால், கண்டிப்பாய் அவன் மரகதத்தை மட்டுமல்ல மற்ற பிள்ளைகளையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் (நிறைந்த மனப்பக்குவம் இல்லாதவன் எனும் பட்சத்தில்) , என்னும் முன்னெச்சரிக்கும் தான்..

    தன்னைப் பற்றி மட்டுமல்ல, இராசதுறையின் எதிர்க்காலத்தைப் பற்றியும் நவச்சிவாயம் சிந்திக்கிறார் என்பது அவளுக்கு புரிந்திருந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்தது அண்ணா.. கண்டிப்பாய் அவர் கண்டிக்கும் போது கண்டிக்க வந்திருக்க மாட்டாள் மரகதம்..

    நமச்சிவாயம் நல்ல கணவனாய் இருந்தார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, அவர் நன்றாக தன் மனைவியை புரிந்து கொள்ளவில்லை.. அதனால்தான் மரகதத்தின் குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை பற்றி குறிப்பிட்டிருந்தேன் அண்ணா..


    நமச்சிவாயம் தன்னை மரகதத்துக்கு புரிய வைக்க, முதலில் மரகதத்தை அவர் புரிந்திருக்க வேண்டும்.. என்பதே என் கருத்து அண்ணா..

    நான் சொல்ல வந்ததை குழப்பாமல் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன் அண்ணா..

    //இதன் பின்னணியில் இருக்கும் சிக்கல்களையும் கலைய முயற்சிக்கவேண்டும்//

    இதை தான் அண்ணா நானும் சொல்ல முயற்சிக்கிறேன்..
    Last edited by ஆதி; 13-01-2010 at 12:19 PM.
    அன்புடன் ஆதி



  3. #27
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைதான் ஆதி. மனைவியைப் புரிந்துகொள்ள முயற்சித்திருப்பார்...ஆனால் அது அவ்வளவு எளிதானதாய் ஆரம்பத்தில் இருந்திருக்காது. இருந்தும் மீண்டும் மீண்டும் முயற்சித்திருந்தாரானால், நீங்கள் சொன்னதைப்போல மரகதமும் புரிந்து கொண்டு மாறியிருப்பார்.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஆரம்பக்கட்டத்திலேயே மனம் தளர்ந்து, மதுவின் துணையை நாடிவிட்டார். அதனால் அவர்மேல் மரகத்துக்கு வெறுப்பு அதிகமாகிவிட்டது.

    கீதம் சொன்னதைப் போல இதிலுள்ள அடிப்படை சிக்கல்களுக்கு தீர்வு தேட மிகப் பொறுமையும், பரந்த சிந்தனையும், உறுதியும் வேண்டும்.

    உங்கள் விளக்கத்தையும், நீங்கள் சொல்ல வந்ததையும் நன்றாக புரிந்து கொண்டேன் ஆதன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    எல்லாருமே கதையை அலசி விட்டார்கள்...தங்கள் விளக்கத்தையும் பார்த்தேன்...
    தாமரை அவர்களின் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார் அவருக்கு ஒரு சல்யூட்...
    மனபக்குவம் வேண்டும் என்றே நினைக்கிறேன்
    இந்த கதையில் வந்தது போல உள்ள மணிமாறன் சட்டென வேறு விதமாக அம்மாவிற்கு உணர வைத்ததற்கு .
    குடியை பற்றி வந்தவுடன் சற்று கண்கள் வேறு பார்க்கலாம் என்று தான் தோன்றியது..நீங்க கொடுத்த தலைப்பில் ஏதோ பொதிந்துள்ளதை எண்ணி தான் மீண்டும் படிக்க தொடங்கினேன்....
    ந-நல்ல/நமச்சிவாயம் நல்ல அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்...
    இருக்கும் போது அருமை புரியாது...இல்லாதவர்கள் சென்றவுடன் அவர்களை பற்றி தெரிந்தால் கலங்க தான் செய்ய வைக்கிறது...
    அடுத்த முறை நீங்க கதை எழுதீனா..நல்லா மொத்த சந்தோஷத்தையும் தர போல சந்தோஷமான கதையாக இருக்கனும்ன்னு கேட்டுக்கிறேன்...
    நன்றி சிவா அவர்களே...
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  5. #29
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி சரண்யா. நீங்கள் கேட்ட மாதிரியே ஒரு சந்தோஷமான கதையைத் தருகிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    ஒ....அப்படியா...
    நன்றி சிவா அவர்களே....
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  7. #31
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    கதையை படித்து விட்டேன்.சொல்லத்தோன்றியவை சொல்லப்பட்டுவிட்டன.என்னிடம் வார்த்தைகள் இல்லை.என் விழிமூடிதிறக்கும் ஒரு அசைவை பெருமிதமாய் நீங்கள் உணர்ந்து கொள்வீர்களாக.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதன் View Post
    அவளின் பிரச்சனை .. நமச்சிவாயம் ஏதோ பெரிதாக தனக்காக தியாகம் செய்துவிட்டார் என்றும் இந்த சமூகத்தின் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு தான் இரண்டாம் மணம் புரிந்து கொண்டோம் என்றும் அவளுக்குள் இருந்த தாழ்வு மனப்பாண்மையும், குற்ற உணர்ச்சியும்தான்..

    இராசதுறைக்காக மட்டும் ஊரைவிட்டு வந்துவிடல்லை, இரண்டாம் கல்யாணம் புரிந்து கொண்ட பிறகு அவளுக்குள் உள்ள குற்ற உணர்ச்சியால் அவளால் யாரையும் நேர் கொள்ள இயலாது என்னும் நினைப்புமே அவளை ஊரைவிட்டு போய்விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வைத்திருக்க வேண்டும்..

    அவள் ராசத்துறைக்காகத்தான் எல்லாம் செய்தாள் என்றால், மற்ற குழந்தைகளே வேண்டாம் என்று அவள் இருந்திருக்க முடியும், நமச்சிவாயமும் அவளை கண்டிப்பாய் கட்டாயப்படுத்தி இருக்க மாட்டார்.. அதனால் பிரச்சனை அவளின் தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்ச்சியுமே..

    அதுமட்டுமின்றி அவளின் இன்னொரு பிரச்சனை, இராசதுறை தான் இரண்டாம் மணம் புரிந்து கொண்டதால் தன்னை வெறுத்துவிட கூடாது என்பதும் தான்.. அதனாலேயே அவள் அதிகமாய் அவன் மீது பாசம் காட்டினாள்..

    இங்கு எந்த அளவுக்கு மரகதம் நமச்சிவாயத்தை புரிந்து கொள்ளவில்லையோ, அந்த அளவுக்கு மரகதத்தை நமச்சிவாயம் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே திடமான உண்மை.. நமச்சிவாயம் மரகதத்துக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும்.. நமக்கு வேறுப் பிள்ளைகள் வேண்டாம் என்று கூட சொல்லி அவளின் பயத்தை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்..

    மரகதம் ஏன் தன்னோடு அதிகமாய் சண்டை போடுகிறாள் என்று யோசித்து, அவளின் பிரச்சனையை களைய முயற்சித்து இருக்கலாம்.. ஆனால் அவர் தன்னை மரகதம் புரிந்து கொள்ளவில்லை என்று நொந்து கொண்டு, தன்னை தனிமை படுத்திக் கொண்டதோடு மரகதத்தையும் தனிமைப் படுத்திவிட்டார்..

    எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனையில் சம்பந்தப் பட்ட அத்தனை பேரின் தவறும் அந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்குமே ஒழிய ஒருவர் மீது மட்டும் பழிப் போட கூடாது என்பதால் இதனை சொல்கிறேன்..



    பாராட்டுக்கள் அண்ணா..
    இந்த மனநிலை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் ஆதி..

    இந்த மாதிரியான பெண்கள் மற்ற நேரங்களில் சரியாகத்தான் இருப்பார்கள். அந்த ஒரே ஒரு ஃபேக்டர் வரும்பொழுது பைத்தியங்கள் போல நடந்து கொள்வார்கள்..

    மரகதம் போன்ற சூழ்நிலையுள்ள பெண்கள், கணவர் நமக்கு இராசதுரை மட்டும் போதும் என்று சொன்னால், அவர்களை குற்றம் சொல்வதாக எண்ணி அழுவார்கள். தன் கணவருக்கு நல்ல வாழ்க்கையைத் தரவில்லையே எனவும் அழுவார்கள்..

    அதாவது நம்ச்சிவாயமே வேணாம் என்று விட்டு விட்டாலும் அல்லது வேறு எந்த வித அணுகு முறையை நமச்சிவாயம் கையாண்டாலும்,

    முன்னால போன கடிக்கும் பின்னால போனா உதைக்கும் என்று ஒரு பழமொழி கேட்டிருப்பீங்களே.. அப்படிப்பட்ட நிலை நம்ச்சிவாயத்தினுடையது.


    கணவருக்கு என்று தான் செய்யும் கடமையில் தவறக் கூடாது என்ற எண்ணம் சாதாரண சமயங்களில் இருக்கும். அதைச் சரியாகச் செய்ய இயலவில்லை என அழுவார்கள். என்பதால்

    ஆனால் மகன் பற்றிய பேச்சு வரும்பொழுது அத்தனை புலன்களும் ஆஃப் ஆகி, மனம் மட்டுமே பித்து பிடித்தது போல் ஆகிவிடும்.

    அவர்களுடைய மனதைப் புரிந்து கொண்டால், எதுவும் செய்ய முடியாது என்பதும் புரியும். எதையும் செய்யாமல் இருக்கவும் முடியாது என்பதும் புரியும்.


    இந்த நிலைக்குக் காரணம், அவள் திருமணத்தின் போது எடுத்த முடிவு. தன்னைச் சார்ந்தோர் அத்தனை பேரிடம் இருந்தும் விலகி வந்து விடுகிறாள். எனவே மனம் விட்டு பேச, உரிமையாய் அறிவுரை கூற நம்பிக்கையான தோழமை என்ற ஒன்று இறுதி வரை அவளுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது.


    மணிமாறன் மாதிரி சற்று தெளிவான மகனாக இருந்தால் அந்தத் தாயின் மனம் மெல்ல மெல்ல மாறலாம். ஆனால் இராசதுரை போன்ற மகன் மீது இப்படி ஒரு பித்து இருந்தால், தொட்டாற் சிணுங்கியாகவும், கழிவிரக்க வாதியாகவும் மாறி மாறி வாழ, உடன் வாழ்வோருக்கு எல்லாவற்றையுமே விட்டு விலகி விடலாம் என்று தோன்ற ஆரம்பித்து விடும்.

    அப்போது தன் மீது இருக்கும் அந்த கழிவிரக்க வாழ்க்கையை மாற்ற தன்னை வெறுத்து மகன் மீது மட்டுமே பாசம் கொண்டு வாழ்ந்து விடட்டும் என்ற முடிவுக்கு பல ஆண்கள் வந்துவிடுகிறார்கள். அதனால் எதாவது ஒரு வகையில் தன் மேல் இருக்கும் அந்த நன்றி உணர்வை மறக்கடித்து அவர்களின் மனசை ஒரே பக்கமாக போக விட்டு விடுகிறார்கள்.

    இதனால் மனைவியின் இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரியான நிலை மாறி முழுதுமாக மகன் பக்கம் சாய்ந்து விடுகிறாள். அழுகை குறைந்து விடுகிறது. மகனின் நல்வாழ்வு மட்டுமே குறிக்கோளாக வாழத் தொடங்கி விடுகிறாள்.

    நம்ச்சிவாயம் அவளை உணர்ந்து அவளுக்கு முக்கியமில்லாதவராக தன்னை மாற்றிக் கொள்ளும் வரை அவளுடைய் இந்த இரட்டை மன நிலையால் மிகவுமே துன்பப் பட்டிருக்க வேண்டும்,

    அதனால் அடுத்து பிறந்த கதிரேசன் சுயநலவாதியாக மாறிவிட்டான். அம்மாவின் பேச்சுக்கு அப்பா அடங்கிப் போவதும், அம்மாவின் பாசம் இடாசதுரையின் மேலேயே இருந்ததும் அவனைச் சுயநலவாதியாக வாழ வைத்துவிட்டன.

    மணிமாறன் வளர ஆரம்பித்த பொழுது நமச்சிவாயம் குடிக்க ஆரம்பித்து இருப்பார். தான் செய்ய நினைத்த ஒரு பிள்ளைக்கு நல்ல தகப்பனாய் இருப்பது, மனைவியால் அங்கீகரிக்கப் படாமல், அனைத்து முயற்சிகளும் பட்டுப் போய், ஒரு பெண்ணிற்கு நல்ல கணவனாக இருக்கிறோமா என்ற அளவிற்கு மனதில் சோர்வு ஏற்பட, அதற்கேற்ப இராசதுரையின் பாதையும் மாறிக் கொண்டே போக, எதுவும் செய்ய முடியவில்லையே, என்ற மனம் போதையை நாட, மனைவியின் இரட்டை முகம் ஒரு முகமாய் மாறி இருக்கும்.

    மணிமாறனுக்கு கிடைத்த சூழ்நிலை அப்பாவின் அமைதி.. அப்பாவின் பாசம்,, அம்மா வெறுக்கவில்லை. ஆனால் அப்பாவை அம்மா திட்டுவது சகஜமாக இருந்தாலும் அது மிகப் பெரிய கரைச்சலாக இல்லாமல் சிறு பொழுது புலம்பலாக இருந்தது. இராசதுரையை மனைவியின் இஷ்டத்திற்கு விட்டுவிட்டதாலும், நட்பு வட்டாரம் பெரிதாக இல்லாததாலும், மணிமாறனுடன் அதிகப் பொழுதை செலவிட்டார்.

    அப்பா அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததால் மணிமாறனின் மனம் விசாலமடைந்தது. பெருந்தன்மையான வாழ்க்கை போக்கு ஏற்பட்டது. தந்தையின் அனுபவ முதிர்வு அவனை பக்குவமான மகனாக்கியது..

    இதனால், மணிமாறன் தந்தைக்குப் பிடித்தமானவனாகப் போனான்,

    மரகதத்தைப் பொருத்தவரை, இராசதுரைக்கு அப்பா யாரென்று சந்தேகம் வராமல் இருக்க வேண்டும் என நினைத்தாளே தவிர நம்ச்சிவாயம்தான் அவன் அப்பா என்பதை அவள் அளவிலேயே அவள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான் தந்தைக்கு இளைய மகன் என்னும் பேரில் நமச்சிவாயத்தின் இறுதிக் கடன்களுக்கு மணிமாறனை கொஞ்சமும் தடையின்றி ஒப்புக் கொள்ளவும் செய்கிறாள்.

    உண்மையிலேயே இக்கதையில் இழையோடி இருக்கும் பல உணர்வுகள், நிகழ்வுகள் வெகு இயற்கையானவை. சிவா.ஜி இதனை எப்படி யோசித்து எழுதி இருப்பார் என ஆச்சர்யமாக இருக்கிறது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #33
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இத்தனை பேர் அலசியதுக்கு அப்புறம் என்ன எழுதறது... ஒரு மாறுதலுக்கு... பாராட்டை விட குற்றச்சாட்டுகளை வைக்கிறேன்... சிவா.ஜி என் அண்ணா..என்ற உரிமையில்...

    1. குயில் குஞ்சு வசனம் கதைக்கு அழகாய் இருந்தாலும் வாழ்க்கைக்கு உகந்ததாய் இல்லை. என் அப்பா தியாகம் செய்தவர்.. நீ அதை புரிந்து கொள்ளவில்லை என்று தாயை குத்திக் காட்டுவதாகவே படுகிறது. தாய் மற்றும் தந்தையின் கடந்தகாலம் தனக்குத் தெரியும் என்பது மற்றவருக்குத் தெரியாது என்ற எண்ணம் கொண்ட மணிமாறன் இப்படி பூடமாக தன் தாயிடம் தெரிவிப்பான் என்று தோன்றவில்லை. தந்தை மறைந்துவிட்டார். ஆயினும் இந்த வசனம் இறக்கும் வரை தாயின் மனதை குத்திக் கிழிக்கும் என்பதை அறியாதவனா மணிமாறன். அடிப்படை குணாதிசயமே அடிபட்டுப் போகின்றதே இந்த வசனத்தால்... கணவனின் பெருமைக்கு முன் குற்ற உணர்ர்சியே மேலோங்கும்...

    2. வார்த்தைகளால் சில பல விஷயங்கள் மடிப்புகளாய் இருந்தாலும்... மரகதத்தின் வசனங்கள் நமச்சிவாயம் மீது பெரிதாய் அன்பு இருப்பதை மாதிரி காட்டவில்லை. இந்த எரிச்சல் குடிப்பழக்கத்தால் இறந்து போனாரே என்ற ஆதங்கமாய் எடுத்துக் கொண்டாலும் மணிமாறன் நல்லவன்.. நமச்சிவாயம் மிக்க நல்லவர்.. என்று காட்டவே கொண்டு செல்லப்பட்ட கதை போலுள்ளது.

    3. இடையில் நமச்சிவாயத்துக்கு தொற்றிக் கொண்ட குடிப்பழக்கம். ஊரைவிட்டு கிளம்பும் முன் அவருக்கு இருந்ததில்லை. ராசதுரையை தன் மகனாய் பாவிக்க முடியாமல் மனைவி தடுக்கிறாள் என்ற விரக்தியில் அவர் இப்பழக்கத்துக்கு அடிமையானார் என்று எடுத்துக் கொண்டாலும் குடல் வெந்து போகும் அளவுக்கா.. அந்த காலத்திலேயே சமுதாய சீர்திருத்தம் என்று மரகததை திருமணம் செய்த நமச்சிவாயம், அவள் பேச்சுக்காக ஊரைவிட்டு உறவைவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்த அவர்... ராசதுரைக்கும் தனக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதை யோசிக்காமலா செய்திருப்பார். மேலும் அவ்வளவு தெளிவுள்ள மனிதன் குடி குடியைக் கெடுக்கும் என்று தெரியாமலா இருப்பார்... குடிக்கு அவர் உயிர் போவதும் சரியாகப் படவில்லை...!!!

    மிச்சம் ஏதாவது இருந்தால் யோசிச்சு வைக்கிறேன்.. ஹிஹிஹிஹி... ஏதாச்சும் எழுதணுமேன்னு தான் இவ்ளோவும்.. குற்றச்சாட்டுகளிலும் குற்றம் இருக்கலாம்..

    மற்றபடி இன்னார் இப்படித் தான் இருப்பார்.. நடப்பார் என்று மட்டும் கணிக்க முடிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை. எதுவும் எப்படியும் நடக்க சாத்தியமே...

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கதாசிரியர், வாசகர்கள், விமர்சகர்கள் மட்டுமன்றி கதாமாந்தரும் தத்தமது கடமைகளைச் சரியாகச் செய்துள்ளார்கள்.

    மணிமாறனே தனக்கு ஈமக்கடமை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்ட நமச்சிவாயம் முதல் பெரியம்மா வரை இயல்பான மாந்தர்கள். இயற்கையான உணர்வுகள்.

    பாராட்ட வார்த்தைகள் இல்லைச் சிவா.

    ரச்சிகிறேன் ஒவ்வொன்றையும்.

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இந்த மாதிரியான பெண்கள் மற்ற நேரங்களில் சரியாகத்தான் இருப்பார்கள். அந்த ஒரே ஒரு ஃபேக்டர் வரும்பொழுது பைத்தியங்கள் போல நடந்து கொள்வார்கள்..

    மரகதம் போன்ற சூழ்நிலையுள்ள பெண்கள், கணவர் நமக்கு இராசதுரை மட்டும் போதும் என்று சொன்னால், அவர்களை குற்றம் சொல்வதாக எண்ணி அழுவார்கள். தன் கணவருக்கு நல்ல வாழ்க்கையைத் தரவில்லையே எனவும் அழுவார்கள்..
    அண்ணா..

    சொந்தங்களை விட்டு வந்தவள். தன் பிள்ளைிராசதுரை தனியனாகிடக் கூடாது என்ற நினைப்பிலும் இராதுரை மட்டும் போதும் என அவள் நினைத்திருக்காமல் இருந்திருக்கலாம். இருந்திருப்பாள்.

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஒரு கதையை இத்தனை விதமாக அலசியது இல்லை இதுவரை மன்றத்தில். அதிலிருந்தே இந்தக் கதை எவ்வளவு மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது என்று தெரிகிறது.

    கதையை எழுதி இங்கே படைத்த படைப்பாளி சிவாஜிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •