Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: ஒரு ஈராக்கிய கதறல்.....!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஒரு ஈராக்கிய கதறல்.....!!!

    எங்கள் நாட்டில்........

    வாழைத்தோப்புகள் மட்டுமே இருந்திருந்தால்
    வல்லரசு வல்லூறுகள்
    வட்டமிட்டிருக்குமா.....
    மக்களைக் கொல்ல
    திட்டமிட்டிருக்குமா...?

    எரி எண்ணை இருப்பது
    எங்கள் குற்றமா?
    எண்ணைவள நாட்டில்
    என்னைப் பிறக்க வைத்த இறைவா...
    எண்ணையைக் கண்டவர்கள்
    என்னையும் ஏன் கண்டார்கள்...அவர்களின் பணப்பசிக்கு
    என்னை ஏன் உண்டார்கள்....?


    எண்ணைக் குழாய்களை எடுத்துக் கொள்ளுங்கள்
    ஏன் எங்கள் ரத்தக்குழாய்களை அறுத்துக் கொல்கிறீர்கள்?
    வீம்பாய் உள்நுழைந்து
    விளைநிலங்களையெல்லாம், பிணங்கள்
    விழும் நிலங்களாய் ஏன் மாற்றினீர்கள்?

    உருவாக்கிய துப்பாக்கிகள்
    துருவேறாமல் இருக்கவா
    உபயோகிக்கிறீர்கள். எங்கள்
    உயிரைப் பறிக்க.....?

    இன்று நீங்கள் கொன்று குவித்த
    எங்கள் சடலங்களும்
    மண்ணோடு மக்கி
    எண்ணையாகும் எதிர்காலத்தில்
    அன்றும் வருவீர்களா ஆக்ரமிக்க?

    குண்டுவெடிப்பு நிகழ்கிறது நித்தம்
    நிலமெல்லாம் எம் மக்களின் ரத்தம்....

    ரத்தக்குளியல் எங்களோடு போகட்டும்
    மொத்தமாய் எங்களை எரித்துவிடுங்கள்
    மக்கிப்போக உடல் இருக்காது...வருங்காலத்திலாவது
    மக்கள் வாழ பயமிருக்காது!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    ஆஹா மிகவும் அருமையான கவிதை சிவா..

    வாவ்...

    படித்தவுடன் அசந்துதான் போனேன். ஒரு நாட்டின் தன்மையால், மற்ற நாடுகளின் ஊடுறுவலால், மக்கள் படும் அவஸ்தையை மிகவும் அழுத்தமான வரிகளை வாரியிறைத்து அறை கூவியிருக்கின்றீர்கள்.


    வாழைத்தோப்புகள் மட்டுமே இருந்திருந்தால்
    வல்லரசு வல்லூறுகள்
    வட்டமிட்டிருக்குமா.....
    மக்களைக் கொல்ல
    திட்டமிட்டிருக்குமா...?
    எரி எண்ணை இருப்பது
    எங்கள் குற்றமா?
    எண்ணைவள நாட்டில்
    என்னைப் பிறக்க வைத்த இறைவா...
    எண்ணையைக் கண்டவர்கள்
    என்னையும் ஏன் கண்டார்கள்...
    அவர்களின் பணப்பசிக்கு
    என்னை ஏன் உண்டார்கள்....?


    ரத்தக்குளியல் எங்களோடு போகட்டும்
    மொத்தமாய் எங்களை எரித்துவிடுங்கள்
    மக்கிப்போக உடல் இருக்காது...வருங்காலத்திலாவது
    மக்கள் வாழ பயமிருக்காது!
    இதை விட சிறப்பாக அம்மக்கள் மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்க முடியாது.

    அருமையான கவிதை. வாழ்த்துக்கள் சிவா.

    இப்படியே அமர்களமான கவிதைகளைப் படைக்க என் வாழ்த்துகள்
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    வார்த்தைகள் இல்லை சொல்வதற்க்கு... உணர்வுகளை கோபத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் மிகுந்த பாராட்டுக்கள்..

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    வழக்கம் போல் அசத்தி விட்டீர்கள் அண்ணா. தொடர்ந்து அசத்துங்கள்

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வல்லூறுகள் வட்டமிட எண்ணெய் தேசமாய் இருக்க வேண்டுமென்பதில்லை... பனைக்காட்டிற்க்கும் பறந்து வருவார்கள் அவர்களுக்கு அங்கே ஆதாயமிருந்தால்..!!

    ஒரு பக்கம் சமாதானம் மற்றும் மனிதாபிமானம்... மறுபக்கம் ஆயுத உற்பத்தி மற்றும் உயிர் பறிப்பு...!!

    மறுத்துபோனது மண் மட்டுமல்ல... மனிதர்களின் மனங்களும்தான்..!!

    உங்களின் எல்லையற்ற நேசத்தை உணர்த்துகிறது உங்கள் கவிதை...!! நன்றி..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி ஜெய். ஒரு மின்னஞ்சலில், 2009 நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பில் அந்த ஈராக்கிய இளம்பெண்ணின் புகைப்படம் பார்த்தேன். மனது வலித்தது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த அந்த உயிரைப் பார்த்த விளைவில் விளைந்த வரிகள் இவை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கோபத்தைவிட ஆற்றாமைதான் ரமேஷ் அதிகமாய் இருக்கிறது. அந்த ஆற்றாமையை சற்றாவது காட்ட சில வரிகள்.


    மிக்க நன்றி ரமேஷ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி ராஜேஷ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    வல்லூறுகள் வட்டமிட எண்ணெய் தேசமாய் இருக்க வேண்டுமென்பதில்லை... பனைக்காட்டிற்க்கும் பறந்து வருவார்கள் அவர்களுக்கு அங்கே ஆதாயமிருந்தால்..!!

    ஒரு பக்கம் சமாதானம் மற்றும் மனிதாபிமானம்... மறுபக்கம் ஆயுத உற்பத்தி மற்றும் உயிர் பறிப்பு...!!

    மறுத்துபோனது மண் மட்டுமல்ல... மனிதர்களின் மனங்களும்தான்..!!

    உங்களின் எல்லையற்ற நேசத்தை உணர்த்துகிறது உங்கள் கவிதை...!! நன்றி..!!
    உண்மைதான் சுபி. ஆதாயமிருந்தால் எங்கு வேண்டுமானாலும் தங்கள் மரண*ச்சிறகை விரிக்கும் வல்லூறுகள்தான் அவர்கள்.

    மரத்துப்போன மனங்கள்....கறுப்பர் வந்தாலும், வெளுத்தோர் வந்தாலும் மாறாது ஒருநாளும்.

    நன்றி சுபி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    "நீ ஆசையாய் வளர்த்தாய் என்னை
    அந்தோ அறியேனே என்னை
    பலி கொடுப்பாய் என்று"

    இது தானே ஈராக்கின் சரித்திரம்
    ஈரானுக்கேதிறாய் அவர்களை
    வீழ்த்த ஈராக் தேவைப்பட்டது ஒரு நாள்.

    பின்னர் தோழன் துரோகி ஆகிப்போனான்
    வெள்ளை மன்றத்தில் என்றும் ஒரே தீர்ப்பு
    "காரியம் ஆனதும் கருவேப்பிலையை தூக்கி ஏறி"

    அதுதான் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு காரணம்
    இந்த விசயத்தில் பின்லேடன் புத்திசாலி
    வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்தவன்.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆதிக்க வெறி பிடித்த சுயநல ஓநாய்களிடம் சிக்கிய ஆடுகளின் அவல ஓலம் கேட்டு நெஞ்சு நடுங்கும் உங்களைப் போன்றவர்களால்த்தான் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    இது எவரிடம் இல்லை. தனிமனிதனில் தொடங்கி பாரிய கட்டமைப்புகள் வரை எங்கும் வியாபித்துள்ளது. தனிமனித ஒழுக்கம் நெறிப்படுத்தப்பட்டால் எல்லாம் சுபமாகும்.

    எண்ணையை எடுத்துப் போ என்னை உயிருடன் விட்டுப்ப் போ என்றவள் மன்றாட்டம் எக்காளச் சிரிப்பொலியில் கரைந்துதான் போகின்றது.

    கவிதை வடிப்பதைக் காட்டிலும் என்னிடமும் உங்களிடமும் செய்ய எதுவுமில்லைச் சிவா - நாம் சரியாக இருப்பதைத் தவிர.

    பாராட்டுகள் பாஸ்.
    Last edited by அமரன்; 14-01-2010 at 05:30 AM.

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிகச்சரியான கருத்து அமரன். நாம் சரியாய் இருப்பததைத் தவிர நம்மால் என்ன செய்யமுடியும்...சாமான்யர்களாய்....!

    ரொம்ப நன்றிங்க பாஸ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •